Tamil Bayan Points

Category: பிற கொள்கைகள்

b108

ஸலபுகளை குறைகூறுவோரிடம் கல்வி கற்கக் கூடாதா?

ஸலபுகளை குறைகூறுவோரிடம் கல்வி கற்கக் கூடாதா? ஸலபுகளை யார் திட்டுகிறானோ அவனிடமிருந்து கல்வியைக் கற்காதீர்கள் என்று முஸ்லிம் இமாம் கூறியதாக ஒரு செய்தியைப் பரப்புகிறார்கள். இதன் உண்மைத் தன்மை என்ன? ஸலபுகள் எனும் வழிகேடர்கள் இது போன்ற செய்திகளைப் பரப்பி மக்களைத் தக்க வைக்க முயல்கிறார்கள். குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாகவும்,  குர்ஆன் ஹதீஸில் இல்லாதவைகளையும் மார்க்கம் என்றும் சலபுகள் பத்வா கொடுத்து வந்தார்கள். அவர்கள் சொல்வதை அப்பாவிகள் நம்பி வந்தனர். அவர்களின் பத்வாக்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரமில்லை […]

கேரளாவில் இருக்கும் முஜாஹிதீன்கள் யார்?

கேரளாவில் உள்ள முஜாஹித் என்ற ஜமாஅத்தைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? கேரளாவில் முஜாஹிதீன்கள் என்ற பெயரில் ஒரு ஜமாஅத்தினர் இயங்கி வருகிறார்கள். இவர்கள் தர்ஹா, மவ்லூத் போன்ற இணை வைப்புக்காரியங்களையும் கத்தம் பாத்திஹா போன்ற சில பித்அத்களையும் நம்மைப் போன்று எதிர்க்கின்றனர். இதனால் இவர்கள் கொள்கை விஷயங்கள் அனைத்திலும் நம்மைப் போன்றவர்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இவர்கள் ஷிர்க் பித்அத் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட சில அனாச்சாரங்களை எதிர்த்தாலும் அதே அடிப்படையிலான வேறு பல […]

தப்லீக் ஜமாஅத் ஒரு பார்வை

தப்லீக் ஜமாஅத் ஒரு பார்வை தப்லீக் ஜமாஅத்தினர் சில நன்மையான காரியங்களை சிறப்பான முறையில் செய்து வருவதை யாரும் மறுக்க இயலாது. மக்களை தொழுகைக்கு அழைப்பது, அதிகமான வணக்கங்கள் புரிவது, பாவம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது, சில மார்க்க விஷயங்களில் பிடிப்பாகவும் பேணுதலாகவும் இருப்பது இது போன்ற நல்ல விஷயங்களை இவர்களிடம் காண முடிகிறது. இவ்விஷயத்தில் இவர்களை நாம் பாராட்டவே செய்கிறோம். இவர்கள் புரியும் இந்த நன்மையான காரியங்களை […]

ஸலபிகளிடம் சில கேள்விகள்

வழிகெட்ட ஸலபிக் கொள்கை குழப்பவாதிகளிடம் சில கேள்விகள் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்கள் பாடுபட்டு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய இஸ்லாத்தை மக்களுக்கு வாழ்க்கை நெறியாக விட்டுச் சென்றுள்ளார்கள். இறைவனுடைய இந்த மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் அருமைத் தோழர்களும் பெரும்பெரும் தியாகங்களைச் செய்தார்கள். குர்ஆனும் நபிமொழிகளும் மட்டுமே மார்க்கம். இந்த இரண்டும் அல்லாத வேறெதுவும் மார்க்கமில்லை என்று குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன. எனவே மனிதர்களின் சுய […]

கல்விக் கடலா கஸ்ஸாலி?

