Tamil Bayan Points

Category: பொதுவான தலைப்புகள் – 2

b104

இறைத்தூதரின் முன்னறிவிப்புகள் (அன்று நடந்தவை) -2

இறைத்தூதரின் முன்னறிவிப்புகள் (அன்று நடந்தவை) -2 கடற்படையில் யுத்தம் செய்வது பற்றிய முன்னறிவிப்புகள் ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் ‘மன்னர்களாக’ அல்லது ‘மன்னர்களைப் போன்று’ இருந்தார்கள்’ என்று கூறினார்கள். உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னேன். […]

விமர்சனங்களுக்கு கலங்காதீர்!

விமர்சனங்களுக்கு கலங்காதீர்! கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! ‘வீட்டையே திருத்த முடியலை. இவர் ஊரைத் திருத்த வந்துவிட்டார்’ என்று நம்மை நோக்கி சிலர் கூறுவர். இது போன்ற விமர்சனங்கள் மார்க்கப் பிரச்சாரத்திற்கு ஒரு தடையாக அமைந்துவிடக் கூடாது. ஏனெனில் இப்ராஹிம் நபியின் தந்தை ஆஸர் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. நூஹ், லூத் போன்ற நபிமார்களின் மனைவிமார்கள் ஏகத்துவத்தை ஏற்கவில்லை என்பதே குர்ஆன் கூறும் தெளிவான பிரகடனமாகும். தன் மனைவி மக்களைத் திருத்தியதற்குப் பிறகே மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று […]

இணை கற்பித்தலும் இறைவன் கூறும் உதாரணங்களும்

இணை கற்பித்தலும் இறைவன் கூறும் உதாரணங்களும் கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இணையில்லா இறைவனுக்கு இணை கற்பிப்பது மன்னிக்கப்படாத குற்றம் நன்மைகளை நாசமாக்கும் நச்சுக் காரியம் நிரந்தர நரகில் தள்ளும் நிகரில்லாப் பாவம் மனிதன், இறைவனுக்கு இழைக்கின்ற மகத்தான அநீதி அத்தகைய இணைவைப்பைச் செய்வதால் ஏற்படும் இம்மை, மறுமை இழப்புகளை, இணைவைப்பின் விபரீதங்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் நிறையவே கூறியுள்ளான். அந்த வரிசையில் தனக்கு இணை கற்பிப்பது எந்த வகையிலும் தகாது என்பதை மனித சமுதாயத்திற்கு விளக்குவதற்காக இணைவைப்பிற்கு […]

ஆஷுரா தரும் படிப்பினைகள்

ஆஷுரா தரும் படிப்பினைகள் அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கின் முதல் மாதமான முஹர்ரம் மாதம் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும். இந்த மாதத்தின் பிறை 10 அன்று நோற்கப்படும் நோன்புக்கு ஆஷுரா நோன்பு எனப்படும். இந்த ஆஷுரா நோன்பை பற்றி குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ள செய்திளை இந்த உரையில் காண்போம். ஆஷுரா நோன்பு عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ […]

கரணம் தப்பினால் மரணமே!

கரணம் தப்பினால் மரணமே! கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இவ்வுலகம் விஞ்ஞானத்திலும் நாகரீகத்திலும் சிகரத்தை எட்டுமளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. முந்தைய காலங்களில் மனிதன் மட்டுமே செய்து வந்த வேலைகளை தற்போது இயந்திரங்கள் வியக்கும் விதத்தில் நிறைவேற்றி வருகின்றன. புதிய புதிய இயந்திரங்கள், வாகனங்கள், சாதனங்கள் போன்ற பல கண்டுபிடிப்புகள் தலைதூக்கி நிற்கின்றன. இந்த நாகரீக உலகத்தில் வாழும் மக்கள் இந்தக் கண்டுபிடிப்புகளின் பால் தேவையுடையவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகளில் வாகனங்கள் […]

வாடும் பெற்றோரும் வதைக்கும் பிள்ளைகளும்

வாடும் பெற்றோரும் வதைக்கும் பிள்ளைகளும் மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! நாகரீக உலகில் மனித சமூகத்தைப் பீடித்துள்ள மிகப்பெரும் சமூக வியாதிகளில் ஒன்று வயோதிகப் பெற்றொர்களை வதைப்பதாகும். காலூன்றி நடக்க முடியாத தள்ளாத வயதினிலே விழுதுகளாய் பெற்றோரைத் தாங்க வேண்டிய பிள்ளைகள், தங்கள் அன்னையர்களை அல்லல் படுவோராக அலைக்கழிப்பது வார்த்தைகளில் வடிக்க இயலாத மாபெரும் கொடுமையாகும். ஆம்! இன்றைக்குப் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் மனித சமூகம் மிகப்பெரும் அலட்சியப் போக்கில் உள்ளது. […]

தீமையைத் தடுப்பதும் மார்க்கப்பணியே!

