Tamil Bayan Points

Category: பொதுவான தலைப்புகள் – 3

b105

புறக்கணிப்பு ஒரு போர்க் கவசம்

புறக்கணிப்பு ஒரு போர்க் கவசம் பிரச்சாரத்தின் வழியே வாழ்க்கையாக புறக்கணிப்பின் பூரண பலன்கள் கடவுளான காளை மாடு எதிரிகள் திருந்துதல் மறுமையில் இது ஒரு காவல் அரண் முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபி அவர்களுடைய சமுதாயத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்களது புறக்கணிப்பு என்ற வியூகத்தில் முன்மாதிரி இருக்கின்றது என்று பாராட்டிச் சொல்கின்றான்.  قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗ‌ۚ […]

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்!

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்! நிய்யத்தை மாற்றும் மங்கைகள் பெண்களால் வரும் சோதனைகளும் குழப்பங்களும் பெண்களால் வரும் பிரச்சனைகள் மதியை மாற்றும் மாதுக்கள் மார்க்கப் பற்றை மறக்கடிக்கும் மங்கைகள் முன்னுரை  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு. மனித இனத்தை ஜோடியாகப் படைத்திருக்கும் இறைவன், அந்த ஆண், பெண் எனும் ஜோடிக்கு இடையே பல்வேறு வேறுபாடுகளை வைத்திருக்கிறான். இருவருக்கும் மத்தியில் ஒருவருக்கொருவர் கவரப்படுவதிலும் வித்தியாசத்தை வைத்துள்ளான். ஆண் மூலம் பெண் ஈர்க்கப்படுவதற்கும் பெண் மூலம் ஆண் ஈர்க்கப்படுவதற்கும் இடையே வேறுபாடு […]

அழிக்கப்பட்ட சமுதாயங்களும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்

அழிக்கப்பட்ட சமுதாயங்களும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும் இறைத்தூதர்களுக்கு முரண்படுதல் தேவையில்லா கேள்வியைக் கேட்டல் மார்க்க வரம்புகளை மீறுதல் சட்டதிட்டங்களில் சமரசம் செய்தல் உலக இன்பங்கள் மீது மோகம் கொள்ளுதல் விதியைப் பற்றி தர்க்கம் செய்தல் குழப்பத்தை ஏற்படுத்துதல் கஞ்சத்தனம் கொள்ளுதல் முன்னுரை  அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நமக்கு முன்னால் வாழ்ந்து சென்ற சமுதாய மக்கள் சம்பந்தமான செய்திகளை திருமறையில் இறைவன் தெரிவித்திருக்கிறான். முன்சென்றவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி முழுமையாக இல்லாவிட்டாலும், அவர்களின் காரியங்களில் […]

மஹ்ஷரில் மனிதனின் நிலை-2

மஹ்ஷரில் மனிதனின் நிலை கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை முகஸ்துதிக்காக அமல் செய்தவர்கள் நிலை நல்லவர்களின் நிலைகள் இஹ்ராமோடு இறந்தவர்களின் நிலை ஷஹீதானவர்களின் நிலை பாங்கு சொல்பவர்களின் நிலை அங்கத்தூய்மை செய்தவர்களின் நிலை முன்னுரை  குறிப்பிட்ட தீமைகளைச் செய்தவர்கள் மஹ்ஷரில் என்ன நிலையை அடைவார்கள் என்பது பற்றிப் பல்வேறு ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றையும், மஹ்ஷரில் நல்லவர்களின் நிலை எப்படியிருக்கும் என்பதையும் இந்த உரையில் பார்ப்போம். கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை ஏக இறைவன் செல்வத்தின் மூலமும் நம்மைச் சோதிப்பான். எனவே […]

பிற மதத்தவர்களிடம் அன்பு காட்டிய பெருமானார்

பிற மதத்தவர்களிடம் அன்பு காட்டிய பெருமானார் வாரிசாக அறிவித்து விடுவாரோ.. யூத சிறுவனுக்கு செய்த அழைப்புபணி யூதரிடம் அடைமானம் வைத்த நபிகளார்  யூத சமுதாய மக்களை அரவணைத்த நபிகளார்  யூதருக்கு நீதி வழங்கிய நபிகளார் அநாகரீக வார்த்தையைக் கூட பயன்படுத்தாத மாமன்னர் பிற மதத்தவர்களிடம் அன்பு காட்டிய நபிகளார்  முன்னுரை :  கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே! அவர்கள் தம் சமுதாய மக்களுக்கு சகிப்புத்தன்மையை […]