கல்விக் கடலா கஸ்ஸாலி? “வானத்தின் ரட்சகா! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்தப் புதியவனின் உள்ளத்தை ஒளிரச் செய்!” காலை மாலையில் நடைபெறும் மக்தபுகள் முதல், பட்டமளிப்பு விழா நடக்கும் பெரிய மதரஸாக்களின் மாணவர்கள் வரை ஒரு பிரார்த்தனையாகப் பாடுகின்ற பாடல் வரிகள் தான் இவை. அறிவுக் கடல், கல்விக் கடல் என்று இந்த ஆலிம்களால் மெச்சப்படுகின்றவர் கஸ்ஸாலி!  இவர் கல்விக் கடலா? என்பதைக் கீழ்க்காணும் அவரது நூற்களில் இடம் பெறும் பதிவுகளைப் […]

பரேலவிசத்தின் பயங்கரவாதம்

பரேலவிசத்தின் பயங்கரவாதம் இறைத்தூதர் இறக்கவில்லையாம் அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் ஒரு பரேலவியாவார். மக்கள் பரேலவிசத்திலிருந்து படிப்படியாக விலகி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சரியான பாதைக்கு, சத்திய வழிக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை சமாதி வழிபாட்டிலும் அசத்திய வழிகேட்டிலும் கொண்டு போய் தள்ளி விடுவதற்கு சகலவிதமான தகிடுதத்தங்களை, தப்பர்த்தங்களைச் செய்து கொண்டிருப்பவர் தான் இந்த அப்துல்லாஹ் ஜமாலி. அவர் பரேலவிச பரிவாரத்தின் பல கடவுள் கொள்கை கொண்ட ஒரு பத்திரிகையில், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை; உயிருடன் […]

பெரும்பான்மையை பின்பற்றும் ஜாக்

பெரும்பான்மையை பின்பற்றும் ஜாக் உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் வந்தாலும் அதை ஏற்க வேண்டும் என்று கூறும் இவர்கள் இக்கருத்தினை நிலைநாட்ட தகுந்த ஆதாரங்களை முன் வைக்கவில்லை. ஆதாரம் என்ற பெயரில் அவர்கள் முன்வைத்தவற்றைப் பார்வையிடும் யாரும் ஜாக் அமைப்பு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் அமைப்பு அல்ல. மாறாக மனோ இச்சைகளைப் பின்பற்றும் அமைப்பு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்வர். ஆதாரம்: 1 உலகத்தில் எந்தப் பகுதியில் பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்பது உலக […]

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்-2

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம் மார்க்கச் சட்டங்களை எடுத்துக் கூறும் பல குர்ஆன் வசனங்களை சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் மறுக்கின்றார்கள், மக்களிடம் அவற்றை எடுத்துச் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்பதை கடந்த தொகுப்பில் பார்த்தோம்.  இஸ்லாமியக் கொள்கை  மற்றும் இறைவனின் பண்பு குறித்து இன்னும் பல குர்ஆன் வசனங்களை நேரடியாக இந்த ஆலிம்கள் கூட்டம் மறுக்கின்றது. அத்தகைய குர்ஆன் வசனங்கள் என்ன கொள்கையை, நிலைப்பாட்டை போதிக்கின்றதோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுகளை எடுத்து அதனையே மக்களிடையே பிரச்சாரம் செய்கிறது […]

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்-1

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்- அருள்மிகு ரமலான் மாதம் , அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்பதன் மூலம் மக்கள் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர்.  இது உலகம் முழுவதும் இறைவன் செய்திருக்கின்ற சிறந்த ஏற்பாடாகும். இன்னும் சொல்லப்போனால் ஒரு மாத காலம் அல்லாஹ் நடத்துகின்ற அகில உலக திருக்குர்ஆன் மாநாடாகும். அப்படிப்பட்ட திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் மார்க்கத்தின் காவலர்கள், மாநபியின் வாரிசுகள், அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் என்று பறை சாற்றுகின்ற, ஆலிம்கள் என்று மார்தட்டுகின்ற இந்த […]

ஹதீஸ்களை மறுப்பது மத்ஹபுவாதிகளே!