தீமையைத் தடுப்பதும் மார்க்கப்பணியே! கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஏகத்துவக் கொள்கையை தூய முறையில் பின்பற்றுவதுடன் அது குறித்து பிற மக்களுக்கும் நாம் எடுத்துரைக்க வேண்டும். சத்தியத்தை நோக்கி அடுத்த மக்களையும் அழைக்க வேண்டும். இத்தகைய அழைப்புப் பணி தொடர்பான வழிமுறைகள் குர்ஆன் ஹதீஸில் நிறைந்துள்ளன. அந்தப் போதனைகளை அறியாமல் அல்லது அறிந்தாலும் அதன்படி செயல்படாமல் அநேக மக்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்வதன் அவசியத்தை அறிந்து அதில் ஆர்வத்துடன் […]

நல்லறங்களில் நிலைத்திருப்போம்

நல்லறங்களில் நிலைத்திருப்போம் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே.!  நாம் செய்யும் ஒரு நல்ல அமலுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நன்மைகள் வழங்கப்படுவதாக நபிகளார் நற்செய்தி கூறியுள்ளார்கள். நமது நல்லறங்கள் படைத்தவனிடம் நற்கூலி பெற்றுத் தந்தால் மட்டும் போதும் என்று இருந்துவிடாமல், அவனது விருப்பத்தையும் பெற்றுத் தர வேண்டுமென நாம் ஆர்வம் கொள்ள வேண்டும். அதற்குரிய வழிகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய அறிவுரையைப் இந்த உரையில் பாப்போம். يَا أَيُّهَا […]

சுயமரியாதை போதித்த பகுத்தறிவு மார்க்கம்

சுயமரியாதை போதித்த  பகுத்தறிவு மார்க்கம் கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இறைவன் இந்த உலகத்தைப் படைத்து, கோடிக்கணக்கான மனிதர்களை பல்கிப் பரவச் செய்திருக்கின்றான். இந்த உலகத்தில் ஏராளமான உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டிருந்தாலும், பகுத்தறிவு என்ற சிந்தனை அறிவு மனிதர்களைத் தவிர வேறு எந்தப் படைப்புக்கும் வழங்கப்படவில்லை. மேலும், மனிதர்களை விட பிரம்மாண்டமான உடலமைப்பு கொண்ட உயிரினங்களும், மனிதர்களை விட ஆற்றல் பெற்ற உயிரினங்களும் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எத்தனை பெரிய ஆற்றலும், பிரம்மாண்டமும் இறைவனால் […]

இதயங்களை ஈர்த்த இனிய குர்ஆன்!

இதயங்களை ஈர்த்த இனிய குர்ஆன்! அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இன்று ஊடகங்களின் இருபத்து நான்கு மணி நேர சேவையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்ற அலைவரிசைகளில் மக்கள் கவனத்தை அதிகம் கவர்ந்திழுப்பவை நகைச்சுவைக் காட்சிகள் தான். அந்த அளவுக்கு மக்கள் தங்களை மறந்து சிரிப்பில் மூழ்கிக்கிடப்பதை பார்க்கின்றோம். உயர் தரமிக்க உலக இலக்கிய நூல்கள், உன்னதமான காவியங்கள் எல்லாம் சிரிப்புக்கு ஓர் உயர்ந்த இடத்தைக் கொடுத்து, அதற்கு உரமூட்டி, உற்சாகமூட்டி, உயர்த்திப் பேசிக் கொண்டிருக்கையில் சிரிப்பை ஓரங்கட்டி […]

கற்பனைக்கு அப்பாற்பட்ட சொர்க்கத்தின் இன்பங்கள்

சொர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள் ஏராளம் ஏராளம், அவற்றை முழுமையாக கற்பனை கூட செய்ய இயலாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றை பற்றி ஹதீஸ்களில் வந்துள்ளவற்றில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்! ஈமானுடன் நல்அமல்களும் அவசியம்! الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ طُوبَىٰ لَهُمْ وَحُسْنُ مَآبٍ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்: 13:29) وَمَا أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ بِالَّتِي تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفَىٰ إِلَّا مَنْ آمَنَ […]

பொய்யர்கள் அழிவார்கள்!

பொய்யர்கள் அழிவார்கள்! இஸ்லாமிய மார்க்கத்தில் மனிதர்கள் செய்கின்ற செயல்களில் நன்மையைப் பெற்றுத் தருகின்ற காரியம் எது? தீமையைப் பெற்றுத் தருகின்ற காரியம் எது? என்பதை ஏராளமான உபதேசங்களின் மூலமாக மிகவும் விரிவாகவும், எளிமையான முறையிலும் அறிவுரை கூறப்பட்டிருக்கின்றது. நாம் செய்யக்கூடிய கேடுகெட்ட காரியங்களைப் பொறுத்தே இம்மையிலும், மறுமையிலும் தண்டனை வழங்கப்படும் என்று மார்க்கம் நமக்கு தெளிவுபடுத்துகின்றது. நாம் செய்யக்கூடிய செயல்களில் சர்வ சாதரணமாக நம்முடைய நாவினால் செயல்படுத்துகின்ற பெரும்பாவம் பொய். இன்றைய காலகட்டங்களில் பொய் என்பது பெரும்பாலான […]

