Tamil Bayan Points

Category: சந்தர்ப்ப உரைகள்

b109

நிர்வாகத் தேர்வின் போது கூற வேண்டிய விஷயங்கள்?

பொறுப்பு ஓர் அமானிதம் துன்பத்தில் மிகப்பெரும் துன்பம் மக்களில் சிறந்தவர்கள் தலைமைக்கு  கட்டுப்படுதல் விவேகம் மென்மையை கடைபிடித்தல் மென்மையால் கிடைக்கும்  நன்மைகள் மென்மையால் மக்களை வென்றெடுத்த நபிகளார் மக்களிடத்தில் நபிகளார் நடந்த விதம்  துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே) பொறுமை மஷூரா செய்தல்  ஒருங்கிணைப்பு  இக்லாஸே அடிப்படை  நோக்கமே அடிப்படை  நன்மையை நாடி செய்யும் நற்செயல் எதுவாயினும் அதற்கும் கூலியே  சிறந்த தலைவர் யார்?  பொறுப்பாளிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை பொறுப்பு ஓர் அமானிதம்: பொறுப்பு எனும் அமானிதத்தின் […]

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-2

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-2 அன்றாட நடவடிக்கைகளின் ஒழுங்கு சிலரை பார்த்தால் அவர்கள் குடியிருக்கும் வீடு அழுக்கடைந்து போய், எந்தப் பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. ஒரு பொருளை வைத்தால் தேவைக்குக் கிடைக்காது. கண்ட இடமெல்லாம் பொருட்கள். ஒரு நாளைக்கு மேசை மேல் இருக்கும்; ஒரு நாளைக்கு அலமாரியில் இருக்கும். காலையில் ஒரு நாள் 7 மணிக்கு எழுவார். ஒரு நாள் 5 மணிக்கு! ஒரு நாள் 6 மணிக்கு! உறங்கச் செல்வதும் இப்படித் தான். […]

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை

நிர்வாகம் என்றால் என்ன? ஒரு குடும்பத்தை, ஒரு கிராமத்தை, ஒரு ஊரை, ஒரு நகரை, நாட்டை அல்லது ஒரு வியாபார நிறுவனத்தை, தொழிற்சாலையை, ஒரு கட்சியை, ஒரு இயக்கத்தை வழி நடத்த ஒரு தனி நபர் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்துகின்றது. அந்தக் குழு ஒரு கொள்கையின் அடிப்படையில், இடையில் ஏற்படும் தடைகள், இடைஞ்சல்களைச் சமாளித்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கித் தங்களைப் பின்பற்றுபவர்களை வழி நடத்துவதே நிர்வாகம் எனப்படுகின்றது. நடைமுறையிலிருக்கும் பிற நிர்வாகவியல் கோட்பாடுகள் அறிவு உணர்வுகள் […]

மவ்லித் வரிகளும் வேத வரிகளும்

மவ்லித் வரிகளும் வேத வரிகளும்  اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ    اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் ! கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் ! اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ, அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ  وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே! […]

மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம்

மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம் ஏகத்துவக் கொள்கை ஒவ்வொரு ஊரிலும் துளிர் விட்டு வளர்வதற்காக உயிர், உடல், பொருள் மூலமாக பெருந்தியாகங்கள் பெருமளவுக்கு முதலீடாகவும், மூலதனமாகவும் செலுத்தப்பட்டிருக்கின்றன. அதன் பின்னர்தான் ஏகத்துவம் பெரிய மரமாக வளர்ந்து நின்று பலனைத் தருகின்றது. மரம் தான் வளர்ந்து விட்டதே! அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என்று ஓர் ஏகத்துவவாதி எண்ணினால் அவர் நிச்சயமாக ஏமாந்து விடுகின்றார். தான் ஈடுபட்ட தியாகத் திருப்பணியில் ஈடுகட்ட முடியாத நஷ்டவாளியாகி விடுகின்றார். பூச்சிகள், புழுக்கள் […]

தூதர் வழியில் தூய ஹஜ்

தூதர் வழியில் தூய ஹஜ் ஹாஜிகள் மக்காவை நோக்கிப் பயணப்படுகின்ற ஹஜ் காலம். இதையொட்டி ஹாஜிகளுக்காக ஆங்காங்கே ஹஜ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் மத்ஹபுச் சட்ட அடிப்படையில் அமைந்தவையாகும். தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் ஷாபி, ஹனபி என்று கூறுபோட்டது போன்று ஹஜ்ஜிலும் ஷாபி, ஹனபி என்று கூறு போட்டு மார்க்கத்தைக் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நடத்துகின்ற இந்தப் பயிற்சி வகுப்புகளில், தவாஃப் செய்யும் போது, ஷாபி மத்ஹபினர் ஹனபியாக மத்ஹப் […]