நபிகளாரின் அணுகுமுறை

நபிகளாரின் அணுகுமுறை இலகுவாக போதித்த இறைத்தூதர் நபிகளாரின் அணுகுமுறை தவறைச் சுட்டிக்காட்டும் முறை மன்னிக்கும் மனப்பாங்கு மன்னிப்புக்கே முதலிடம் விபச்சாரம் செய்ய அனுமதி கேட்டவரை மனம் திருத்திய நபிகளார் அண்ணலாரின் தலைச்சிறந்த அணுகுமுறை நிதானமாக அணுகிய முறை  முன்னுரை :  அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக அனுப்பப்பட்ட ஓர் இறைத்தூதர் ஆவார்கள். அவர்கள் மனித சமுதாயத்தை அழகிய பண்பிலும் அருங்குணத்திலும் வார்த்தெடுத்தார்கள் என்றால் மிகையல்ல. […]

பிறர்நலம் நாடும் இஸ்லாம்

பிறர்நலம் நாடும் இஸ்லாம் பிறர்நலம் நாடுவதே இஸ்லாம் இறை நம்பிக்கையின் அடையாளம் இறையச்சத்தின் வெளிப்பாடு பிறர் நலம் நாடிய நபிகளார் பிறர் நலம் நாடும் உறுதிமொழி அனைவரும், அனைவருக்கும் நலம் நாடுதல் பிறர் நலம் நாடுவோரும், கெடுப்போரும் முன்னுரை  கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் […]

மறுமையின் சாட்சிகள்

மறுமையின் சாட்சிகள் அல்லாஹ்வே முதல் சாட்சியாளன் சாட்சியாகும் மலக்குகளும் பதிவேடுகளும் தங்களுக்கே சாட்சி சொல்லும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் சாட்சியாக இருக்கும் மனிதர்கள் கழுத்தில் இருக்கும் பதிவேட்டின் சாட்சி உடல் உறுப்புகளின் சாட்சி ஜின்களின் சாட்சி உயிரற்ற பொருட்களின் சாட்சி முன்னுரை  அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு அனைத்து மனிதர்களும் எழுப்பப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியவர்களாக அல்லாஹ்வின் முன்னால் நின்று கொண்டிருப்பார்கள். பூமியில் வாழும்போது செய்த அனைத்துக் காரியங்கள் குறித்தும் மனிதர்களிடம் […]

நித்திய ஜீவனை நினைவுபடுத்தும் நிழல்

நித்திய ஜீவனை நினைவுபடுத்தும் நிழல் நிழலும் அருட்கொடையே! படைத்தவனுக்குப் பணியும் நிழல் நிழலை நிலையாக்கும் வல்லவன் நிழலற்ற நாளில் நிழல் பெறுவோர் நிழல் நிறைந்த சொர்க்கம் சுவனத்தில் நிழல் நிழலே இல்லாத நரகம் நிழலும் நேர்ச்சையும் நிழல்களை நாசப்படுத்தாதீர் நிழல்களைத் தடுக்காதீர் நிலையற்ற நிழல் உலகம் முன்னுரை :  கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! கோடை வெயில் அனலை அள்ளிக் கொட்டுகிறது. பாதைகளில் பயணிக்கும் மக்கள், அடிக்கடி அதன் ஓரத்தில் நிம்மதி நாடி நிழல் தேடி […]

பேசும் மொழிகளும் படைத்தவனின் அற்புதமே!

பேசும் மொழிகளும் படைத்தவனின் அற்புதமே! படைத்தவன் இருப்பதற்கான சான்று மொழிபேசும் உயிரினங்கள் அனைத்து மொழிகளையும் அறிந்தவன் மொழிப் பெருமையைப் புறக்கணிப்போம் மொழியறிவை வளர்த்துக் கொள்வோம் மொழியை கையிலெடுத்த அசத்தியவாதிகள் மொழியறிந்தோரின் மகத்தான சேவை மார்க்கத்தை அறிய உதவும் மொழிப்புலமை தாய்மொழி தெரிந்தவர்களும் தவறிழைப்பார்கள் மொழியைப் பயன்படுத்தும் விதம் மொழி மூலம் வரும்  பிரச்சனைகள் முன்னுரை :  கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நமது கருத்துக்களைப் பரிமாறுவதற்கும், எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் மிகச் சிறந்த ஊடகமாக மொழி இருக்கிறது. மொழி என்பது […]

அழகாக்கப்பட்ட அமல்கள்

அழகாக்கப்பட்ட அமல்கள் தனி மனிதனின் வழிகேடு சமுதாயத்தின் வழிகேடு நியாயமாகும் தவறுகள் பரேலவிகளின் போலி நியாயம் சொக்கப்பனை ஒரு சோடனை வெற்றிலை – அது வெற்று இலை அல்ல (?) முன்னுரை :  கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இதற்கு முன்னர் பல சமுதாயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அழிக்கப்பட்டதற்கு அல்லாஹ் ஒரு முக்கியமான காரணத்தைக் கூறுகின்றான். அந்தச் செயல் நம்மிடத்தில் இருக்கின்றதா என ஒவ்வொருவரும் நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறும் அந்தக் காரணம் என்னவென்று […]