பாவங்கள் மன்னிக்கப்பட எளிய வழிகள்

பாவங்கள் மன்னிக்கப்பட எளிய வழிகள் அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! கனிவும் மாண்பும் மிகுந்த ஏக இறைவன், படைப்பினங்களில் மிக உயர்ந்த படைப்பாக மனித குலத்தைத் தேர்வு செய்திருக்கிறான். எந்த உயிரினத்திற்கும் வழங்காத பகுத்தறிவை மனித இனத்திற்கு வழங்கி, எதுவெல்லாம் நன்மை, எதுவெல்லாம் தீமை என்பதை பிரித்துக் காட்டியுள்ளான். நன்மை செய்தால் கிடைக்கும் வெகுமதியைப் பற்றியும், தீமை செய்வதால் கிடைக்கும் தண்டனைகளைப் பற்றியும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளான். وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ (நன்மை தீமை என) இரு […]

அல்லாஹ்வின் தூதரே  அழகிய ஆசிரியர்!

அல்லாஹ்வின் தூதரே அழகிய ஆசிரியர்! மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! மனித சமுதாயம் பின்பற்றுவதற்கு ஏற்ற மார்க்கம், இஸ்லாம் மட்டுமே! மனிதனை சக்திக்கு மீறிய சோதிக்கிற எந்தவொரு சட்டத்தையும் இதில் பார்க்கவே முடியாது. இந்த மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் புரிந்து கொள்ளவும் நடைமுறைப் படுத்தவும் மிகவும் எளிதானது. عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلَّا غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا، وَأَبْشِرُوا، […]

பொறுப்பு – ஓர் அமானிதம்

பொறுப்பு – ஓர் அமானிதம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம்! அல்லாஹ்வின் தூதரை மட்டுமே பின்பற்றுவோம் என்ற மகத்துவம் நிறைந்த ஓரிறைக் கொள்கையிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அல்லாஹ்வின் அருளால் பல்வேறு விதமான பொறுப்புகளையும், பதவிகளையும், அந்தஸ்துகளையும் மனிதர்களில் பெரும்பாலோர் பெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். இந்தப் பொறுப்புகள் கிடைக்கப் பெற்றிருக்கின்ற அனைவரும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பொறுப்பை இறைவனின் புறத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கின்ற அமானிதம், சோதனை, இறைக்கட்டளை என்றே நம்பக் கடமைப்பட்டிருக்கின்றோம். […]

கொலையை விட குழப்பம் கொடியது!

கொலையை விட குழப்பம் கொடியது! கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஒரு தனிமனிதனின் வாழ்க்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் நிலையும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில நேரங்களில் சரியானதையும் தவறானதையும் பிரித்தறிய முடியாத அளவுக்குக் குழப்பங்கள் ஏற்படலாம்; அதனால் மக்களைத் தடுமாற்றமும் பதட்டமும் பற்றிப் பிடித்துக் கொள்ளும். இத்தகைய சூழ்நிலை பற்றியும் அப்போது கையாள வேண்டிய முறை பற்றியும் இஸ்லாம் விளக்கியுள்ளது. அவற்றை நம்பிக்கையாளர்கள் அறிந்து செயல்படுவது மிகவும் அவசியம். ஆகையால், […]

இஸ்லாத்தின் பார்வையில் அன்பளிப்பு

இஸ்லாத்தின் பார்வையில் அன்பளிப்பு கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரையிலும் அன்பளிப்பு வாங்குவதும், வழங்குவதும் காலம் காலமாக நடைமுறையில் இருந்து ஒரு கலாச்சாரமாகும். நமது வீட்டில் நடைபெறுகின்ற மார்க்கம் அனுமதித்த, மார்க்கம் அனுமதிக்காத விஷேசங்களில், குழந்தை பிறப்பு முதற்கொண்டு, திருமணம், பெயர் சூட்டுவிழா, புதுமனை புகுவிழா என அனைத்து விதமான காரியங்களிலும் அன்பளிப்பு பரிமாறிக் கொள்வது ஒரு கட்டாயமான சம்பிரதாயமாக உள்ளது. இந்த அன்பளிப்பு குறித்த மார்க்கத்தின் வழிகாட்டுதல் என்ன என்பதையும் […]

துறக்க வேண்டிய தீய பண்புகள்

துறக்க வேண்டிய தீய பண்புகள் கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் பார்வையில் நல்லவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போது தான் அவனது அன்பையும் அருளையும் பெற இயலும். அதற்கான அனைத்து வழிமுறைகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒன்று, அவனிடம் நன்மதிப்பைப் பெற்றுத் தரும் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதாகும். மற்றொன்று, அவன் தடுத்துள்ள தீய பண்புகளை விட்டும் விலகியிருப்பதாகும். இந்த வகையில் படைத்தவனிடம் கெட்ட பெயரைப் ஏற்படுத்தும் மோசமான குணங்களைக் குறித்து இப்போது இந்த உரையில் காண்போம். […]

