Tamil Bayan Points

Category: தற்காலிக நிகழ்வுகள்

b160

சாதி ஒழிய இஸ்லாமே வழி

சாதி ஒழிய இஸ்லாமே வழி அக்டோபர் 30, 2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தின விழா நடந்தது. தேவர் ஜெயந்தி என்றழைக்கப்படும் இந்த விழாவுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த டாடா சுமோ வாகனம் வழிமறிக்கப்பட்டு கற்களும் பெட்ரோல் குண்டுகளும் வீசப்படுகின்றன. அதில் பயணம் செய்த 19 பேரும் காயமடைகின்றனர். அதில் 6 பேர் மரணத்தைத் தழுவுகின்றனர். இது ஒரு கலவரமாக வெடிக்கின்றது. வழக்கமாக இந்தியாவில் கலவரக் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாகத் […]

ஒழுக்கத்தை ஓய்க்கும் ஒலிம்பிக் சங்கம்

ஒழுக்கத்தை ஓய்க்கும் ஒலிம்பிக் சங்கம் உலகெங்கிலும் பெண்களின் ஒழுக்க வாழ்க்கை சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கையில் சவூதி அரேபியாவில் ஓரளவுக்குப் பெண்களின் கற்பு நெறியும் கட்டுப்பாடும் காக்கப்பட்டு வருகின்றது. அதற்குக் காரணம் கொஞ்ச நஞ்சம் அங்கே இருக்கின்ற இஸ்லாமிய நெறி தான். இந்த இஸ்லாமிய நெறியைக் கழுத்து நெறிப்பதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் முயற்சியைக் கையாண்டு வருகின்றன. சவூதியில் பெண்களுக்குரிய அனைத்து சுதந்திரமும் கிடைப்பதில்லை; காரணம் அங்கு ஜனநாயகம் இல்லை என்று மேற்கத்திய நாடுகள் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. […]

அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒரே சட்டம்!

அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒரே சட்டம்! சட்டத்தின் முன் அனைவரும் சமம்! நீதியை நிலைநாட்டிய சவூதி அரசு! ஆண்டிக்கு ஒரு சட்டம்! அரசனுக்கு ஒரு சட்டம்! வலியவனுக்கு ஒரு சட்டம்! எளியவனுக்கு ஒரு சட்டம்! இது தான் உலகெங்கிலும் நடை முறையில் இருந்து வருகின்ற அநியாயமும் அக்கிரமமும் ஆகும். ஆனால் இதற்கு நேர்மாற்றமாக சவூதியில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டத்தின் ஆட்சியும், மாட்சியும் நடந்தேறி உள்ளது. பசுவைக் கொன்ற தன் மகனை தேரில் ஏற்றிக் கொன்றதாகச் […]

தலையே போனாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தை இழக்க மாட்டோம்

தலையே போனாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தை இழக்க மாட்டோம் நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை) மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில்  பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள்! அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.  (அல்குர்ஆன்:2:109.) யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். “அல்லாஹ்வின் வழியே (சரியான) […]

மக்களைக் காக்கும் மரண தண்டனை

மக்களைக் காக்கும் மரண தண்டனை கொலை நகரமாக மாறி வரும் இந்தியத் தலைநகராம் டில்லியில் 2012ல் ஓடும் பஸ்ஸில் காம வெறிகொண்ட கும்பலால் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணத்தையும் தழுவினாள். அதற்காக ஒட்டு மொத்த நாடே கொந்தளித்தது. கொதித்தது.  அதன் விளைவாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு மசோதா  19, மார்ச் 2013 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கலானது. * பெண்கள் மீது அமில வீச்சுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை * பாலியல் […]

கந்துவட்டி கொடுமை!

கந்துவட்டி கொடுமை! கருகிய உயிர்கள் உருகிய உள்ளங்கள் 2017 அக்டோபர் 23ஆம் தேதி அன்று தென்காசி காசிதர்மத்தைச் சார்ந்த இசக்கிமுத்து, சுப்புலட்சுமி தம்பதியர், தங்களது குழந்தைகள் நான்கு வயது  மதுசரண்யா, இரண்டு வயதைக்கூட எட்டிப் பிடிக்காத பால்குடி மாறாத பதினெட்டு மாத அட்சய பரணிகா ஆகிய இருவருடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனுக் கொடுக்க வந்தனர். மனுக் கொடுக்க வந்தவர்கள் தங்கள் மீதும்  கள்ளம் கபடமறியாத தங்களது பிஞ்சுக் குழந்தைகள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளித்தனர். […]

