Tamil Bayan Points

Category: அறிவியல் உண்மைகள்

b125

பழிவாங்காத பண்பாளர்

பழிவாங்காத பண்பாளர் அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! நபிகளாரின் பரிசுத்தமான வாழ்க்கையைப் பார்த்து அன்றைய கால மக்கள் இஸ்லாத்தின் பக்கம் கவரப்பட்டார்கள். இன்றளவும் பலர், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தும் கேட்டும் இஸ்லாத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். காரணம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்பண்புகளின் உறைவிடமாக திகழ்ந்தார்கள்; ஒழுக்க சீலராக விளங்கினார்கள். சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தூதரின் குணநலன்கள் இருந்தன. இது குறித்து குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல செய்திகள் பதிவாகியுள்ளன. […]

விமானம் பறப்பது எப்படி?

விமானம் பறப்பது எப்படி? இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான் பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும் சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது… இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் […]

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்? உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது. இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் […]

பாலைவனங்கள்

பாலைவனங்கள் பாலைவனங்கள் புவியியலின் படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி. மீ. க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன. புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் மிகுந்தும் இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். பாலைவனங்கள் மனிதவாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதில்லை. வரையறை பொதுவாக கிடைக்கும் மழை வீழ்ச்சி அல்லது ஏனைய நீர் மூலங்களை […]

புகை

புகை  புகை என்பது எரிக்கப்படும் எரிபொருள் முழுமையாக எரியாததன் விளைவாக ஏற்படுவதாகும். எரிபொருள் முழுமையும் எரிந்தால் புகை ஏதும் வெளிப்படாது. பெரும்பாலான எரிபொருள்கள் கரியம் எனப்படும் கார்பன், நீர், வாயுவாகிய ஹைட்ரஜன், உயிர்வளியாகிய ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றையும் சிறிதளவு கந்தகம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.சில கனிமங்களின் சாம்பலும் கலந்திருக்கும். இந்த எரிபொருட்கள் முழுமையாக எரிந்து முடித்தால் இறுதி விளைவாக கரியமில வாயு, நீராவி, நைட்ரஜன் ஆகியவை எஞ்சும். இவை தீங்கற்றவைகளாகும். எரிபொருளில் கந்தகமிருந்தால் கந்தக டை ஆக்ஸைடு […]

ஆழிப்பேரலை ( சுனாமி )

ஆழிப்பேரலை ( சுனாமி ) சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை  என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம் பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும். வரலாறு வரலாறு கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான […]

நிலவின் பிரமாண்டம்

நிலா நிலா (மாற்றுப் பெயர்கள்: நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன்) (Moon, இலத்தீன்: luna) என்பது புவியின் ஒரேயொரு நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது கதிரவ தொகுதியில் உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும் இரண்டாவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆகும். நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. புவிக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு 384, 403 கி.மீ. ஆகும். ஈர்ப்பு விசை பூட்டல் […]

நிலநடுக்கம்

நிலநடுக்கம் நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், அல்லது பூமியதிர்ச்சி, ஆங்கிலம்: (earthquake) என்பது பூமிக்கடியில்அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு  நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வுல்லன. பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் […]

நம்மை வியக்க வைக்கும் புவி

நம்மை வியக்க வைக்கும் புவி ..? புவி (ஆங்கிலம்:Earth), சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள் ,எனவும் குறிப்பிடுகின்றனர். மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்தப் புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாகக் கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது மேலும் […]

வாரத்தில் இரண்டு நாட்கள் நோன்பு பிடித்தால் அதிக நாட்கள் வாழலாம்

வாரத்தில் இரண்டு நாட்கள் நோன்பு பிடித்தால் அதிக நாட்கள் வாழலாம்     “வாரத்தில் ஒன்று இரண்டு நாட்கள் உணவு உண்ணுவதைத் தவிர்ப்பதன் மூலம் அதிக நாட்கள் உயிரோடு வாழலாம்” என்று ஒரு புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.. National Institute of Ageing தேசிய வயோதிகம் நிறுவனம் என்ற அமைப்பின் ஆய்வாளர்கள் “வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விரதம் இருப்பதன் மூலம் அதிக நாள்கள் வாழலாம். மூளையில் ஏற்படும் வயோதிக நோய்களான அல்ஜீமர் நோய் (Alzheimer […]

