Tamil Bayan Points

Category: இல்லறம்

q119

மனைவியை அடிக்கலாமா?

மனைவியை அடிக்கலாமா? கேள்வி : எனது கணவர் சிறு பிரச்சனைக்கு என்னை அடிக்கிறார். இஸ்லாத்தில் கணவன் மனைவியை அடிக்க அனுமதி உண்டா? அது போன்று மனைவி கணவனை அடிக்கலாமா? ரிஸானா பதில் : மனைவியிடம் கணவனுக்குப் பிடிக்காத செயல்பாடுகளைக் காணும் போது விவாகரத்து வரை சென்று விடக் கூடாது என்பதற்காக சில வழிமுறைகளை கணவன்மார்களுக்கு அல்லாஹ் காட்டியுள்ளான். முதலில் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். அதிலும் மாற்றம் ஏற்படவில்லையன்றால் படுக்கையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். அதிலும் […]

மஹர் கொடுப்பதும் கூலி கொடுத்து விபச்சாரம் செய்வதும் ஒன்றா?

மஹர் கொடுப்பதும் கூலி கொடுத்து விபச்சாரம் செய்வதும் ஒன்றா? 21:18. உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம்.  அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்… 17:37. பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து,  மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!…   ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்!  யாரிடம் விபச்சாரம் செய்கிறானோ அவள் இவனுக்கு மட்டும் உரியவளாக மாட்டாள். இவனைப் போல் இன்னும் பலருக்கு […]

மனைவியிடம் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் செல்போனிலோ, அல்லது நேரிலோ பேசலாமா?

மனைவியிடம் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் செல்போனிலோ, அல்லது நேரிலோ பேசலாமா கணவன் மனைவிக்கு இடையில் இதுபோன்று நடப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் மற்ற ஆண்களை வர்ணித்து, அல்லது மற்ற பெண்களை வர்ணித்து உணர்ச்சியைத் தூண்டும் வகையில் செய்யக்கூடாது. صحيح البخاري 5240 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ […]

தாம்பத்தியத்திற்குத் தடையா?

தாம்பத்தியத்திற்குத் தடையா? இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் போது பேண வேண்டிய ஒழுங்குகளையும், அது சம்பந்தமான விதிமுறைகள் என்னவென்பதையும் இந்தக் குடும்பவியல் தொடரில் தெரிந்து கொள்வது அவசியமாகும். பொதுவாக முஸ்லிம்களோ பிற சமூக மக்களோ இல்லறக் கடமைக்கென பல நிபந்தனைகளை அவர்களாகவே வகுத்து வைத்துள்ளனர். குடும்பத்தில் கணவன் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட சில நாட்களிலோ, நேரங்களிலோ அல்லது குறிப்பிட்ட மாதங்களிலோ இல்லறக் கடமையை நிறைவேற்றக் கூடாது என்று நம்புகின்றனர். இன்னும் பலர் நல்ல நேரம், கெட்ட […]

சமைக்க தெரியாத மனைவியை அடிக்கலாமா?

சமைக்க தெரியாத மனைவியை அடிக்கலாமா? கூடாது. பொருளாதாரத்தைத் திரட்டும் வேலை செய்யும் கணவருக்கு நல்ல உணவை சமைத்து கொடுப்பது மனைவியின் கடமை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், நபி (ஸல்) அவர்கள் உட்பட நபித்தோழர்களுக்கு அவர்களின் மனைவியே சமைத்து கொடுத்துள்ளார்கள். மேலும் விருந்தினருக்கு நல்ல உணவை அளித்தும் உள்ளார்கள். உணவு சரியாக சமைக்கத் தெரியாதவர்கள் பக்கத்துவீட்டு பெண்கள் மூலமாகக் கூட நல்ல உணவைச் சமைத்து தம் கணவருக்குக் கொடுத்துள்ளார்கள். என்னை ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் […]

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா? உதவ வேண்டும். வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்கள் செய்ய வேண்டியவை என்று இஸ்லாம் கூறவில்லை. சமையல் செய்தல், சமையலுக்குத் துணை செய்தல், துணி துவைத்தல், தண்ணீர் பிடித்துக் கொடுத்தல் போன்ற காரியங்களை ஆண்கள் செய்வது இழிவானது போலவும் ஆண் தன்மைக்கு எதிரானது எனவும் சிலர் கருதுகின்றனர். இது தவறாகும். மனைவிக்கும் சேர்த்து பொருளீட்டுவதற்காக ஆண்கள் வெளியே சென்று உழைப்பதால் அவனது உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக பெண்கள் வீட்டு வேலை செய்து […]

மனைவியை தாய் என்று சொல்லலாமா?

