Tamil Bayan Points

துப்பட்டாவைப் போட்டுக் கொள்ளட்டும்

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனத்திற்கு பின் நடந்தவை

Last Updated on April 29, 2022 by Trichy Farook

ஸஃபிய்யா பின்த் ஷைபா(ரஹ்) கூறினார்:

”(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்” எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனம் அருளப்பட்டபோது பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பாட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.

( புகாரி-4759 )