உருவாகட்டும் ஊருக்கு ஓர் அழைப்பாளர்

உருவாகட்டும் ஊருக்கு ஓர் அழைப்பாளர் அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை சென்றடையாத ஊர் இல்லை என்ற அளவுக்கு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய அளவிற்கு அழைப்பாளர்கள் இல்லை என்பது ஆழ்ந்த கவலையளிக்கக் கூடிய செய்தியாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: 66:6 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ‏ நம்பிக்கை […]

கரையும் கடவுள் களங்கமாகும் கடல்

கரையும் கடவுள் களங்கமாகும் கடல் விநாயகர் சதுர்த்தி என்ற பண்டிகை தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் படு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் நடைபெறும். ஆனை முகத்தைக் கொண்ட பிள்ளையார் என்ற கடவுள் பிறந்ததையொட்டி நடைபெறும் விழாவுக்குத் தான் விநாயகர் சதுர்த்தி என்று கூறப்படுகின்றது. ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு கடவுள் கொள்கை உண்டு. கடவுளுக்கு மகன் உண்டு, மனைவி உண்டு என்று நம்பும் மக்கள் விநாயகர் பிறந்த நாளைக் கொண்டாடி […]

விளம்பரமாகும் ஹஜ் வணக்கம்

விளம்பரமாகும் ஹஜ் வணக்கம் இலட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துச் செய்கின்ற இந்த ஹஜ் எனும் வணக்கம் பாழாகிவிடக்கூடாது, பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஹாஜிகளின் அன்பான கவனத்திற்கு மார்க்கம் கூறும் அறிவுரைகளை அளிக்கின்றோம். பொதுவாக எந்தவொரு வணக்கத்திற்கும் இக்லாஸ் எனும் தூய எண்ணம் வேண்டும். இந்தத் தூய எண்ணம் இல்லையென்றால் அந்த வணக்கம் இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்படாது. எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: 98:5   وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ ۙ حُنَفَآءَ […]

அழைப்பாளர்களின் கனிவான கவனத்திற்கு…

அழைப்பாளர்களின் கனிவான கவனத்திற்கு… நம்முடைய ஜமாஅத்தின் கிளைகள் ஆள் நடமாட்டமும் அரவமும் இல்லாத வனத்தில் அமையவில்லை. நம்முடைய கிளைகளும் அதன் அழைப்பு மையங்களும் கடை வீதிகளிலும் அடர்த்தியாக முஸ்லிம்கள் வசிக்கின்ற குடியிருப்புப் பகுதிகளிலும் அமைந்திருக்கின்றன. நமது மையங்களைச் சுற்றிலும் சூழவும் குடும்பங்கள் வாழ்கின்ற முஹல்லாக்கள். குடும்பம் என்பது, வயதுக்கு வராத விடலைப் பெண்கள், வயதுக்கு வந்த கன்னியர், திருமணம் முடித்த இளம் பெண்கள் போன்றோர் இணைந்த ஒன்றாகும். இவர்கள் எப்போதும் வீட்டுக்குள்ளேயே கட்டுண்டு கிடக்க மாட்டார்கள். அடுப்படி […]

ஷபே பராஅத் சாந்த நாளா? சாப நாளா?

ஷபே பராஅத் சாந்த நாளா? சாப நாளா? ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு பாமரர்கள், ஆலிம்கள் என அனைவராலும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் நம் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் நன்மை என்ற பெயரில் பல சடங்குகளும் நடைபெற்று வருகின்றன. முன்னோர்கள் சிலரால் வழிவழியாக பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதைத் தவிர, குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள் கூட ஆராயவில்லை. இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் அமல்கள் ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் அவர்களும் […]

கொலை கொடியது

கொலை கொடியது இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது; வாளால் தனது சித்தாந்தங்களைப் பரப்புகின்றது என்பது நீண்ட நெடுங்காலமாகவே இஸ்லாத்தைப் பற்றி சரியாக அறியாத சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாகும். இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்ற இவர்களது முடிவு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான திருக்குர்ஆனையோ, இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையோ ஆழமாக வாசித்து எடுக்கப்பட்ட முடிவல்ல. மாறாக, போர் குறித்துக் குர்ஆன் கூறும் வசனங்களை அவசர கோலத்துடன் படித்து எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் இது. (போர்  நெறிமுறைகள் குறித்து […]

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இஸ்லாம் தனது பெயரிலும், கொள்கையிலும், செயல்பாட்டிலும் அமைதியை மையமாகக் கொண்டது. அதன் முகமும் அகமும் சாந்தியை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் […]