இறை நினைவும்  அதன் நன்மைகளும்

இறை நினைவும்  அதன் நன்மைகளும் கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் நிம்மதியாக வாழ்வதற்கும் அவனுடைய உள்ளம் நிம்மதி அடைவதற்கும் இறை நினைவு தான் சிறந்த தீர்வாக இருக்கிறது. இறைநினைவு மூலம் இவ்வுலகில் மட்டுமல்ல மறுமையிலும் அதன் நன்மைகள் பெறுமதியாக மனிதனுக்கு பெற்றுத் தருகிறது. அவ்வாறு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய இறைநினைவுககளைப் பற்றியும் அதன் மூலம் மனிதன் அடையும் நன்மைகளைப் பற்றியும் சிலவற்றை இந்த உரையில் காண்போம்.. உள்ளங்கள் […]

தர்மம் தலை காக்கும்!

தர்மம் தலை காக்கும்! அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாத்தில் எல்லா வகையான நற்காரியங்களும் நற்பண்புகளும் போதிக்கப்பட்டு உள்ளது. அவற்றுள் முக்கியமான ஒன்று, தர்மம் செய்வதாகும். தர்மம் தலைகாக்கும் என்று பழமொழி சொல்வார்கள். அது எப்படிக் காக்கும் என்பதை இஸ்லாம் தெளிவாக விளக்கி இருக்கிறது. நாம் பெற்றுள்ள பொருளாதாரத்தை, பொருட்களை நல்வழியில் செலவழிப்பது பற்றிய செய்திகள் பல விதங்களில் மார்க்கத்தில் சொல்லப்பட்டு உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்.. இறைநம்பிக்கையின் அடையாளம் நமது […]

ஈமானில் உள்ள ஏற்றத்தாழ்வு

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலக வாழ்கையில் மனிதர்கள் அனைவரும் எல்லா விஷயங்களிலும் சமமானவர்களாக இருப்பதில்லை. சிலர் பொருளாதாரா ரீதியாக ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். சிலர் அறிவு ரீதியாக ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். இன்னும் சிலர் நிற ரீதியாக கருப்பு, வெள்ளை என்று ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். இப்படியாக ஒட்டு மொத்த மனித சமுதாயாமும் ஒரு ஏற்றத் தாழ்வுடன் வாழ்ந்து வருவதை பார்த்து வருகிறோம். இது மாதிரியான ஏற்றத் தாழ்வுகள்  மனிதர்களுக்கு மத்தியில் இருப்பதை […]

தடுமாற்றம்! தடம் மாற்றும்!!

தடுமாற்றம்! தடம் மாற்றும்!! அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் ஏதோ ஒரு வேளையில் தன்னை அறிந்தோ, அறியாமலோ பாவமான காரியங்களில் தடுமாறி விழுந்து விடுவதைப் பார்க்கின்றோம். சிலர் செய்கின்ற பாவம் வெளியே தெரிந்து விட்டால் அவர் பாவி என்றும், பலர் செய்கின்ற பாவம் வெளியே தெரியாததன் காரணத்தினால் அவர் நல்லவர் என்றும் மக்களால் பெயர் சூட்டப்படுகின்றார். எது எப்படியோ மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பாவம் செய்வதின் மூலமாகவோ […]

இதுதான் உலகம்!

இதுதான் உலகம்! அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இம்மைக்கும் மறுமைக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்திருக்க வேண்டும். மறுமை வாழ்வின் உயர்வை அறிந்திருந்தால் மட்டும் போதாது. இந்த உலகம் எந்தளவுக்குக் கீழானது என்பதையும் புரிந்திருப்பது அவசியம். ஆகவேதான், உலகத்தின் நிலையைப் பற்றிய உதாரணங்கள், ஒப்பீடுகள் மார்க்கத்தில் அதிகம் கூறப்படுள்ளன. அந்தச் செய்திகளை அறிவதே இவ்வுரையின் நோக்கம்.. நிரந்தமற்ற வாழ்க்கை: வானிலிருந்து வரும் மழைநீர் பூமியில் விழுந்து தாவரங்களுடன் கலந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் காணாமல் போகிறது. அதுபோன்று […]

அற்பமாகக் கருதாதீர்!

அற்பமாகக் கருதாதீர்! கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்டு, திருப்தி கொள்ளப்பட்ட இஸ்லாம் எனும் ஓர் உன்னத மார்க்கத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது, இறைவன் நமக்கு வழங்கிய வற்றாப் பேரருள் ஆகும். இம்மார்க்கத்தில் முஸ்லிம்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு நற்செயலுக்கும் அளவில்லாக் கூலி வழங்கப்படுகிறது. இந்தப் பாக்கியம் முஸ்லிமல்லாத வேறெவருக்கும் கிட்டுவதில்லை. சக மனிதர்களை பார்த்துப் புன்னகைப்பது கூட ஒரு தர்மம் என்ற அளவிற்கு இறைவன் தனது அடியார்களுக்கு எல்லையில்லாக் கூலியை […]

மார்க்கம் அறிவோம்! மறுமை வெல்வோம்!