பெற்ற மகள்கள் என்றும் பாராமல் நரபலி கொடுத்த பெற்றோர்

பெற்ற மகள்கள் என்றும் பாராமல்,  நரபலி கொடுத்து நிர்வாண பூஜை.. பெற்றோர் செய்த கொடூரம் திருப்பதி: ஆந்திராவில் மூட நம்பிக்கையின் உச்சம் என்று சொல்வதா அல்லது கொடூரத்தின் உச்சம் என்று சொல்வதா என்று தெரியவில்லை, ஏனெனில் தாங்கள் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்துள்ளது. இந்த கொடூரத்தின் பின்னணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூட நம்பிக்கைகள் எவ்வளவு ஆபத்தானது என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதனை இன்னும் சில உணர […]

ஹிஜ்ரத்தும் நுஸ்ரத்தும்

ஹிஜ்ரத்தும் நுஸ்ரத்தும் ஹிஜ்ரி 1439 பூத்திருக்கின்றது. பிறை அடிப்படையில் அமைந்த புத்தாண்டு உதயமானதும் முஸ்லிம்கள் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். குல்ல ஆம் வ அன்தும் ஃபீ கைர் – நீங்கள் நலமாயிருக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மலரட்டும் அல்லது ஒவ்வொரு ஆண்டும் உதயமாகட்டும் என நான் பிரார்த்திக்கிறேன் என்று அரபியில் சொன்னதும் இது மார்க்கத்தில் உள்ள ஒரு துஆ அல்லது வாழ்த்து என்று பாமர முஸ்லிம்கள் தவறாக விளங்கி விடுகின்றனர். ஆங்கில ஆண்டுப் பிறப்புக்கு வாழ்த்துச் […]

குரேஷியா நிலநடுக்கம்: ஒரு நகரில் பாதி அழிந்தது

குரேஷியா நிலநடுக்கம்: 7 பேர் பலி, ஒரு நகரில் பாதி அழிந்தது ஐரோப்பிய நாடான குரேஷியாவில் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நில அதிர்வை கண்டுபிடிக்கும் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் குரேஷியாவில் நடக்கும் மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்று அமெரிக்காவின் புவியியல் அமைப்பான யுஎஸ் ஜியாலஜிக்கல் சர்வே தெரிவித்துள்ளது. இதே அளவிலான நிலநடுக்கம் ஒன்று குரேஷிய தலைநகர் ஜாக்ரெப் அருகே […]

ஹாத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்

ஹாத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: எலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட பெண் மரணம் – என்ன நடந்தது? உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது பட்டியலின பெண் கூட்டுப்பாலியலுக்கு ஆளாகி கடுமையான காயங்களுடன் (செப்டம்பர்-14-ம் தேதி 2020) செவ்வாய்க்கிழமை உயிரிழந்த சம்பவத்தில், அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியானதகவல்களில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விவரித்தது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தது […]

முஸ்லிம்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் – பாஜக சாக்ஷி மகாராஜ்!

முஸ்லிம்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் – பாஜக சாக்ஷி மகாராஜ்! கான்பூர் (21 டிச 2020): முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார். உன்னாவோவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான சாக்ஷி மகாராஜா, தொடர்ந்து முஸ்லீம் விரோத கருத்துக்களை பரப்பி வருபவர். இந்நிலையில், சனிக்கிழமை உன்னாவோவில் நடந்த விழாவில் ,பேசிய அவர், பாக்கிஸ்தானை விட இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் இருப்பதால் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து […]

பசுக்களுக்கு மலர் மாலை சிசுக்களுக்கு மரண மாலை

பசுக்களுக்கு மலர் மாலை சிசுக்களுக்கு மரண மாலை உலகப் புகழ் பெற்ற பொய் மன்னன் கோயபல்ஸின் உடன் பிறவா சகோதரன் நரேந்திர மோடி கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் டெல்லிக் கோட்டையில் தேசியக் கொடியேற்றுகையில் கம்பத்தில் ஏறிய கொடியின் கயிற்றை பிடித்து இழுத்ததும் மலர்கள் விழுந்தன. ஆனால் இந்த 71வது சுதந்திர தினமன்று மலர்கள் கொட்டுவதற்குப் பதிலாக மழலைகள் கொட்டின. ஆம்! பாஜக ஆளுகின்ற உ.பி.யில் கிழக்கு மாநிலமான கோரக்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் […]

