Tamil Bayan Points

Category: குடும்பவியல்

b108

மார்க்கத்தை மறந்த மங்கையர்

மார்க்கத்தை மறந்த மங்கையர் அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் படைத்து அவர்களுக்குக் கடமைகளையும் உரிமைகளையும் வழங்கியிருக்கின்றான். அவர்களுக்கு உணர்வுகளையும் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளையும் பிரித்து அறிவித்து இருக்கின்றான். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வாழ்க்கை வழிமுறைகளை இலகுவாகவும் எளிமையாகவும் கண்ணியமாக வாழும் வகையில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள். ஆனால் நாம் மார்க்க விஷயத்தில் பெரும்பாலும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறோம். முஸ்லிம்கள் பெண்கள் ஆடைகள் விஷயத்தில் மார்க்கம் சொன்ன கட்டுப்பாட்டை மறந்து அலட்சியம் காட்டுகின்றனர். ஹிஜாப் விஷயத்தில் […]

நெருங்காதீர்!

நெருங்காதீர்! இன்று நம் குடும்பங்களிலுள்ள நிலையை ஆராய்ந்தால், எல்லோருமே விபச்சாரம் எனும் அசிங்கத்தில் சர்வ சாதரணமாக ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே சினிமாக்களை (சின்னத்திரை, பெரியதிரை) பார்க்கிறோம். இப்படிப் பார்ப்பது விபச்சாரம் செய்த குற்றத்தில் வராவிட்டாலும், விபச்சாரத்தைச் செய்வதற்கு நெருங்கிய குற்றத்தில் வரும். சினிமாப் படங்களில், சின்னத் திரைகளில் யாரோ எவரோ கட்டிப் பிடித்து ஆடுகிற அந்தரங்கத்தைக் காட்சியாக்குகிறார்கள். பாடல்களும் அருவருக்கத்தக்க வகையில் தான் இருக்கின்றன. இதைப் பார்த்து ரசித்தால் விபச்சாரம் செய்வதற்குரிய ஒரு […]

ஒழுக்க வாழ்வும் உயர்ந்த கூலியும்

ஒழுக்க வாழ்வும் உயர்ந்த கூலியும் கணவன், மனைவி என்ற உறவின் மூலமே தவிர ஒரு ஆணோ, பெண்ணோ தன் உடல் சுகத்தை அனுபவிக்கவே கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இப்படி யாரெல்லாம் குடும்பத்திற்கு விசுவாசமாக, ஒழுக்கமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பல அந்தஸ்துகளைப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக நபியவர்கள் முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறார்கள். மூன்று நபர்கள் பிரயாணம் செய்வது பற்றிய செய்தியாகும். அல்லாஹ்வின் தூதர் […]

விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்

விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள் திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறு செய்வதில் தான் துவங்குகின்றது. அது தான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல், வண்ண விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று பாவகரமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இத்துடன் மார்க்கம் பெண்களுக்கு விதித்திருக்கின்ற புர்கா போன்ற வரைமுறைகளை, வரம்புகளைத் தாண்டி சந்திப்புகளும் சங்கமங்களும் திருமண […]

குடும்பத்தை நாசமாக்கும் விபச்சாரம்

குடும்பத்தை நாசமாக்கும் விபச்சாரம் குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கிய பின்னர் அதைப் பலர் நாசமாக்கி விடுகின்றனர். இதற்குக் காரணம், ஒரு பெண்ணின் கணவனாக இருந்து கொண்டே தவறாகப் பிற பெண்களிடம் உடலுறவு கொள்வதும், ஒரு ஆணுடைய மனைவியாக இருந்து கொண்டே பிற ஆண்களிடம் உடலுறவு கொள்வதுமேயாகும். அதாவது கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையான விசுவாசமானவர்களாக இருப்பதில்லை. உண்மையான விசுவாசிகளாக ஒருவருக்கொருவர் இருந்தால் தான், குடும்ப அமைப்பில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நாம் இந்தத் தொடரில் தெரிந்து […]

குடும்ப அமைப்பின் அவசியம்

குடும்ப அமைப்பின் அவசியம் அல்லாஹ் மனிதனைப் படைத்த காரணமே குடும்பமாக வாழவேண்டும் என்பதற்காகத் தான். எனவே குடும்ப அமைப்பில் வாழ்வது தான் இயற்கை நியதியாகும். இதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான். 7:189 هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّـفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ اِلَيْهَا‌ ۚ அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.  (அல்குர்ஆன்:7:189.) இப்படி ஜோடியைப் படைத்ததே, அவர்கள் […]

ஓரினச் சேர்க்கை

ஓரினச் சேர்க்கை ஆண் இனம், பெண் இனத்துடன் தான் உடலுறவு கொள்ள வேண்டும். அதுதான் இயற்கை. அப்படித்தான் அல்லாஹ் படைத்திருக்கிறான். ஆனால் மனித சமூகத்தில் சில ஈனச் செயல் புரிகின்ற இழிபிறவிகள், ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்று சொல்லும் ஹோமோ, லெஸ்பியன் என்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். இப்படியொரு தவறான செயலைச் செய்து கொண்டு, அது தவறு இல்லை என்று ஓரினச் சேர்க்கைக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்கிற சூழ்நிலையெல்லாம் தற்போது நிலவி வருகின்றது. இதுபோன்ற நிலையை […]