இனிய குர்ஆன் ஓதி இரவில் தொழுவோம்

இனிய குர்ஆன் ஓதி இரவில் தொழுவோம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி-38  புனிதமிகு ரமளான் வந்துவிட்டது. மேற்கண்ட ஹதீஸில் கூறப்படுவதைப் போன்று பூத்துக் குலுங்கும் நன்மைகளைப் பறிப்பதற்கு மக்கள் போர்க்கோலம் பூண்டு, போர்க்களம் புகுந்துவிட்டனர். அருள்மிகு ரமளான் என்றதும் திருமறைக் குர்ஆனின் ஒலி எங்கு பார்த்தாலும் […]

ஆஷுராவும் அனாச்சாரங்களும்

ஆஷுராவும் அனாசசாரங்களும் ஆஷுரா என்பது அஷ்ர – பத்து என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தையாகும். பத்தாவது என்பது இதன் பொருள். முஹர்ரம் மாதம் பத்தாவது நாளை இது குறிக்கின்றது. இந்நாள் தான், தன்னைக் கடவுள் என்று கொக்கரித்த, இஸ்ரவேலர் சமுதாயத்தைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு, அதே கடலில் மூஸா நபியும் அவர்களது இஸ்ரவேலர் சமுதாயமும் காப்பாற்றப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க நாளாகும். இந்தச் சிறப்புமிக்க அதே நாளில் ஹுஸைன் (ரலி) […]

பிறமதக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம்

பிறமதக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! முஸ்லிம்களாக இருக்கும் நம்மைச் சுற்றிலும், ஏராளமான பிறமத சகோதரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று அவர்கள் கொண்டாடும் பண்டிகைகள் அடிக்கடி வந்து போகின்றன. அவற்றில் கலந்து கொள்ள அவர்களும் நம்மை ஆர்வத்துடன் அழைக்கிறார்கள். அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஒரே பகுதியில் வசிக்கிறோம்; ஒரே இடத்தில் வேலை செய்கிறோம்; அவர்களது அழைப்பை ஏற்று கொள்ள வேண்டும்; […]

இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை!

இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை! வேதம் கொடுக்கப்பட்ட முந்தைய  சமுதாயமான பனூ இஸ்ராயீலுக்கு அல்லாஹ் தவ்ராத்தை அளித்து அதை அவர்கள் பற்றிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தூர் மலையை அவர்கள் தலைமேல் தூக்கி வைத்து உறுதிமொழி எடுத்தான். 2:63 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَؕ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّ اذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏ “நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு […]

உறவைக் காக்கும் உன்னத குர்ஆன்

உறவைக் காக்கும் உன்னத குர்ஆன் வெளியூரில் இருக்கும் பிள்ளைகளை ஆண்டுக்கு ஒரு  முறை ஊர் வரச் சொல்லி, அவர்களை அருகில் கொண்டு வந்து ஒன்றாகக் கூடி, ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்  பேசுகிறோம். உணவு பரிமாறி, உறங்கிக் கிடந்த பாச உணர்வை உசுப்பி விட்டு, அடுத்த ஓராண்டு வரை தாக்குப் பிடிக்கின்ற வகையில் பாச உணர்வை, பாச உறவை உயிர்ப்பித்து திரும்ப ஊருக்கு அனுப்புகின்றோம். இத்தகைய கருணையும் கரிசனமும் கொண்ட நமது பெற்றோர்கள் செய்வது போல், மறுமைச் சிந்தனையை […]

கோடை வெயிலும் குளு குளு சொர்க்கமும்!

கோடை வெயிலும் குளு குளு சொர்க்கமும்! வழக்கமாக மே மாதத்தில் தெறிக்கின்ற கோடை வெயில் இப்போது  மார்ச்  மாதமே தெறிக்க ஆரம்பித்து விட்டது. ஏப்ரலில் அது  ஏறுமுகத்தில் போய்க் கொண்டிருக்கின்றது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வீசுகின்ற அனல் காற்றுக்கு இது வரை  நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இவ்விரு மாநிலங்களில் 118 டிகிரி வெயில் அடிக்கின்றது. இதன் விளைவாக கொதிக்கின்ற சட்டியில் பொறிக்க வேண்டிய முட்டையை கொதிக்கின்ற சாலையில்  பொறிக்கின்றனர். அந்த அளவுக்குக் கோடையின் வெப்பம் உக்கிரத்தை […]

திருநபி திருவிழாவா? கிறிஸ்துமஸ் திருவிழாவா?