அண்ணலாரின் அச்சம்

அண்ணலாரின் அச்சம் கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! மனித குலத்திற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக இருப்பவர், முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவர்களுடைய வாழ்க்கையிலே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அறநெறிகளும், அறிவுரைகளும் நிறைந்து இருக்கின்றன. அண்ணலார் அவர்களுடைய சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்திலும் அழகிய வழி காட்டுதல்கள் அமைந்துள்ளன. அந்த வகையில், ஒரு முக்கியமான போதனையை இங்கு தெரிந்து கொள்ள இருக்கிறோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையிலே பல்வேறு காரியங்களைப் பற்றி அஞ்சி இருக்கிறார்கள். பல சமயங்களில் […]

காற்று இறைவனின் சான்றே!

காற்று இறைவனின் சான்றே! அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! சூரியக் கதிர்கள், சுடும் வெப்பத்தைத் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் கோடை காலம் . அக்னிக் கதிர்களின் ஆவேசத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு வழிகளைக் கையாள வேண்டிய காலநிலை. அடிக்கடி நீர் ஆகாரங்களைப் பருகுவது, நிழல்களில் ஒதுங்கி ஓய்வெடுப்பது போன்றவை கட்டாயமாகிப் போன இக்கட்டான நிலை. சூழ்நிலை இவ்வாறிருக்க, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று, அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படும் கொடுமை வேறு. ஓடாத மின்விசிறிகளுக்கு கீழே […]

அவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை

அவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் தடை செய்துள்ள பல்வேறு தீமையின் அம்சங்களில் அவதூறும் ஒன்று. இந்த அவதூறானது இஸ்லாத்தை அழிப்பதற்காக எதிரிகள் கையிலெடுக்கும் ஆயுதம். அதேப் போன்று நபிமார்கள் சத்தியத்தை எடுத்துரைக்கும் போது பல்வேறு விதங்களில் எதிரிகள் எதிர்த்தார்கள். அவதூறு சொற்களால் வசைபாடினார்கள், அல்லாஹ் குறிப்பிடுகிறான்.  كَذٰلِكَ مَاۤ اَتَى الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ‌ۚ‏ இவ்வாறே அவர்களுக்கு முன் […]

பிறமதக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம்

பிறமதக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! முஸ்லிம்களாக இருக்கும் நம்மைச் சுற்றிலும், ஏராளமான பிறமத சகோதரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று அவர்கள் கொண்டாடும் பண்டிகைகள் அடிக்கடி வந்து போகின்றன. அவற்றில் கலந்து கொள்ள அவர்களும் நம்மை ஆர்வத்துடன் அழைக்கிறார்கள். அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஒரே பகுதியில் வசிக்கிறோம்; ஒரே இடத்தில் வேலை செய்கிறோம்; அவர்களது அழைப்பை ஏற்று கொள்ள வேண்டும்; […]

நலம் நாடுவோம்

நலம் நாடுவோம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பிறர் நலம் நாடுவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை; இறை நம்பிக்கையின் அடையாளம்; இறையச்சத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்து இருக்கிறோம். எனவே, எப்போதும் எல்லோரும் எல்லோருக்கும் நலம் நாடும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறோம். நலம் நாடுதல் என்று பொதுவாகக் குறிப்பிட்டுச் சொன்னாலும் அந்த வார்த்தை விரிவான விளக்கம் கொண்டது. நலம் நாடுதல் என்றால், அனைவரும் நலமாக இருப்பதற்காகச் செய்கின்ற அனைத்து நல்ல காரியங்களையும் […]

நீதியை  நிலைநாட்டிய நபிகளார்

நீதியை  நிலைநாட்டிய நபிகளார் அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளைக் குறித்தும் இஸ்லாம் நமக்குப் போதித்து இருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதனும் அவன் அங்கம் வகிக்கும் சமூகமும் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அவற்றைக் களைவதற்குரிய அழகிய தீர்வுகளையும் முன்வைத்திருக்கிறது. இதன்படி, பல்வேறு அறிவுரைகள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று, எந்த விஷயத்திலும் எப்போதும் நாம் நீதமாக, நியாயமாக நடக்க வேண்டும் என்பதாகும். அப்படிப்பட்ட […]

மறுமைக்காக வாழ்வோம்

மறுமைக்காக வாழ்வோம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இறைவன் மனிதர்களுக்கு உபதேசிக்கின்ற அறிவுரைகளில் மிக முக்கியமான அறிவுரை, மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மறுமையை இலக்காகக் கொண்டு மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடியவர்களாக  –  விரும்பக்கூடியவர்களாக இருந்தால் அவர்கள் மறுமைக்காகவே வாழ வேண்டும். இறைவன் தன்னுடைய திருமறையில், ஓரிரு இடங்களில் அல்ல திருமறைக் குர்ஆன் நெடுகிலும் மனிதர்கள் மறுமைக்காக மட்டுமே வாழ வேண்டும் என்பதை அற்புதமான முறையில் நமக்குப் […]