துறவறம் – ஒரு போலி வேடம்

துறவறம் – ஒரு போலி வேடம் நபித்தோழர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவில் பெண்கள் பற்றாக்குறையாக இருந்தது. ஏனெனில் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தனர். இதனால் பெண்கள் கிடைக்காமலிருந்த நிலையில் நபித்தோழர்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, எங்களால் எங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று கூறி, நிரந்தர ஆண்மை நீக்கம் செய்வதற்கு அனுமதி கேட்கிறார்கள். இது துறவறத்தை விடவும் மேலான நிலை. துறவறம் என்பது ஆசையை […]

இஸ்லாம் கூறும் குடும்பவியல்

குடும்பவியல் என்றால் என்ன? முதலாவதாக, அல்லாஹ் எந்தெந்த படைப்புகளை, உயிரினங்களையெல்லாம் நேரடியாகப் படைத்திருக்கிறானோ அவற்றை இனப்பெருக்கம் செய்கிற வகையில் படைத்திருக்கிறான். அல்லாஹ் படைத்தவை மட்டும்தான் ஒன்றிலிருந்து இன்னொன்று உற்பத்தியாகின்ற வகையில் இருக்கும். மனிதர்கள் எதையாவது உற்பத்தி செய்தால், அது இன்னொன்றை உற்பத்தி செய்யாது. ஒரு மனிதன் பேனாவையோ அல்லது மைக்கையோ உற்பத்தி செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்த மைக்கோ பேனாவோ குட்டி போடாது. இனப்பெருக்கம் செய்யாது. முதலில் ஒரு பேனாவை எப்படித் தயாரித்தார்களோ அதே போன்று […]

ஆணாதிக்கம்

ஆணாதிக்கம் இஸ்லாமிய குடும்பவியலைப் பொறுத்தவரை, அதற்கென அடிப்படையான விதிகள் உள்ளன. அந்த அழுத்தமான விதிகளின் படிதான் இஸ்லாமிய குடும்பவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிகள் என்னவென்பதை ஒவ்வொன்றாகத் தெரிந்து, தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் நம்முடைய குடும்பம் இஸ்லாமிய குடும்பமாக, சரியான வாழ்க்கை நெறியில் அமைந்த குடும்பமாக இருக்கமுடியும். ஆணே பெண்ணை நிர்வகிக்க வேண்டும் இஸ்லாமிய குடும்பவியலில் முக்கிய அம்சம் என்னவெனில், ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு குடும்பத்தைக் கட்டியமைக்கின்றனர். பொதுவாக எங்கெல்லாம் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் […]

சந்திப்பின் ஒழுங்குகள்

சந்திப்பின் ஒழுங்குகள் ஒரு பெண்ணை ஐந்தாறு நபர்கள் கொண்ட, அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பல ஆண்கள் சேர்ந்து ஏதேனும் ஒரு விஷயமாகப் பார்க்கச் சென்றால் அதனை மார்க்கம் அனுமதிக்கத் தான் செய்கிறது. இந்நிலையில் அந்தப் பெண் அனைவரையும் விரட்டியடிக்கத் தேவையில்லை. இதுபோன்று ஒரு ஆணை, பல பெண்கள் சேர்ந்து ஏதேனும் மார்க்கம் அனுமதித்த காரியத்தை நிறைவேற்றுவதற்குச் சந்தித்தால் தவறில்லை. இதற்கு ஆதாரமாக நபியவர்கள் காலத்தில் நடந்த அபூபக்கர் (ரலி) அவர்களின் சம்பவத்தைக் ஆதாரமாகக் கொள்ளலாம். அப்துல்லாஹ் பின் […]

சந்திப்புகளும் உரையாடல்களும்

சந்திப்புகளும் உரையாடல்களும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள். நம்மை விடப் பலநூறு மடங்கு மனைவியின் மீது அன்பும் மரியாதையும் வைப்பவர்களாகத் தான் இருப்பார்கள். நம்மைப் போன்று அற்பமான விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடமாட்டார்கள். அப்படிப்பட்ட நபியவர்கள் தமது மனைவி ஆயிஷாவின் வீட்டிற்கு வருகிற போது, அவர்களுடன் ஒரு ஆண் அமர்ந்திருக்கிறார். அவர் யாரென நபியவர்களுக்குத் தெரியவில்லை. அதற்கு முன் நபியவர்களுக்கு அறிமுகமில்லாதவராகவும் இருக்கிறார் என்பதால் அவரைப் பார்த்ததும் நபியவர்களின் முகம் மாறிவிடுகிறது. உடனே ஆயிஷா (ரலி) […]

கொலையில் முடியும் கள்ள உறவுகள்

கொலையில் முடியும் கள்ள உறவுகள் ஆண்களோ, பெண்களோ நாம் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் நம் மீது ஒழுக்க ரீதியாகப் பிறர் சந்தேகப்படுவதற்குரிய வாய்ப்புக்களை விட்டும் தவிர்ந்து வாழ வேண்டும், நம்மை ஒழுக்கத்திலிருந்து நெறிதவழச் செய்கின்ற காரியங்களை விட்டு விலகியிருக்க வாழவேண்டும் என இஸ்லாம் நமக்கு வலியுறுத்துகின்றது. அதில் மிக முக்கியமான அறிவுரை, பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளில் அந்நிய ஆண்கள் எவரும் நுழைந்துவிடக் கூடாது என்ற கட்டளையாகும். இதுபோன்ற தனிமை சந்திப்புகள் தான் தவறுக்குத் […]