தும்மலை அடக்கினால் ஆபத்து

தும்மலை அடக்கினால் ஆபத்து இஸ்லாத்தை மெய்ப்படுத்தும் ஆய்வு! ஒரு மனிதன் ஒரு முறை தும்மினால் அது அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதைக் குறிக்கும். ஆனால் இன்றைய நாகரீக சமூகம் பொது இடங்களில் சப்தமிட்டு தும்முவது அநாகரீகச் செயல் என்று கருதுகிறது. எனவே தான் பொது சபைகளில் ஒருவர் தும்மினால் “எக்ஸ்க்யூஸ் மி” – என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லுவது பொது சபைகளில் நடந்து கொள்ளும் ஒழுங்கு முறையாக சொல்லித் தரப்படுகிறது. மேலும் தும்மல் மூலம் தான் […]

புவியின் மீது கதிரவனின் ஆற்றல்

புவியின் மீது கதிரவனின் ஆற்றல் கதிரவ ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். கதிரவ மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் கதிரவ ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். கதிரவ மாறிலி, கதிரவனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட்/சதுர மீட்டர் ஆகும். கதிரவ ஒளி புவியின் மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன்பு வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. இதனால் குறைந்த அளவிலான வெப்பமே தரைக்கு வந்தடைகிறது. ஒளிச் சேர்க்கையின் போது […]

மிகப்பிரம்மாண்டமான சூரியன்

சூரியன் என்றால் என்ன ? இது பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் ஆகும்.இது பிளாஸ்மா நிலையில் உள்ள மிகவும் வெப்பமான வாயுக்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய கோளமாகவும் காணப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜனும் பலூனில் அடைக்கப்பட்டிருக்கும் ஹீலியம் வாயுவுமே இதில் காணப்படும் முக்கிய பிரதான வாயுக்களாகும். சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500°C க்கும் அதிகமாகும்,அது மட்டுமின்றி இதன் மத்திய பகுதியின் வெப்பநிலை 15 மில்லியன்°C க்கும் அதிகமாகும். இது அதிகளவில் ஹைட்ரஜன் (70%) மற்றும் ஹீலியத்தால் (28%) ஆக்கப்பட்டுள்ளது. […]

கோள்கள்

கோள்கள் கோள் (planet) விண்மீனைச் சுற்றிவரும் வான்பொருளாகும். இதுதனது ஈர்ப்பு விசையாலுருண்டையாகத் திரளத் தக்க அளவு பொருண்மை மிக்கதாகும்; வெப்ப அணுக்கருப் பிணைவு நிகழ்வை உருவாக்க இயலாத அளவு பொருண்மை கொண்டதாகும்;மேலும் இது தன் வட்டணையின் வட்டாரத்தில் கோளெச்சம் ஏதும் அமையாமல் நீக்கியிருக்கவேண்டும். கோள் எனும் சொல் வரலாறு, கணியவியல், அறிவியல், தொன்மவியல், சமயம் சார்ந்த பண்டைய சொல்லாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம். இவை பல பண்டைய நாகரிகங்களால் தெய்வீகத் தன்மையோடும் தெய்வங்களால் அனுப்பப்பட்டனவாகவும் […]

விலகாமல் செல்லும் கோள்கள்!