ஹதீஸ்களை மறுப்பது மத்ஹபுவாதிகளே! குர்ஆன், ஹதீஸ் தான் இஸ்லாத்தின் அடிப்படை! இரண்டில் எந்த ஒன்றை ஏற்று, மற்றொன்றை மறுத்தாலும் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறிவிடுவான். இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன்:59:7.) நபிகள் நாயகம் ஒன்றைச் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதே ஒரு முஸ்லிமின் கடமை. நபிகள் நாயகம் சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது […]

காதியானிகள் வரலாறு-5

யூசுஃப் நபிக்குப் பிறகு இறைத்தூதர்கள் இல்லையா? காதியானிகளின் வாதம் முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்’’ எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித்தான் வழிகெடுக்கிறான். (அல்குர்ஆன்:40:34.) இவ்வசனத்தில் யூஸுஃப் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்’’ எனக் கூறினீர்கள். […]

காதியானிகள் வரலாறு- 4

மிர்ஸா குலாம் நபியா? திருக்குர்ஆனில் இறைத்தூதர்களைக் குறிக்க இரண்டு விதமான சொற்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று நபி, இரண்டு ரசூல். இந்த இரண்டு சொற்களுக்கும் இருவேறு கருத்துக்களைக் கொடுத்து, தான் நபி என்று மிர்சா குலாம் வாதிடுகின்றான். இது எந்த வகையில் தவறானது என்று கடந்த இதழில் தெளிவுபடுத்தி இருந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் நபிமார்கள் வரலாம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் முக்கியமான வாதம் இதுதான், “உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் […]

காதியானிகள் யார் – 3

மிர்சா குலாம் நபியா? மிர்சா குலாமின் முக்கியமான வாதம், தன்னை இறைத்தூதர் என்று வாதிட்டது! தான் இறைத்தூதர் என்பதற்குச் சில முறையற்ற வாதங்களை அவன் எடுத்து வைக்கின்றான். அவற்றின் உண்மை நிலை என்ன? என்பதை இந்தத் தொடரில் நாம் அறிந்து கொள்வோம். திருக்குர்ஆனில் இறைத்தூதர்களைக் குறிக்க இரண்டுவிதமான சொற் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று நபி, இரண்டு ரசூல். இந்த இரண்டு சொற்களுக்கும் இருவேறு கருத்துக்களைக் கொடுத்து, தான் நபி என்று மிர்சா குலாம் வாதிடுகின்றான். நபி என்பதற்கு […]

காதியானிகள் யார்?-2

காதியானிகள் யார்? முஹம்மது நபி (ஸல்) அவர்களே இறைத்தூதர்களில் இறுதியானவர் என்பது பற்றித் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறும் செய்திகளைக் கடந்த தொடரில் பார்த்தோம்.  இனி போலி இறைத்தூதர்கள் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ள முன்னறிவிப்புக்கள் சிலவற்றைப் பார்ப்போம். பொய்யான இறைத் தூதர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னுடைய உம்மத்திலிருந்து சில கோத்திரங்கள் இணை வைப்பாளர்களோடு இணைந்து சிலைகளை வணங்கும் வரை கியாமத் நாள் ஏற்படாது. என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் […]

காதியானிகள் யார்?1

காதியானிகள் யார்? நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு ஏராளமான பொய்யர்கள் உருவானார்கள். அவர்கள் இஸ்லாத்தையும் அதன் கொள்கைகளையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் வந்தவர்கள் தான் காதியானிகள். நபிகளாருக்குப் பிறகு நானும் நபியே என்று வாதிட்ட பொய்யன் மிர்சா குலாம் அஹ்மத் என்பவனை நபியாக ஏற்றவர்கள் காதியானிகள். காதியானி என்பது பஞ்சாபில் உள்ள ஒரு ஊரின் பெயராகும். மிர்சா என்ற இவன் இந்த ஊரைச் சார்ந்தவன் என்பதால் இவனுடைய கொள்கை காதியானி (காதியான் என்ற […]

கப்ருகளின் மேல் கட்டப்பட்டுள்ளதா கஃபா ஆலயம்? 

கப்ருகளின் மேல் கட்டப்பட்டுள்ளதா கஃபா ஆலயம்?  கப்ரு வணங்கிகளின் கயமைத்தனம் தர்கா வழிபாட்டை ஆதரிக்கும் வழிகெட்ட கூட்டத்தினருக்குக் குர்ஆன் என்றாலே ஆகாது. ஹதீஸ் என்றால் என்னவென்றே தெரியாது. இவர்களின் சன்மார்க்க (?) பிரச்சார ஏடுகளில் குர்ஆனையோ, ஹதீஸ் களையோ அதிகம் குறிப்பிட மாட்டார்கள். தங்களது மனோ இச்சையை நியாயப்படுத்தும் படி யாரேனும் சில கருத்துக்களைக் கூறியிருந்தால் அதைத் தேடி எடுத்து பக்கங்களை நிரப்பி விடுவார்கள். இக்குறைமதியாளர்கள் எதை ஹதீஸ் என்று கருதுகிறார்களோ அதை நபியின் பெயரால் எடுத்தெழுதி […]

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

இறந்தவர்கள் செவியேற்பார்களா? மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது; அவர்கள் எதையும் அறிய மாட்டார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கின்றோம். முஸ்லிம்களின் நம்பிக்கைப் பிரகாரம் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை. இறைவனால் வானத்தின் பால் உயர்த்தப்பட்டார்கள் என்று அறிந்து வைத்திருக்கின்றோம். கடைசிக் காலத்தில் இந்தப் பூமிக்குத் திரும்பவும் வந்து சில காலம் வாழ்ந்து தான் மரணிப்பார்கள். அப்படிப்பட்ட, தற்போது வரை உயிரோடு இருக்கின்ற ஈஸா நபியவர்கள், தற்போது நாம் செய்யக்கூடியதை அறிகிறார் என்று […]

மகான்களின் பொருட்டால் வஸீலா தேடுவது இணைவைப்பே!

மகான்களின் பொருட்டால் வஸீலா தேடுவது இணைவைப்பே! வஸீலா என்றால் என்ன? எதன் மூலம் மற்றொன்றின் பக்கம் நெருக்கமாக்கிக் கொள்ளப்படுமோ அதற்கு அரபியில் வஸீலா என்று கூறப்படும். அதாவது தமிழில் “துணைச் சாதனம்” என்று கூறலாம். கடலில் பயணம் செய்வதற்கு கப்பல் வஸீலாவாக அதாவது துணைச் சாதனமாக உள்ளது என்று கூறுவர். நல்லமல்களே இறைநெருக்கம் தரும் வஸீலா நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! […]

மக்கா காஃபிர்களும் தமிழக முஸ்லிம்களும் – ஒரு கொள்கை ஒப்பீடு

மக்கா காஃபிர்களும் தமிழக முஸ்லிம்களும் – ஒரு கொள்கை ஒப்பீடு லா இலாஹ இல்லல்லாஹ் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை இதுதான் இஸ்லாத்தின் கொள்கை முழக்க மந்திரமாகும். இதை சமரசமின்றி ஏற்றுக் கொள்பவர்களும், அதன்படி செயலாற்றுபவர்களுமே முஸ்லிம்கள் எனப்படுவர். குர்ஆன் எந்த மக்களை காஃபிர்கள் என்று அழைக்கின்றதோ அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள முக்கியக் கொள்கை வேறுபாடே இதை ஏற்றுக் கொள்வதில் தான் உள்ளது. “அல்லாஹ்வும் ஒரு இறைவன்’ எனும் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் முஸ்லிம்களாகி விட முடியாது. […]

அல்லாஹ்வின் பண்புகளை  நாம் மறுக்கிறோமா?

அல்லாஹ்வின் பண்புகளை  நாம் மறுக்கிறோமா? அனைத்தையும் படைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அல்லாஹ்வின் குறிப்பிட்ட சில பண்புகளை நாம் மறுப்பதாக சமூக வலைத்தளங்களில் கள்ள ஸலஃபிக் கூட்டத்தினரால்  நமது கொள்கை பற்றி தவறான விமர்சனம் செய்யப்படுகிறது. அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறானா? அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இரவின் மூன்றில் இறுதி  ஒரு பங்கு இருக்கும் போது  பாக்கியம் பெற்ற உயர்ந்துவிட்ட  நமது இறைவன் உலக வானத்திற்கு வந்து என்னை அழைப்பவர் யார்? அவருக்கு நான் பதிலளிப்பேன். என்னிடத்தில் […]

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் ‘‘உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’’ (திருக்குர்ஆன்:49:7.) ‘உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்’ என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்ற வாக்கியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்று வரை உயிருடன் உள்ளனர் என்பதற்கு ஆதாரமாகும் என்று சமாதி வழிபாட்டுக்காரர்கள் வாதிடுகின்றனர். இவ்வசனம் அருளப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மக்களுடன் இருந்தனர் என்பதைத் தான் இவ்வசனம் சொல்கிறது. மரணிக்காமல் இப்போதும் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தை இவ்வசனம் […]

இதுதான் மத்ஹப் சட்டங்கள்!

இதுதான் மத்ஹப் சட்டங்கள்! இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள் மத்ஹபு ஆதரவாளர்கள், மக்களிடம் மத்ஹபு வெறியை ஊட்டி சிந்தனையை மழுங்கச் செய்ய ஒரு வழிமுறையைக் கையாள்கின்றனர். அதாவது மத்ஹபு இமாம்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்துக்குச் சமமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்தை விட மேலானவர்கள் என்றும் கட்டுக்கதைகளைப் புகுத்துவார்கள். ஆலிம் படிப்பு படிக்கச் சென்றவருக்கு சிறு வயதில் இப்படி பக்தி ஊட்டப்பட்டு பின்னர் அது வெறியாக மாற்றப்பட்டு விடுகிறது. இதன் காரணமாகத்தான் […]

நபிவழிக்கு முரணான தப்லீக் ஜமாஅத்

நபிவழிக்கு முரணான தப்லீக் ஜமாஅத் தப்லீக் ஜமாத் என்ற பெயரில் உலகெங்கும் வியாபித்திருக்கின்ற இயக்கம் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை உண்மை முஸ்லிம்களாக வாழச்செய்யும் உயர் நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமாக சொல்லப்படுகிறது.  என்றாலும் பெயரளவில் மாத்திரம் முஸ்லிம்களாக இருந்து கொண்டு அல்லாஹ்வை மறந்து வாழ்ந்த மக்களையும், சமாதி வழிபாடுகளிலும் தனிநபர் வழிபாட்டிலும் மூழ்கிக்கிடந்த மக்களையும், இஸ்லாமியக்கடமைகள் இன்னதென்று அறியாமல் அவற்றை அலட்சியப்படுத்தி வாழ்ந்த மக்களையும் கண்டு பெரியார் இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கவலைப்பட்டு துவக்கிய இயக்கமே தப்லீக் […]

சீர் கெட்ட ஷியாக்களின் சிந்தனையும் நிலைபாடும்

ஃபாத்திமாவின் குர்ஆனில் பதினேழாயிரம் வசனங்கள் சீர் கெட்ட ஷியாக்களின் சிந்தனையும் நிலைபாடும் (உண்மையான தவ்ஹீது கொள்கையுடைய) சுன்னத் வல் ஜமாஅத்திற்கும், வழிகெட்ட ஷியாவிற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் முக்கியமானது குர்ஆன் தொடர்பான நம்பிக்கையாகும். இறைவனிடமிருந்து  இறக்கப்பட்ட வேதங்களில் இறுதியான வேதம் குர்ஆன் தான். நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அந்த வேதம் இது வரை எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை என்பது மட்டுமல்லாமல் இறுதி நாள் வரை அது எந்த மாற்றத்திற்கும் ஒரு போதும் […]

குர்ஆன் விஷயத்தில் அலீ (ரலி)யைக் கொல்ல உமர் (ரலி) முயற்சி?

குர்ஆன் விஷயத்தில் அலீ (ரலி)யைக் கொல்ல உமர் (ரலி) முயற்சி? ஷியாக்களின் புரட்டு வாதம் உலகில் ஷியாக்கள் அல்லாத முஸ்லிம்களில் உள்ள அனைத்து பிரிவினரும் குர்ஆன் எள்ளளவு  மாற்றத்திற்கும் இம்மியளவு  திருத்ததிற்கும் அறவே  உள்ளாகவில்லை என்று ஆணித்தரமான நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் ஷியாக்கள் மட்டும் இதற்கு நேர்மாற்றமான கருத்தில் இருக்கின்றனர். இதுவரை நாம் கண்ட அல்காஃபி என்ற நூலில் கலீனீ அறிவிக்கின்ற இரண்டு அறிவிப்புகளும் தற்போது இருப்பதைப் போன்ற குர்ஆனின் மூன்று மடங்கு வசனங்கள் காணாமல் போய்விட்டன […]

ஃபாத்திமாவின் குர்ஆனில் பதினேழாயிரம் வசனங்கள்

ஃபாத்திமாவின் குர்ஆனில் பதினேழாயிரம் வசனங்கள் சீர் கெட்ட ஷியாக்களின் சிந்தனையும் நிலைபாடும் (உண்மையான தவ்ஹீது கொள்கையுடைய) சுன்னத் வல் ஜமாஅத்திற்கும், வழிகெட்ட ஷியாவிற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் முக்கியமானது குர்ஆன் தொடர்பான நம்பிக்கையாகும். இறைவனிடமிருந்து  இறக்கப்பட்ட வேதங்களில் இறுதியான வேதம் குர்ஆன் தான். நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அந்த வேதம் இது வரை எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை என்பது மட்டுமல்லாமல் இறுதி நாள் வரை அது எந்த மாற்றத்திற்கும் ஒரு போதும் […]

அகில உலகமும் அலீக்கே சொந்தம்!

அகில உலகமும் அலீக்கே சொந்தம்! அலீ ஆதரவாளர்களின் அநியாய வாதம்! عن أبي عبد الله أنه قال: إن الدنيا والآخرة للإمام يضعها حيث يشاء ويدفعها إلى من يشأ” -”الكافي في الأصول” ص409 ج ط إيران இம்மையும் மறுமையும் இமாமுக்கே சொந்தம்.அவர் அதைத் தான் நாடியவாறு வைப்பார். தான் நாடியவரிடம் கொடுத்து விடுவார். இவ்வாறு ஷியாக்களின் இமாமான அபூஅப்தில்லாஹ் அறிவிக்கின்றார். நூல்: அல்காஃபி ஃபில் உஸூல் இங்கே இவர்கள் […]

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை -2

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை இப்னு தைமிய்யாவின் தவறான கருத்துக்கள் நவீன ஸலஃபிக் கொள்கையைப் பின்பற்றுபவர்களிடத்தில் பல்வேறு வழிகேடுகள் நிறைந்து காணப்படுகிறது. இது தொடர்பான பல்வேறு சான்றுகளை ( வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை) முதல் கட்டுரையில் நாம் கண்டோம். அதைத் தொடர்ந்து இன்னும் பல சான்றுகளை இந்த இரண்டாம் கட்டுரையில் நாம் பார்க்க இருக்கின்றோம். நவீன ஸலஃபுகள், இமாம் இப்னு தைமிய்யா அவர்களைத் தங்களுடைய கொள்கைக்கு முன்மாதிரியாகக் கருதுகின்றனர். தங்களுடைய உரைகளிலும், எழுத்துக்களிலும் இமாம் இப்னு […]

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை-1

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை இப்னு தைமிய்யாவின் தவறான கருத்துக்கள் நவீன ஸலபிக் கொள்கையினரின் முன்னோடிகளில் ஒருவர் இமாம் இப்னு தைமிய்யா ஆவார்கள். இப்னு தைமிய்யா அவர்கள் ஏராளமான ஷிர்க்கான காரியங்களையும், பித்அத்துக்களையும் ஒழிப்பதில் முன்னோடியாகவும், தியாகியாகவும் இருந்துள்ளார். மார்க்கத்திற்காக இப்னு தைமிய்யா செய்த தியாகங்களையும் ஆய்வுகளையும் மதித்துப் போற்றுகின்ற அதேவேளையில் அவருடைய அனைத்துக் கருத்துக்களுமே சரியானவை தான் என்று நம்பிக்கை கொள்ளும் வழிகேட்டிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இன்றைய நவீன ஸலபிக் கொள்கையினர், சூனியத்தினால் […]

ஷியாக்களின் அபத்தம்

ஷியாக்களின் அபத்தம் இறங்கிய குர்ஆன் வேறு, இருக்கின்ற குர்ஆன் வேறு அல்குர்ஆன் இறங்கியதிலிருந்து இன்றைய தினம் வரை அடித்தல், திருத்தலுக்கு இடமில்லாத வகையில் தனிப்பெரும் அற்புதமாக அது திகழ்ந்து வருகின்றது.    اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (அல்குர்ஆன்: 15:9) அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியின்படி திருக்குர்ஆன் இதுவரை பாதுக்காக்கப்பட்டு வருகின்றது. இனியும் யுகமுடிவு நாள் வரை பாதுகாக்கப்படும். ஆனால் ஷியாக்களோ திருக்குர்ஆன் திருத்தப்பட்டது என்ற […]

கப்ரு வணங்கிகளின் குருட்டு வாதங்கள்!

முன்னுரை! இறந்து விட்ட மனிதரின் மண்ணறைக்கு மேல் இஸ்லாத்தின் பார்வையில் கட்டடம் கட்டுவது கூடாது. அவர்கள் நபிமார்களாகவோ, உயிர்த் தியாகிகளாகவோ இருந்தாலும் சரியே. அவர்களின் கப்ருக்கு மேல் கட்டடம் கட்டுவது முற்றிலும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. இதைப் பின்வரும் நபிமொழிகளிலிருந்து அறியலாம். «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ» ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: கப்ருகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) […]

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் அறிவுரைகள்

முன்னுரை ஹிஜ்ரி 470 ஆம் ஆண்டு பிறந்த, அப்துல் காதிர் ஜீலானி என்ற அறிஞரின் பெயரால் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவர்களை இறைவன் அளவுக்கு உயர்த்தியும் அவர்களிடம் எதையும் கேட்கலாம் என்றும் அவர்கள் நம் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்றும் பல ஆதாரமற்ற கதைகளை முஸ்லிம்களுக்கு மத்தியில் உலாவரச் செய்துள்ளனர். ஆனால் அந்த அறிஞர் இவர்களின் இந்த செயலுக்கு முற்றிலும் மாற்றமாக, ஓரிறைக் கொள்கை போதித்தவராகவும் திருக்குர்ஆனையும் நபிவழியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று […]

இவர்கள் தான் காதியானி மதத்தினர்!

முன்னுரை தன்னை ஒரு நபி என வாதிட்ட மிர்சா குலாமையும், காதியானி மதத்தினரைப் பற்றியும் இந்த உரையிலே தோலுரிக்க இருக்கிறோம்.  مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏ முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 33:40) وَإِنَّهُ سَيَكُونُ فِي […]

கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் (தர்ஹா கூட்டம்)

முன்னுரை وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏ ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன்: 51:56) அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனிதர்களாகிய நம்மைப் படைத்திருக்கிறான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம். உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு மத்தியில் ஷைத்தானிய அடிச்சுவடுகளைச் சிறிதும் பிசகாமல் பின்பற்றுகின்ற பரேலவி மதத்தினரால் சமாதி வழிபாடு, தாயத்து, தகடுகள் போன்ற எண்ணற்ற இணை கற்பிக்கின்ற […]