தவறுக்குத் தூண்டும் தனிமை சந்திப்புகள்

தவறுக்குத் தூண்டும் தனிமை சந்திப்புகள் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நபியவர்கள் இந்த மனித சமூகத்திற்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள். ஆண்களோ பெண்களோ நாம் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் நம் மீது ஒழுக்க ரீதியாகப் பிறர் சந்தேகப்படுவதற்குரிய வாய்ப்புக்களிலிருந்தும், நம்மை ஒழுக்கத்திலிருந்து நெறி தவழச் செய்கின்ற காரியங்களிலிருந்தும் தவிர்ந்து வாழவேண்டும் எனவும் இஸ்லாம் நமக்கு வலியுறுத்துகிறது. நாம் தூய்மையாக இருப்பது மட்டும் நமக்குப் போதாது. நமது தூய்மையைக் களங்கப்படுத்துகின்ற வாய்ப்புக்களையும் அதற்குரிய காரண காரியங்களையும் தவிர்க்க வேண்டும் […]

வந்த பின் சாகாதீர்

வந்த பின் சாகாதீர் வருமுன் காப்போம் என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல, மனிதன் அல்லாத அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள எச்சரிக்கை உணர்வாகும்; இயற்கை உணர்வாகும். அந்த அடிப்படையில் பறவை இனம், தாங்கள் வாழுமிடத்தில் கோடை வரும் முன் அந்த இடத்தை விட்டு வெளியேறி, வளமான இடத்தைத் தேடி பல ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து செல்கின்றன. வளமும் வாய்ப்பும் உள்ள இடத்தைத் தேர்வு செய்து அங்கு போய் தங்குகின்றன. பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயப் பெருவெளியில், வான்பாதையில் வரைபடமோ, […]

கொள்கைவாதிகளா? சுயநலவாதிகளா?

கொள்கைவாதிகளா? சுயநலவாதிகளா? அறியாமை காலம் என்ற இருட்டிலிருந்து சத்திய கொள்கையின் பக்கம் நம்மை இழுத்துக்கொண்டு வந்த இந்த ஏகத்துவம் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்திய விஷயங்கள் ஏராளம். இணைவைப்பு என்ற மாபெரும் அக்கிரமத்திலிருந்தும் வட்டி, வரதட்சணை போன்ற பெரும் பாவங்களிலிருந்தும் நம்மை வெளியேற்றி தொழுகை, நோன்பு, தர்மம்  மற்றும் சமுதாய பணிகள் போன்ற பல சிறப்பம்சங்களுடன் தனக்கே உரிய பாணியில் சமுதாயத்தில் இந்த ஏகத்துவம் தனி மதிப்பைப் பெற்றுத் திகழ்கின்றதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இக்கட்டத்தில் நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் […]

மஹ்ரமான உறவுகள்

மஹ்ரமான உறவுகள் விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்கக்கூடாது என்று மார்க்கம் கட்டளையிடுவதைப் நாம் அறிவோம்.  இறைவன் முஃமின்களைப் பற்றிப் பேசும் போது சில பண்புகளைச் சொல்லிக் கொண்டே வந்து தங்களது கற்புக்களையும் பேணுவார்கள் என்று சொல்கிறான். நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் […]

கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டால் என்ன செய்வது?

மனைவி கணவருக்குத் தெரியாமல் திருமணத்திற்கு முன்பிலிருந்து இப்போது வரையிலும் இன்னொரு ஆணிடம் தொடர்பு வைத்திருக்கிறாள். இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அந்தக் கணவன் என்ன செய்வது? திருமணம் மூலம் அல்லாமல் கள்ளத் தொடர்பு வைக்கும் ஆண்களாயினும், பெண்களாயினும் இஸ்லாமிய ஆட்சியில் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். திருமணம் செய்யாத நிலையில் இது போல் விபச்சரம் செய்பவருக்கு நூறு கசையடிகளும் திருமணத்துக்குப் பின் விபச்சாரம் செய்பவருக்கு மரண தண்டனையும் இஸ்லாமிய ஆட்சியில் வழங்கப்படும். இஸ்லாமிய ஆட்சியில் நீங்கள் குறிப்பிடும் பெண் […]

பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்கள்

பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்கள் பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்கள் இரண்டு சுமைகளைச் சுமக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள். வேலைக்குச் செல்வதால் வீட்டில் சோறு, குழம்பு காய்ச்சுவது இல்லாமல் ஆகிவிடுமா? வீட்டைக் கவனிக்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா? பிள்ளையை வயிற்றில் சுமக்கும் வேலை இல்லாமல் ஆகிவிடுமா? குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு பால் கொடுக்கும் வேலை இல்லாமல் போய்விடுமா? அந்தக் குழந்தையைச் சீராட்டி தாலாட்டி வளர்க்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா? நாங்கள் வேலைக்குப் போவதால் நீங்கள் பிள்ளையைப் பெற்றுக் […]

பொருள் திரட்டும் பொறுப்பு ஆண்களுக்கே!

