130. கல் எறிந்த பிறகு, அவசியம் எனில் வேறு இடங்களுக்கு செல்லலாமா?
கேள்வி-பதில்: ஹஜ் உம்ராLast Updated on July 7, 2017 by Trichy Farook
கல் எறிந்த பிறகு வேறு இடங்களுக்கு செல்லத் தக்க காரணம் இல்லாமல், சொந்தத் தேவைகளுக்காக மக்காவிலுள்ள ரூமுக்கோ, ஹோட்டலுக்கோ பகலில் செல்ல அனுமதி உண்டா? கல்லெறிந்து முடியும்வரை முழு நாட்களும் மினாவில்தான் தங்கி இருக்கவேண்டுமா?
பதில்
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
நூல்: புகாரி 1634
இந்த ஹதீஸ் அடிப்படையில் தக்க காரணம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் மினாவில் தான் தங்க வேண்டும்.