பாசமிகு தூதர் முஹம்மது (ஸல்)

பாசமிகு தூதர் முஹம்மது (ஸல்) கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏ உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர். (அல்குர்ஆன்: 9:128) திருக்குர்ஆனையே தமது வாழ்க்கையாகக் கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கண்ட வசனத்தை […]

குர்ஆன் வழி நடந்த கோமான் நபி

குர்ஆன் வழி நடந்த கோமான் நபி அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகத்தில் வாழ்ந்து மறைந்த எந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு தான் அவரது குணநலன்கள் என்ன? பழக்கவழக்கங்கள் என்ன? அவருக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்பன போன்றவற்றை அறிந்து கொள்வது சாத்தியமாகும். ஆனால் இந்தப் பொதுவிதியிலிருந்து அகிலத்திற்கு ஓர் […]

காலங்கள் மாறினாலும் காயங்கள் ஆறுவதில்லை

காலங்கள் மாறினாலும் காயங்கள் ஆறுவதில்லை அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌ ؕ ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். (அல்குர்ஆன்: 17:15) ஏக இறைவனாகிய அல்லாஹ் தன் அருள்மறையாம் திருமறையில், ஒருவரின் சுமையை மற்றவர் சுமக்கமாட்டார் என்று குறிப்பிடுகிறான். ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் பொறுப்பாக மாட்டார். அவரவரின் கூலியோ, தண்டனையோ அது செய்தவருக்கே உரித்தானது என அல்லாஹ் கூறுகின்றான். உண்மை நிலை இவ்வாறிருக்க இன்றோ பாவம் […]

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்!

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்! கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நபியவர்களின் மக்கா வாழ்வின் போது நடைபெற்ற மிக அற்புதமான நிகழ்ச்சி மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் ஆகும். மிஃராஜ் என்ற உண்மைச் சம்பவத்தின் அற்புதமான நிகழ்வுகளை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் உரையில் நாம் காணவிருக்கின்றோம். இந்நிகழ்வு ரஜப் 27ல் நடைபெற்றதாக ஒரு நம்பிக்கை மக்களிடம் உள்ளது. ஆனால் ரஜப் 27 அன்று தான் மிஃராஜ் நடைபெற்றது என்பதற்கு உறுதியான எந்த […]

தூதரின் பக்கம் திரும்புவோம்

தூதரின் பக்கம் திரும்புவோம் மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எந்தவொரு செய்தியாக இருந்தாலும் எல்லோரும் அதை ஒரே விதமாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். சிலர் விளங்கிக் கொள்வதில் கூடுதல் குறைவு இருக்கும். சிலர் சரியாகப் புரிந்து கொள்வார்கள்; சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். இதனால்தான், எது குறித்துக் கேட்டாலும், பார்த்தாலும் மக்களிடையே பல்வேறு விதமான கருத்துகள் வருகின்றன. இதுவே யதார்த்தம். எனவே இதை மனதில் நிறுத்திக் கொண்டு எந்தச் செய்தியையும் சரியான முறையில் […]

இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம்

இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம் கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! வஹீ எனும் அரபிச் சொல்லுக்கு இறைச்செய்தி எனும் பொருள். அதாவது இறைவனிடமிருந்து இறைத்தூதருக்கு அறிவிக்கப்படுவதே வஹீ ஆகும். வஹியை மட்டும் தான் இறைத்தூதர் மக்களுக்கு போதிக்க வேண்டும், வஹீ மட்டும் தான் மார்க்கமாகும். வஹீ அல்லாதது வழிகேடு ஆகும். இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம் எனும் தலைப்பின் கீழாக சில செய்திகளை இந்த உரையில் அறிய இருக்கிறோம்.   அல்லாஹ்விற்கு சொந்தமாகும்  இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்குச் சொந்தமான மார்க்கமாகும். […]

மறுமையில் தனிநபர் விசாரணை

மறுமையில் தனிநபர் விசாரணை அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! மறுமையில் ஆதம் (அலை) முதல் கியாம நாள் வரை வரக்கூடிய எல்லா மனிதர்களையும் மஹ்ஷரில் மைதானத்தில் ஒன்று திரட்டி அனைவரையும் அல்லாஹ் விசாரிப்பான். அவ்வாறு அல்லாஹ் மறுமையில் விசாரிக்கும் சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்.  கேள்வி கணக்குக்காக அல்லாஹ்விடம் நிற்பர் وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا அனைவரும் அல்லாஹ்வின் முன்னே நிற்பார்கள். (அல்குர்ஆன்: 14:21) அபூபக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி) அறிவித்தார்: ‘வானங்களும் […]

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம்

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இறைவனால் மன்னிப்பு வழங்கப்படாத குற்றம் உலகில் உண்டென்றால் அது இணைவைப்பாகும். அல்லாஹ்வுடைய இடத்தில் வேறு யாரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அதை அல்லாஹ் அறவே வெறுக்கின்றான். மனிதர்கள் இறைவனுக்குச் சமமாக யாரையும் கருதுவதை அல்லாஹ் விரும்பவில்லை. மாறாகக் கடும் கோபம் கொள்கின்றான். ஆகையால் தான் இணை வைப்பிலேயே மரணித்தவர்களுக்கு இறைவன் நிரந்தர நரகைப் பரிசாக அளிக்கின்றான். இப்போது ஓர் புதிய நினைவலையாக இணைவைப்பிற்கான […]

உணரப்படாத தீமைகள்

உணரப்படாத தீமைகள் கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஏக இறைவனாகிய அல்லாஹ் தனக்கு இணைகள், துணைகள் எதுவும் இல்லை என்றும், அவ்வாறு இணை இருப்பது ஒரு கடவுளுக்குத் தகுதியானதல்ல என்பதையும் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றான். இதையும் மீறி அல்லாஹ்விற்கு இணையானவர்கள் உண்டு என்று யாராவது நம்பினால் அதற்கு மறுமையில் மிகப் பெரிய தண்டனை காத்திருக்கின்றது என்றும் இறைவன் எச்சரிக்கை செய்கின்றான். ஷிர்க் என்று அறிந்து கொள்ள முடியாத வகையில் அமைந்துள்ள சிறிய இணை வைப்புக் காரியங்கள் பல […]

இறுதி முடிவு இனிதாகட்டும்!

இறுதி முடிவு இனிதாகட்டும்! அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! நம்முடைய அமல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஏராளமான போதனைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் கவனித்துச் செயல்படும் போது மட்டுமே மறுமையில் முழுமையான வெற்றிபெற முடியும். ஆகையால், அது தொடர்பான ஒரு முக்கிய போதனையை இப்போது  இந்த உரையில் அறிந்துக்கொள்வோம்.  செயல்களின் முடிவு இறுதியே பொதுவாக மார்க்க ரீதியாக எந்தக் காரியத்தைச் செய்தாலும் குர்ஆன், ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செய்ய வேண்டும். ஆரம்பிக்கும் விதம் […]

முகஸ்துதி ஒரு புற்று நோய்

முகஸ்துதி ஒரு புற்று நோய் மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! மனிதர்களுடைய மறுமை வாழ்வின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதற்கான பரீட்சைக் கூடமே இவ்வுலக வாழ்க்கை.. இவ்வுலகில் இறைவன் வகுத்துத் தந்த வழியில் செயல்பட்டு அவன் சொன்ன நற்காரியங்களைப் புரிந்து நன்மைகளை அவர்கள் சேகரிக்க வேண்டும். அவர்கள் சேகரிக்கும் நன்மையினால் கிடைக்கப் பெறும் இறையருளால் மட்டுமே வெற்றிக்கனியான சுவனத்தைப் பெற இயலும். அத்தகைய நன்மையான காரியங்களைப் புரிவதற்கு முன்னால் நாம் நம்முடைய மனதில் அடித்தளமிட வேண்டிய இக்லாஸ் எனும் அஸ்திவாரத்தைச் […]

முன்மாதிரித் தூதர் கூறிய முன்னுதாரணங்கள்

முன்மாதிரித் தூதர் கூறிய முன்னுதாரணங்கள் அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இன்று மக்கள் தங்களுடைய தலைவர்களாக சிலரை ஏற்படுத்தி, அவர்கள் சொல்லும் கருத்திற்கேற்பத் தான் நாங்கள் செயல்படுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த உலகத்தில் உத்தமத் தூதர் நபிகள் நாயகத்திற்கு இஸ்லாமிய சமுதாயம் கட்டுப்படுவது போல் உலகில் எந்தச் சமூகமும் எந்தத் தலைவருக்கும் கட்டுப்படவில்லை என்று அறைகூவலாகக் கூட நம்மால் சொல்ல முடியும். நபிகளாருக்கு மட்டும் ஏன் இந்த அந்தஸ்து? இதற்கான விளக்கத்தை இறைவன் […]

வட்டிக்கு தீர்வு இஸ்லாம் மட்டுமே!