பொருள் திரட்டும் பொறுப்பு ஆண்களுக்கே! ஆண்கள் தான் குடும்ப நிர்வாகத்தை அதிகாரம் செலுத்துபவனாக இருப்பான். ஆண்கள் சொல்வதைப் பெண்கள் கேட்டு நடக்க வேண்டும். அதே நேரத்தில் ஆண்கள் பெண்களை அடிமைத்தனமோ அடக்குமுறையோ செய்துவிடக் கூடாது. பெண்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்ளவேண்டும். கடைசிக் கட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று குழப்பம் வந்தால் அப்போது இறுதிகட்ட முடிவை எடுத்துச் செயல்படுத்துகின்ற அதிகாரத்தைக் கணவனுக்கே இஸ்லாம் கொடுக்கிறது என்பதுதான் குடும்பவியலில் முதலாவது விஷயம். இஸ்லாமியக் குடும்பவியலில் இரண்டாவது முக்கியமான […]

எழுச்சி கண்ட வீழ்ச்சி

எழுச்சி கண்ட வீழ்ச்சி- இலட்சியத்தில் அலட்சியம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ்ந்து காட்டுவோம் என்று உறுதிமொழி எடுத்ததற்குப் பிறகு அதை நடைமுறைப்படுத்தாமல், மார்க்கம் முழுமையடைந்ததற்குப் பிறகு இறை வசனங்களுககும், நபிகளாரின் பொன்மொழிகளுக்கும் உயிரூட்டாமல், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதும் ஏன்? இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர் கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை […]

நபிகளாரின் வாழ்வினிலே…

நபிகளாரின் வாழ்வினிலே… நமது குடும்பத்திலுள்ள சாதாரணப் பெண்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதுபோன்று தான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களும் நடந்துள்ளார்கள். கோபப்பட்டுள்ளார்கள்; சந்தேகப்பட்டுள்ளார்கள்; சண்டையிட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை நாம் இங்கு சுட்டிக் காட்டுவதன் மூலம் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எப்படி சமாளிக்க வேண்டும் என்ற பாடத்தைத் தெரிந்து கொள்ள முடியும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உமர் அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி […]

கோபமும் தாபமும்

கோபமும் தாபமும் நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் கோபப்படுபவர்களாகவும் பிறகு அதைச் சரிசெய்து கொள்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். இப்படித்தான் வாழ்க்கை இருக்கும். சில நேரங்களில் மனைவி கோபமாகவும் சில நேரங்களில் அன்பாகவும் இருப்பாள். இப்படித் தான் கணவனும் பல நேரங்களில் இருப்பான். நபியவர்களே தமது மனைவி ஆயிஷாவைப் பற்றிச் சொன்னதாக இதை ஹதீஸ்களை நம்மால் பார்க்க முடிகிறது. நமது ஊர்களில் கணவனின் பெயர்களைச் சொல்வதே குற்றமாகக் கருதுகிறார்கள். அதை மரியாதைக் குறைவாகக் கருதுகிறார்கள். முஸ்லிம் ஊர்களில் மக்கள் தொகை கணக்கெடுக்க […]

பெண்ணின் குணம்

பெண்ணின் குணம் நபியவர்கள் பெண்கள் குறித்து மிக முக்கிய அடிப்படைகளைச் சொல்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தே விடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக் கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி-5184 இந்தச் செய்தியில் பெண்களுக்கு நபியவர்கள் வளைந்த விலா எலும்பை உதாரணமாகச் சொல்கிறார்கள்.  பிளாஸ்டிக் பொருளோ, இரும்போ வளைந்திருந்தால் […]

மனைவிக்கு  மரியாதை

மனைவிக்கு  மரியாதை குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்களிடத்தில் இஸ்லாம் வழங்கினாலும், அவர்கள் தன்னிச்சையாக மனம் போனபடி நிர்வகிக்கின்ற அதிகாரத்தை வழங்கவில்லை. எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் எதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகளையும் இஸ்லாம் ஆண்களுக்கு சொல்லித் தருகிறது. “நான் நிர்வாகியாக இருப்பதால் அடிப்பேன்; உதைப்பேன்; கணவனாகிய நான் என்ன சொன்னாலும் மனைவி கேட்க வேண்டும்” என்பதைப் போன்று சர்வாதிகாரியாகவும் கரடுமுரடாகவும் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் ஆண்களுக்கு அதிகாரம் வழங்கப்படவே இல்லை. இஸ்லாம் எந்தப் […]

மஹர் கொடுத்து மணம் முடிப்போம்

மஹர் கொடுத்து மணம் முடிப்போம் அன்றைய அறியாமைக் காலத்தில் இஸ்லாம் வருவதற்கு முன்பே மக்கத்து காஃபிர்கள்கூட மஹர் கொடுத்துத்தான் திருமணம் புரிந்துவந்தனர். இருப்பினும் பெண்களுக்கு மஹர் கொடுக்காமல் இருப்பதற்கு என்னென்ன தந்திரம் செய்ய வேண்டுமோ அதைச் செய்தார்கள். என்றாலும் இன்றைய காலத்தில் பெண்களுக்கு ஆண் சமூகம் செய்யும் கொடுமையளவுக்கு அன்றைய அறியாமைக் காலம் செய்யவில்லை. மாறாக, பெண்ணுக்கு மஹர் தொகையைக் கொடுக்காமல் இருப்பதற்காக, ஒரு ஆணின் சகோதரியை இன்னொரு ஆண் திருமணம் முடித்துக் கொண்டு, திருமணம் முடித்தவரின் […]

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன்:9:100.) மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் ஸஹாபாக்களைப் பற்றி சிறப்பித்துக் கூறுகின்றான்.அப்படி சிறப்பித்துக் கூறும் வகையில் தியாக வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவ்வாறு இஸ்லாமிய அடிப்படையில் தமது வாழ்வை […]

பணம் மட்டும் தான் வரதட்சணையா?

பணம் மட்டும் தான் வரதட்சணையா? வரதட்சணையால் பெண்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. வரதட்சணையின் காரணத்தால் ஆண்களின் திருமணம் தாமதமாகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால், தங்கைக்குத் திருமணம் முடித்த பிறகுதான் அண்ணனுக்குத் திருமணம் என்பதை மார்க்கக் கடமை போல் செய்வதைப் பார்க்கிறோம். பெண்ணுக்குத் திருமணம் முடிப்பதாக இருந்தால் அண்ணன் தம்பிகள்தான் வெளிநாடு சென்று உழைத்து அதில் வரும் காசு பணத்தை வைத்து தங்கை அல்லது அக்காவின் திருமணத்தை நடத்திட வேண்டும். […]

பெண்ணினத்தை அழிக்கும் வரதட்சணை

பெண்ணினத்தை அழிக்கும் வரதட்சணை இந்தியாவில் இளம் பெண்களின் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. வெளியில் பெண்ணின் தற்கொலைக்கான உண்மைக் காரணத்தைச் சொன்னால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கேவலமாகிவிடும் என்பதால் அதிகமானவர்கள் பொய்க் காரணங்களைச் சொல்கின்றனர். இளம் பெண்கள் தற்கொலை செய்யும் போது, வயிற்று வலியினால் தற்கொலை செய்ததாகச் சொல்வார்கள். ஆனால் அது பொய்யாகத்தான் இருக்கும். வயிற்று வலி என்பது எய்ட்ஸ் போன்ற மருந்தே கண்டுபிடிக்கப்படாத நோய் போன்றதல்ல! வயிற்று வலிக்கு தகுந்த வைத்தியம் செய்தால் சரியாகிவிடும். அதற்காக ஏன் தற்கொலை […]

வரதட்சணை ஒரு வன்கொடுமை

வரதட்சணை ஒரு வன்கொடுமை ஆண்கள் பொருளாதாரத்திற்குப் பொறுப்பேற்றுள்ள நமது சமூக அமைப்பில் திருமணத்தை ஒரு வியாபாரமாக ஆக்கிவிட்டது வேதனையான விஷயம். திருமணம் என்றால் ஆரம்பத்திலிருந்தே பெண்களிடம் வரதட்சணையின் பெயராலும், சீர்வரிசை, அன்பளிப்புகள், விருந்துகள் போன்ற பெயராலும் பெண் வீட்டாரை ஆண்கள் சுரண்டி வாழ்வதைப் பார்க்கிறோம். திருமணம் முடிந்து பல மாதங்கள் கடந்த பிறகும் குறிப்பிட்ட நாட்களின் பெயரைக் கூறி, அதிலும் முறை வைத்துப் பெண்ணிடமிருந்து மாப்பிள்ளை சீர் பெறுகின்றார்கள். குழந்தை பிறந்தால் அதனைக் காரணமாகக் காட்டி பெண்ணிடமிருந்து […]

பெண்களின் உரிமைகள்

பெண்களின் உரிமைகள் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபியவர்களின் மனைவியாக வருவதற்கு முன்னால் அபூஸலமாவின் மனைவியாக இருந்தார்கள். அபூஸலமாவின் மூலமாகச் சில குழந்தைகள் உம்மு ஸலமாவுக்கு இருந்தன. நபியவர்கள் குடும்பச் செலவிற்காக உம்மு ஸலமாவிற்குக் கொடுக்கும் தொகையில் தனது முன்னால் கணவர் அபூஸலமா மூலமாகப் பெற்றெடுத்த தனது பிள்ளைகளுக்குச் செலவு செய்தால் நன்மை கிடைக்குமா? என நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் கூலி கிடைக்கும் என்று சொன்னார்கள். தடையேதும் போடவில்லை. அப்படியெனில் கணவனிடமிருந்து மனைவிக்குக் கிடைத்த […]

பெண்களின் பொறுப்புகள்

பெண்களின் பொறுப்புகள் குடும்பத்திற்கு செலவு செய்வது ஆண்களுக்குத் தான் கடமை என்று ஆதாரங்களைப் படித்தவுடன் பெண்கள், கணவன் சம்பாதிக்கிற அனைத்தையும் கேட்டுவிடக் கூடாது. கேட்கவும் முடியாது. அதனை மார்க்கம் அனுமதிக்கவுமில்லை. குடும்பத்திற்குச் செலவு செய்வது என்றால் என்ன? என்பதை அல்லாஹ்வுடைய தூதர் விளக்கித்தான் சென்றுள்ளார்கள். முஆவியா அல்குரைஷி (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனது மனைவிக்கு செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்கும் போது, “நீ உண்ணும் போது […]

குடும்பச் செலவுக்கும் கூலி உண்டு

குடும்பச் செலவுக்கும் கூலி உண்டு பெண்கள் வேலைக்குச் செல்வதால் பெண்களுக்குப் பல்வேறு பாதிப்பு ஏற்படுவதுடன் ஆண்களின் வேலை பாதிப்பதாகவும் கள ஆய்வு சொல்கிறது. ஆண்களை மட்டும் வேலைக்குச் சேர்த்தால் போட்டி போட்டுக் கொண்டு வேலை நடக்கிறது. அதுவே பெண்களுடன் வேலை செய்யும் ஆண்கள், வேலை செய்வதில் காட்டும் அக்கறையை விட, தன்னுடன் வேலைக்கு வந்த பெண்களின் மீது காட்டும் அக்கறை அதிகமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதாவது ஆண்களைத் திசை திருப்புகின்ற காரியமாக பெண் இருப்பதால் முழு ஈடுபாட்டுடன் […]

கொஞ்சி விளையாடி…

கொஞ்சி விளையாடி… சம்பாதிக்கின்ற இடங்களில் ஆண்களுக்குப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்களின் நிம்மதி குலைந்து விடுகிறது. வெளியில் பலவிதமான சூழ்நிலையில் உள்ள கணவன், வீட்டிற்கு வந்தவுடன் நிம்மதியாகலாம், மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் வெளியிட தாக்கம் குறைந்து மனது இலகுவாகிவிடும் என்று நினைத்து வந்தால், வந்தவுடனே சண்டையென்றால் வீட்டிலும் நிம்மதியை இழக்கிறான் ஒரு ஆண். இதனால் அவனது இரவுத் தூக்கம் கலைந்துவிடும். நியாயத்தைக் கூட பேசமுடியாத நிற்கதியான நிலையில் தள்ளப்படுகிற ஆண்களின் பரிதாபத்தைப் பார்க்கிறோம். நியாயத்தைப் பேசும்போது […]

பெற்றோரே! பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்!

பெற்றோரே! பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்! நாளைய சமுதாயம் இன்றைய இளைஞர்கள் கையில் உள்ளது. ஆனால் இளைய தலைமுறையினரோ மிகவும் மோசமான பாதையில் பயணிக்கின்றனர். ஏன் இந்த அவல நிலை? எனக் கேள்வி எழுப்பினால் அடுத்த நொடிப் பொழுதில், இன்றைய நாகரீக வளர்ச்சியும், சமூகச் சீர்கேடுகளும் தான் என்று நாம் மறுமொழி பகர்கிறோம். சில தினங்களுக்கு முன் கோவையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோவை சாய்பாபா காலனியில் வசிக்கும் ஹைதர் என்பவரது மகள் ருக்ஸானா (வயது 21) […]

மாமியார் மருமகள் உறவு

மாமியார் மருமகள் உறவு இஸ்லாமிய குடும்பவியலில் கணவன் மனைவிக்கு மத்தியில் நல்ல இணக்கமும், நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்பதற்காக மார்க்கம் அனுமதித்த வகையில் மனைவிமாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்கின்ற கடமை கணவன்மார்களுக்கு இருக்கிறது என்பதைப் பார்த்து வருகிறோம். நபியவர்கள் தங்களது மனைவிமார்களை சந்தோஷப்படுத்தி, அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பதற்கு இன்னுமொரு சான்றைக் காணமுடிகிறது. அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?’’ என்று […]

வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுதல்

வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுதல் குடும்பத்தில் பெண்கள் ஒரேயடியாக வேலை வேலை என்று இருந்தால் அதுவே மனச் சோர்வை ஏற்படுத்தக் கூடும். அவ்வப்போது ரிலாக்ஸாக வெளியிடங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வர வேண்டும். பூங்காவுக்குச் செல்வது, சில நேரங்களில் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது போன்ற விஷயங்களைச் சொல்லலாம். இவையெல்லாம் பெண்களின் மனதிற்கு சந்தோஷத்தையும் குடும்ப உறவில் மேலும் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு நல்ல வாய்ப்பையும் பெற்றுத்தரும். மார்க்க வரம்புகளை மீறாத வகையில் கபடி, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளைப் பார்க்கலாம்; பீச்சுக்குச் […]

மனைவியுடன் எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்?

மனைவியுடன் எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்? கேள்வி : என் மனைவி என்னை இகழ்ந்து பேசிவிட்டார்; இதுவரை மன்னிப்பும் கேட்கவில்லை. இதனால் தற்போது நான் அவரிடம் பேசுவதில்லை. இது போல் இருக்கலாமா? எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்? பதில்: அவர் என்ன இகழ்ந்து பேசினார்? அவரை நீங்கள் இகழ்ந்து பேசியதால் அவர் உங்களை இகழ்ந்து பேசினாரா? நீங்கள் ஒன்றுமே செய்யாமலும், சொல்லாமலும் இருக்கும் போது இகழ்ந்து பேசினாரா? அவர் இகழ்ந்து பேசியது பெருந்தன்மையுடன் உங்களால் அலட்சியப்படுத்தத் தக்கதா? […]

திருமணத்தின் போது பெண்வீட்டு விருந்துக்கு ஆதாரம் உள்ளதா?

திருமணத்தின் போது பெண்வீட்டு விருந்துக்கு ஆதாரம் உள்ளதா? கேள்வி : உம்மு ஹபீபா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நஜ்ஜாஷி மன்னர் திருமணம் செய்து கொடுத்தார். அப்போது அவர் திருமண விருந்து அளித்தார். பெண்ணின் பொறுப்பாளராக இருந்த நஜ்ஜாஷி திருமண விருந்து கொடுத்துள்ளதால் பெண் வீட்டின் சார்பில் திருமண விருந்து கொடுக்கலாம் என்று ஜமாஅத்தே இஸ்லாமியைச் சேர்ந்த ஒருவர் வாதிடுகிறார். இது சரியா? பதில் : வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ […]

பெண்கள் விருந்து பரிமாறலாமா?

பெண்கள் விருந்து பரிமாறலாமா? திருமணம் முடிக்கும் போது கணவர் பணக்காரராக இருப்பார். பிறகு வறுமையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும். சில வீடுகளில் வேலை குறைவாக இருக்கும். சில வீடுகளில் வேலை அதிகமாக இருக்கலாம். அந்தந்த சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி மனைவி தன்னை மாற்றிக் கொண்டால்தான் தம்பதிகள் இருவரும் உளப்பூர்வமாக இருப்பதாக அர்த்தம் கொள்ளமுடியும். அதேபோன்று திருமணம் முடிக்கும் போது ஏழ்மையாக இருந்து, பின்னர் செல்வந்தராக கணவர் மாறினாலும் நமக்குத்தானே அவைகளும் […]

மாதவிடாய் காலத்தில் மாதரை வதைக்கும் மதங்கள்

மாதவிடாய் காலத்தில் மாதரை வதைக்கும் மதங்கள் பொதுவாக யூத, இந்து மதங்களுக்கு மத்தியில் பல ஒற்றுமைகளைப் பார்க்கலாம். உயர் ஜாதி உலகத்தில் யூதர்கள் தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று நம்பக் கூடியவர்கள். அதனால் அவர்கள் மற்றவர்களை மனிதர்களாகவே மதிக்க மாட்டார்கள். அது போல் தான் (உயர் ஜாதி) இந்துக்கள், யூதர்கள் காளை மாட்டைக் கடவுளாக வணங்குபவர்கள். இந்துக்கள் பசுவைக் கடவுளாக வழிபடக்கூடியவர்கள். மாதவிடாயின் போது யூதர்கள் பெண்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். அது போன்று தான் […]

கணவனின் குடும்பத்தாருக்குப் பணிவிடை செய்தல்

கணவனின் குடும்பத்தாருக்குப் பணிவிடை செய்தல் வீட்டைப் பொறுத்த வரை மொத்த வீட்டுக்கும் பெண்தான் பொறுப்பாளியாவாள். ஒரு மனைவி தன் கணவருக்கும் தன் பிள்ளைகளுக்கு மட்டும் தான் பொறுப்பாளி என்று நினைக்கக் கூடாது. கணவரின் தாய், தந்தையரையோ, உடன்பிறந்த சகோதரிகளையோ நாம் கவனிக்க வேண்டியதில்லை என்றும் சிலர் தவறாக விளங்கி வைத்து உள்ளனர். ஆனால் நபியவர்கள் காட்டித் தந்த மார்க்கத்தில் அப்படி இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் […]

தவறான புரிதலால் ஏற்படும் குழப்பங்கள்

தவறான புரிதலால் ஏற்படும் குழப்பங்கள் வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருக்கும் கணவன், மனைவியிடம் போனில் பேசிக் கொண்டிருப்பார். ஏதாவது ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசிக் கொண்டிருக்கும் போது செல்போன் துண்டிக்கப்பட்டுவிட்டால் வேண்டு மென்றே துண்டித்துவிட்டாள் என்று கணவனும், கோபத்தில் போனைத் துண்டித்துவிட்டார் என்று மனைவியும் நினைக்கின்ற காரணத்தினால் இருக்கின்ற சின்ன சின்ன பிரச்சனைகளையும் கூட பெரிதாகச் சித்தரிக்கின்ற மனநிலை இன்று பெரும்பாலான நபர்களிடத்தில் காணப்படுகின்றது. இந்தக் காரணத்துக்காகவே விவாகரத்துச் செய்து கொண்ட தம்பதிகளும் உண்டு. சிலர் அவசரத் தேவைக்காக […]

நற்குணத்தில் உயர்ந்த  நபித்தோழியர்கள்

நற்குணத்தில் உயர்ந்த  நபித்தோழியர்கள் அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழியர்கள் மிக உயர்ந்த நற்குணங்களுக்கு சொந்தக்காரர்களாகத் திகழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சிந்திக்கும் எவரது கண்களிலும் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுக்கும். அந்த அளவிற்கு இஸ்லாத்தினை உள்ளத்தில் கடுகளவும் சந்தேகம் இன்றி மிக உறுதியாகப் பின்பற்றியுள்ளனர். மறுமை நம்பிக்கை என்பதை வெறும் வாயளவில் மட்டும் இல்லாமல் செயலளவிலும் அந்த நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியுள்ளனர். இறைச் செய்தியான குர்ஆன் மற்றும் […]