வந்தே மாதரம் வந்த வரலாறு

வந்தே மாதரம் வந்த வரலாறு வந்தேமாதரம் தொடர்பாக விடுதலை இதழில் ஓர் ஆக்கம் வெளியானது. அதை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம். இது வந்தேமாதரம் வந்த வரலாற்றுப் பிண்ணனியைத் தெரிவிக்கின்றது. “வந்தேமாதரம்!”  வாழ்த்துப்பாடலா? – கவிஞர் கலி.பூங்குன்றன் உத்திரப்பிரதேச மாநிலம் ஜாமியத் உலாமா இ ஹிந்த் என்னும் இசுலாமியர்களின் அமைப்பு மூன்று நாள் மாநாட்டினை டியோ பாண்ட் எனும் இடத்தில் நடத்தி, ‘வந்தே மாதரம்’ பாடலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. அப்பாடல் இசுலாத்துக்கு எதிரானது என்றும் தீர்மானம் கூறியது. அம்மாநாட்டில் […]

நொந்தே போயினும் வெந்தே மாயினும்  வந்தே மாதரம் பாடமாட்டோம்

நொந்தே போயினும் வெந்தே மாயினும்  வந்தே மாதரம் பாடமாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கே.வீரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வந்தே மாதரம்’ எந்த மொழியில் எழுதப்பட்டது என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நான் வங்காள மொழி என்று எழுதினேன். ஆனால், எனது பதில் தவறு என்று கூறி ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது. பி.எட் படிப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் […]

மகளிரை விழுங்கும் மது எனும் சுனாமி!

மகளிரை விழுங்கும் மது எனும் சுனாமி! ஆண்டுக்கு ஆண்டு மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஒரு காலத்தில் மது அருந்தும் பெண்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டது கிடையாது. ஆனால் இன்று ஆண்டு தோறும் மது அருந்துகின்ற பெண்கள் தொடர்பான பத்து வழக்குகள் இப்போது தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அவர்கள் 30 வயதினராக இருக்கின்றார்கள். அவர்கள் மதுக் கடைகளுக்குப் போய் அருந்துவது கிடையாது.  பாழும் மதுக் கிண்ணத்தில் என்று சொல்வதை விட  பாழும் […]

வலை தளங்களின் வலை விரிப்புகள்

வலை தளங்களின் வலை விரிப்புகள் வழுக்கி விழும் வாலிபப் பெண்கள் (கடந்த மே 27-2017 அன்று ஆங்கில இந்து நாளேட்டில் Predators on the prowl on social networking site) ‘சமூக வலைத்தளங்களில் இரை தேடி அலைகின்ற காமுக மிருகங்கள்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது. அந்தச் செய்தி ஆந்திரா மாநிலத்தில் நடக்கின்ற நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியது. பருவ வயதுப் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை மணி என்பதால் இதை […]

நாடாளுமன்றத்தில் ஒலித்த தவ்ஹீத் விளக்கமும் தக்பீர் முழக்கமும்

நாடாளுமன்றத்தில் ஒலித்த தவ்ஹீத் விளக்கமும் தக்பீர் முழக்கமும் நாடாளுமன்றத் தேர்தலில் மிருக பலத்துடன் மோடி ஆட்சிக்கு வந்திருக்கின்றார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த மாத்திரத்தில் இந்துத்துவாவினரின் வெறியாட்டமும் வேட்டையும் இந்தியாவில் தலைவிரித்தாடுகின்றது. மோடியின் 2.0 ஆட்சியின் ஆரம்பமே இப்படி அட்டகாசமாக இருக்கின்றது என்றால் இனி எப்படியிருக்கும் என்று எடை போட்டுக் கொள்ளுங்கள். மிருகத்தனம்: 1 ரமளான் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை. ஒரு தனியார் மருத்துவமனையில் 29 வயது நிரம்பிய காஸிம் தோள்பட்டையில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து, கடுமையான காயத்துடன் […]

தேசிய குடியுரிமைச் சட்டம்: அவசியம் என்ன?

தேசிய குடியுரிமைச் சட்டம்: அவசியம் என்ன? இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்து அதன் பின் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய மாநிலங்கள் பிரிந்து சென்ற பிறகு இந்தியாவில் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி 1950 ஆம் ஆண்டிற்கு முன்பதாக இந்தியாவில் பிறந்திருந்தி ருந்தாலோ அல்லது அதற்கு 1955 ஆம் ஆண்டுக்கு முன்பதாக […]

சாதிக் கொடுமையினால் அடித்து கொல்லப்பட்ட தலித்

பஞ்சாபில் துன்புறுத்தப்பட்ட தலித் சட்டங்களும் விழிப்புணர்வு திட்டங்கள் பலவும் நம் தேசத்தில் அமலில் இருந்தும் இந்தியாவில் தீண்டாமை கொடுமைகளை மட்டும் ஒழித்து விட இயலவில்லை. இன்னும் சொல்வதானால், தற்போதைய பாஜக ஆட்சியின் கீழே, மக்கள் சாதிய பிளவுகளால் மேலும் பிளவுண்ட சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். மேல் சாதியினர் தங்களை உயர்வாய் கருதுவதும், கீழ் சாதியினராக அறியப்பட்டவர்களை அவர்கள் இழிவாக கருதுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்பதற்கு சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த கோர சம்பவம் ஒன்றே […]

சிறுபான்மையினர்கள் மீது தொடரும் ஆதிக்க வெறி

தொடரும் ஆதிக்க வெறி இஸ்லாமியர்களுக்கும் , ஏனைய சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் உயர் கல்வி கிடைக்கப்பெற தகுதியற்ற தேசமாக இந்தியா மாறி வருகிறது. ‘நீட்’ நுழைவுத் தேர்வின் பெயரால் பிற்படுத்தப்பட்ட, விளிம்பு நிலை சமூகங்களின் மருத்துவக் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது மத்திய அரசு. விளைவு, அனிதா துவங்கி சமீபத்தில் மோனிஷா வரை அதற்கான நிகழ்ந்த தற்கொலைகளின் பட்டியல் நீளம். ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர் ரோஹித் விமுலா, தமக்கு ஏற்பட்ட […]

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு மத ரீதியிலான துன்புறுத்தல் காரணம்

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு மத ரீதியிலான துன்புறுத்தல் காரணம் ஆசிரியரால் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம் மாணவி ஃபாத்திமா லத்தீஃப், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சென்னை ஐ ஐ டியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தமது ஆசிரியர் சுதர்சன் பத்மனாபன் தான் தன் தற்கொலைக்கு காரணம் என்பதாக செல்ஃபோனில் குறிப்பு எழுதி விட்டு மரணித்த கேரளாவை சேர்ந்த பெண்ணின் இந்த மறைவுக்கு நீதி கேட்டு அவள் பெற்றோர் கேரள முதல்வரை அணுகியிருக்கின்றனர். […]

தற்கொலையில் தமிழகம் முதலிடம்

தற்கொலையில் தமிழகம் முதலிடம் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம். மாநகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை தடுப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்நேகா என்ற தனியார் அமைப்பு அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்தியாவில் தற்கொலைகள் சம்பந்தமான புள்ளி விவரங்களை வெளியிட்டது. தற்கொலையில் முன்னணியில் இருக்கின்ற மாநிலங்கள் தமிழகம், மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்கம். […]

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நங்கள் கேட்டது நிலத்தை அல்ல! நீதியை

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நங்கள் கேட்டது நிலத்தை அல்ல! நீதியை நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பாபர் மசூதியின் வழக்கில் உச்சநீதிமன்றம் (9/11/19) அன்று தனது தீர்ப்பை வழங்கியது. பாபர் மசூதி நிலம் முழுக்க ராம் லல்லா தரப்பினருக்கு உரியது, அங்கு அவர்கள் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும், முஸ்லிம்களுக்கு அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்க மத்திய – மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறுகின்றது. இது எந்த விதத்திலும் […]

இறந்துபோன மனிதநேயம்

இறந்துபோன மனிதநேயம் ஆம்புலன்ஸ் வாகனம் மறுக்கப் படுவதால் வட மாநிலங்களில் பலர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந் துள்ளது. வட மாநிலத்தவர்கள் இரக்க மற்றவர்கள் மனிதாபிமான மற்றவர்கள் என்றெல்லாம் விதவிதமாக சொல்லியும் எழுதியும் முடித்தவர்களுக்கு கடந்த வாரம் தமிழகத்தில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டு அதனால் ஒரு உயிர் பிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் கிராமம் சுத்துக்கேணி. இந்த கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அங்கிருக்கும் ஒரு செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார். […]

இஸ்லாத்தை ஏற்ற “ஜாய் கிம்”

இஸ்லாத்தை ஏற்ற “ஜாய் கிம்” நாளுக்கு நாள் இஸ்லாத்தின் பக்கம் அலையலையாய் அணிவகுத்து வந்து கொண்டிருப்பதை பார்க்கின்றோம். அதிலும் குறிப்பாக, உலக அளவில் மக்களால் பிரபல்யமாக பார்க்கப்படுகின்ற பலதரப்பட்ட திறமை பெற்றவர்கள், ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், சினிமா பிரபலங்கள் என்று சொல்லி பலர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு தழுவுகின்றனர். அந்த வரிசையில், கொரியாவை சார்ந்த பிரபல பாப் இசையின் நட்ச்சத்திரம் ஜாய் கிம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவினார். ஜாய் […]

எது சுதந்திரம்?

எது சுதந்திரம்? ஆகஸ்ட் 15, 1947-ல் வானத்தில் பறவைகள் சிறகடிக்க, பசுமையான மரங்கள் காற்றில் நடனமாட, இந்தியர்களின் உள்ளத்தில் பட்டாம்பூச்சி படபடக்க, மிக பெரிய ஆனந்தத்தின் உச்சியில் இந்தியா சுதந்திரம் பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டால் நம் நாட்டின் சுதந்திரதிற்காக மகாத்மா காந்தி அவர்கள் எவ்வளவு பாடுப்பட்டார்கள் சுபாஷ் சந்திரபோஸ், கப்பலோட்டிய தமிழன், கொடிக்காத்த குமரன் என்ற நீண்ட நெடிய பட்டியலில் நம் நாட்டு ஆட்சியாளர்களும், பிரபல பேச்சாளர்களும் புகழ்பாட ஆரம்பித்து விடுவார்கள். […]

அயோத்தி தீர்ப்பை ஏற்பது கடினம்’- முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!

‘ஒரு அரசியலமைப்பின் மாணவராக அயோத்தி தீர்ப்பை ஏற்பது கடினம்’-                                                    முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி! அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு சிறிது கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி […]

தலித் ஒருவரை தாக்கி சிறுநீர் குடிக்கவைக்கப்பட்ட கொடூரம்!

தலித் ஒருவரை தாக்கி சிறுநீர் குடிக்கவைக்கப்பட்ட கொடூரம்! பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் 37 வயதான தலித் நபர் ஒருவரை பழைய தகராறு ஒன்றின் காரணமாக இழுத்து சென்ற சிலர் அவரை கடுமையாக தாக்கியும், கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவும் வைத்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. சங்கலிவாலா கிராமத்தைச் சேர்ந்த ஜக்மைல் சிங் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து இரண்டு நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) பூட்டா சிங் தெரிவித்துள்ளார். குற்றம் […]

காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?(பாடப்புத்தகத்தில் விஷமம்)

காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?(பாடப்புத்தகத்தில் விஷமம்) என்ன நினைத்தோமோ அது நடந்தே விட்டது. காலம்காலாமாய் சங்பரிவார சக்திகளின் வரலாற்றுத் திரிபு வேலைகள் நடந்து வரும் நிலையில் அதன் உச்சகட்டமாக தற்போது “காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?” என்ற கேள்வி வந்தே விட்டது இந்தியாவில் வாழ்ந்த பல சங்பரிவார் கொள்கை கொண்ட தேச துரோகிகளின் வரலாறுகளை மறைத்து அவர்களை தியாகிகளாக மாற்றி வைத்த சங்பரிவார கும்பல்களின் அடுத்த கட்ட நடவடிக்கை துவங்கி விட்டது. சாதி வெறியால் […]

சாதியைச் சொல்லி பிளேடால் கீறிய கொடூரம்

சாதியைச் சொல்லி பிளேடால் கீறிய கொடூரம் சாதிகள் இல்லையடி ஜெகன்மோகன் உயர்த்தி சொல்லல் பாவம் என்ற பாரதியாரின் பாடலை பள்ளிக்கூடங்களின் முகப்புப் பக்கத்தில் அச்சடிக்கும் பள்ளி கல்வித்துறை, மாணவர்களுக்கு சாதியின் கொடுமைகள் குறித்து சரியான முறையில் பாடம் எடுக்காத காரணத்தால்தான் பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்களிடம் சாதி வெறி தலை தூக்குகின்றது. கடந்த சில மாதங்களுக்கு தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூட ங்களில் நடைபெற்ற சாதியக் கயிறுக் கொடுமைகள் குறித்து செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிக்கூடங்களில் பயிலும் […]

மூடநம்பிக்கையில் மூழ்கும் இந்தியா

மூடநம்பிக்கையில் மூழ்கும் இந்தியா இந்திய நாடு பண்முகத்தண்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை பேணும் நாடு. இப்படி பட்ட இந்திய நாட்டில் தற்போது நிலவி வரும் மதவாத சக்திகளின் அராஜகம், அடிதடி மற்றும் கொலை செயல்கள் ஒரு புறம் வரம்பு மீறி சென்றுகொண்டிருந்தாலும் அதை தடுக்க வேண்டிய மத்திய அரசு அதை கண்டும்காணமல் இந்த செயலுக்கு மௌனமாக இருந்து ஆதரவு அளித்து வருகிறது. அதிலும் கல்வி மற்றும் அரசுத்துறையில் மதத்தை தினிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. பள்ளி […]

பெற்ற தாயை நடுரோட்டில் வீசிய கொடூரம்!

பெற்ற தாயை நடுரோட்டில் வீசிய கொடூரம்! பத்துமாதம் சுமந்து பெற்ற தாயை நடுரோட்டில் வீசி விட்டுச் சென்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள செங்குந்தர்புரம் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி பட்டம்மாள். கணவன் இறந்து போன நிலையில் தன் பிள்ளைகளுடன் வசித்து வந்தார் பட்டம்மாள். இவருக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளார்கள். பட்டம்மாளி ன் பிள்ளைகளில் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியராக […]

உயிர் காத்த இஸ்லாமியர்கள்

உயிர் காத்த இஸ்லாமியர்கள் “பத்துக்காசு முருக்கு பள்ளிவாசலை நொறுக்கு” என்கிற துவேச முழக்கத்துடன் செல்லும் விநாயகர் ஊர்வலத்தால் வருடா வருடம் நாடே ஒருவிதமான பரபரப்பிற்குத் தள்ளப்படுகின்றது. காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு குறித்து மிகவும் கவலையடையும் நிலை உண்டாகின்றது. விநாயகர் ஊர்வலத்தை மையமாக வைத்து தங்களின் அரசியல் ஆதாயத்தை அடைய பல தீய சக்திகள் முயற்சி செய்கின்றன. விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் இஸ்லாமியர்களை குறிவைத்து கோசங்கள் எழுப்புவதும், பள்ளிவாசலின் முன்னால் நின்று குத்தாட்டம் போடுவதும், பள்ளிவாசல்களுக்குள் சாரய […]

இஸ்லாத்தை ஏற்கும் பிரபலங்கள்.!

இஸ்லாத்தை ஏற்கும் பிரபலங்கள்.! முஸ்லிம்கள் இஸ்லாமியர்கள், ஒரு கடவுள் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் என்பதை தெரிந்த மாத்திரத்திலே உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒருசில விஷக் கிருமிகளின் பார்வையும், செயல்பாடுகளும் தனித்து தெரிவதைப் பார்க்கின்றோம். அதாவது இந்த அடையாளங்களில் பயணிப்பவர்களை உலகத்தில் வாழ விடக் கூடாது என்ற வெறித்தனத்திலும் சிலர் அலைந்து கொண்டிருக் கின்றார்கள். ஆனால் இவர்கள் என்னதான் முனகினாலும், கத்தினாலும், போராடினாலும், இரகசியமாக காய் நகர்த்தினாலும் இஸ்லாத்தின் அசுர வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. […]

இஸ்லாமிய நாடுகளில் நிம்மதியாக வாழும் ஹிந்துக்கள்.!

இஸ்லாமிய நாடுகளில் நிம்மதியாக வாழும் ஹிந்துக்கள்.! இஸ்லாமிய நாடுகளில் வாழும் ஹிந்துக்கள் என்றைக்காவது மதத்தின் பெயரால் துன்புறுத்தப் பட்டிருக்கிறார்களா.? இஸ்லாமிய நாடுகளில் வாழும் இந்துக்களின் எண்ணிக்கை அமீரகத்தில் 14 லட்சம், கத்தாரில் மூன்றரை லட்சம், குவைத்தில் மூன்றரை லட்சம், ஓமானில் இரண்டு லட்சத்து 75 ஆயிரம், பஹ்ரைனின் ஒரு லட்சத்து 75 ஆயிரம், சவுதி அரேபியாவில் 50 ஆயிரம்  என வளைகுடா நாடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 27 லட்சத்திற்கும் அதிகமான ஹிந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் […]

இஸ்லாமிய சட்டத்தை மெய்ப்பிக்கும் நீதிமன்ற தீர்ப்பு

இஸ்லாமிய சட்டத்தை மெய்ப்பிக்கும் நீதிமன்ற தீர்ப்பு பெண்களின் ஆடை விஷயத்தில் இஸ்லாம் வலியுறுத்துகின்ற கட்டுப்பாடுகளை விமர்சனம் செய்பவர்களை, அவர்கள் வாயாலேயே அதை ஆதரித்து பேச வைக்கின்ற அற்புதத்தை இறைவன் அவ்வப்போது நிகழ்த்துவதை நாம் காண்கிறோம். சில ஆண்டுகள் முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையானது, ஒரு பரபரப்பு தீர்ப்பொன்றை வெளியிட்டிருந்தது. அந்த தீர்ப்பின்படி,கோவில்களுக்குள் நுழைபவர்கள், அரைகுறை ஆடைகளை அணிவதற்கு தடை என்கிற பரபரப்பு தீர்ப்பை கூறியிருந்தார் நீதிபதி எஸ்.வைத்தியநாதன். இதனை மறந்து விட்டவர்கள் தற்போதும் ஊடகங்களில் அமர்ந்து கொண்டு […]

விலைகொடுத்து வாங்கும் விபரீதம்.!