வட்டிக்கு தீர்வு இஸ்லாம் மட்டுமே! மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இதற்கு நிரந்தரத் தீர்வு எங்கே கிடைக்கும்? திருக்குர்ஆனில் மட்டும் தான் இதற்குத் தீர்வு கிடைக்கும். திருக்குர்ஆனை அரசியல் மற்றும் ஆன்மீக சாசனமாகக் கொண்ட இஸ்லாத்தில் மட்டும் அதற்குத் தீர்வு இருக்கின்றது. முஸ்லிம்களின் முதல் நம்பிக்கையும், முழு நம்பிக்கையும் மறு உலக வாழ்க்கை தான். அந்த வாழ்க்கையை மையமாகக் கொண்டே முஸ்லிம்களின் இந்த உலக வாழ்க்கைச் சக்கரம் சுழல்கின்றது. முஸ்லிம்கள் எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்தாலும் அதற்கு […]

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம்

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம் கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் என்பது பிறர் நலம் நாடும் மார்க்கம். இதில், ஏக இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகள் பற்றி மட்டுமின்றி, சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றை அறிந்து முஸ்லிம்கள் சுயநலமாக இல்லாமல், பொதுநல சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும். தம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் துன்பத்திலும், சிரமத்திலும் தவிக்கும் போது கண்டும் காணாமல் இருந்துவிடக் கூடாது. குறிப்பாக, சமூகத்தில் எவரேனும் […]

இரைக்குப் பொறுப்பு இறைவனே!

இரைக்குப் பொறுப்பு இறைவனே! கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அன்றாடம் தமது தேவைகளை அடைவதற்காக காலையில் கண் விழித்தது முதல் இரவு தூங்கச் செல்கின்ற வரை தமது வியர்வைத் துளிகளை இரத்தத் துளிகளாக்கி அயராது உழைத்துப் பாடுபடுகின்றனர். எந்த அளவிற்கென்றால் சில நேரங்களில் மனிதன் தன்னுடைய அன்றாடத் தேவையை நிறைவேற்றுவதற்காகச் சில தவறான வழிகளையும் கையாண்டு பிற மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றான். இதை மனிதன் செய்வதற்குண்டான […]

இருப்பதைக் கொண்டு திருப்தியடைவோம்

இருப்பதைக் கொண்டு திருப்தியடைவோம் கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! மனிதனாகப் பிறந்த அனைவருமே பலவிதங்களில் பலதரப்பட்ட ஆசைகளைக் கொண்டவர்களாக வாழ்கிறோம். நமது ஆசைகள் வெவ்வேறாக இருந்தாலும், செல்வத்தைத் திரட்டுவதில் மட்டும் பாரபட்சமே இல்லாமல் மனித குலம் அனைவரும் ஒரே மாதிரி பேராசை கொண்டவர்களாக இருக்கிறோம். இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடின்றி, மரணத்தைச் சந்திக்கின்ற வரை செல்வத்தில் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கிறது. இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ […]

அற்ப விஷயத்தையும் பின்பற்றிய  அண்ணலாரின் தோழர்கள்

அற்ப விஷயத்தையும் பின்பற்றிய  அண்ணலாரின் தோழர்கள் கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மனிதர்களை நல்வழிப்படுத்த அல்லாஹ் மனிதர்களிலேயே சிலரைத் தேர்வு செய்து தூதர்களாக நியமிக்கிறான். தூதர்களை அல்லாஹ் அனுப்புவது அவர்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்குத் தான். இதுகுறித்து திருக்குர்ஆனில் ஏராளமான கட்டளைகளைக் காணலாம். قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ‌‌ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ‏ “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்பமாட்டான்’’ […]

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க சில வழிகள்

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க சில வழிகள்  அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட எந்த முஸ்லிமும் தயாராக இல்லை. பாவம் செய்யும் பாவிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏனெனில் சொர்க்கத்தில் சிறிதளவு இடம் கிடைப்பதாயினும் அது அவ்வளவு எளிதல்ல. عَنْ سَهْلِ بْنِ […]

புலனடக்கம்

புலனடக்கம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற – பாவச்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தம் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இன்றைக்கு நிகழும் பாவச் செயல்கள் அனைத்தும் புலன்களின் தூண்டுதலின் பெயராலேயே நடைபெறுகின்றன. விபச்சாரம், திருட்டு, கொலை, பாலியல் […]

படைத்தவன் நேசிக்கும் பாவமன்னிப்பு

படைத்தவன் நேசிக்கும் பாவமன்னிப்பு கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மனிதர்களைப் பலவீனமானவர்களாகவே இறைவன் படைத்திருக்கின்றான். மனிதன் இந்த உலகத்தில் வாழும் போது நன்மையான காரியங்களில் ஈடுபடுவதை விட பாவமான காரியங்களிலேயே அதிகம் ஈடுபடுவதைப் பார்க்கின்றோம். இதில் யாரும் விதிவிலக்கு இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றான். இதற்கு மிக முக்கியக் காரணம், இறைவன் மனிதர்களைப் பாவம் செய்பவர்களாகவே படைத்திருக்கின்றான். ஆனால் பாவம் செய்கின்ற மனிதன் தன்னுடைய […]

மரணத்திற்கு முன்..