தீய சபைகளைப் புறக்கணிப்போம்

தீய சபைகளைப் புறக்கணிப்போம் 4:140 وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى الْـكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰيٰتِ اللّٰهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَاُبِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖۤ‌ ‌ ۖ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ جَامِعُ‌‌‌الْمُنٰفِقِيْنَ وَالْكٰفِرِيْنَ فِىْ جَهَـنَّمَ جَمِيْعَاۨ ۙ‏ அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் […]

நபித்தோழியர் வாழ்வினிலே…

நபித்தோழியர் வாழ்வினிலே… இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமூகம்தான் கியாமத் நாள் வரை தோன்றும் சமூகங்களிலேயே சிறந்த சமுதாயமாகும். இறைத்தூதர் உருவாக்கிய அந்தச் சிறந்த சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பல்வேறு மார்க்க விஷயங்களில் தலைசிறந்தவர்களாகத் திகழ்ந்துள்ளனர். அப்படிப் பட்ட நபித்தோழியர் வாழ்விலிருந்து சில வரலாற்றுத் துளிகளை இக்கட்டுரையில் நாம் காணவிருக்கின்றோம். ஆயிஷா (ரலி) அவர்களின் குர்ஆன் ஞானம் அல்லாஹ்வின் தூதரின் அருமை மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திருக்குர்ஆன் ஞானத்தில் மிகவும் […]

மனம் ஏற்றுக் கொள்ளாத  மார்க்கச் சட்டங்கள்

மனம் ஏற்றுக் கொள்ளாத  மார்க்கச் சட்டங்கள் இவ்வுலகில் விரலிட்டு எண்ண முடியாத ஏராளமான கடவுள் கொள்கைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட, பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட, மனிதனுக்கு இயலாத பல காரியங்களை மார்க்கம் என்ற பெயரால் கட்டளையிடுகின்றன. ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே வாழ்க்கைக்கு ஏற்ற இனிமையான எளிமையான உயரிய கோட்பாடுகளையும், நேரிய சட்ட திட்டங்களையும் கொண்டுள்ள ஓர் உன்னதமான மார்க்கமாகும். ஏனெனில் இது மனோஇச்சைகளாலோ, கற்பனைகளாலோ தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம் கிடையாது. ஈடு இணை இல்லாத இறைவனால் […]

பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்

பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள் குடும்ப வாழ்க்கையில் பெண்களை நிர்வாகம் செய்யும் ஆண்கள், அவர்களை சிறை வாழ்க்கையைப் போன்று நடத்தாமல் சில சுதந்திரங்களைக் கொடுத்துத் தான் நிர்வகிக்க வேண்டும். அதே நேரத்தில் பெண்கள் அந்த சுதந்திரத்தை மார்க்கம் அனுமதித்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர மார்க்கத்தின் எல்லையை மீறக் கூடாது. இந்த விஷயத்தில் வரம்பு மீறினால் சுவனத்தின் வாடை கூடக் கிடைக்காது என்பதை நினைத்து, இறைவனைப் பயந்து பெண்கள் நடந்து கொள்ள […]

பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லுதல்

பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லுதல் நிர்வாகத் தலைமைப் பொறுப்பும், பொருளாதாரப் பொறுப்பும் ஆண்களையே சார்ந்துள்ளது என்பதை இதுவரை குடும்பவியலில் பார்ததுள்ளோம். அடுத்ததாக இஸ்லாமியக் குடும்பவியலில் பெண்களின் முக்கிய பொறுப்புக்கள் குறித்து பார்க்க வேண்டும். பெண்கள் வீட்டில் எப்படியிருக்க வேண்டும்? வீட்டில் பொறுப்புக்கள் என்ன? வெளியில் எப்படி இருக்க வேண்டும்? அதேபோன்று மாமனார் மாமியாருக்கு வேலை பார்ப்பதைப் பாரமாக நினைப்பது சரியா? என்பன போன்ற பல விஷயங்களை இந்தத் தலைப்பின் கீழ் பார்க்கப் போகிறோம். பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லுதல் பெண்கள் […]

விரும்பிக் கொடுத்தால் வரதட்சணை ஆகாதா?

விரும்பிக் கொடுத்தால் வரதட்சணை ஆகாதா? இன்றைய கால சூழ்நிலையில் சிலர் வரதட்சணையை நேரடியாகக் கேட்டுப் பெறாமல் அன்பளிப்பு என்ற பெயரில் மறைமுகமாக வாங்குவதற்கு முயற்சிப்பதைப் பார்க்கிறோம். மாப்பிள்ளை வீட்டார் எதையும் கேட்பதில்லை. பெண் வீட்டார் தானாகவே தருவதாக தனக்குள் ஒரு சமாதானத்தையும் சொல்லிக் கொண்டு வரதட்சணையை நியாயப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. இப்படிப் பெண் வீட்டார் மனப்பூர்வமாக விரும்பிக் கொடுத்தால் வாங்கிக் கொள்வதில் தவறில்லை என்று வாதிடுகின்றார்கள். ஆனால் உண்மையில் மனப்பூர்வமாகக் கொடுக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். […]

Next Page »