Tamil Bayan Points

Category: நவீன பிரச்சனைகள்

q121

ரெஸ்ட்லிங் பார்க்கலாமா?

ரெஸ்ட்லிங் பார்க்கலாமா? இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட செயலைப் பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும். இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவைகளைக் காண்பதற்காக நமது நேரத்தைச் செலவிடுவதும் தடைசெய்யப்பட்டதாகும். இந்த அடிப்படையில் ரெஸ்லிங் என்ற போட்டி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? அல்லது தடைசெய்யப்பட்டதா? என்பதைப் பொறுத்தே இதைப் பார்ப்பது கூடுமா? அல்லது கூடாதா? என்று முடிவு செய்ய வேண்டும். ஒருவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக போட்டி வைப்பது தவறல்ல. ஆனால் இஸ்லாம் தடை செய்த விஷயங்களில் போட்டி வைப்பது கூடாது. போரில் எதிரிகளை வீழ்த்தும் கட்டத்தில் தவிர மற்ற […]

வாடகை நூல் நிலையம் அமைப்பது கூடுமா?

வாடகை நூல் நிலையம் அமைப்பது கூடுமா? ஏனெனில் அங்கு இஸ்லாமியப் புத்தகம் மட்டும் வைக்காமல் இன்னபிற புத்தகங்களும் வைக்க வேண்டும். (உதாரணம்: கவிதை, கதை, பலசமய புத்தகங்கள்). இதைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பதில் கூறவும். பதில்: தீமைகளிலிருந்து நாம் முழுவதுமாக ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பார்த்தால் நீங்கள் சொல்வது போன்ற நூல்களை வைத்து நூலகம் நடத்த முடியாது என்பது சரிதான். ஆனால் எழுத்து வடிவில் எழுதப்பட்ட தீமைகளைப் பற்றி மக்களுக்குச் சொல்வதாக இருந்தால் […]

ஆசிரியர் தினம் & சிறுவர் தினம் கொண்டாட மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

ஆசிரியர் தினம் & சிறுவர் தினம் போன்ற நவீன கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா? இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களைத் தடைசெய்கின்றது. மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாகக் கருதி வந்தனர். இதைக் கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளாக ஆக்கிக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் […]

தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா?

தவறான அர்த்தம் அல்லது தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா? பெற்றோர்கள் பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டும் போது நல்ல கருத்துள்ள பெயர்களைப் பார்த்து வைக்க வேண்டும். இஸ்லாமியர்கள் பெயர் சூட்டும் போது இந்த ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் மாற்று மதத்தில் உள்ளவர்கள் அவர்களது நம்பிக்கை அடிப்படையில் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பார்கள். இஸ்லாமிய அடிப்படையில் பார்த்தால் அவை தவறான பெயர்களாக இருக்கும். இவ்வாறு தவறான அர்த்தம் தரும் பெயர் கொண்டவரை அவருடைய பெயரைக் […]

உடலையும், உடலின் கண், கிட்னி போன்றவற்றை தானம் செய்யலாமா?

உடலையும், உடலின் கண், கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா? கண், கிட்னி போன்ற சில மனித உறுப்புக்களை பிற மனிதர்களுக்குப் பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் […]

கண் தானம் செய்வது கூடும் என்று நீங்கள் சொல்வது சரியா?

கண் தானம் செய்வது கூடும் என்று நீங்கள் சொல்வது சரியா? ?கண்தானம் செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் கண்தானம் செய்தவர் நல்லவராகவும் கண்தானம் பெற்றவர் கெட்டவராகவும் இருக்கலாம். அப்படிக் கண்தானத்தில் கண்ணைப் பெற்றவர் கெட்டவராக இருந்தால் அந்தக் கண் நரகத்திற்குப் போகுமா? இவ்வுலகில் உறுப்புகளை தானம் செய்வதற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இவ்வுலகில் நல்லவராக வாழ்ந்த ஒருவர் விபத்தில் கைகளை இழந்து விட்டால் அல்லது கண்களை இழந்து விட்டால் அவர் மறுமையிலும் கைகளை இழந்தவராக […]

புத்தாண்டு கொண்டாட நினைக்கும் இஸ்லாமிய சமுதாயமே!

நாம் புத்தாண்டை கொண்டாடலாமா? புத்தாண்டிற்கு வாழ்த்து சொல்லலாமா? ஆங்கிலப் புத்தாண்டு என்பது இயேசுவின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் புத்தாண்டு கிறித்தவர்களின் மதப் பண்டிகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. ஈஸா  (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்பது தனி விஷயம். புத்தாண்டு கொண்டாட்டம் கிறித்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால், அதை நாம் கொண்டாடக் கூடாது. ஒரு சமூகத்தினருக்கு ஒப்பாக […]

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி! தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய […]

உருவப்படத்திற்கு அனுமதி உண்டா?

கேள்வி இஸ்லாத்தில் உருவம் வரைவது ஹராம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்குப் படம் வரைவதில் ஆர்வம் அதிகம். புகைப்படத்தைப் பார்த்து சிலரது முகத்தை வரைந்திருக்கிறேன். என் பொழுது போக்கிற்காக மட்டும் தான் வரைந்திருக்கிறேன். எவரேனும் நான் வரைந்த உருவப் படத்தைக் கேட்டால் அதை நான் அன்பளிப்பாக கொடுக்கலாமா? இது ஹராமா? இஸ்லாத்தில் உருவம் வரைவது எந்த அளவில் தடுக்கப்பட்டிருக்கிறது. பதில்  உருவச்சிலைகள் உருவச்சிலைகள், உருவப்படங்கள், புகைப்படங்கள், நிழற்படங்கள், எலக்ட்ரான் கதிர் அலைகளால் தெரியும் படங்கள் என பல்வேறு […]

இசை ஹராமா?

இசை ஹராமா? இசை ஹராமா? பாடல் இல்லாமல் இசை மட்டும் இசைப்பது ஹராமா? இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. صحيح البخاري 5590 – وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الكِلاَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الأَشْعَرِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَامِرٍ أَوْ أَبُو […]

ஆன்லைன் திருமணம் அனுமதிக்கப்பட்டதா-?

ஆன்லைன் திருமணம் அனுமதிக்கப்பட்டதா-? நமது சமுதாயத்தில் இப்போது டெலிஃபோன் நிகாஹ், செல்ஃபோன் நிகாஹ், ஸ்கைப் நிகாஹ், வீடியோ கான்ஃபரன்ஸிங் நிகாஹ், ஈமெயில் நிகாஹ், வாட்ஸ் அப் நிகாஹ் போன்ற சொல்லாடல்கள் முஸ்லிம்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதனாலும் பிரச்சனைகள் உருவாகி அது வெடித்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று அதிலும் மோடி அரசாங்கம் மூக்கை நுழைப்பதற்கு அடித்தளமிடுகின்றது. தலாக்கே ஆன்லைனில் நடைபெறும் போது நிகாஹ் ஆன்லைனில் நடக்கக்கூடாதா? என்ற புரட்சி படைக்க ஒரு கூட்டம் களமிறங்கி விட்டது.  அந்தப் […]

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை ஏய்ப்பு செய்யலாமா?

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல், ஏமாற்றலாமா? ஒரு நாட்டில் அரசாங்கத்தின் கீழ் வாழும் நாமும் அவர்களும் மறைமுகமாக ஒரு ஒப்பந்தம் செய்கிறோம். மக்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து தரவேண்டும். நான் அரசுக்கு வரி செலுத்துகிறேன் என்ற அடிப்படையில் மறைமுகமாக ஒரு ஒப்பந்தம் செய்கிறோம். எனவே, அரசுக்கு வரி செலுத்துவது தான் முறையானது. உடன்படிக்கையை, ஒப்பந்தங்களை நிறைவேற்றவது குறித்து குர்ஆன் கூறுகிறது. اِلَّا الَّذِيْنَ عَاهَدتُّمْ مِّنَ الْمُشْرِكِيْنَ ثُمَّ لَمْ يَنْقُصُوْكُمْ شَيْـًٔـا وَّلَمْ يُظَاهِرُوْا […]

காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது?

காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது? வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் சுகங்களை மட்டும் தியாகம் செய்யவில்லை. மானம் மரியாதையும் இழந்து வேலை செய்யும் அவல நிலையிலும் பலர் உள்ளனர் என்பது இவரது கேள்வியில் இருந்து தெரிகிறது. இப்படியெல்லாம் கெட்ட வார்த்தைகளால் ஏச்சு வாங்கி செருப்படி வாங்கி நாய் பிழைப்பு பிழைத்து சம்பாதிக்கும் பொருளாதாரத்தை தாயகத்தில் உள்ள உறவினரும் பெண்களும் பாழாக்கி வீண் விரயம் செய்வதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. குடும்பத்தினர் சொகுசாக வாழ்வதற்காக ஆண்கள் எத்தகைய இழிவுகளையெல்லாம் […]

கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் விற்பது கூடுமா?

கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் விற்பது கூடுமா? மற்றவர்கள் புனிதம் என்று கருதும் பொருட்களை தவிர மற்றவற்றை விற்கலாம். மாற்று மதத்தினர் புனிதமாகக் கருதும் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது. 13971حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ أَنَّ عَطَاءً كَتْب يَذْكُرُ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى […]

தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா?

தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா? கருப்பு தவிர மற்ற நிறங்களில் அடிக்கலாம். தலைமுடி நரைத்தவர்கள் தலைக்கு சாயம் பூசும் நடைமுறை நமது சமுதாயத்தில் இருக்கின்றது. தலைமுடி நரைக்காவிட்டாலும் அழகிற்காக முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பழக்கமும் சிலரிடம் இருக்கின்றது. நரைத்த தலைமுடி கொண்டவர்கள் கருப்பு நிறத்தைத் தவிர்த்து வேறு ஏதாவது ஒரு நிறத்தால் தலைக்கு சாயம் பூச வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே யாருக்கேனும் வெள்ளை நிறத்தில் முடி இருக்குமேயானால் அவர் அதன் […]

அஜினமோட்டோ பயன்படுத்தலாமா?

அஜினமோட்டோ பயன்படுத்தலாமா? கூடாது. அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும். இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா சேர்த்தால் தலைவலி, நெஞ்சு வலி, குமட்டல், கை கால் மரத்துப் போதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற பல்வேறு காரணங்களால் உணவுப் பொருட்களில் […]

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங் டோனாக வைக்கலாமா?

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங் டோனாக வைக்கலாமா? வைக்கலாம். சவூதி உலமாக்கள் சிலர் இது கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல. ரிங் டோனாக குர்ஆன் வசனம் இருந்தால் போன் அழைப்பை ஏற்கும் போது குர்ஆனை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படும் என்பதைத் தான் இதற்குக் காரணமாகக் கூறுகின்றனர் இது குர்ஆனை அவமதிப்பதாகும் என்று கூறுகின்றனர். குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் தேவை ஏற்படும் போது இடையில் நிறுத்தக் […]

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா? வாழ்த்துவது போன்ற வார்த்தைகளை சொல்லக்கூடாது. மார்க்த்திற்கு உட்பட்டு இறைவனிடம் பிரார்திப்பது போன்ற வார்த்தைகளை கொண்டு சொல்லலாம். முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதியில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமில்லை. மற்ற சமுதாய மக்களுடன் வாழும் போது அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லி அனபைப் பகிர்ந்து கொள்வதால் நாமும் அதற்கேற்ப நடக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பண்டிகைகளில் நமக்கு உடண்பாடு இல்லாவிட்டாலும் நாம் வாழ்த்துச் […]

முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அங்கே செல்லலாமா?

முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அங்கே செல்லலாமா? செல்லலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவருக்கும் இரண்டு வெவ்வேறு நிலைபாடுகளை எடுத்துள்ளனர். حدثنا مسعود بن جويرية قال حدثنا وكيع عن هشام عن قتادة عن سعيد بن المسيب عن علي قال صنعت طعاما فدعوت النبي صلى الله عليه وسلم فجاء فدخل فرأى سترا فيه تصاوير فخرج وقال إن الملائكة […]

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா?

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா? தொழுகை போன்ற கடமையை செய்வதற்கு சம்பளம் கொடுக்கக்கூடாது. மற்ற வேலைகளுக்காக தரலாம். வணக்கம் என்பது அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்யப்பட வேண்டும் என்பதிலோ, அதற்காக மனிதர்களிடம் கூலி கேட்கக் கூடாது என்பதிலோ இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் ஒருவர் மார்க்கப் பணிக்காகத் தனது முழு நேரத்தையும் செலவிடுகிறார். அதன் காரணமாக அவரால் தொழில் செய்யவோ பொருளீட்டவோ இயலவில்லை. அத்துடன் அவர் வசதி படைத்தவராகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் அவரது […]

சோதனைக் குழாய் குழந்தை அனுமதி உள்ளதா?

சோதனைக் குழாய் குழந்தை அனுமதி உள்ளதா? கீழ் உள்ளதில் முதல் முறைக்கு மட்டும் அனுமதி உள்ளது, சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. 1-கணவனின் உயிரணுவை எடுத்து,மனைவியின் கரு முட்டையுடன் சேர்த்து சோதனைக் குழாயில் வளர்த்து அதை மனைவியின் கருவறையில் செலுத்துவது ஒரு முறையாகும். 2-கணவன் அல்லாத வேறொரு ஆணிடமிருந்து உயிரணுவை எடுத்து அதனுடன் ஒரு பெண்ணின் கரு முட்டையைச் சேர்த்து குழந்தை பெற வைப்பது மற்றொரு முறையாகும். 3- கணவன் அல்லாத […]

அக்டோபஸ் உண்ணலாமா?

அக்டோபஸ் உண்ணலாமா? கேடு விளைவிக்காத கடல்வாழ் உயிரினம் அனைத்தும் ஹலால். أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ مَتَاعًا لَكُمْ وَلِلسَّيَّارَةِ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ(96)5 உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அல்குர்ஆன் (5 : 96) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “கடல் நீர் […]

செஸ் விளையாட்டு சூதாட்டமா?

செஸ் விளையாட்டு சூதாட்டமா? விளையாட்டில் பங்கு பெறாதவர் வெற்றி பெற்றவருக்கு பரிசளித்தால் தவறில்லை. விளையாடுபவர்களிடம் இருந்து வெற்றி பெற்றவருக்கு பணம் வந்தால் அது சூதாட்டம். சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும். இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை தரப்படும் என்று போட்டியில் பங்கேற்காதவர்கள் அறிவித்தால் அது பரிசு எனப்படும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. இவ்வாறு எந்த விளையாட்டையும் […]

நகப்பாலிஷ் இடலாமா?

நகப்பாலிஷ் இடலாமா? சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நகப் பாலிஷ் இடலாம். தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் நனைய வேண்டியது அவசியமாகும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் மேனி நனைய வேண்டும். நகப் பாலிஷ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் திரவமாகவே விற்பனை செய்யப்படுகின்றது. நைல் பாலிஷ் இட்டவர்கள், உளூச் செய்யும் போதெல்லாம் அதை நீக்கி விட வேண்டும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் நீக்கிட வேண்டும். […]

ஆண்கள் பிளாட்டினம் அணியலாமா?

ஆண்கள் பிளாட்டினம் அணியலாமா? அணியலாம். தங்க ஆபரணங்களை அணிவதை மட்டுமே ஆண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ عَنْ ابْنِ زُرَيْرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ […]

ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்?

ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்? இதற்குக் காரணம் எதையும் இஸ்லாம் கூறவில்லை. அதிக விலை உள்ள உலோகம் என்பதற்காக தங்கம் தடை செய்யப்படவில்லை. அதை விட அதிக விலை உடைய பிளாட்டினம் போன்றவைகள் ஆண்களுக்குத் தடுக்கப்படவில்லை. தங்கம் இரும்பை விடக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டாலும் அப்போதும் அது ஆண்களுக்கு தடுக்கப்பட்டதாகவே இருக்கும். இது குறித்து முஸ்லிம் அறிஞர்கள் சிலர் ஆய்வு செய்து ஒரு உண்மையை வெளிப்படுத்தி உள்ளனர். தங்கம் எனும் உலோகம் வெப்பத்தை […]

கிறிஸ்மஸ் விருந்து கூடுமா?

கிறிஸ்மஸ் விருந்து கூடுமா? பூஜிக்கப்படாத உணவாக இருந்தால் ஹராம் இல்லை. அந்த சபைக்கு சென்று உண்ணக்கூடாது, ஆகுமான உணவுப் பொருட்களை மாற்று மதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பது தவறல்ல. எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக் கூடாது. பன்றி இறைச்சி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத பிராணியின் இறைச்சி தானாக செத்தவை இரத்தம் மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பூஜை செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவை ஹராம் என்று குர்ஆன் கூறுகின்றது. […]

கொசு பேட் பயன்படுத்தலாமா?

கொசு பேட் பயன்படுத்தலாமா? தாராளமாக பேட் மூலம் கொசுவைக் கொல்லலாம். நெருப்பால் தண்டனை கூடாது என்ற கட்டளை இருப்பது உண்மை தான். இது மனிதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தால் அவர்களை நெருப்பில் எரித்து கொல்லக் கூடாது என்பது தான் பொருள். மனிதர் அல்லாத உயிரனத்தை எரிக்கக் கூடாது என்பது பொருள் அல்ல. அல்லாஹ் தண்டிப்பது போல் தண்டிக்க வேண்டாம் என்ற சொல்லே இதைத் தெளிவு படுத்துகிறது. அல்லாஹ் மறுமையில் நெருப்பால் தண்டனை அளிப்பது மனிதர்கள், ஜின்கள், […]

கெட்டவர் தானம் செய்த கண் சொர்க்கம் செல்லுமா?

கெட்டவர் தானம் செய்த கண் சொர்க்கம் செல்லுமா? இவ்வுலகில் உறுப்புகளை தானம் செய்வதற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இவ்வுலகில் நல்லவராக வாழ்நத ஒருவர் விபத்தில் கைகளை இழந்து விட்டால் அல்லது கண்களை இழந்து விட்டால் அவர் மறுமையிலும் கைகளை இழந்தவராக அல்லது கண்களை இழந்தவராக எழுப்பப்படுவார் என்பது கிடையாது. மறுமையில் கெட்டவர்கள் குருடாக எழுப்பப்படுவார்கள் என திருக்குர்ஆன் கூறுகிறது. وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى […]

குட்மார்னிங் சொல்வது குற்றமா? வணக்கம் ஆகுமா?

குட்மார்னிங் சொல்வது குற்றமா? வணக்கம் ஆகுமா? இதில் வணங்குதல் போன்ற அர்த்தம் இல்லை. இந்த வாழ்த்துக்களைத் தவிர்த்து சலாம் கூற இயலுமானால் சலாம் கூறிக் கொள்ள வேண்டும். குட்மார்னிங் (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங் (நல்ல மாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்நைட் (நல்ல இரவாக இருக்கட்டும்) ஆகிய வார்த்தைகள் பிரார்த்தனை வடிவத்தில் உள்ளன. பிரார்த்தனை செய்யும் தோரணையில் அமைந்துள்ள இவ்வார்த்தைகளில் பிறரை வழிபடும் இணை வைப்பு இல்லை. எனவே இவ்வார்த்தைகளை ஒருவர் கூறினால் பிறரை வழிபட்டவராக ஆக மாட்டார். மேலை […]

இடது கையில் கடிகாரம் அணியலாமா?

இடது கையில் கடிகாரம் அணியலாமா? அணியலாம். அனைத்து நல்ல காரியங்களையும் வலது கரத்தால் ஆரம்பிக்க வேண்டும் என்பது நபி வழி தான். ஆனால் இதைச் சரியான முறையில் அவர் புரிந்து கொள்ளாததால் இப்படிக் கேட்டுள்ளார். எந்தக் காரியங்கள் வலது கையாலும் இடது கையாலும் செய்வது சமமான தரத்தில் உள்ளதோ அது போன்ற காரியங்களில் வலதைப் புறக்கணித்து விட்டு இடது கைக்கு முக்கியத்துவம் அளித்தால் தான் வலது பக்கக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று ஆகும். எந்தக் காரியம் வலது […]

ஆல்கஹால் பயன்படுத்தலாமா? அது கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா?

