Tamil Bayan Points

நபிக்கு வரவேற்பு பாடல் மவ்லிதுக்கு ஆதாரமா?

கேள்வி-பதில்: பித்அத்

Last Updated on December 7, 2022 by Trichy Farook

நபிக்கு வரவேற்பு பாடல், மவ்லிதுக்கு ஆதாரமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்ற போது வரவேற்பு பாடல், மவ்லிதுக்கு ஆதாரமா?

பதில்

மவ்லிதுப் பாடல் ஏன் கூடாது நாம் சொல்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதருக்கு நாம் வரவேற்பு கொடுக்கிறோம் என்றால் வசன நடையிலும் கொடுக்கலாம்; கவிதை நடையிலும் கொடுக்கலாம். இந்த அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வருவதில் மகிழ்ச்சி அடைந்த மதீனா மக்கள் அவர்களை வரவேற்று பாடினார்கள்.

இப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம் காலத்தில் வாழ்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நமது ஊருக்கு அவர்கள் வந்தால் அவர்களை வரவேற்று நாம் பாடலாம்.

மறுமையில் நன்மை கிடைக்கும் என்பதற்காக என்றோ யாரோ கொடுத்த வரவேற்பு பாடலை படித்தால் அது வணக்கம் என்ற நிலையில் வைக்கப்படுகிறது. ஒரு மனிதன் எழுதிய பாடலை திருக்குர்ஆன் போல் நன்மையை நாடி வணக்கமாகச் செய்வதாக இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்திருப்பார்கள்.

நீங்கள் சொன்ன அந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம். அப்பாடலை வருடம் தோறும் ஒவ்வொருவரும் வீட்டில் பள்ளிவாசலில் வைத்து படியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் இப்படி படிக்கவும் இல்லை. அது வரலாற்று சம்பவம் தானே தவிர வணக்கம் அல்ல.

நாம் வணக்கமாக கருதிப் பாடும் பாடல் மார்க்க அறிவற்ற சிலரால் எழுதப்பட்டது. அதில் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் கருத்துக்கள் உள்ளன. அப்படி இல்லாவிட்டாலும் அனைத்தும் நல்ல கருத்து என்றாலும் அதை ஒரு நூலாக கருதி படிக்கலாமே தவிர அதற்கான சட்ங்குகளை ஏற்படுத்தி பயபக்தியுடன் ஓதுவது சரியா?

ஒரு மனிதனின் வார்த்தைகளை வணக்கமாகக் கருதி ஓதினால் அது பித்அத் ஆகும்.

அனைத்து வணக்க முறைகளையும் நமக்குக் கற்றுத் தருவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அவர்களும் தமது பணியில் எந்தக் குறைவும் வைக்காமல் முழுமையாக நமக்குச் சொல்லித் தந்தார்கள். அவர்கள் உயிருடன் வாழும் போதே இம்மார்க்கத்தை இறைவன் முழுமைப்படுத்தி விட்டான்.

اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்.

(திருக்குர்ஆன்:5:3.)

صحيح مسلم
4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ

أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ »

‘நமது கட்டளையில்லாமல் எந்தச் செயலையேனும் யாரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்-3541 

صحيح مسلم
حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَعَبْدُ اللهِ بْنُ عَوْنٍ الْهِلَالِيُّ، جَمِيعًا عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ ابْنُ الصَّبَّاحِ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ»

எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு வணக்கத்தைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்-3540 

صحيح البخاري
2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ

‘இந்த மார்க்கத்தில் இல்லாததை யாரேனும் உண்டாக்கினால் அது ரத்துச் செய்யப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி-2697

سنن النسائي
1578 – أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ،

قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»، ثُمَّ يَقُولُ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ»، وَكَانَ إِذَا ذَكَرَ السَّاعَةَ احْمَرَّتْ وَجْنَتَاهُ، وَعَلَا صَوْتُهُ، وَاشْتَدَّ غَضَبُهُ كَأَنَّهُ نَذِيرُ جَيْشٍ يَقُولُ: صَبَّحَكُمْ مَسَّاكُمْ، ثُمَّ قَالَ: «مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَيَّ أَوْ عَلَيَّ، وَأَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ»

‘(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் (பித்அத்எனும்) அனாச்சாரமாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்தில் சேர்க்கும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: நஸாயீ-1578