மனைவியை தாய் என்று சொல்லலாமா? கோபத்தில் சொல்லக்கூடாது. உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறி விடுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. அவர்கள் வெறுக்கத்தக்க சொல்லையும் பொய்யையும் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன். அல்குர்ஆன் 58:2 இந்த வசனத்தில் “மனைவியை கோபத்தில் தாய் எனக் கூறுதல்’ என்ற சொற்றொடருக்கு அரபியில், “ளிஹார்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. “ளிஹார்’ என்பது அன்றைய அறியாமைக் கால […]

தலாக் மற்றும் குலா என்றால் என்ன? வேறுபாடு என்ன?

தலாக் மற்றும் குலா என்றால் என்ன? வேறுபாடு என்ன? மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும். கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும். விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு. ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! […]

கணவனைப் பிடிக்காத பெண்கள் அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டுமா?

கணவனைப் பிடிக்காத பெண்கள் அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டுமா? சொல்ல வேண்டியதில்லை. தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்ற கருத்தில் சில ஹதீஸ் உள்ளது. أَنْبَأَنَا بِذَلِكَ بُنْدَارٌ أَنْبَأَنَا عَبْدُ الْوَهَّابِ أَنْبَأَنَا أَيُّوبُ عَنْ أَبِي قِلَابَةَ عَمَّنْ حَدَّثَهُ عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا مِنْ غَيْرِ بَأْسٍ […]

கணவனின் பணத்தைக் கணவனுக்குத் தெரியாமல் மனைவி எடுக்கலாமா?

கணவனின் பணத்தைக் கணவனுக்குத் தெரியாமல் மனைவி எடுக்கலாமா? போதுமானதை நியாயமான முறையில் மனைவி மக்கள் எடுக்கலாம். ஒரு பொருளை அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் அல்லது அவரது அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்வது தான் திருட்டாகும். இதை யார் செய்தாலும் திருட்டு தான். எனினும் ஒரு குடும்பத் தலைவர் தனது குடும்பத்திற்குத் தேவையான பொருளைத் தர மறுக்கும் போது, அவருக்குத் தெரியாமல் அவரது மனைவியோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பாளரோ பணத்தை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் குடும்பத் […]

பெற்றோருக்குப் பிடிக்காவிட்டால் மனைவியை தலாக் சொல்லலாமா?

பெற்றோருக்குப் பிடிக்காவிட்டால் மனைவியை தலாக் சொல்லலாமா? தகுந்த நியாயமான காரணத்துடன் சொன்னால் மட்டும் தலாக் செய்யலாம். கணவன் இடத்தில் நல்ல விதமாக நடக்கும் எந்த குறையும் சொல்ல முடியாத ஒரு மனைவியை கணவனின் தாய் தலாக் செய்துவிடு என்று சொன்னால் உடனே தலாக் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் தேவை. நியாயமான காரணம் இல்லாமல் கணவன் மனைவியைப் பிரிப்பது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இது ஷைத்தானுடைய செயல் என்றும் இறை […]

மனைவிக்காக தாயைத் திட்டலாமா?

மனைவிக்காக தாயைத் திட்டலாமா? யாரைக் கண்டிப்பதாக இருந்தாலும் அவர்களிடம் தவறு இருந்தால் மட்டுமே கண்டிக்க வேண்டும். அவர்களிடம் தவறு இல்லாத போது கண்டிப்பது பெரும்பாவமாகும். கணவன் மனைவி இல்லற வாழ்வில் ஈடுபட்டு ஒருவர் மற்றவருடைய தேவையைப் பூர்த்தி செய்வது அவ்விருவரின் மீதுள்ள கடமையாகும். இதை மார்க்கம் நன்மையான காரியம் எனக் கூறுகின்றது. 1674حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ حَدَّثَنَا وَاصِلٌ مَوْلَى أَبِي عُيَيْنَةَ عَنْ […]

மனைவியின் பின்துவாரத்தில் உடலுறவு கொள்ளலாமா?

மனைவியின் பின்துவாரத்தில் உடலுறவு கொள்ளலாமா? கூடாது. மனைவியின் பின் துவாரம் வழியாக உடலுறவு கொள்ளக் கூடாது என்று நபிமொழிகள் உள்ளதாக அறிகின்றோம். ஆனால் குர்ஆன் 2:223 வசனமும் புகாரி 4528 ஹதீசும் பின் துவாரம் வழியாக உடலுறவு கொள்ளலாம் என்ற கருத்தில் அமைந்துள்ளதாகத் தெரிகின்றதே? எஸ். முஹம்மத் ஸலீம், ஈரோடு நீங்கள் சுட்டிக்காட்டும் புகாரியின் 4528வது ஹதீஸில் மலத் துவாரத்தில் உடலுறவு கொள்வது பற்றிப் பேசவில்லை. அதன் பொருளைத் தவறாக விளங்கிக் கொண்டதால் இந்தக் கேள்வி எழுகின்றது. […]

குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா?

குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? நிரந்தரமான குடும்பக் கட்டுப்பாடு செய்யக்கூடாது. கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டு விடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

மனைவியின் விந்தைக் சுவைப்பது கூடுமா?

மனைவியின் விந்தைக் சுவைப்பது கூடுமா? கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. மனைவியின் பின் துவாறத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதை மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். ”அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் […]

மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்?

மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்? 90 நாட்களுக்கு மேல் மனைவியைப் பிரிந்திருக்கக் கூடாது என்றோ, நாள் குறிப்பிட்டோ எந்த ஹதீஸும் இல்லை. ஆனால் மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யும் கடமை கணவனுக்கு உள்ளது. அவனும் வழி தவறி விடாமல் அவளும் வழி தவறி விடாமல் காக்கும் கடமையும் அவனுக்கு உண்டு. ஒரு மனைவியால் ஒரு மாதம் கூட கணவனைப் பிரிந்திருக்க முடியாது என்ற நிலை இருந்தால் அப்போது ஒரு மாதம் பிரிந்திருப்பதே குற்றமாகி விடும்.

கருக்கலைப்பு செய்வது குற்றமா?

கருக்கலைப்பு செய்வது குற்றமா? 120 நாட்களுக்கு முன் கருவை கலைத்தால் அது குழந்தையை கொன்றதாக ஆகாது திருக்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று தெளிவான கட்டளை உள்ளது. அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. திருக்குர்ஆன்6:140 வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்” என்று (முஹம்மதே!) […]

குழந்தை உருவாகாமல் தடுக்க ஆணுறை பயன்படுத்தலாமா

குழந்தை உருவாகாமல் தடுக்க ஆணுறை பயன்படுத்தலாமா பயன்படுத்தலாம். கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் […]

குளிப்பு எப்போது கடமையாகும்?

குளிப்பு எப்போது கடமையாகும்? உடலுறவில் ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சந்தித்துவிட்டால் ஆணுக்கு விந்து வெளிப்படாவிட்டாலும் இருவர் மீதும் குளிப்பு கடமையாகிவிடும். “பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : முஸ்லிம் 579, திர்மிதீ 102

தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு காலம்?

தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு காலம்? கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லாவிட்டால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் முடியும் வரையில் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் இத்தா எனப் படுகின்றது. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு […]

கணவர் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா?

கணவர் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா? கர்ப்பிணிப் பெண்கள் அவர்கள் குழந்தையை ஈன்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான். அல்குர்ஆன் (65 : 4) கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் […]

உடலுறவுக்குப் பின்னர் தான் வலீமா கொடுக்க வேண்டுமா?

உடலுறவுக்குப் பின்னர் தான் வலீமா கொடுக்க வேண்டுமா? இல்லை. திருமணம் முடித்த பின் மணமகன் வலீமா விருந்து கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் வலீமா விருந்தளிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் நபி (ஸல்) அவர்கள் விதிக்கவில்லை. முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னையும் ஸஅது பின் ரபீஃ அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி), “நான் அன்சாரிகளில் அதிக […]

நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தை குறையுடன் பிறக்குமா?

நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தை குறையுடன் பிறக்குமா? இல்லை. நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் குறைபாடுள்ள குழைந்தகளாகப் பிறக்கும் என்று மூடத்தனமான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு சில மருத்துவர்கள் கூறுவதாகவும் அவர்கள் வாதங்களை வைக்கின்றனர். ஆனால் பலகாரணங்களால் இது தவறாகும். நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுள்ள குழைந்தைகளாகப் பிறக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. மாறாக குறைபாடுடன் பிறக்கும் சில குழந்தையின் பெற்றோர்கள் தங்களுக்கு மத்தியில் நெருங்கிய உறவு […]

ஒழுக்கம் கெட்டவருக்கு அதேமாதிரி துணைதான் அமையுமா?

ஒழுக்கம் கெட்டவருக்கு அதேமாதிரி துணைதான் அமையுமா? இல்லை. ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று ஹதீஸ் உள்ளதா?  ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை. ஆனால் குர்ஆன் வசனங்கள் இக்கருத்தைக் கூறுவதாக சிலர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர். குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் கொண்டு இந்தத் தவறை செய்து வருகின்றனர். الزَّانِي لَا يَنكِحُ إلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ […]

இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமையா?

உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள். سنن الترمذي ت شاكر (1/ 182) 109 – حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ […]