Tamil Bayan Points

மாதவிடாய் ஏற்பட்டால் இஃதிகாபைத் தொடரலாமா?

கேள்வி-பதில்: பெண்கள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

மாதவிடாய் ஏற்பட்டால் இஃதிகாபைத் தொடரலாமா?

பெண்கள் இஃதிகாப் இருக்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது. கன்னிப் பெண்களுக்கும் இதே சட்டம் தான். மாதவிடாய் ஏற்பட்டால் இஃதிகாபைத் தொடர முடியாது. ஏனெனில் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் பள்ளிவாசலுக்குச் செல்வதற்குத் தடை உள்ளது. இதைக் கீழ்க்காணும் வசனத்திலிருந்து அறியலாம்.

குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர.