Search Posts

Category: யாகுத்பா ஓர் ஆய்வு

u454

10) நபியின் மீதே பொய்

இதை விடவும் மோசமான வரிகளைப் பார்ப்போம். திருக்குர்ஆனின் போதனைகளையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளையும் ஆழமாக அறிந்து கொள்ளாத இஸ்லாத்தின் அடிப்படையை ஓரளவு அறிந்து வைத்துள்ள சராசரி முஸ்லிம் கூட இந்த வரிகளின் பொருள் அறிந்தால் ஏற்க மாட்டான். இந்த வரிகளின் பொருள் தெரியாத காரணத்தினாலேயே இதைப் புனிதமானது என்று இந்த சராசரி முஸ்லிம் எண்ணுகிறான். விளக்கமோ, விமர்சனமோ இன்றி இவ்வரிகளின் தமிழாக்கத்தை மட்டும் அவன் அறிந்து கொண்டால் இந்த யாகுத்பாவை’த் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் […]

09) தலைகளில் பாதம்

அந்தப் பெரியாரை மேலும் இழிவுபடுத்தும் விதமாக இந்தக் கவிஞன் பாடியுள்ள மற்றொரு அடியைக் கேளுங்கள் தலைகளில் பாதம் قـد قـلت بالإذن مـن مولاك مؤتمرا قـدمي عـلى رقـبات الأولياء طـرا فـكلهـم قـد رضوا وضعا لها بشرى يـا من سـما اسما عليهم محيي الديـن எனது பாதங்கள் எல்லா அவுலியாக்களின் பிடரி மீதும் உள்ளன’ என்று தங்களின் எஜமானனாகிய அல்லாஹ்விடம் அனுமதி பெற்று தாங்கள் கூறினீர்கள். அவ்வாறு தங்கள் பாதத்தை […]

08) மத்ஹபு மாற்றம்

மத்ஹபு மாற்றம் الشـافـعي فـصرت الـحنبلي بـلا هـجر لـتحتاط بـالخـيرين مـعتدلا இதுவும் யாகுத்பா’ கவிதையின் ஒரு அடியாகும்… நீங்கள் ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்தவராக இருந்தீர்கள். இரண்டு நல்ல வழிகளையும் பேணுவதற்காக ஷாபி மத்ஹபில் எவ்வித வெறுப்புமின்றியே ஹம்பலியாக மத்ஹபு மாறினீர்.! அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள ஏனைய பொய்களைப் போன்றே இதுவும் ஒரு பொய் என்பதைச் சிந்தனையாளர்கள் உணரலாம். பணியாற்றும் இடத்திற்கேற்ப ஷாஃபி மவ்லவி ஹனபியாகவும், ஹனபி மவ்லவி ஷாஃபியாகவும் மாறுவதை […]

07) நேரடி தரிசனம்

நேரடி தரிசனம் شـرفت جـيلان بالـميلاد ساكنـه عـظمت بـالقبر بـغدادا أمـاكنـه يـزوره كـل مـشتاق ولـكنــه في بـيـتـه قـد يـلاقي محيي الدين நீங்கள் ஜீலான் எனும் ஊரில் பிறந்ததன் மூலம் அவ்வூருக்குச் சிறப்பளித்தீர்கள். பாக்தாத் நகரில் உங்கள் கப்ரை அமைத்துக் கொண்டதன் மூலம் அவ்வூரை மகத்துவப்படுத்தி விட்டீர்கள். அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களை ஆசிக்கும் அனைவரும் ஸியாரத் செய்கின்றனர். எனினும் சில சமயங்களில் அவர்களை ஆசிப்பவர்கள் தமது வீட்டிலேயே முஹ்யித்தீனை […]

06) இருட்டு திக்ர்

இருட்டு திக்ர் ومـن يـنادي اسمـي ألـفا بخلـوته عـزمـا بـهمتـه صـرما لـغفوته أجـبته مـسرعا مـن أجـل دعوتـه فالـيدع يا عـبد الـقادر محيي الدين எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன்’ எனவே ஓ! அப்துல் காதிர் முஹ்யித்தீனே!’ என்ற அவர் (என்னை) […]

05) ஜீலானிக்கு வஹீயா? – ஜீலானியின் போதனைகள்

அப்துல் காதிர் ஜீலானிக்கு வந்த வஹீ وقـد أتـاك خـطاب الله مـستمعـا يا غـوث الأعـظم كن بالقرب مجتمعا أنـت الـخليفة لي فى الـكون ملتمعا سـميت باسـم عـظيم محيى الـدين ‘காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான இரட்சகரே! (என்னை) நெருங்கி (என்னுடன்) ஒன்றி விடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீஃபாவாக இருக்கிறீர்’ என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது; அதை நீங்கள் செவியுற்றீர்கள். முஹ்யித்தீன் […]

04) அனைத்து ஆற்றலும் கொண்டவர்

அனைத்து ஆற்றலும் கொண்டவர் أعطاك من قدرة ما شئت من مستطاع فأنـت مـقتدر في خـلقه ومـطاع அப்துல் காதிர் ஜீலானி அவர்களே! நீங்கள் விரும்பிய அத்தனை ஆற்றலையும் அல்லாஹ் தங்களுக்கு வழங்கி விட்டான். எனவே தாங்கள் அவனது படைப்புகளில் எதனையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவராயும் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு உரியவராயுமிருக்கிறீர்கள்’ என்பது இதன் பொருள்: ஒருவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்த போதும் அவர் விரும்பிய ஆற்றல் அத்தனையும் இறைவன் அவருக்கு வழங்கியதில்லை. மனித […]

03) அப்துல் காதிர் ஜீலானி

யாகுத்பா இந்தக் கவிதையின் பாட்டுடைத் தலைவராக எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பவர்கள் ஈரான் நாட்டின் ஜீலான் என்ற குக்கிராமம் ஒன்றில் பிறந்து ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் அடக்கமாகியிருக்கும் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) என்ற பெரியாராவார். இவர்களைப் பற்றிச் சொல்லப்படும் கதைகளையும், புளுகு மூட்டைகளையும் படிக்கும் போது இவர்களது அபிமானிகள் என்று சொல்லிக் கொண்ட சிலரால் இந்து மதத்தின் அவதார புருஷர்களுக்கு நிகராக இவர்கள் மதிக்கப்பட்டிருப்பதையும், இன்று வரை அவ்வாறே போற்றப்படுவதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் […]

02) மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் திருக்குர்ஆனை இழிவு படுத்துதல் திருக்குர்ஆன், நபிவழி மூலம் மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட நல்லறங்களில் ஒன்று என்று நிரூபிக்கப்பட முடியாத இந்த மவ்லிதுகள் இன்று முஸ்லிம்களில் பெருவாரியானவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறிவிட்டிருக்கிறது. எந்த சுகதுக்கங்களிலும் மவ்லிதுகள் ஓதப்படவில்லையென்றால் அந்தக் காரியமே முழுமை பெறுவதில்லை என்று நம்பப்படுகிறது. எவற்றிற்கு இதை ஓதுவது? எவற்றிற்கு இதை ஓதக் கூடாது என்ற விவஸ்தை இல்லாது, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து கொண்டு மவ்லிதுகள் கொட்டமடிக்கின்றன. […]

01) முன்னுரை

யாகுத்பா ஓர் ஆய்வு நூலின் ஆசிரியர்: பி.எஸ்.அலாவுத்தீன் அறிமுகம் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் யாகுத்பா என்பது புனிதமிக்க படலமாக அறிமுகமாகியுள்ளது. அப்துல் காதிர் ஜீலானி அவர்களைப் புகழ்ந்து பாடப்படுவதாகக் கூறப்படும் இப்பாடலை விஷேச நாட்களிலும், ரபீவுல் ஆகிர் மாதத்திலும் பக்திப் பரவசத்துடன் பாடி வருகின்றனர். மவ்லுதுப் பாடல்களிலேயே மிகவும் அதிக அளவில் நச்சுக் கருத்தை உள்ளடக்கியுள்ள பாடல் யாகுத்பா எனும் பாடலாகும். இப்பாடலில் வலியுறுத்தப்படும் கருத்தின் அடிப்படையிலேயே காயல்பட்டிணம் போன்ற ஊர்களில் அப்துல் காதிர் ஜீலானியை இருட்டில் […]