விலைகொடுத்து வாங்கும் விபரீதம்.! இன்றைய நவீன உலகில் மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையில் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மொபைல் போன் இல்லாதவன் முழு மனிதனே இல்லை என்ற அளவுக்கு சகமனிதர்கள் நம்மை தவறாக பார்க்கும் நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஆனால் இந்த மொபைல் போன் அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் நமக்கு வழங்கி கொண்டிருந்தாலும், அதைவிட மிக அபாயமான ஆபத்துகளையும் ஏற்படுத்தும் என்பதை நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது வாட்சப் மூலமாகவும், […]

சர்ச்சையைக் கிளப்பும் சாதிக்கயிறு

சர்ச்சையைக் கிளப்பும் சாதிக்கயிறு சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று மாணவர்களுக்கு வழங்கும் பாடப் புத்தகங்களில் முதல் பக்கத்தில் அச்சிட்டுள்ள நிலையில் அதே பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் தங்கள் சாதியை உணர்த்தும் வகையில் கைகளில் விதவிதமான கலரில் கயிறுகளைக் கட்டி வரும் நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மாணவர்கள் கைகளில் கயிறு அணிந்து வருவதைத் தடை செய்யக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடம் கடும் அதிருப்தியை […]

கான்பூரில் வெறியாட்டம்- ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் சொல்லாத முஸ்லிம் சிறுவன் மீது கொடூர தாக்குதல்!

BJP யின் காவி வெறியாட்டம் ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்த ஹாலித் அன்சாரி என்ற 15வயது முஸ்லிம் சிறுவனை உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய காவி மிருகக் கும்பல்! தன்னைத் தானே தீவைத்துக் கொளுத்திக் கொண்டதாக முஸ்லிம் சிறுவன் மீதே பழிபோடும் உபி காவல்துறையின் அட்டூழியம்! கடந்த  ( 28.07.19 ) ஞாயிற்றுக்கிழமை உ.பியில் சாந்தாலி மாவட்டத்தில், காவி பயங்கவராதிகள் 4 பேர் ஹாலித் அன்சாரி என்ற சிறுவனை சுற்றி வளைத்து, ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் […]

போர், கலவரங்களில் 12,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ. நா. அறிக்கை

போர், கலவரங்களில் 12,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ. நா. அறிக்கை கடந்த  ஆண்டு போர் உள்ளிட்ட உள்நாட்டுக் கலவரங்களில் ஆப்கானிஸ்தான், ஏமன், பாலஸ்தீனம், சிரியா ஆகிய நாடுகளில் 12,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மத்தியக் கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் ஆளும் அரசுக்கும் […]

தப்ரேசுக்கு ஆதரவாக போராடியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் வழக்கு! சொத்துக்களும் பறிமுதல் !

தப்ரேசுக்கு ஆதரவாக போராடியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் வழக்கு! சொத்துக்களும் பறிமுதல்.! ஜார்க்கண்டில் காட்டுத்தனமாக அடித்து கொல்லப்பட்ட தப்ரேசுக்கு ஆதரவாக போராடியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் வழக்கு பதிவு செய்தும் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளது உ.பியின் பாஜக யோகி அரசாங்கம். சில தினங்களுக்கு முன்னர் தப்ரேஸ் அன்சாரி என்பவரை திருடர் என்று ஆதாரமின்றி கூறியும் அவரை ஜெய் ஸ்ரீ ராம் என்று […]

மீண்டும் ஒரு கறுப்புச் சட்டம்!

மீண்டும் ஒரு கறுப்புச் சட்டம்! மிக மோசமான ஒரு சட்டத் திருத்தம் பாரளுமன்றத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. NIA (National Investigation Agency) என்று சொல்லப்படக் கூடிய தேசிய புலனாய்வு முகமைக்கு வலுசேர்க்கும் சட்டத் திருத்தம் அது. இந்த சட்டத்தின் அடிப்படையில் முஸ்லீம்கள் தான் பெருமளவில் ஒடுக்கப்படுகிறார்கள் என்று கேட்ட அசதுதின் உவைசி அவர்களின் கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, முஸ்லீம்களை மட்டுமல்ல, தமிழ் தீவிரவாத அமைப்புகளையும் ஒடுக்கியிருக்கிறோம் என்று பதிலளித்திருக்கிறார். தமிழ்நாட்டினை நோக்கி பாஜக விடுத்திருக்கிற எச்சரிக்கையாகவே அமித்ஷாவின் […]

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 முஸ்லிம்கள், 23 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை!

