Tamil Bayan Points

Category: வரலாற்று ஆவணங்கள்

b130

பறிக்கப்பட்ட பன்னிரண்டாயிரம் பள்ளிவாசல்கள்

பறிக்கப்பட்ட பன்னிரண்டாயிரம் பள்ளிவாசல்கள் வரலாற்றின் இடைக் காலகட்டத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தான் இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்ற தவறான சரித்திரம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் பதிந்திருக்கின்றது; படிந்திருக்கின்றது. இது இந்துத்துவா சக்திகள் நீண்ட காலமாகப் பரப்பி வரும் விஷக் கருத்தாகும். ஆனால் சரியான வரலாற்று ஆய்வாளர்கள், கோயில் இடிப்பை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று அவர்களின் ஏக போக உரிமையாக்குவது அக்கிரமும் அநீதியுமாகும் என்று குறிப்பிடுகின்றனர். அதற்கு அவர்கள் இரு காரணங்களை முன்வைக்கின்றனர். […]

அமெரிக்கா கொன்றொழித்த ஐந்து லட்சம் முஸ்லிம்கள்

அமெரிக்கா கொன்றொழித்த ஐந்து லட்சம் முஸ்லிம்கள் 2003 மார்ச் 19ந்தேதி அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினர் ஐ.நா. ஒப்புதல் இன்றி இராக் மீது அநியாயமாகவும், அக்கிரமாகவும் படை எடுத்ததனர். இதற்காக ஒரு பொய்யான, போலியான குற்றச்சாட்டை அவர்கள் கூறினர். Weapons of  Mass Destruction பேரழிவு ஆயுதங்களை இராக் வைத்திருக்கின்றது என்பது தான் அந்தக் குற்றச்சாட்டாகும். படை எடுத்த இருபத்தோரு நாட்களில் இராக்  முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டது. போரில் தோற்ற சதாம் ஹுசைன் தப்பி, தலைமறைவானார். 2003 டிசம்பர் […]

அலங்காநல்லூர் அநியாயம் அனுமதிக்கும் அரசாங்கம்

அலங்காநல்லூர் அநியாயம் அனுமதிக்கும் அரசாங்கம் இந்திய நாட்டில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஒரு பண்டிகை என்பது அதைக் கொண்டாடுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்பதில் மற்றவர்களுக்கு ஆட்சேபணை இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஆனால் ஒரு சமுதாயம் கொண்டாடும் பண்டிகை தனக்கு மட்டுமல்லாமல் சுற்றி வாழ்கின்ற சமுதாயத்திற்கும் பிற உயிரினங்களுக்கும் பாதிப்பை, சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் போது அந்தப் பண்டிகையை, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே விமர்சிக்க ஆரம்பிக்கிறார்கள். பிற சமுதாயத்தினரும் விமர்சிக்க நேரிடுகின்றது. இந்த அடிப்படையில் இந்தியாவில் நடைபெறுகின்ற […]

மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால்..இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!

மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால்… இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்! சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை […]

இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு

இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு ஓர் இஸ்லாமிய அரசாங்கம் போர் செய்வது, அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வது, அந்தப் போரில் முஸ்லிம்கள் புறமுதுகு காட்டாமல் இருப்பது, போரில் வீர மரணம் அடைவது போன்ற போர் சம்பந்தமான பல்வேறு விஷயங்களைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. அதேசமயம், போர் ஏன்? எதற்கு? எப்படி? என்ற தெளிவான சட்டங்களையும் இஸ்லாம் வகுத்துள்ளது. வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு […]

தலாக்கும் பொதுசிவில் சட்டமும்

தலாக்கும் பொதுசிவில் சட்டமும் இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றும், பெண்களுக்குக் கேடு விளைவிக்கும் தலாக் முறையை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்றும் சமூக அளவில் பேசப்பட்டுக்கொண்டு இருப்பதை அறிவீர்கள். கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்ய அவனுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தடவை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தலாம். பின்னர் மீண்டும் விவாகரத்து செய்தால் மீண்டும் சேர்ந்து வாழலாம். இதன் […]

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள் பங்கு

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள் பங்கு முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள்; இஸ்லாம் என்றால் ஒரு தீவிரவாத மார்க்கம் என்ற பார்வை உலகம் முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல! இந்தத் தவறான சிந்தனையைக் களைந்து, இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்பதை நிறுவுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்திலும், புதுவை, கேரளா, கர்நாடகா, மும்பை ஆகிய மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. வீரியமிகு இந்தப் பிரச்சாரம் பிற சமுதாயங்களிடம் வேகமாகச் சென்றடைந்து […]

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நெதர்லாந்தின் பிரபல அரசியல்வாதி