மார்க்கம் அறிவோம்! மறுமை வெல்வோம்! கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எந்தவொரு கொள்கையும் கோட்பாடும் கூறாத அளவுக்கு இஸ்லாம் கல்வியைக் குறித்து அதிகம் போதித்துள்ளது. கல்வி என்று நாம் பொதுவாகச் சொன்னாலும், அதிலுள்ள அடிப்படைத் தன்மைகள், அம்சங்களைக் கவனித்து, அதைப் பல வகைகளாகப் பிரிக்க இயலும். அவற்றுள் முக்கிய ஒன்றான, மார்க்கக் கல்வி பற்றிய சில தகவல்களை இந்த உரையில் பார்ப்போம். பொறாமை கொள்ள அனுமதிக்கப்பட்ட இரண்டு விஷயங்கள்  ஈருலகிலும் வெற்றி பெறுவதற்கு ஏக […]

தவறுகளை நியாயப்படுத்தாதீர்!

தவறுகளை நியாயப்படுத்தாதீர்! அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அகில உலகத்தையும் படைத்திருக்கின்ற இறைவன் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களைப் பல்கிப் பெருகச் செய்திருக்கின்றான். தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியாகவும், பின்பற்ற வேண்டிய வழிமுறையாகவும் திருக்குர்ஆன் என்ற மகத்தான பேரருட்கொடையை இறைவன் வழங்கியிருக்கின்றான். இந்தப் பேரருட்கொடையின் மூலம் உலக மாந்தர்கள் அனைவரும் அதிகமான படிப்பினைகளையும், பாடங்களையும், வாழ்க்கை வழிகாட்டுதல்களையும் பெற முடியும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் திருக்குர்ஆனின் அறிவுரைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நாம் […]

நினைப்பதெல்லாம் கிடைக்கும்  நித்திய வாழ்க்கை

நினைப்பதெல்லாம் கிடைக்கும்  நித்திய வாழ்க்கை இம்மைக்கும், மறுமைக்கும் இடையேயான வேறுபாட்டினை நாம் சரியாகப் புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், சத்தியப் பாதையில் உறுதியாக இருக்க முடியும். அவ்வகையில் இவ்வுலக வாழ்வை விடவும் சொர்க்க வாழ்வு எந்தளவு சிறந்தது என்பது குறித்து ஒரு முக்கியமான செய்தியை இப்போது பார்க்க இருக்கிறோம். பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு விதமான விருப்பங்கள், கனவுகள் கண்டிப்பாக இருக்கும். மரணத்தை எதிர்நோக்கிய நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் மனிதனுக்கும் கூட இந்த விஷயத்தில் விதிவிலக்கு வழங்க […]

திருக்குர்ஆனைத் திருப்பிப் பாருங்கள்!

திருக்குர்ஆனைத் திருப்பிப் பாருங்கள்! கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அகில உலகத்திற்கும் இறுதித்தூதராக நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி, திருக்குர்ஆன் என்ற மகத்தான பேரருட்கொடையை வழங்கியிருக்கின்றான். இந்தத் திருக்குர்ஆன் மூலமாக உலகம் அழிகின்ற நாள் வரைக்கும் உள்ள மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கை வழிகாட்டுதல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இறைவன் ஏராளமான இடங்களில் அறிவுரை கூறுகின்றான். ஆனால் இன்றைக்குப் பெரும்பாலானோர் திருக்குர்ஆன் வழிகாட்டித் தந்திருக்கின்ற அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் தங்களுடைய மனம் […]

நீயா? நானா?

நீயா? நானா? அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மனித சமுதாயம் ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து தோன்றியிருந்தாலும் அனைவரும் ஒரே குணம் படைத்தவர்களாக இல்லை. சிலர் மென்மையானவர்களாக இருப்பார்கள். சிலர் அதற்கு நேரெதிராகக் கடும்போக்கு உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் அதிகம் பொறாமை கொள்பவர்களாக இருப்பார்கள். சிலர் அனைவருக்கும் நலம் நாடுபவர்களாக இருப்பார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் பல்வேறு குணங்களை தன்னகத்தே கொண்டவர்களாக உள்ளனர். இத்தகைய குணங்களில் நமக்கும், நம்மைச் சுற்றியுள்ளோருக்கும் பயன் தருகிற குணம் எது? தீங்களிக்கிற […]

திருக்குர்ஆனைக் கற்போம்! கற்பிப்போம்!

திருக்குர்ஆனைக் கற்போம்! கற்பிப்போம்! மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மனித சமுதாயம் நேர்வழியில் நடப்பதற்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் எல்லாம் வல்ல இறைவன் தனது திருத்தூதர்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களையும் வழங்கினான். இறைத்தூதர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு விளக்கினார்கள். வேதங்களின் கட்டளைகளையும் விளக்கிக் கூறினார்கள், வாழ்ந்தும் காட்டினார்கள். ஆனால் வேதம் கொடுக்கப்பட்ட எல்லா சமுதாயமும் இறைத்தூதர்களின் காலத்துக்குப் பின் வேதத்தின் போதனைகளையும், தூதர்களின் விளக்கத்தையும் புறக்கணிக்காமல் இருக்கவில்லை. வேதமெல்லாம் நமக்கு விளங்காது எனக் கூறி […]

ஏழைகளே உங்களைத்தான்!

ஏழைகளே உங்களைத்தான்! அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஏழைகளைப் பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதிகமாக சிறப்பித்து கூறி இருக்கிறார்கள். அவ்வாறு சிறப்பித்து கூறப்பட்ட சில செய்திகளை இந்த உரையில் காண்போம்… இறைவன் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களைப் படைத்திருக்கின்றான். இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களில் சிலருக்கு சிலரை விட அந்தஸ்துகளையும், வசதி வாய்ப்புகளையும் வழங்கி இறைவன் மேன்மைப்படுத்தியிருப்பதைப் பார்க்கின்றோம். சிலரை செல்வச் செழிப்புள்ளவர்களாகவும், சிலரை பொருளாதாரத்தில் பலவீனமானவர்களாகவும் படைத்திருக்கின்றான். […]

தீமைக்குத் துணைபோகாதீர்!

தீமைக்குத் துணைபோகாதீர்! கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! சமூகத்தின் அங்கமாக இருக்கும் நாம், அதன் நலனை நாடும் வகையில் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும். இது குறித்து குர்ஆன் ஹதீஸில் நிறைய அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இந்த உரையில் காண்போம்.. நன்மையை ஏவி தீமையை தடுப்போம்  முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து ஏராளமான போதனைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது என்பது முக்கியமான ஒன்றாகும். இம்மையிலும் […]

வருமுன் காப்போம்

வருமுன் காப்போம் கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! நாம் வாழும் இவ்வுலக வாழ்க்கையானது நிரந்தரமற்றது. அப்படிப்ட்ட ஓர் உலகில் வாழும் நாம் நம்மை மறுமைக்காக எவ்வாறு தயாரித்துக் கொள்ள வேண்டும், இவ்வுலக வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நபிகளார் உபதேசித்த சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்..  செத்த ஆட்டைவிட இவ்வுலக வாழ்கை அற்பமானது  இஸ்லாம் மார்க்கம் இதர மதங்களின் கொள்கைகளை விட்டும், நம்பிக்கைகளை விட்டும் முற்றிலும் வேறுபட்டு நிற்கின்றது. […]

ஒன்றுக்குப் பத்து! ஓரிறையின் பரிசு!

ஒன்றுக்குப் பத்து! ஓரிறையின் பரிசு! கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! சிறிய அமல்களின் மூலம் அதிக நன்மைகளை சம்பாதிக்கும் வழிமுறைகளை நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கற்றுத்தந்து இருக்கிறார்கள். அந்த அமல்களில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்..   ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்ற அளவுக்கு முன்வாழ்ந்த சமுதாய மக்கள் ஆயுள் வழங்கப்பட்டிருந்தனர். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَلَبِثَ فِيْهِمْ اَ لْفَ سَنَةٍ اِلَّا خَمْسِيْنَ عَامًا ؕ […]

மாற்றம் தரும் மாமறை

மாற்றம் தரும் மாமறை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயக்கம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் இறைவேத வசனங்ளின் மூலம் அவ்வப்போது நபிகளார் அதிகமாக போதித்து வந்தார்கள். அப்படி போதித்த  தருணத்தில் அந்த சஹாபாக்கள் இறைவசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்ட போதனைகளை அப்படியே கேட்டு நடைமுறைபடுத்தினார்கள். அந்த இறைவசனம் அவர்களை மாற்றியது. எவ்வாறு அவர்களை மாற்றியது என்பதை நபிகளார் காலத்திலும் சஹாபாக்கள் காலத்திலும்  நடந்த சில நிகழ்வுகளை இந்த […]

மறுமை வெற்றிக்காக  என்ன செய்திருக்கிறோம்?

மறுமை வெற்றிக்காக  என்ன செய்திருக்கிறோம்? மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! நிரந்தரமான மறுமை வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்ற மாபெரும் ஒற்றை இலக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட மக்கள், எல்லா வகையிலும் அந்த மறுமைக்கேற்பத் தமது வாழ்வை செம்மையாக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த வகையில், நற்செயல் செய்வதின் அவசியத்தையும் அவற்றை அதிகம் செய்வதற்கான சில வழிகளையும் இந்தக் உரையில்  காண்போம்.. எதற்காக இந்த உலக வாழ்க்கை? உலகில் […]

நீதிக்கு சாட்சியாளர்களாகி விடுங்கள்!!

நீதிக்கு சாட்சியாளர்களாகி விடுங்கள்!! அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இறைவன் இந்த உலகத்தில் மனிதப் படைப்புகளை, பிற உயிரினங்களைக் காட்டிலும் வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். மேலும், பகுத்தறிவின் மூலமாகவும், சிந்தனை ஆற்றலின் மூலமாகவும் மனிதர்கள் தங்களின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதற்கு ஏற்ற சூழலை இறைவன் வழங்கி இருக்கின்றான். இதுபோன்ற ஏராளமான சிந்தனை ஆற்றல்கள், கூரிய அறிவு சார்ந்த காரியங்கள், சிந்தனைகளை உரசிப் பார்த்து நடைமுறைப்படுத்த வேண்டிய ஏராளமான செயல்பாடுகள் என்று மனித குலத்துக்கு […]

நன்மைகளை அள்ளிக் கொள்வோம்

நன்மைகளை அள்ளிக் கொள்வோம் அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த உலகில் வாழும் போது நமது செயல்கள் எவ்வாறு இருந்ததோ அதன் அடிப்படையில் தான் அல்லாஹ் மறுமையில் நமக்குத் தீர்ப்பு வழங்குவான். இதை நினைவில் கொண்டு தீமையான காரியங்களை விட்டு விலகி இருப்பதோடு, முடிந்தளவுக்கு நன்மையான காரியங்களை அதிகமதிகம் செய்ய வேண்டும். இத்தகைய ஆர்வமும் அக்கறையும் எப்போதும் இருக்க வேண்டுமெனில், நமது நற்காரியங்களுக்கு அல்லாஹ் எவ்வாறெல்லாம் கூலியை வழங்குகிறான் என்பதை அறிந்து கொள்வது அவசியம். […]

உளூவினால் கிடைக்கும் உடனடியான பலன்கள்

உளூவினால் கிடைக்கும் உடனடியான பலன்கள் மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! ஒருவர் உறக்கத்தை விட்டு எழுந்தவுடன் மீண்டும் உறங்கவேண்டும் என்ற சோர்வூட்டும் எண்ணம் உள்ளிருந்து பிறந்து கொண்டிருக்கும். மீண்டும் படுக்கைக்குப் போய் விடுவோமா என்ற போராட்டம் நடந்து கொண்டிருக்கும். சொக்குப்பொடி போட்டு இரு கண்களையும் சொருக வைத்து சொக்குகின்ற, தூக்கப்பிடியில் நம்மைச் சிக்க வைக்கும் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு முடிவு கட்டுவது நாம் செய்கின்ற உளூதான். அந்த உளூவினால் கிடைக்கும் பலன்களைப் பற்றி இந்த உரையில் சிலவற்றை பார்ப்போம்.. ஷைத்தானின் […]

வறுமையிலும் செம்மையாக வாழ

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! வறுமையைப் பற்றி இஸ்லாம் கூறும் அறிவுரைகளையும், வசதி வாய்ப்பு வந்த பிறகு எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவுரைகளையும் இஸ்லாம் நமக்கு எடுத்துரைக்கிறது. அவற்றை இந்த உரையில் காண்போம்.  வறுமையும், வசதிகளும் சோதனைதான் ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். அதுபோல் ஒருவருக்கு வறுமையை அல்லாஹ் வழங்கினால் அதன் மூலம் அல்லாஹ் அவரைச் சோதித்துப் பார்க்கிறான் என்று நம்புவது மனமாற்றத்துக்கான முதல் […]

பயனளிக்காத உறவுகள்

பயனளிக்காத உறவுகள் அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! திருக்குர்ஆனும் நபிமொழியும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை விளங்கி வைத்திருக்கின்ற ஒவ்வொருவரும் இந்த ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால் இவ்வாறு உறுதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றவர்களின் இறை நம்பிக்கையைப் பலவீனப்படுத்தி, ஆட்டம் காண ஷைத்தான் ஒரு குறுக்கு வழியைக் கையாள்கிறான். அந்தக் குறுக்கு வழியின் மூலம் வழிகெட்டு, வழிகேட்டின்பால் விழுவோரில் தீன்குலப் பெண்மணிகள் முதலிடம் வகின்றனர். இறை நம்பிக்கையில் […]

மாற்று மதத்தினருடன் நட்பு கொள்வோம்

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மாற்று மதத்தவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறும் தகவல்களை இந்த உரையில் காண்போம்..   மாற்று மதத்தினருடன் நட்பு முந்தைய காலங்களில் நமது சமுதாயத்தில் பலர், மாற்று மதத்தவர்களிடம் சரிவரப் பழகாமல் அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். ஆனால் ஏகத்துவ எழுச்சி தமிழகத்தில் பரவத் தொடங்கியது முதல் மாற்றாருக்கும் நமக்கும் மத்தியில் நல்லதொரு நட்பு ஏற்பட்டிருக்கின்றது. மாற்று மதத்தவர்களுடன் அழகிய முறையில் […]

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே!

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே! அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான். அதற்குப் பின்னர், அது வரை ஏறுமுகத்தில் […]

இறைவனுக்கு உறவுகள் இல்லை

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் தேவையற்றவனாக இருக்கிறான். அவனுக்கு எந்த உறவும் தேவை இல்லை. அவனுக்கு ஏன் உறவுகள் தேவையில்லை.. என்பன போன்ற தகவல்களை இந்த உரையில் காண்போம்.. இறைவனுக்கு உறவுகள் இல்லை, எந்தத் தேவையுமில்லாதவனே கடவுள்! அதற்கடுத்து, அல்லாஹுஸ்ஸ்ஸமது-الله الصمد-அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன் என்பது இதற்குப் பொருள். பகுத்தறிவு பேசுகிறவர்கள் மதத்தை வெறுப்பதற்கு கடவுளின் பெயரால் நடக்கும் சுரண்டல்தான் முக்கிய காரணமாக உள்ளது. மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் மனிதர்களை மூளைச் சலவை […]

நல்ல செயல்களும் தீய செயல்களும்

நல்ல செயல்களும் தீய செயல்களும் மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் மனிதனை படைத்து அவனுக்கு தீங்கு தர கூடிய பொருள்களையும், தீங்கு ஏற்படுத்தாத பொருள் (காரியங்)களையும் ஏற்படுத்தியுள்ளான். ஆனால் மனிதன் தனக்கு தீங்கு தராத பொருள்களை விட்டு விட்டு தீங்கு தரக்கூடியப் பொருள்களை பயன்படுத்தவே விரும்புகிறான். மனிதர் மூலமாக தீங்கு தரக்கூடிய பொருள்கள் உள்ளன. மது, புகையிலை, சிசுவைக் கொள்ளுதல், அடிக்கடி கோபப்படுதல் இது போன்ற செயல்கள் மனிதனுக்கு தீங்கு தரக்கூடியதாக ஏற்படுத்தியுள்ளான். […]

நபிகளார் சந்தித்த உயிரிழப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு. நபிகளார் சந்தித்த உயிரிழப்புகள் என்ற தலைப்பில் நபிகளார் அவர்கள் அவர்களின் வாழ்கையில் சந்தித்த உயிரிழைப்புகளை இந்த உரையில் காண்போம்.. நபிகளார் சந்தித்த உயிரிழப்புகள் பூகம்பத்தால் 1000க்கும் மேற்பட்டோர் பலி, சுனாமியில் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி, இரயில் விபத்தில் 100பேர் பலி, சாலை விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலி, கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு, வெயிலின் கொடுமைக்கு மூவர் பலி, இவைகளெல்லாம் அன்றாடம் செய்தித்தாள்களில் இடம் பெறக்கூடிய செய்திகள். இறப்புச் செய்தியை […]

நன்மைகளை நாசமாக்கும் நச்சுப் பண்புகள்!

நன்மைகளை நாசமாக்கும் நச்சுப்பண்புகள்! அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அகிலத்திலே அதிகமான மக்கள் அற்ப வாழ்விற்காக தங்களை அடகு வைத்து அசிங்கமான, அர்த்தமற்ற காரியங்களிலே அடைப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் நாம் அழிவில்லா மறுமை வாழ்விற்காக நம்மை அர்ப்பணித்து இழிவான செயல்களை விட்டும் விலகி இனிய காரியங்களிலே ஈடுபட்டிக்கொண்டிருக்கிறோம். எந்தளவிற்கெனில் மார்க்க நெறிமுறைக்கு கட்டுப்படுவது தான் முக்கியம் என்பதால், தடுமாறிக் கொண்டிருக்கின்ற ஊரையும் உறவினர்களையும் பகைத்துக் கொண்டு பல கடமையான சுன்னத்தான மற்றும் அனுமதிக்கப்பட்ட காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம். அதே […]

சிறப்பிற்குரியோர் யார்….?

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! சிறப்பிற்குரியோர் யார் என்ற தலைப்பில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய நற்போதனைகளை இந்த உரையில் காண்போம்.. சிறப்பிற்குரியோர் யார்….? இந்த உலகத்திலே மனித சமுதாயம் படைக்கப்பட்ட உன்னதமான நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏ ‘ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்க்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை’ (அல்குர்ஆன்: 51:56) மேற்கண்ட வசனம் இறைவனை மட்டும்தான் வணங்கவேண்டும் வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அவன் ஒருவனுக்கே […]

மரணத்தைத் தழுவிய மாமன்னர் சுலைமான்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் தூதரும் மாமன்னருமான சுலைமான் நபி அவர்கள் எவ்வாறு மரணத்தை தழுவினார்கள் என்பதை இந்த உரையில் காண்போம்… மரணத்தைத் தழுவிய மாமன்னர் சுலைமான் உலகத்தில் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர்களில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற தூதர்கள் தாவூத் (அலை) அவர்களும், அவரது மகன் சுலைமான் (அலை) அவர்களும் ஆவர். அவ்விரு தூதர்களுக்கும் அளித்த அருட்கொடைகளைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். وَلَـقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَ سُلَيْمٰنَ عِلْمًا‌ ۚ وَقَالَا الْحَمْدُ […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். அந்த தொழுகயை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கின்றது. தொழுவதன் மூலம் இறைவன் வழங்கும் நன்மையைப் பற்றி இந்த உரையில் காண்போம்..   நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் மிக முக்கியமான ஒரு கடமை தொழுகையாகும். தொழுகை என்பது முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட, கட்டாயக் கடமை ஆகும். اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا‏ […]

Next Page »