விலகாமல் செல்லும் கோள்கள்! பேரண்டத்தில் (Universe) பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களும் (Galaxies) அவற்றில் எண்ணற்ற நட்சத்திரங்களும் (Stars) அந்த நட்சத்திரங்களின் ஈர்பற்றலில் பல கோடிக்கணக்கான கோள்களும் (Planets) இருக்கின்றன. பேரண்டத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களுள் ஒன்றுதான் நமது பூமி மற்றும் சூரியன் இருக்கும் பால்வெளி நட்சத்திர மண்டலம் (Milkyway Galaxies) ஆகும். இந்த பால்வெளி நட்சத்திர மண்டலத்தில் நமது சூரியக் குடும்பமும் இதைப் போன்ற இன்னும் ஏராளமான நட்சத்திரங்களும் இருக்கின்றன. நமது சூரியக்குடும்பத்தில் நாம் […]

வானம்

வானம் வானம் அல்லது ககனம் பூமியின் மேற்புறத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியைக் குறிக்கும். பொதுவாக இது வளிமண்டலத்தையும்,அதற்கு அப்பாலுள்ள விண்வெளியையும் சேர்த்து உள்ளடக்கியதாகும். வானியலில் வானமானது வானக்கோளம் எனவும் அழைக்கப்படும். இந்த வெளியிலே சூரியன், நிலா, விண்மீன்கள் போன்றவற்றின் அசைவுகளை நாம் அவதானிக்கிறோம். முகில், வானவில், வடமுனை ஒளி என்பன வானத்தில் காணக்கூடிய இயற்கையான சில தோற்றப்பாடுகளாகும். பொழிவு (வானிலையியல்), மின்னல் என்பனவும் வானத்துடன் தொடர்புடைய தோற்றங்களே.  பகலில், முகில்களற்ற வானம் இருக்கையில் சூரியன் தெரியும். அத்துடன் முகில்களற்ற வானம் நீல நிறமாக இருக்கும். இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் இருக்கும் வளிமமானது, சூரிய ஒளியிலிருந்து வரும் வெவ்வேறு நிறங்களில், நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிக்கின்றது. நீலநிறத்தை விடவும் அலைநீளம் குறைவான ஊதா, கருநீலம் […]

உண்மையை உணர மறுக்கும் உலகம்

உண்மையை உணர மறுக்கும் உலகம் وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ وَكَانَ الْإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا (54) மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான். (அல்குர் ஆன் 18 : 54) رَسُولٌ مِنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُطَهَّرَةً (2) فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ (3) இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை ஓதுகிறார். அதில் நேரான சட்டங்கள் உள்ளன. ( […]

மனஅழுத்தத்திற்கு மருந்து கடவுள் நம்பிக்கை

மனஅழுத்தத்திற்கு மருந்து கடவுள் நம்பிக்கை: கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின், இந்த ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம், பல்வேறு விதமான சோதனைகளை நடத்தினார். கடவுள் நம்பிக்கை, நோய் குணமடைவது குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சாதாரண சிகிச்சை முறை போன்றவை குறித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடவுளிடம் அதிகமான பக்தியுள்ள நபர்களுக்கு, […]

சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள்

சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள் டாக்டர் த முஹம்மது கிஸார் மருத்துவ அறிவியல் என்ன என்றே அறிந்திராத 1400 ஆண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்கள் தங்கள் திருத்தூதர் கற்றுத்தந்த வாழ்வியல் வழி என்று தொன்று தொட்டு கத்னா எனப்படும் ஆண் உறுப்பின் முன்தோலை நீக்கும் முறையை கையாண்டு வந்தனர். இன்று வரை அதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர். இன்று மருத்துவ அறிவியல் அபரிவிதமான வளர்ச்சி கண்டபோது, உலகிலே குழந்தை மருத்துவத்தின் மிக உயர்ந்த அமைப்பான […]

புற்று நோயை குணப்படுத்தும் ஒட்டக பால் – சிறுநீர்

புற்று நோயை குணப்படுத்தும் ஒட்டக பால் – சிறுநீர் அரபு நாட்டு பயோ டெக்னாலஜி நிறுவனம் புற்று நோய் மருத்துவம் பற்றி ஆய்வு நடத்தியது. பல்வேறு அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். அவர்களின் கண்டுபிடிப்பை அறியும் முன் 1432 ஆண்டுகளுக்கு முன் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அறிந்துகொள்வோம். 233- حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، […]

எறும்புகளின் அறிவாற்றல்

எறு‌ம்புக‌ளி‌ன் தலை‌ப்பகு‌தி‌யி‌ல் ஆ‌‌ன்டெனா எ‌ன்ற உறு‌ப்பு உ‌ள்ளது. இத‌ன் மூல‌ம் ஒ‌லி, சுவை, வாசனை ம‌ற்று‌ம் தொடு உண‌ர்வு ஆ‌கியவ‌ற்றை அ‌றி‌கி‌ன்றன. எறு‌ம்புக‌ள் ஒ‌ன்றை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி ஒ‌ன்றாக செ‌ல்லு‌ம் சுபாவமுடையவை. இவை பு‌ற்றுகளை‌க் க‌ட்டி வ‌சி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் உடையவை. ‌சில வகை எறு‌ம்புக‌ள் 15 அடி உயர பு‌ற்றுகளை‌க் கூட‌க் க‌ட்டு‌ம் ‌திற‌ன் வா‌ய்‌ந்தவை. எறு‌ம்புகளு‌க்கு க‌ண்க‌ள் ‌மிக‌த் து‌ல்‌லியமாக‌த் தெ‌ரியு‌ம். மேலு‌ம் உழை‌ப்ப‌தி‌ல் எறு‌ம்புகளு‌க்கு ஈடு இணை எதுவு‌ம் வராது. சொ‌ல்ல‌ப் போனா‌ல் எறு‌ம்புக‌ள் அத‌ன் […]

விதையில் ஒரு சாப்ட்வேர்

விதையில் ஒரு சாப்ட்வேர் அந்தப் புத்தகத்தின் அடுத்த பாடத்தில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். கருவாலி மரத்தின் கொட்டை ஒன்று நிலத்தில் விழுகின்றது. காற்றடித்து, பூமியின் ஏதோ ஒரு பள்ளத்தில் உருண்டு போய் விழுந்து கிடக்கும் அந்தக் கொட்டையைக் கனமான பழுப்பு நிறத்தையுடைய அதன் ஓடு பாதுகாக்கின்றது. வசந்த காலம் வந்ததும் அந்தக் கொட்டையின் மேல் ஓட்டை உடைத்துக் கொண்டு முளை விட ஆரம்பிக்கின்றது. ஒரு முட்டைக்குள் எப்படி அந்த முட்டையின் மரபு வழிக் காரணிகள் பல அடங்கியிருக்கின்றனவோ அதே […]

தலையை வெட்டினாலும் திரும்ப வளருவேன்!

உறுப்புகளை வளர்க்கும் உயிரினங்கள் கடல் நண்டு போன்ற எத்தனையோ பிராணிகள், அவற்றின் கால்கள் அல்லது கொடுக்குகளில் ஒன்றை இழந்து விட்டால் தனது உடலில் ஓர் உறுப்பு குறைந்து போய் விட்டதைத் தெரிந்து கொண்டு உடலிலுள்ள உயிரணுக்களையும், மரபு வழிக் காரணிகளையும் தூண்டுகின்றன. இழந்த உறுப்புக்குப் பதிலாக வேறொரு காலையோ அல்லது கொடுக்கையோ வளரச் செய்து இழப்பை ஈடு செய்து கொள்கின்றன. எப்போது அந்த உயிரணுக்கள் சேர்ந்து காலாக, கொடுக்காக மாறுகின்றனவோ அப்போது அவை தமது செயல்பாட்டை, அதாவது […]

சேட்டிலைட் இல்லாத செய்திப் பரிமாற்றம்

வண்ணத்துப் பூச்சி பால்கனி வழியாக நம் வீட்டு மாடத்தில் ஒரு பெண் வண்ணத்துப் பூச்சியைக் காற்று கொண்டு வந்து சேர்த்து விட்டால், கண்டு கொள்ள முடியாத ஒரு சமிக்ஞையை அது உடனே அனுப்புகின்றது. அதன் துணையான ஆண் வண்ணத்துப் பூச்சி எங்கோ தொலை தூரத்தில் பறந்து கொண்டிருந்த போதும் அதன் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு உடனடியாக அதற்கு மறுமொழியும் தந்து விடுகின்றது. அந்தக் காதலர் இருவரையும் தடுமாறச் செய்வதற்காக நமது முயற்சியால் புதுப்புது வாசனைகளை உண்டாக்கினாலும் அந்த […]

660V உயர் மின் அழுத்த மின்சார மீன்

எலக்டிரிக் ஈல் மிக உயர்ந்த மின் ஆற்றலை தன்னகத்தே கொண்டு விளங்கும் எலக்டிரிக் ஈல் (Electric Eel) என்று அழைக்கப்பபடும் மின்சார மீன், தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய இந்த வியப்பளிக்கும் மீன், தன் எதிரியின் உடலில் பட்ட மாத்திரத்தில் உயிரிழக்கச் செய்யும் அபரிதமான மின் ஆற்றலின் உற்பத்திக் கேந்திரமாக விளங்கிவருகின்றது. நம் நாட்டிலே மின் கம்பங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் மின் சாதனங்களின் அருகில், அபாயம் 440V மின்சாரம் என்று எழுதப்பட்டு மண்டை […]

பார்வைப் புலனும் பகுத்தறிவும்

சின்னஞ்சிறிய கண்கள் சில நுண்ணிய புழுப் பூச்சியினங்களுக்கு, மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே காணத்தக்க சின்னஞ்சிறிய கண்கள் இருக்கின்றன. அந்தக் கண்களின் ஆற்றலையும் வரம்பையும் நம்மால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியாது. பருந்து, கழுகு போன்ற பறவைகளுக்கு, தொலைநோக்கி (டெலஸ்கோப்) போன்று ஒரு பொருளை அண்மையிலும், உருப் பெருக்கியும் காட்டும் கண்கள் இருக்கின்றன. குதிரையின் திறன் மிக வயதான கிழட்டுக் குதிரையை இருட்டு நேரத்தில் எங்காவது கொண்டு போய் விட்டு விட்டு நாம் மட்டும் திரும்பி வந்து விடுவோமானால், […]

நமது கை, கால்களின் அதிசயம்

கைகள் விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும் போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன. கால்கள் நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன குளிரெடுக்கும்போது நம் உடல் […]

மனித மூளையின் ஆற்றல்

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு இலட்சம் லாரிகள் நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன. கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. […]

நாயின் அதிசய மோப்ப சக்தி

மனிதர்களாகிய நாம் சிறப்பாகச் செயல்படுவதற்கு பகுத்தறிவோடு, நமது ஐம்புலனறிவும் ஒரு முக்கியக் காரணம். ஐம்புலனறிவு எல்லா உயிகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பறவைகளுக்கு பார்வை சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூட பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும். வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வை சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் 22 கோடி வரை உள்ளன. மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் சில இலட்சங்களே உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு வாசனைகளை அவனால் […]

35 ஆயிரம் கிமீ வழிதவறாத பறவைகள்

ஆர்க்டிக் பிரதேசத்தில் டெர்ன் என்றழைக்கப்படும் நீள மூக்குடைய கடற்பறவை ஒன்று உள்ளது. இந்தப் பறவை, கோடை காலத்தில் ஆர்க்டிக் பிரதேசத்திலும், குளிர் காலத்தில் அண்டார்டிகா பகுதிக்கும் செல்கின்றது. இதற்காக இந்தப் பறவை பறந்து செல்லும் தூரம் 22,000 மைல்கள் (35000 km)  ஆகும். (முத்தாரம் 01.07.1984, பக்கம் 7) பறவைகளுக்கு, அவை தமது இருப்பிடங்களை விட்டு எவ்வளவு தூரத்துக்குப் பறந்து சென்றாலும் மீண்டும் அவற்றின் இருப்பிடங்களுக்கே திரும்பி வந்து விடுகின்ற இயல்புணர்ச்சி உண்டு. நம் வீட்டு வாசலில் […]

ஒளி அலைகளைத் தாங்காத விழித்திரை

உண்மையில் அத்தகைய ஒளி வெள்ளத்தைத் தாங்கும் ஆற்றல் கண்களுக்கு இல்லை என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது. பூமியைத் தினம் தினம் எத்தனையோ துகள்களும், வெளிச்சங்களும், அலைகளும், கதிர்களும் தாக்குகின்றன. காஸ்மிக் கதிர்கள், எக்ஸ் ரேக்கள், காமா கதிர்கள், அல்ட்ரா வயலட், இன்ஃப்ரா ரெட், ரேடியோ அலைகள், டெலிவிஷன், ரேடார் போன்ற கதிர்கள் முதல் தூர, தூர நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வரும் கதிரியக்க வெள்ளங்கள் வரை அனைத்தும் நாம் தெருவில் செல்லும் போதும் வீட்டில் தூங்கும் போதும் […]

செல்ஃபி பைத்தியங்கள்

‘செல்பி’ எனப்­படும் சுய புகைப்­படம் எடுப்­பதால் ஏற்­படும் உயி­ரி­ழப்­புகள் அதி­க­ரித்து வரு­வ­தா­கவும், உல­கி­லேயே இந்­தி­யாவில் தான் அதி­க­ளவு உயி­ரி­ழப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பிர­பல அமெ­ரிக்க செய்தி நிறு­வ­ன­மான ‘வொஷிங்டன் போஸ்ட்’ தெரி­வித்­துள்­ளது. ‘செல்பி’ அறி­மு­க­மான புதிதில் வர்த்­தக நிலை­யங்கள், பூங்கா, சுற்­று­லாத்­தளம் என்று பல்­வேறு இடங்­களில் ‘செல்பி’ எடுத்துக் கொண்ட இள வய­தினர், அதிக “Like” குகளுக்கு ஆசைப்­பட்டு ரெயில் கூரை, உய­ர­மான மலை, என்று ஆபத்­தான இடங்­களில் ‘செல்பி’ எடுக்க ஆரம்­பித்­துள்­ளனர். இதனால், ‘செல்பி’ உயி­ரி­ழப்­புகள் அதி­க­ரித்­துள்­ளன. […]

கழிவறைகளிலும் இனி இன்டர்நெட்

பீஜிங் நகரில் இலவச வை-ஃபை வசதியுடன்கூடிய நூறு நவீன கழிவறைகளை பீஜிங் மாநகராட்சி அமைக்கிறது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் தொடர்ந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அங்கு இந்த ஆண்டுக்குள் இலவசமாக வை-ஃபை இண்டர்நெட் வசதியுடன் கொண்ட நூறு நவீன கழிவறைகளை அதிகளவில் கட்டுவதற்கு பீஜிங் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, டோங்சோ, பாங்சான் மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்த வை-ஃபை கழிவறைகள் நிறுவப்படுகிறது. இதுதவிர, இந்நகரத்தில் ஆங்காங்கே ஏ.டி.எம் இயந்திரங்கள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள், […]

மாடு வளர்க்கும் எறும்புகள்!

அசுவினி என்றழைக்கப்படும் எனப்படும் ஒரு வகை பூச்சியினங்களை எறும்புகள் தங்கள் புற்றுகளில் வைத்து வளர்க்கின்றன.இவற்றிற்கு ஒரு வகை புற்களை உணவாக அளித்து அவற்றிலிருந்து சுரக்கும் தேன் போன்ற இனிய பானத்தை கறந்து எறும்புகள் உணவாகக்கொள்கின்றன. எனவேதான் இவை ‘எறும்பு பசு, என்று அழைக்கப்படுகின்றன. இவ்வசுவினிகளை பாதுகாக்க, உணவளிக்க ஒரு தனி எறும்புப்பிரிவே இருக்கின்றன. இவை தேனெறும்புகள் (honey ants) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் வேலை அசுவினிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும், அவற்றிற்கு உணவளிப்பதும், அவை இடும் முட்டைகளை பாதுகாத்து […]

செயற்கை நீர் சாத்தியமா:

செயற்கையாக நீரை உருவாக்குவது மிகவும் கடினம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்சிஜன் அணுவும் சேர்ந்தது தான் நீர். இந்த இரண்டு வாயுக்களும், எளிதாக கிடைக்கக் கூடியவை. ஆனாலும் இதை இணைத்து நீரை உருவாக்க முடியவில்லை. காரணம், ஹைட்ரஜன் அணு தனித்து கிடைக்காது. ஆக்சிஜன், இரட்டை அணு வாகத்தான் இருக்கும். ஒரு அணுவை அதிலிருந்து பிரிக்க முடியாது.இதையும் மீறி, இரண்டு ஹைட்ரஜன் அணுவையும், ஒரு […]

பாக்டீரியாவும் நன்மைக்கே

குடிநீரில் எண்ணற்ற நுண்ணியிரிகள் (பாக்டீரியா) காணப்படுகின்றன. இதனால் தான் நீர் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.  குடிநீர் குழாய்களில் தான் இந்த நுண்ணியிரிகள் அதிகம் காணப்படுகின்றன. இவை குழாய்களின் உள்ளே ஒரு மெல்லிய படலத்தை (பயோபிலிம்) உருவாக்கி, நீர் மாசு படாமல் காக்கிறது. சுத்திகரிப்பு நிலையங்களைவிட, நுண்ணயிரிகளின் உதவியால் குழாய்களில் தான் குடிநீர் அதிகம் சுத்தம் செய்யப்படுகிறது. இது, முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்படவில்லை.  தற்போதைய ஆராய்ச்சியின் போது எதிர்பாராதவிதமாக ஒரு மில்லி லிட்டர் நீரில் […]

மனித மூளையின் கொள்ளளவு

முன்பு நினைத்திருந்ததைவிட மனித மூளையின் கொள்ளளவு பத்து மடங்கு பெரியது என ஆய்வில் தெரியவந்துள்ளது. நினைவுகள் சேமிப்பதற்கான பொறுப்பு மூளையின் இணைப்புகளுக்கே உள்ளது. இரண்டு நரம்பு செல்களுக்கும் இடையே உள்ள இணைப்பின் (சினாப்ஸிஸ்) சேமிப்பு திறனை அளவிட்டு ஆராய்ந்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.சராசரியாக ஒரு சினாப்ஸிஸ், 4.7 பிட்கள் தகவல்களை வைத்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளை ஒரு பெடாபைட் (petabyte) அல்லது 1,000,000,000,000,000 பைட்டுகள் திறனுடையது என்று அர்த்தம்.ஒரு பெடாபைட் என்பது சுமார் […]

தூங்கும் மாணவர்களை கண்டுபிடிக்கும் சாதனம்

கெடுபிடிகளுக்கு பேர் போன சீனாவில், கல்லுாரி வகுப்பறைகளில், பின் வரிசையில் அமர்ந்து துாங்குவது இனிமேல் சாத்தியமில்லாமல் போகலாம். சீனாவிலுள்ள சிசுவான் பல்கலைக்கழகத்தின் கணினி துறை பேராசிரியரான வெய் சியாவோயாங், தன் மாணவர்களுக்கு போரடிக்கிறதா என்பதை கண்டுபிடிக்க, முக பாவங்களை அடையாளம் காணும் மென்பொருளையும், முகத்தைப் படிக்கும் கருவியையும் உருவாக்கி இருக்கிறார். இந்த மென்பொருள், வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் முகங்களை முகப் படிப்பான் மூலம் கண்காணிக்கிறது. வகுப்பு நடக்கும்போது மாணவர்களின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து, குறிப்பிட்ட […]

கண் அறுவை சிகிச்சை நடத்திய ரோபோ

ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இயந்திர மனிதனை முதல் முறையாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பகுதி தடிமனான மிகவும் மெல்லிய படத்தை, இயந்திர மனிதனை வைத்து உரித்து எடுத்த பிறகு, அந்நபரின் ஒரு கண் பார்வை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திர மனிதரின் கையிலிருக்கும் வடிகட்டிகள், மென்மையான செயல்முறைகளை மிகவும் துல்லியமாக செயல்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை நிறைவேற்றி […]

இரத்த தானம் அறிய வேண்டிய தகவல்கள்

  இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள் இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 50 வயதினை மிகாதவராகவும் இருத்தல்அவசியம். இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள். எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் […]