மரணத்திற்கு முன்… அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் கொள்கை ரீதியாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர். எத்தனை கருத்து வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில் ஒன்றிணைவது, “அனைவரும் மரணிக்கக் கூடியவர்கள்” என்ற ஓர் உண்மையில் தான். கடவுள் நம்பிக்கையில் இருக்கும் ஆத்திகனாயினும், கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகனாயினும் கண்களால் அனுதினமும் கண்டு கொண்டிருக்கின்ற இப்பேருண்மையை மறுக்காமல் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், மரணத்திற்குப் […]

நற்குணத்தில் உயர்ந்த  நபித்தோழியர்கள்

நற்குணத்தில் உயர்ந்த  நபித்தோழியர்கள் அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழியர்கள் மிக உயர்ந்த நற்குணங்களுக்கு சொந்தக்காரர்களாகத் திகழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சிந்திக்கும் எவரது கண்களிலும் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுக்கும். அந்த அளவிற்கு இஸ்லாத்தினை உள்ளத்தில் கடுகளவும் சந்தேகம் இன்றி மிக உறுதியாகப் பின்பற்றியுள்ளனர். மறுமை நம்பிக்கை என்பதை வெறும் வாயளவில் மட்டும் இல்லாமல் செயலளவிலும் அந்த நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியுள்ளனர். இறைச் செய்தியான குர்ஆன் மற்றும் […]

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவோம்

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவோம் அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஏக இறைவன் பற்றிய பயம் நமக்கு முழுமையாக இருக்கும் போது, நாம் வாழ்வில் சரியான முறையில் நடந்து கொள்வோம். மார்க்கக் காரியங்கள் மட்டுமல்ல, மற்ற செயல்களிலும் சீரிய வகையில் செயல்படுவோம். ஆகவே தான் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இறையச்சம் குறித்து அதிகமதிகம் கூறப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்கு நோன்பு மூலம் ரமலான் மாதம் முழுவதும் நமக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை சரியான […]

மார்க்க சபைகளில் சங்கமிப்போம்!

மார்க்க சபைகளில் சங்கமிப்போம்! அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! மார்க்கத்தை அறியவும், அதன்படி வாழவும், அடுத்தவருக்கு அறிவிக்கவும் தேவைப்படும் வழிமுறைகள் அல்லாஹ்வின் தூதருடைய வாழ்வில் இருக்கின்றன. இவ்வகையில், இறைத்தூதரிடம் வந்து மக்கள் மார்க்கம் கற்றுக் கொண்ட சம்பவங்கள் உள்ளன. பல்வேறு தருணங்களில் நபிகளாரே மக்கள் கூடியிருக்கும் இடங்களுக்குச் சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள்ளார்கள்; மக்களை ஒன்றுதிரளச் செய்தும் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். இவற்றின் மூலம் மார்க்கம் அறியும் வாய்ப்பு அன்றைய மக்களுக்கு கிடைத்தது. இதைப் […]

பழிவாங்காத பண்பாளர்

பழிவாங்காத பண்பாளர் அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! நபிகளாரின் பரிசுத்தமான வாழ்க்கையைப் பார்த்து அன்றைய கால மக்கள் இஸ்லாத்தின் பக்கம் கவரப்பட்டார்கள். இன்றளவும் பலர், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தும் கேட்டும் இஸ்லாத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். காரணம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்பண்புகளின் உறைவிடமாக திகழ்ந்தார்கள்; ஒழுக்க சீலராக விளங்கினார்கள். சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தூதரின் குணநலன்கள் இருந்தன. இது குறித்து குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல செய்திகள் பதிவாகியுள்ளன. […]

ஊழலற்ற அரசியலுக்கு ஒரு முன்னோடி

ஊழலற்ற அரசியலுக்கு ஒரு முன்னோடி அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பணம் பத்தும் செய்யும், பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழிக்கேற்ப இன்றைய அரசியல் தலைவர்கள் முதல் படிப்பறிவில்லாத பாமரர்கள் வரை இருக்கின்றனர். வேலியே பயிரை மேயும் கதையாக, மக்களின் பாதுகாவலர்களாக விளங்க வேண்டியவர்களே அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அபாயம் இன்றைய சூழலில் ஏற்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் முதல் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் அடிமட்ட ஊழியர்கள் வரை ஊழலும், லஞ்சமும் அவர்களை விட்டபாடில்லை. […]