இஸ்லாத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்த நெதர்லாந்தின் பிரபல அரசியல்வாதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட வரலாறு. சகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின் செல்லப் பிள்ளையாக இருந்து பின்னர் இஸ்லாமை தழுவி பெரும் அதிர்வை உண்டாக்கியவர். இவருடைய இஸ்லாமிற்கு எதிரான செயல்களை பார்த்தோமென்றால், ‘ஓரமா போய் விளையாடுங்க’ என்று நம்மூர் இஸ்லாமிய எதிர்பாளர்களை சொல்லி விடுவோம். உதாரணத்திற்கு, இவர் நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினராக […]

நான் ஏன் இஸ்லாத்திற்கு மாறினேன், அதில் பிடித்தது என்ன? யுவன் கூறிய விளக்கம்

நான் ஏன் இஸ்லாத்திற்கு மாறினேன், அதில் பிடித்தது என்ன?: யுவன் விளக்கம் கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவை தன்னை திருமணம் செய்ய வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றிவிட்டார் என்று சமூக வலைதளவாசிகள் ஜஃப்ரூன் நிஷா மீது பழி போட்டார்கள். யுவன் ஷங்கர் ராஜா கடந்த 2014ம் ஆண்டில் இஸ்லாத்திற்கு மாறி தன் பெயரை அப்துல் காலிக் என்று மாற்றினார். யுவன் ஆடை வடிவமைப்பாளரான ஜஃப்ரூன் நிஷாவை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு ஜியா என்கிற […]

அஃப்சல் குரு முதல் அஃப்ரசுல் கான் வரை

அஃப்சல் குரு முதல் அஃப்ரசுல் கான் வரை கொல்லப்படும் முஸ்லிம்கள்! கொதிக்கும் நடுநிலையாளர்கள்! 2001ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வழக்கில் காஷ்மீரைச் சார்ந்த அஃப்சல் குருவுக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறு அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்ட தண்டனை அல்ல. அது அரசாங்கம் ஒரு முஸ்லிம் மீது நடத்திய படுகொலை என்றே நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமல்லாது நடுநிலைவாதிகளும் […]

யார் இந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள்?

யார் இந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள்? பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட மியான்மர் நாட்டின் ‘ராக்கைன்’ பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட இன மக்கள் தான் ரோஹிங்கிய இனத்தவர்கள். கிட்டத்தட்ட 15 லட்சம் ரோஹிங்கிய மக்கள் அங்கு வசித்து வந்தனர், அனைவருமே முஸ்லிம்கள். இவர்களது பூர்வீகத்தை தலைமுறை பின்னோக்கிப் பார்த்தால், 15 ஆம் நூற்றாண்டு முதல் அவர்களது பூர்வகுடிக்கான தடயங்கள் மியான்மர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைப்பதாக இந்தியன் எக்ஸ்பிரெஸ் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கிறது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியுடனான யுத்தகால […]

குடியுரிமை மசோதா சொல்வது என்ன?

குடியுரிமை மசோதா சொல்வது என்ன? மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதா நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த மசோதாவில் என்ன கூறப்பட்டுள்ளது? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த மசோதாவை பாஜக அரசு ஏன் கொண்டு வருகின்றது? இஸ்லாமியர்கள் இந்த மசோதாவை ஏன் எதிர்க்கின்றார்கள்? இஸ்லாமியர்கள் அல்லாத நடுநிலை மக்களும் இந்த மசோதாவை ஏன் எதிர்க்கின்றர்கள்? என்பதை தெரிந்து கொண்டால்தான் பாஜகவின் பாசிச சிந்தனையையும் விசர்ச்சனத்தையும் இஸ்லாமியர்களின் மீதான அடக்குமுறையையும் உணர்ந்து கொள்ள […]

நசிர் அல்-தின் அல்-துசி – வானியல் மற்றும் கோணவியல் (Trigonometry) வல்லுநர்

நசிர் அல்-தின் அல்-துசி – வானியல் மற்றும் கோணவியல் (Trigonometry) வல்லுநர் 1201 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டிலுள்ள டஸ் என்ற நகரில் அல்-துசி பிறந்தார். இவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். கணிதம் மற்றும் வானியல் சார்ந்த பல ஆய்வுகளை அல்-துசி அவர்கள் மேற்கொகாண்டுள்ளார். அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சில நூல்கள் கீழே தரப்பட்டுள்ளது: • கிதாப் அல்-ஷக்ல் அல்- கட்டா (Kitab al-Shakl al-qatta) கோணவியல் குறித்த ஐந்து பாகங்கள் கொண்ட புத்தகம் • அல்-தத்கிரா […]

தேசிய குடியுரிமைச் சட்டம்: அவசியம் என்ன?

