Tamil Bayan Points

11) இரு பெருநாள் தொழுகையின் சட்ட சுருக்கம்

நூல்கள்: சட்டங்களின் சுருக்கம்

Last Updated on December 21, 2023 by

  • சூரியன் உதித்த பின்னர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அதிக கால தாமதம் செய்யக் கூடாது. புகாரி-951
  • இரு பெருநாள் தொழுகையையும் திடலில்தான் தொழவேண்டும். புகாரி-956
  • அந்த நாளில் பரக்கத்தையும் புனிதத்தையும் எதிர்ப்பார்த்து இறைவனை பெருமை படுத்தும் விதமாக அல்லாஹீ அக்பர் என்ற தக்பீரை அதிகமாக மனத்திற்குள் கூறவேண்டும், பிரார்த்தனையை அதிகமாக செய்ய வேண்டும். புகாரி-971
  • பெண்களும் தொழும் திடலுக்கு கட்டாயம் வரவேண்டும். புகாரி-971
  • மாதவிடாய் பெண்களும் திடலுக்கு கட்டாயம் வரவேண்டும். தொழுகையில் பங்கேற்காமல் இறைவனின் பரக்கத்தை எதிர்பார்த்து தக்பீர் கூறுதல், பிரார்த்தனை செய்தல் போன்ற மற்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். புகாரி-971,351 
  • பெருநாளுக்கு செல்லும் போது ஒரு வழியிலும் திரும்பும் போது மற்றொரு வழியிலும் செல்ல வேண்டும். புகாரி-986 
  • தொழுகைக்கு முன் சாப்பிடுதல் (நோன்பு பெருநாள்) புகாரி-953
  • தொழுகைக்கு பிறகு தான் சாப்பிட வேண்டும்.(ஹஜ் பெருநாள்) இப்னுகுஸைமா-1426
  • இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. புகாரீ-1431
  • இரு பெருநாள் தொழுகைக்கும் மற்றத் தொழுகைகளைப் போல் பாங்கும் இகாமத்தும் கிடையாது. அபூதாவூத்-969
  • இரண்டு ரக்அத் தொழவேண்டும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் பெருநாள் தொழுகையில் சொல்ல வேண்டும். அஹ்மத் -6401
  • ஓத வேண்டிய சூராக்கள். முதல் ரக்அத்தில் அஃலா (87வது) அத்தியாயம் இரண்டாவது ரக்அத்தில் காஷியா (88வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள். புகாரி-1592
  • சில சமயங்களில் காஃப் வல்குர்ஆனில் மஜீத் (என்ற 50 வது அத்தியாயத்தையும்) இக்தரபத்திஸ் ஸாஅத்தி வன் ஷக்கல் கமர் (என்ற 54வது அத்தியாயத்தையும்) ஓதியுள்ளர்கள். முஸ்லிம்-1618
  • இரு பெருநாள் தொழுகையிலும் திடலில் தொழும்போது இமாமிற்கு முன்னால் எதையாவது தடுப்பாக வைத்துக் கொள்ளவேண்டும். புகாரி-973 
  • வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் எப்படி இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்துவாரோ அதைப் போன்று இரு பெருநாள்களிலும் மிம்பரில் உரை நிகழ்த்த கூடாது. தரையில் நின்றுதான் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும். புகாரீ-956
  •  “அல்லாஹு அக்பர்” என்று கூறுவதுதான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்த தக்பீரையும கற்றுத்தரவில்லை.