உண்மையை மறைக்காத  உத்தமத் தூதர்

உண்மையை மறைக்காத  உத்தமத் தூதர் முன்னுரை  அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் வாழ்கை, உலகத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கு ஓர் அழகிய எடுத்துக்காட்டு. நபிகளாரின் வாழ்கை ஏராளமான முன்மாதிரிகள் கொண்ட வாழ்கையாக அமைந்து இருந்தது. திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அவர்களின் வாழ்கையில் நடந்த ஏராளமான நிகழ்வுகள் சொல்லப்பட்டிருந்தாலும் இந்த உரையில் நாம் அல்லாஹ்வின் தூதர் எந்த உண்மையும் மறைக்காத உத்தம தூதர் என்ற தலைப்பில் சில செய்திகளை காண்போம்.  மார்க்கத்தின் அடிப்படையை அறியாத மக்கள் பல்வேறு வகையான […]

தனிமையில் ஒரு மனிதன்

தனிமையில் ஒரு மனிதன் கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இந்த உலகத்தில் உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் மட்டும் தான் இறையருளைப் பெற்று மறுமையில் வெற்றி பெற முடியும் என்பதை இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றோம். என்றாலும், நவீன காலம் என்பது மனிதர்களைக் கடுமையான சோதனைகளுக்குள்ளாக்கி பல தரப்பட்ட ஷைத்தானிய சிந்தனைகளை உள்ளங்களில் ஊடுருவச் செய்கின்ற மிக மோசமான காலகட்டமாகும். எந்தளவிற்கென்றால் ஒரு மனிதன் இன்றைய நவீன காலகட்டத்தில் […]

காக்கப்படும் மனித உரிமைகள்

காக்கப்படும் மனித உரிமைகள் கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! மத சித்தாந்தங்கள் என்றால் கடவுள் கொள்கையுடன் தங்கள் போதனையை சுருக்கிக் கொள்ள வேண்டும் என்கிற பரவலான புரிதலுக்கு மாற்றமாக, மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தலையிடுகின்ற, தீர்வளிக்கின்ற சித்தாந்தமாக இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே அமைந்துள்ளது. உலக வாழ்வில் எவையெல்லாம் அனுமதிக்கப் பட்டவை என்பதை இஸ்லாம் வரையறுத்துள்ளது. என்னென்ன காரியங்களெல்லாம் தடுக்கப் பட்டவை எனவும் வரையறை செய்துள்ளது. விபச்சாரம், வட்டி, கொலை போன்றவை பெரும்பாவங்கள் எனக் […]

அருளா? சோதனையா?

அருளா? சோதனையா? கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் இந்த உலகத்தில் கடத்துவதற்கு இன்றியமையாத விஷயங்களில் ஒன்று பொருளாதாரம். பொருளாதாரம் இருந்தால் தான் நமது வாழ்க்கையின் அங்கங்களாக இருக்கும் பல காரியங்களை நிறைவேற்ற முடியும். மார்க்கத்தின் பல கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பொருளாதாரம் ஒரு நிபந்தனையாக உள்ளது. மலை போல் நன்மையைப் பெற்றுத்தரும் உபரியான காரியங்களைச் செய்வதற்கும் பொருளாதாரம் தேவைப்படுகிறது. மேலும், நமக்கான மற்றும் நமது குடும்பத்திற்கான உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு, நமது மானங்களை […]

முஸ்லிம்களே தளர்ந்து விடாதீர்கள்

முஸ்லிம்களே தளர்ந்து விடாதீர்கள் மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களை இறைவன் படைத்திருக்கின்றான். ஒவ்வொரு சாராரும் ஒரு குறிப்பிட்ட மதங்களையும், சித்தாந்தங்களையும் பின்பற்றி வாழ்ந்து வருகின்றார்கள். பெரும்பான்மையான மக்கள் பல கடவுள் கொள்கையிலும், அல்லாஹ்வின் தூதர் ஈஸா (அலை) அவர்களை கடவுளாகக் கொண்டு ஒரு பெருங்கூட்டமும், கடவுளே இல்லை என்று ஒரு கூட்டமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தனை கோடி மனிதர்களுக்கு மத்தியில், அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) […]

மனிதகுல விரோதியும் பகிரங்க எதிரியும்

மனிதகுல விரோதியும் பகிரங்க எதிரியும் கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! திருமறைக் குர்ஆன் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒருவனைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த ஒருவன் தான் இறை விரோதியும் மனிதகுல விரோதியுமாகிய ஷைத்தான் ஆவான். மனிதர்களுக்கு நலம் நாடுவதைப் போல் நடித்து, அவர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போட்டு, அவர்களை வழிகெடுத்து, நிரந்தர நரகவாதிகளாக ஆக்குவதே இந்த இறைவிரோதியின் நோக்கமாகும். இந்த இறைவிரோதியின் சூழ்ச்சியில் சிக்குண்டு மனிதர்கள் நாசமாகி விடக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் திருமறைக் […]

Next Page »