தேசிய குடியுரிமைச் சட்டம்: அவசியம் என்ன? இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்து அதன் பின் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய மாநிலங்கள் பிரிந்து சென்ற பிறகு இந்தியாவில் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி 1950 ஆம் ஆண்டிற்கு முன்பதாக இந்தியாவில் பிறந்திருந்தி ருந்தாலோ அல்லது அதற்கு 1955 ஆம் ஆண்டுக்கு முன்பதாக […]

முகலாயர்களின் ஆட்சியில் பொருளாதார உச்சத்தை தொட்ட இந்தியா

முகலாயர்களின் ஆட்சியில் பொருளாதார உச்சத்தை தொட்ட இந்தியா முகலாயர்கள் படையெடுத்து வந்தவர்கள் எனும் கருத்துருவாக்கம் சமீக கால, மத ரீதியிலான அரசியலின் வருகைக்கு பின் உருவாக்கப்பட்ட ஒன்று தானே அன்றி, முகலாயர்களின் ஆட்சி காலத்திலோ, அதற்கு பின்னரோ இந்த கருத்தானது நிலை கொள்ளவில்லை. இதுவே, அவர்கள் தங்களை முழுமையாகவே இந்தியர்கள் எனும் அடையாளத்துடன் காட்டிக் கொண்டே இருந்துள்ளார்கள் என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது. இந்தியர்களை திருமணம் செய்ததோடு, அவர்களின் வம்சங்கள் ராஜபுத்திர வழி தலை முறையையே கொண்டிருந்தது. பெற்றோர் […]

நீதியே! உன் விலை என்ன?

நீதியே! உன் விலை என்ன? இந்தியாவில் மட்டும் நீதிமன்றம் என்பதை ‘கூட்டுமனசாட்சி மன்றம்’ என்றோ ‘நம்பிக்கைமன்றம்’ என்றோ பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என சொல்லத்தக்க வகையில், நீதியை நிலை நாட்ட வேண்டிய மன்றங்கள் அனைத்தும் ஏதோவொரு சாராருக்கு சார்பு நிலை எடுக்கின்ற அவல நிலையை மேற்கொள்கின்றன. சான்றுகளுடனும் ஆதாரங்களுடனும் நிறுவப்பட வேண்டிய நீதியானது, பெரும் பான்மையினரின் விருப்பம், கூட்டு மனசாட்சி, குறிப்பிட்ட சாராரின் நம்பிக்கை எனும் குறுகிய வட்டத்திற்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகி வருகின்றது. அப்சல் குரு, […]

இஸ்லாத்தை ஏற்ற “கேதரின் ஹெசெல்டின்” ஜோஅன் பெய்லி”

இஸ்லாத்தை ஏற்ற “கேதரின் ஹெசெல்டின்” ஜோஅன் பெய்லி”  உலகளாவிய அளவில் நாளுக்கு நாள் இஸ்லாமிய மார்க்கத்தை பலதரப்பட்ட மதத்தை சார்ந்தவர்களில் முக்கியமான பிரமுகர்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பிக் கின்றார்கள் என்பதை தொடர்ந்து நாம் அறிந்து வருகின்றோம்! அதன் தொடர்ச்சியாக; இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது “Islam Oppresses Women” என்பதாகும். அதாவது “இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்துகின்றது” என்ற வாதமாகும். இஸ்லாத்திற்கு எதிராக பரப்பப்படும் அவதூறு வாதங்கள் எப்படி […]

பாபர் மஸ்ஜித் சர்ச்சை: கடந்து வந்த பாதை

பாபர் மஸ்ஜித் சர்ச்சை: கடந்து வந்த பாதை கவர்னர் இப்ராஹிம் லோதியின் மேற்பார்வையில் முகலாய மன்னர் பாபர், உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் பாபர் மசூதியை கடந்த 1526 ஆம் ஆண்டு கட்டினார். 1949 மசூதியின் உள்ளே, ராமர், சீதை சிலைகள் இரவோடு இரவாக வைக்கப்பட, பிரச்சனை ஆரம்பமாகிறது. சிலைகள் தானாக உருவாகி விட்டன, தமது ஜென்மஸ்தானத்தில் ராமர் அவதரித்து விட்டார் என்பதாக புரளிகள் கிளப்பப்பட, மதக் கலவரத்திற்கான முதல் வித்து அங்கே தூவப்படுகிறது. பள்ளிவாசல் பூட்டப்படுகிறது..! சிலைகளை […]

மதச்சார்பின்மைக்கு எதிரான பாபர் மசூதி தீர்ப்பு

மதச்சார்பின்மைக்கு எதிரான பாபர் மசூதி தீர்ப்பு கடந்த 60 ஆண்டுகளாக பாபர் மசூதி நிலம் சம்பந்தமான வழக்கு நடைபெற்றது. உலகே எதிர்பார்த்த அதன் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடத்திற்கு உரிமை கோரி மூன்று பேர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் விசித்திரம் என்னவென்றால் குழந்தை இராமன் சிலை ஒரு மனுதாரராகவும், நிர்மோகி அகோரா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் மனுதாரர் ஆவார்கள். இந்த மூன்று தரப்பினர் களுக்கிடையே 2.77 […]