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 முஸ்லிம்கள், 23 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை! கடந்த 1996ம் ஆண்டு ஆக்ராவில் இருந்து பிகனேர் நோக்கி ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து ஒன்றில், சம்லெட்டி கிராமம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர் 37 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை 23 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர் நிரபராதிகள் என்று […]

மூடநம்பிக்கையால் விமானத்தை தாமதப்படுத்திய சீனப் பயணி

மூடநம்பிக்கையால் விமானத்தை தாமதப்படுத்திய சீனப் பயணி ஷாங்காய் விமான நிலையத்தில் , மூடநம்பிக்கை கொண்ட ஒரு வயதான பயணி அதிர்ஷ்டத்திற்காக, தான் பயணம் செய்யவிருந்த விமானத்தின் இயந்திரம் மீது காசுகளை வீசியதை அடுத்து, அந்த விமானம் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது என்று அந்த சீன விமான நிறுவனம் கூறியது. `சைனீஸ் சதர்ன் ஏர்லைன்ஸ்` விமானத்தை சென்றடையும் வழியில், அந்த 80 வயதான அந்த பெண்மணி தன்னிடம் இருந்த நாணயங்களை விமானம் மீது வீசினார். செவ்வாய்க்கிழமை நடந்த இந்த […]

ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டம் புரூனேவில் நிறைவேறியது

ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து                                                                                        கொல்லும் சட்டம் புரூனேவில் நிறைவேறியது புருனேவில் ஒருபால் உறவுக்காரர்கள் உறவு […]

ஜப்பானில் தலை விரித்தாடும் மூடநம்பிக்கை!

ஜப்பானில் தலை விரித்தாடும் மூடநம்பிக்கை! ஜப்பான் நாடு பல புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு என்று சொல்லப்படுவதுண்டு; அங்குள்ள மக்கள் அவ்வளவு திறமைசாலிகளா? என்று பலரும் வியந்து போய் கேட்பர்; ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா? என்னதான் அதி அற்புத சிந்தனை சக்தி இருந்தாலும் தன்னைப் படைத்த கடவுளைப்பற்றியான சிந்தனையில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்; அத்தகைய தெளிவு இல்லாவிட்டால் அவர் எப்படிப்பட்ட அதிபுத்திசாலியாக இருந்தாலும் அவரது மூளை வேலை செய்யாது; இதற்கு நிதர்சனமான […]

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் “சாதி”

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சாதி சாதி அமைப்பை ஒழிக்காமல் இந்தியா முழுமையாக முன்னேற முடியாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதி பெரும் தடைக் கல்லாக இருக்கிறது என திபெத் பவுத்த மதத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். இந்திய மண்ணில் இன்னும் சாதி கொடுமை நிலவுவது மிகப் பெரிய அவமானமாகும். சாதியின் பெயரால் ஒருவருக்கொருவர் பாகுபாடு பார்ப்பது துயரமானது. சாதி பாகுபாட்டின் காரணமாக தனி மனிதர்கள் மட்டுமல்லாமல் சமூகத்தியே சீரழித்து விடும். ஒரே மாதிரியான ரத்தம், சதை, மூளை, […]

வரதட்சணை வாங்கிட்டு வா… இளம்பெண்ணை கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்

வரதட்சணை வாங்கிட்டு வா… இளம்பெண்ணை கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் லக்னொ: உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து பல கொலைகள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் புதுப்புடவை கேட்ட இளம் பெண் கணவர் வாங்கித்தர மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். இரு தினங்களுக்கு முன்பு இளம் பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தகவலறிந்த போலீஸார் கணவன் மற்றும் மாமனார் மாமியாரை கைது […]

வந்தே மாதரத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்?

வந்தே மாதரத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்? அனைத்து கல்வி நிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அடாவடித் தீர்ப்பு எவ்வளவு அபத்தமானது என்பதை தனிக்கட்டுரையில் விளக்கியுள்ளோம். இருந்த போதிலும் இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னதாக நாடு முழுதும் சர்ச்சை எழுந்தது; பாரளுமன்றத்தில் வந்தேமாதரம் பாடும்போது அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்றபோது, பகுஜன் சமாஜ் எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் வெளி நடப்பு செய்துள்ளார். தேசிய கீதத்தை […]

நாய்களால் ஏற்படும் நோய்கள்

நாய்களால் ஏற்படும் நோய்கள் மனிதன் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் நாய்க்கு ஒரு முக்கிய இடமுண்டு. நாய்களுக்கு அழகழகான செல்லப்பெயர்கள் சூட்டி தன் படுக்கையறைக்குப் பக்கத்திலேயே இடமும் அளித்து அவ்வப்போது கட்டியணைத்து கொஞ்சி குழாவும் நடைமுறை ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரிடத்திலும் அதிகரித்துள்ளது. தான் வாக்கிங் செல்கிறாரோ இல்லையோ தன் செல்ல நாய்க்குட்டியை ஜாக்கிங் அழைத்து செல்வோரை சென்னை போன்ற பெருநகரங்களில் கணிசமாக பார்க்க முடிகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று நண்பரின் திருமண அன்பளிப்பாக கூட […]

Next Page »