ஆல்கஹால் பயன்படுத்தலாமா? அது கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா? பருகுவதுதான் தவறு. வாசணைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம். ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடிய வகையில் இதைப் பயன்படுத்துவது மட்டுமே தவறு. போதை ஏற்படாத வகையில் இதைப் பயன்படுத்தினால் தவறில்லை என்ற முடிவுக்கு வரலாம். போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் […]

ஜமாத் உறுப்பினர் படிவத்தில் கையொப்பம் வாங்குவது பைஅத் தானே?

ஜமாத் உறுப்பினர் படிவத்தில் கையொப்பம் வாங்குவது பைஅத் தானே? மார்க்கம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் நபிகள் நாயகம் ஸல் தவிர வேறு யாரிடமும் பைஅத் செய்யக் கூடாது. இது அதுபோன்றது இல்லை.  தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை முறையாக நிறைவேற்றுவதாகவும் மார்க்கம் தடை செய்த பாவமான காரியங்களைச் செய்ய மாட்டேன் என்றும் உறுதிமொழி அளிப்பதற்கு பைஅத் என்று சொல்லப்படுகின்றது. இந்த ஆன்மிக பைஅத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் செய்யக்கூடாது என்றே நாம் கூறி […]

முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா?

முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா? தவறுகளை சுட்டிக்காட்டலாம். விமர்சனம் செய்யலாம். ஆனால் ஆயுதம் தாங்கி போராடி மக்களை கொன்று குவிக்கக் கூடாது. ஒரு இஸ்லாமிய அரசுக்குக் கீழ் வாழ்பவர்கள் அரசு செய்யும் தவறுகளை விமர்சனம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்ட சக்தி இருக்குமேயானால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகின்றது. 4138 أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ […]

பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது?

பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது? தேவைப்படாத பிரதிகளை அழிப்பதற்கு நாம் விரும்பிய எந்த வழியை வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். பயன்படுத்த இயலாத பழைய குர்ஆன் பிரதிகளை சிலர் எரித்துவிட வேண்டும் என்றும் சிலர் மண்ணில் புதைக்க வேண்டும் என்றும் சிலர் கிணற்றில் போட வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆனால் இவ்விஷயத்தில் மார்க்கம் எந்த நிபந்தனைகளையும் இடவில்லை. குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாத காரணத்தால் இவ்விஷயத்தில் பலர் குழம்புகின்றனர். அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் […]

சிறுவனின் உடலில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டிருப்பது உண்மையா?

சிறுவனின் உடலில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டிருப்பது உண்மையா? சமீபகாலமாக இது போன்ற வதந்திகள் அதிகரித்து வருகின்றன. மீன் உடம்பில் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது என்றும் வானத்தில் அல்லாஹ் என்ற வார்த்தையின் வடிவில் மேகக் கூட்டம் திரண்டது எனவும் இன்னும் இது போன்று பல செய்திகள் மக்களுக்கு மத்தியில் பரப்பப்படுகின்றது. இணையதளத்தில் வெளியிடப்படும் இது போன்ற செய்திகள் நம்புவதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஒரு பேச்சுக்கு இவையெல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும் இவை இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு […]

கழிவறைக்கு செல்போனை எடுத்துச் செல்லலாமா?

கழிவறைக்கு செல்போனை எடுத்துச் செல்லலாமா? செல்லலாம். இப்போது அதிகமான மக்கள் பயன்படுத்தக் கூடிய செல் போன்களில் குர்ஆன் டெக்ஸ்ட் குர் ஆன் அரபி மூலம் மார்க்க நூல்கள், பயான்கள் ஆகியவை பதிவு செய்யக்கூடிய வகையில் தான் உள்ளன. மார்க்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் கழிவறை சென்றால் என்ன செய்ய வேண்டும்? இவர்களின் செல்போனுக்குள் குர்ஆன் உள்ளதால் அதைக் கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்று ஒருவர் முடிவு செய்தால் அது போல் […]

உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா? அந்த  நிலை இருந்தால் செய்யலாம்.   கர்ப்பமாவதால் உயிருக்கு ஆபத்து இருந்தால் கர்ப்பத்தடை ஆபரேசன் செய்யலாம். நிரந்தரமாக கற்பத் தடை செய்து கொள்வது மார்க்கம் தடை செய்த ஒன்றாகும். நிர்பந்தம் ஏற்படும் போது தடுக்கப்பட்ட விஷயங்கள் ஆகுமானதாகி விடும். இனி கரு உருவானால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் இது நிர்பந்தமான நிலை தான். நிர்பந்தமான நிலை ஏற்படும் போது மார்க்கத்தின் சட்ட திட்டங்கள் குறுக்கே நிற்காது. நமது […]

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன? அரவாணிகளாக இருப்பவர்கள் ஆண்களுக்குரிய சட்டத்தின் அடிப்படையில் வாழ வேண்டும். இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும் பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது. ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபடுகின்றனர். ஆண்களைப் போன்ற உடல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவர்களின் உணர்வுகள் குணாதிசங்கள் நடத்தைகள் ஆகியவை அனைத்தும் பெண்களைப் போன்று அமைந்திருக்கும். அதாவது உடல் தோற்றத்தைக் […]

வேறு கிரகங்களில் உயிரினம் உண்டா?

வேறு கிரகங்களில் உயிரினம் உண்டா? வேறு கிரகங்களில் உயிரினங்கள் உண்டு. பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதன் வாழ முடியாது என்று திருக்குர்ஆன் கூறுவது 175வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியைத் தவிர மற்ற கோள்களில் உயிரிணங்கள் வாழ முடியும் என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது முழுமையாக நிரூபிக்கப்படாவிட்டாலும் சில கோள்களில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதே இதற்குக் காரணம். திருக்குர்ஆன் இந்தச் சாத்தியத்தை மறுக்கவில்லை. மாறாக வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்க முடியும் என்று […]

உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா?

உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா? வட்டி வாங்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளதைப் போன்று வட்டி கொடுப்பதையும் தடுத்துள்ளார்கள். வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி). நூல்: முஸ்லிம் (3258) எனவே வங்கியில் லோன் வாங்கி வட்டி செலுத்துவது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. படிப்பு வகைக்காகவும் இவ்வாறு செய்வது கூடாது. வங்கியிலிருந்து கடன் தொகையை […]

வருமான வரியில் இருந்து தப்பிக்க?

வருமான வரியில் இருந்து தப்பிக்க? நம்முடைய வருமானத்தில் குறிப்பிட்ட அளவு நாட்டுக்கு வரி செலுத்த வேண்டும் என்று நம் நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது இஸ்லாம் விதித்த விதிமுறையல்ல. இந்த வரியைக் கொடுக்க வேண்டும் என்றோ கொடுக்கக் கூடாது என்றோ இஸ்லாம் கூறவில்லை. ஒருவர் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வருமான வரியைச் செலுத்தாவிட்டால் இதன் காரணத்தால் அவருடைய செல்வம் ஹராமான செல்வமாகி விடாது. ஆனால் உலக ரீதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அவரே பொறுப்பாளியாவார். இதனால் அவருக்கு ஏற்படும் […]

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா? இந்தக் கம்பெனியில் நாம் சேர்ந்தால் நம்முடைய பங்கு ஹலாலான தொழிலில் இடப்பட்டுள்ளதா? அல்லத ஹராமான தொழிலில் இடப்பட்டுள்ளதா? என்பது தெரியாது. ஆகுமான தொழில் என்று உறுதியாகத் தெரியாத வரை அதில் நாம் முதலீடு செய்வது கூடாது. ஷேர் மார்க்கெட் என்பது ஒரு கம்பெனி நடத்துகிறவர் தன்னிடமுள்ள 1 கோடி மதிப்புள்ள தொழிலில் 30 லட்சம் ரூபாய் அளவிற்கு பிறர் கூட்டு சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிப்பார். ஒரு பங்கு என்பது 10 […]

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா?

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் இந்த வழிகாட்டலைக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக அன்றைய காலத்தில் அவர்களுக்கு இருந்த உலக அறிவை அடிப்படையாக வைத்தே இவ்வாறு கூறியுள்ளார்கள். ஒட்டகத்தின் பாலிலும் சிறுநீரிலும் மருத்துவ குணம் இருந்து அதைப் பயன்படுத்த விரும்பினால் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதைவிடச் சிறந்த மருத்துவ முறை கண்டறியப்பட்டால் அதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இதனால் நபிவழியை நாம் மீறியவர்களாக மாட்டோம். மருத்துவத்துக்காக ஒட்டகத்தின் பாலையும் […]

நபிகள் நாயகம் பற்றி சினிமா எடுக்கலாமா?

நபிகள் நாயகம் பற்றி சினிமா எடுக்கலாமா? சரி வராது. திரைப்படங்கள் எடுத்து தங்கள் மதத்தைக் கொண்டு செல்ல முயன்றவர்களால் அதில் முழு வெற்றி பெற முடியவில்லை. இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்து தங்கள் ஒரிஜினாலிட்டியை தாங்களே அழித்து விட்டனர். ஆனால் 1400 ஆண்டுகளாக உருவப்படம் இல்லாமல் சிலை இல்லாமல் நாடகம் சினிமா இல்லாமல் நபிகள் நாயகம் குறித்த செய்திகள் சரியான முறையில் மக்களைச் சென்றடைந்து கொண்டு தான் உள்ளது. தனது சமரசம் செய்து கொள்ளாத கொள்கை மூலம் […]

இறந்த பிறகு கண்தானம் உடல்தானம் செய்யலாமா?

இறந்த பிறகு கண்தானம் உடல்தானம் செய்யலாமா? கண் தானம் செய்யலாம். ஒருவர் தன்னுடைய கண்களை தானம் செய்கின்றார் என்றால் இதன் மூலம் கண் தெரியாத இரண்டு பேருக்குப் பார்வை அளிக்கின்றார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) என்ற வசனத்தின் அடிப்படையில் கண் தானம் என்பது நன்மையைப் பெற்றுத் தரக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. உடல் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் என்பது […]

காது குத்த அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்யலாமா?

காது குத்த அனுமதி உள்ளதா?  பிளாஸ்டிக் சர்ஜரி செய்யலாமா? காது குத்தக் கூடாது. காதுகளைக் குத்தி ஓட்டை போடுவது அல்லாஹ்வின் படைப்பில் மாறு செய்வது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்களைப் படைக்கும் போது காதுகளில் ஓட்டை போட அல்லாஹ் மறந்து விட்டது போன்ற ஒரு நிலையை இது ஏற்படுத்தி விடுகின்றது. எனவே இதை அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கின்றான். “அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். […]

தற்கொலைத் தாக்குதல் பற்றி இஸ்லாம் கூறும் பதில் என்ன?

தற்கொலைத் தாக்குதல் பற்றி இஸ்லாம் கூறும் பதில் என்ன? தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன. ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி). நூல்: புகாரி […]

மனித உடலில் ஜின்கள் மேலாடுமா?

மனித உடலில் ஜின்கள் மேலாடுமா? இல்லை. குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் “ஜின் என்ற படைப்பினம் உள்ளது; அது மனிதர்களைப் போன்றே பகுத்தறிவு வழங்கப்பட்டது; மனிதர்களை விட சக்தி வாய்ந்தது” என்றெல்லாம் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். ஆனால் அந்த ஜின்கள் மனிதர்கள் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு, மனிதனை ஆட்டுவிக்கும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. ஒரு மனிதனின் உடம்பில் ஜின் இருக்கின்றது என்றால் அந்த மனிதனுக்கு மனித உள்ளம், ஜின் உள்ளம் என்று இரண்டு […]

சந்தோஷமான வார்த்தைகளை கேட்கும் பொழுது அல்லாஹு அக்பர் என்று சொல்லலாமா?

திக்ரு ஆக சொல்லும்போது சப்தமில்லாமலும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சொல்லும்போது தேவைக்கேற்ப விரும்பியவாரும் சொல்லலாம். “என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மேல் ஆணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நாங்கள் “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்று கூறினோம். உடனே அவர்கள், “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்கள். நாங்கள், “அல்லாஹு […]

Next Page »