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் • குறிப்பிட்ட இடம் குறித்த தொல்லியல் துறையின் தரவுகளை, ஆதாரங்களை ஒதுக்கி விட முடியாது. • ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றொரு மதத்தின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது • அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. • மதங்களுக்குள் உள்ள நம்பிக்கையை நீதிமன்றம் மதிக்கிறது. • அங்கு, இஸ்லாமிய கட்டுமானம் இல்லை என ஆதாரங்கள் கூறுகின்றன. • மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட […]

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் முரண்பாடுகள்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் முரண்பாடுகள் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருப்பதைக் காணமுடியும். பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் அந்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ள ஆலோசனைகளுக்கு எதிராக அதே தீர்ப்பில் அந்த நீதிபதியே முரண்படுகின்றார் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை! தீர்ப்பை வழங்குவதற்கு முன்னாள் பேசிய நீதிபதி ரஞ்சன் கோகாய், மதச்சார்பின்மையே அரசியல் […]

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நங்கள் கேட்டது நிலத்தை அல்ல! நீதியை

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நங்கள் கேட்டது நிலத்தை அல்ல! நீதியை நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பாபர் மசூதியின் வழக்கில் உச்சநீதிமன்றம் (9/11/19) அன்று தனது தீர்ப்பை வழங்கியது. பாபர் மசூதி நிலம் முழுக்க ராம் லல்லா தரப்பினருக்கு உரியது, அங்கு அவர்கள் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும், முஸ்லிம்களுக்கு அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்க மத்திய – மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறுகின்றது. இது எந்த விதத்திலும் […]

இஸ்லாத்தை ஏற்ற “ஜாய் கிம்”

இஸ்லாத்தை ஏற்ற “ஜாய் கிம்” நாளுக்கு நாள் இஸ்லாத்தின் பக்கம் அலையலையாய் அணிவகுத்து வந்து கொண்டிருப்பதை பார்க்கின்றோம். அதிலும் குறிப்பாக, உலக அளவில் மக்களால் பிரபல்யமாக பார்க்கப்படுகின்ற பலதரப்பட்ட திறமை பெற்றவர்கள், ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், சினிமா பிரபலங்கள் என்று சொல்லி பலர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு தழுவுகின்றனர். அந்த வரிசையில், கொரியாவை சார்ந்த பிரபல பாப் இசையின் நட்ச்சத்திரம் ஜாய் கிம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவினார். ஜாய் […]

எது சுதந்திரம்?

எது சுதந்திரம்? ஆகஸ்ட் 15, 1947-ல் வானத்தில் பறவைகள் சிறகடிக்க, பசுமையான மரங்கள் காற்றில் நடனமாட, இந்தியர்களின் உள்ளத்தில் பட்டாம்பூச்சி படபடக்க, மிக பெரிய ஆனந்தத்தின் உச்சியில் இந்தியா சுதந்திரம் பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டால் நம் நாட்டின் சுதந்திரதிற்காக மகாத்மா காந்தி அவர்கள் எவ்வளவு பாடுப்பட்டார்கள் சுபாஷ் சந்திரபோஸ், கப்பலோட்டிய தமிழன், கொடிக்காத்த குமரன் என்ற நீண்ட நெடிய பட்டியலில் நம் நாட்டு ஆட்சியாளர்களும், பிரபல பேச்சாளர்களும் புகழ்பாட ஆரம்பித்து விடுவார்கள். […]

அயோத்தி தீர்ப்பை ஏற்பது கடினம்’- முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!

‘ஒரு அரசியலமைப்பின் மாணவராக அயோத்தி தீர்ப்பை ஏற்பது கடினம்’-                                                    முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி! அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு சிறிது கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி […]

இவரை உங்களுக்குத் தெரியுமா?

இவரை உங்களுக்குத் தெரியுமா? “இவரைப் போன்ற ஒருவர் ஆட்சியாளராக பொறுப்பேற்றால் இன்றைய நவீன உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு காண்பார். அனைவரும் எதிர்பார்க்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார்” என்று இவரைப் பற்றி பிரிட்டன் நாட்டு அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறினார். யார் அவர்? 200 கோடிக்கும் அதிகமான உலக மக்கள் இவரை தங்களின் தலைவராக ஏற்றுள்ளார்கள். அவருக்காக தங்களின் உயிரையும் அர்பணிக்கத் துணிவார்கள். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்ததில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவருக்கு ஒரு சிலையுமில்லை. ஓவியப் படமுமில்லை. அவர் எப்படி இருப்பார் என்றே தெரியாமல் அவரை நேசிக்கிறார்கள்! ஏன்? எழுதப் படிக்கத் தெரியாதவர். அவர் யாரிடமும் கல்வி பயின்றதில்லை. ஆனால் அவரது ஒவ்வொரு […]

இப்னு பஸால் – பயிரியல் மற்றும் உழவியல் வல்லுனர்

இப்னு பஸால் – பயிரியல் மற்றும் உழவியல் வல்லுனர் அல்-ஆண்டலஸ் ((Al-Andalus) ) என்ற அரபி வார்த்தை வரலாற்றில் இபெரியன் பெனின்சுலா (Iberian Peninsula)) என்றழைக்கப்படும் முஸ்லிம்கள் ஆட்சி செலுத்திய ஓர் மலைப் பிரதேசமாக இடமாகும். இது ஸ்பெயின் மற்றும் போர்சுகல் நாடுகளோடு தொடர்புடைய ஒரு மலைப் பகுதியாகும். இடைக் கால அரபு காலத்தை சேர்ந்த வரலாறு மற்றும் புவியியல் ஆய்வாளர்கள், அல்-ஆண்டலஸ் பகுதியை தண்ணீர் வளமும் பல் வகையான செடிகளும், பழங்களும் செழித் தோங்கக் கூடிய […]

காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?(பாடப்புத்தகத்தில் விஷமம்)

காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?(பாடப்புத்தகத்தில் விஷமம்) என்ன நினைத்தோமோ அது நடந்தே விட்டது. காலம்காலாமாய் சங்பரிவார சக்திகளின் வரலாற்றுத் திரிபு வேலைகள் நடந்து வரும் நிலையில் அதன் உச்சகட்டமாக தற்போது “காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?” என்ற கேள்வி வந்தே விட்டது இந்தியாவில் வாழ்ந்த பல சங்பரிவார் கொள்கை கொண்ட தேச துரோகிகளின் வரலாறுகளை மறைத்து அவர்களை தியாகிகளாக மாற்றி வைத்த சங்பரிவார கும்பல்களின் அடுத்த கட்ட நடவடிக்கை துவங்கி விட்டது. சாதி வெறியால் […]

பாபர் பள்ளியை இடித்த பல்பீர் சிங் முஸ்லிமாக மாறி 90 மசூதிகளை கட்டினார்

பாபர் மசூதியை இடித்த பல்பீர் சிங், முகமது அமீராக மதம் மாறி 90 மசூதிகளை கட்டியுள்ளார். பாபர் மசூதியின் குவிமாடத்தில் முதலில் ஏறியவர் பல்பீர் சிங். கரசேவகர்களுடன் இணைந்து மூலம் குவிமாடத்தை தாக்கி நிர்மூலம் செய்தார். சொந்த ஊரான பானிபட்டில் கதாநாயகன் போல மக்களால் வரவேற்கப்பட்டார். பல்பீர் சிங் செயலால் பள்ளி ஆசிரியரான அவரது தந்தை வருத்தம் அடைந்தார். குற்ற உணர்வு அடைந்த பல்பீர் சிங், தனது தவறை உணர்ந்து இஸ்லாமியராக மதம் மாறினார். முகமது அமீர் […]

இஸ்லாத்தை ஏற்ற கால்பந்து வீரர் “டேனி பிளம்”

இஸ்லாத்தை ஏற்ற கால்பந்து வீரர் “டேனி பிளம்” இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு தங்களின் புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடர்கின்ற செய்தியை தொடர்ச்சியாக அறிந்து வருகின்றோம். அந்த வரிசையில் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த இளம் ஜெர்மன் கால்பந்து வீரர் “டேனி பிளம்” இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தார்.மேலும் டேனி பிளம் இஸ்லாம் குறித்த தனது முதல் வார்த்தையாக அவர் கூறும் போது, இஸ்லாம் என்பது தூய நம்பிக்கை மற்றும் […]

இஸ்லாத்தை ஏற்ற ராப் பாடகி “டைம்ஸ்”

இஸ்லாத்தை ஏற்ற ராப் பாடகி “டைம்ஸ்” ஒவ்வொரு நாளும் இஸ்லாமிய மார்க்கத்தில் உலகளாவிய அளவில் சாரைசாரையாக மக்கள் இணைந்துக் கொண்டு இருக்கிறார்கள். என்பது குறித்து ஏராளமான புள்ளி விபரங்கள் எடுத்துரைக்கின்றது. அந்த வரிசையில் ஃபிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவரான ஜார்ஜியாடஸ் என்ற இயற்பெயர் கொண்ட மக்களால் “டயம்ஸ்” என்று அழைக்கப்படுகின்ற பிரபல்யமான பெண்மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். ஃபிரான்ஸ் நாட்டை சார்ந்த இவர் மிகச் சிறந்த ராப் இசை […]

இஸ்லாத்தை ஏற்ற நடிகர் “ஓம்புரி”

இஸ்லாத்தை ஏற்ற நடிகர் “ஓம்புரி” பல்வேறு தடைகளை உடைத் தெறிந்து எதிர்ப்பவர்களின் உள்ளங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றது இஸ்லாம்.! உலக அளவில் பிரபலமாக இருக்கின்ற பல்வேறு நபர்களின் வாழ்க்கையில் இஸ்லாமிய ஜோதி ஆழமாகப் பதிய வைக்கப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான பாலிவுட் நடிகர் ஓம்புரி அவர்கள் தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இவர் பல்வேறு படங்களை தயாரித்தும், பல படங்களில் நடித்தும் உள்ளார். நடிகர் ஓம்புரி அவர்கள் மரணமடைந்து இரண்டு […]

இஸ்லாத்தை ஏற்ற “ஸீன் ஸ்டோன்”

இஸ்லாத்தை ஏற்ற ஸீன் ஸ்டோன் இஸ்லாமிய மார்க்கம் நாளுக்கு நாள் வேகமாக உலகில் வாழ்கின்ற மனிதர்களின் உள்ளங்களை கவர்ந்திழுக் கின்றது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கம் உலக அளவில் பிரபல்யமாக கருதப்படுகின்ற பல நபர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவி சென்று, அவர்களை இஸ்லாத்தை தழுவ செய்கின்ற காட்சிகளை கண்கூடாக பார்க்க முடிகின்றது. அந்த வரிசையில் பிரபல இயக்குனரும், உலகப் புகழ் பெற்ற ஆஸ்கார் விருது பெற்றவருமான ஆலிவர் ஸ்டோனின் மகன், “ஸீன் ஸ்டோன்” இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக […]

இஸ்லாத்தை ஏற்கும் பிரபலங்கள்.!

இஸ்லாத்தை ஏற்கும் பிரபலங்கள்.! முஸ்லிம்கள் இஸ்லாமியர்கள், ஒரு கடவுள் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் என்பதை தெரிந்த மாத்திரத்திலே உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒருசில விஷக் கிருமிகளின் பார்வையும், செயல்பாடுகளும் தனித்து தெரிவதைப் பார்க்கின்றோம். அதாவது இந்த அடையாளங்களில் பயணிப்பவர்களை உலகத்தில் வாழ விடக் கூடாது என்ற வெறித்தனத்திலும் சிலர் அலைந்து கொண்டிருக் கின்றார்கள். ஆனால் இவர்கள் என்னதான் முனகினாலும், கத்தினாலும், போராடினாலும், இரகசியமாக காய் நகர்த்தினாலும் இஸ்லாத்தின் அசுர வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. […]

இஸ்லாமிய நாடுகளில் நிம்மதியாக வாழும் ஹிந்துக்கள்.!

இஸ்லாமிய நாடுகளில் நிம்மதியாக வாழும் ஹிந்துக்கள்.! இஸ்லாமிய நாடுகளில் வாழும் ஹிந்துக்கள் என்றைக்காவது மதத்தின் பெயரால் துன்புறுத்தப் பட்டிருக்கிறார்களா.? இஸ்லாமிய நாடுகளில் வாழும் இந்துக்களின் எண்ணிக்கை அமீரகத்தில் 14 லட்சம், கத்தாரில் மூன்றரை லட்சம், குவைத்தில் மூன்றரை லட்சம், ஓமானில் இரண்டு லட்சத்து 75 ஆயிரம், பஹ்ரைனின் ஒரு லட்சத்து 75 ஆயிரம், சவுதி அரேபியாவில் 50 ஆயிரம்  என வளைகுடா நாடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 27 லட்சத்திற்கும் அதிகமான ஹிந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் […]

பனூ மூஸா சகோதரர்கள் – கணித மேதைகள், தொழில்நுட்பக் கருவிகளின் கண்டுபிடிப்பாளர்கள்

பனூ மூஸா சகோதரர்கள் – கணித மேதைகள்,தொழில்நுட்பக் கருவிகளின் கண்டுபிடிப்பாளர்கள் உலகின் பல தொழில் துறைகளில் இன்று பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கு அச்சாணியாக பனூ மூஸா சகோதரர்களின் க ண் டு பி டி ப் பு க ள் விளங்குகின்றன. ஜாஃபர் முஹம்மத், அஹ்மத், அல் ஹஸன் ஆகிய மூவரும் பனூ மூஸா சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். மூவரும் உடன்பிறந்த சகோதரர்கள். 800ஆம் ஆண்டு கால கட்டத்தில் பிறந்த இவர்கள் கணித துறையில் கிரேக்கர்களின் ஆக்கங்களை அரபுலகத்திற்கு […]

உலக வரலாற்றில் பெரிய பணக்காரராக இருந்த முஸ்லிம் மன்னர்…

உலக வரலாற்றில் பெரிய பணக்காரராக இருந்த முஸ்லிம் மன்னர்… உலகின் மிகவும் பணக்கார மனிதர் யார் என கேட்டால் உடனே பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் மற்றும் ஜெஃப் பெஸோஸ் மக்கள் நினைவுக்கு வருவார்கள். ஆனால், மன்சா மூசா பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆஃபிரிக்கா நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா உலக வரலாற்றிலே பணக்கார மனிதராகக் கருதப்படுகிறார். 1280 முதல் 1337 ஆண்டு வரை மாலியை மூசா ஆண்ட போது, தங்கம் உள்ளிட்ட நிறைய […]

ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி, ‘ஜோரம் வான்’ இஸ்லாதில் இணைந்தார்.

ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி, ‘ஜோரம் வான்’ இஸ்லாதில் இணைந்தார். உலகத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் எவரையும் புரட்டிப்போட்டு அவர்களை அடிமையாக்கும் விஷயம் குர்ஆனில் எது? ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி. நெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன் – Joram van Klaveren  முன் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன் – Joram van Klaveren தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளார். – சர்வதேச […]

முஸ்லிம் மன்னர் உருவாக்கிய நகரம்

முஸ்லிம் மன்னர்  உருவாக்கிய நகரம் அஹ்மது ஷா என்பவரால் உருவாக்கப் பட்ட நகரம்தான் அஹ்மதாபாத். குஜராத்தின் தலை நகரமாக விளங்கும் அஹ்மதாபாத்தில் 28 வகையான பழமை மிகுந்த கட்டடங்களும், கலையயம்சமிக்க நூற்றுக் கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. இதனைக் கணக்கில் கொண்டு உலகப் பாரம்பரிய மிக்க புராதன நகரங்களின் பட்டியலில் அஹ்மதாபாத்தையும்  யுனெஸ்கோ நிறுவனம் சேர்த்துள்ளது. பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் பிரான்ஸின் பாரிஸ் நகரம், ஆஸ்திரியாவின் வியன்னா நகரம், எகிப்தின் கெய்ரோ நகரம், பெல்ஜியத்தின் பிரன்ஸில்ஸ் நகரம், இத்தாலியின் ரோம் […]

சதாம் ஹசைனின் கடைசி நிமிடங்கள்…

சதாம் ஹசைனின் கடைசி நிமிடங்கள்…. ஏகத்துவத்தின் பக்கங்களில் இடம் பிடிப்பதற்கு இவர் ஒன்றும் ஏகத்துவத்தை நிலை நாட்டுவதற்காகத் தியாகம் செய்து பாடமும் படிப்பினையாகவும் திகழ்ந்த இப்ராஹீம் (அலை) அல்லர். ஏகத்துவத்திற்காகத் தங்கள் இளமைப் பருவத்தை அர்ப்பணித்து நாட்டைத் துறந்து குகையில் தஞ்சமடைந்த அஸ்ஹாபுல் கஹ்ஃப் அல்லர். ஏகத்துவத்திற்காக அரபகத்தில் குரல் கொடுத்த இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களோ அல்லது அதற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த நபித்தோழர்களோ அல்லர். மாறாக இவர் தனது ஆட்சிக் காலத்தில் ஏகத்துவத்திற்கே […]

காஷ்மீர் பிரச்சனை என்ன?

காஷ்மீர் பிரச்சனை என்ன? காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு அந்த மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது மட்டும் தான் என்று பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷனும், அவரது மகன் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நீதிமன்ற வளாகத்திலேயே அவர்கள் சங்பரிவார கும்பலால் தாக்கப்பட்டனர். கறுப்பு மை பூசப்பட்டனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறும் நேரம் நெருங்கி விட்டதாகவே தெரிகிறது. ஏன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்? இதற்கான விடை அறிய […]

இந்திய வரலாற்றின் கரும்புள்ளி

இந்திய வரலாற்றின் கரும்புள்ளி இந்திய வரலாற்றின் கரும்புள்ளியாகவும் மதவாத அரசியலுக்கு அடித்தளமாகவும் இருக்கும் அயோத்திப் பிரச்சனை குறித்து ஒரு பார்வை: கி.பி. 1528: முகலாய மன்னர் பாபரிடம் பணியாற்றிய மீர்பாகி அயோத்தியில் மசூதியைக் கட்டினார். கி.பி. 1853: இந்த இடத்தில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இருந்தது என்றும், இது ராமர் பிறந்த இடம் எனவும் இந்துக்கள் உரிமை கொண்டாடினர். அயோத்தியில் இப்பிரச்சனை தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த மோதலில் 75 பேர் கொல்லப்பட்டனர். கி.பி. […]

டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!

டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!                                                                                         பிரச்சினை உருவான விதம் 1949ஆம் ஆண்டு டிசம்பர் […]

கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரன்தான்!

 கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரன்தான்! காந்தி படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அவ்வாறு சொல்வது அவதூறு என்று ஒரு பச்சைப் பொய்யை சங் பரிவார இயக்கங்கள் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா என்பவர், தான் பங்கு பெறும் பேட்டிகளில் எல்லாம் இதே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்பார்; இதற்குப் பெயர்தான் கோயபல்ஸ் தத்துவம் என்பது; அதாவது ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால் அது […]

ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு கொதித்தெளுந்த முஸ்லிம்கள்

ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு கொதித்தெளுந்த முஸ்லிம்கள்  காஷ்மீர் மாநில கத்துவா பகுதியை சேர்ந்த சிறுமி ஆசிபா தான் இன்று இந்திய நாட்டு மக்களின் ஒவ்வொரு உள்ளங்களிலும் உறையகூடிய அளவிற்கு உள்ளத்தில் ஊன்றி இருக்கிறார். தானும் தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையும் அதை தாண்டி ஒன்றும் அறியா 8 வயதே கொண்ட சிறுமி ஆசிபா கோவில் பூஜை கருவறையில் காவிகளும் ,காவி சித்தாந்தத்தை கொண்ட இரண்டு காவலர்களும் , உறவினர் என்ற போர்வையில் ஒளிந்து கிடந்த மிருகம் என […]

8 வயது சிறுமி ஆசிஃபாவை கற்பழித்துக் கொன்ற மனித மிருகங்கள் இவர்கள் தான்

8 வயது சிறுமி ஆசிஃபாவை கற்பழித்துக் கொன்ற மனித மிருகங்கள் இவர்கள் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரசானா கிராமத்தில் வசித்து வந்த முஸ்லிம்களை அச்சுறுத்தி ஊரை விட்டு காலி செய்வதற்காக ஆசிஃபா என்ற 8 வயது முஸ்லிம் சிறுமியைக் கடத்திச் சென்று, 3 நாட்கள் கோவிலில் அடைத்து வைத்து, அவளுக்கு போதை மருந்து கொடுத்து, மயக்கம் தெளியாத நிலையிலேயே மாறிமாறி கற்பழித்து கொலை செய்த வழக்கில் 19 வயதான முஸ்லிமல்லாத இளைஞர் முதல் […]

காஷ்மீர் கோவிலில் முஸ்லிம் சிறுமி அடைத்து வைத்து கற்பழிப்பு

காஷ்மீர் கோவிலில் முஸ்லிம் சிறுமி அடைத்து வைத்து கற்பழிப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரசானா என்ற கிராமத்தில் வசித்து வந்த 8 வயது முஸ்லிம் சிறுமி ஒருத்தி கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி காணாமல் போனாள். ஒரு வாரத்திற்கு பிறகு அந்த சிறுமியின் சடலம் அதே கிராமத்தின் ஒரு ஓரத்தில் வீசப்பட்டிருந்தது. போலீசார் அந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையின் முடிவில் அந்தச் சிறுமி பலமுறை பாலியல் […]

எதிர்ப்புகளால் வளரும் இஸ்லாம்

எதிர்ப்புகளால் வளரும் இஸ்லாம் –  மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக சிரியாவில் பல லட்சம் மக்கள் தங்கள் நாட்டைத் துறந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதில் அதிகமானோர் ஜெர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஜெர்மனி நாடு மனிதாபிமானத்தோடு பல லட்ச மக்களை அரவணைத்தது. ஜெர்மனிக்குள் அகதிகள் அனுமதிக்கப்பட்ட விஷயத்தில் அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் பெரும் நெருக்கடியைச் […]

கண்களை இழந்த காஷ்மீர் மாணவியின் சாதனை..?

பெல்லட் குண்டால் கண்களை இழந்த காஷ்மீர் மாணவியின் சாதனையும் வேஷம் போடும் ராணுவமும்! இந்தியக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காஷ்மீர் பகுதியில் 2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் இந்திய ராணுவம் பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. பயன்படுத்துவதற்கான காரணம் என்ன? பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் காயப்படுத்தி, உடல் வேதனைக்கு உட்படுத்துதலே இவ்வகை துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கான முதல் காரணம். குறிப்பிட்ட தூரத்தில் இருந்து இதைப் பயன்படுத்தினால் மட்டுமே சேதம் ஏற்படாது. அருகாமையில் பயன்படுத்தினால் […]

பீரோவுக்குள் குட்டிச் சாத்தான்: அதிர வைத்த மோசடி!

பீரோவுக்குள் குட்டிச் சாத்தான்: அதிர வைத்த மோசடி! நாடு முன்னேற முன்னேற விஞ்ஞாமும் வளர்ச்சியடைந்து வருகின்றது. அதற்கு சரிசம விகிதத்தில் மோசடிகளும் புதிது புதிதாய் தோன்றி அதில் மக்கள் ஏமாந்து வருகின்றார்கள். மக்கள் எத்தனையோ மோசடிகளில் ஏமாந்து போயிருந்தாலும் அவ்வப்போது புதியது புதியதாக மோசடிகள் நடக்கும் போதும் அதையும் உண்மை என நம்பி மக்கள் குப்புற விழுந்து ஏமாந்து போகும் காட்சிகள் பல புறங்களிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த வாரம் மதுரை வட்டாரத்தை […]

Next Page »