திருநபி திருவிழாவா? கிறிஸ்துமஸ் திருவிழாவா? இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இறைவன் இந்த உலகத்தைப் படைத்து, அதில் மனிதர்களைப் பரவச் செய்திருக்கின்றான். இறைவன் படைத்த கோடான கோடி மக்களில் ஒரு சில குறிப்பிட்ட சாராரை மாத்திரம் தேர்வு செய்து இஸ்லாம் என்னும் மகத்தான பேரருட்கொடையை வழங்கியிருக்கின்றான். இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்களாக வாழ்கின்ற நம்மில் பெரும்பாலானோர் இறைவனும், இறைத்தூதரும் காட்டித் தந்ததன் அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் முன்னோர்கள், கட்டுக்கதைகள், மார்க்கத்திற்குக் கடுகளவும் சம்பந்தமில்லாத பிறமதக் […]

இந்த இறையச்சம்  ஈது வரையா? இறுதி வரையா?

இந்த இறையச்சம்  ஈது வரையா? இறுதி வரையா? ரமளான் மாதத் தலைப்பிறையைப்  பார்த்தது முதல் பள்ளிவாசல்கள் நிறைமாத கர்ப்பிணிகளாகவே ஆகி விட்டன. ஆண்டு முழுமைக்கும் பள்ளியின் முதல் வரிசையில் அலங்கரித்தவர், ரமளானில் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றார். அந்த அளவுக்கு ஐங்கால ஜமாஅத் தொழுகைகளில் ஜன சமுத்திரம் திரண்டது என்று சொன்னால் அது மிகையல்ல! சின்னஞ்சிறுவர்கள், இளைய தலைமுறையினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் என வாழ்க்கையின் அனைத்துப் பருவத்தினரும் பள்ளிவாசலுக்குப் படையெடுத்து வந்தனர். பெண்கள் அனுமதிக்கப் பட்ட பள்ளிகளில் […]

நபிகளார் கூறிய நீர் மேலாண்மை!

நபிகளார் கூறிய நீர் மேலாண்மை! மனித சமுதாயம் இன்று சந்திக்கும் பிரச்சனைகளுள் தலையாயது தண்ணீர் பற்றாக்குறையாகும். வீதியில் எங்கு பார்த்தாலும் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக அலைமோதும் கூட்டத்தை அதிகமாகவே பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் நீரால் நிரம்பியிருந்த ஏரி, குளம், போன்றவை இன்று சிறுவர்களின் விருப்பமான விளையாட்டு மைதானங்களாக மாறிப் போயுள்ளது. இருக்கின்ற ஏரிகளை எல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றி, தண்ணீர் லாரிக்குப் பின்னே மக்கள் அலைந்து திரியும் அவலம் நாள்தோறும் நடந்தேறுகிறது. பல பகுதிகளில் குடிநீர் கேட்டு […]

இறை மார்க்கம்  ஓர் எளிய மார்க்கமே!

இறை மார்க்கம்  ஓர் எளிய மார்க்கமே! 2:185 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை […]

வான்மறையும் வான்மழையும்

வான்மறையும் வான்மழையும் மழை என்பது படைத்த இறைவனின் தனிப் பெரும் ஆற்றலாகும். அதிலும் இந்தியாவில் பொழிகின்ற பருவ மழை உண்மையில் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் ஆற்றலைப் பறை சாற்றுகின்ற அற்புதமாகும். தென்மேற்குப் பருவ மழை பெய்வதற்கு பூமியின் தென் அரைக் கோளத்தில் புறப்படுகின்ற காற்று வடக்கு நோக்கி வீசுகின்றது. இந்தக் காற்று பூமியின் சுழற்சி காரணமாக தென்மேற்காக திசை திருப்பப்படுகின்றது. அவ்வாறு திசை திருப்பப்பட்ட காற்று அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் ஆகிய மூன்று […]

ரமலான் நம்மைப் பண்படுத்தியதா?

ரமலான் நம்மைப் பண்படுத்தியதா? அல்லாஹ்வின் பேரருளால் இந்த வருட ரமலான் மாதம் வந்ததே தெரியாத அளவுக்கு மிக வேகமாக நம்மை விட்டுக் கடந்து சென்று விட்டது. காலங்கள் செல்லச்செல்ல அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு வருடந்தோறும் ரமலான் மாதம் வருவதும் போவதுமாக இருந்து வருவதைப் பார்க்கின்றோம். அதே சமயம் முஸ்லிம்களில் சிலரிடம், அற்புதமான புனிதம் நிறைந்த ரமலான் மாதம், அருள் பொங்கும் புனிதம் நிறைந்த ரமலான் மாதம், நம்முடைய பாவங்களை எல்லாம் கழுவி சுத்தப்படுத்த வந்த […]

கொள்கை மட்டும் போதுமா? தொழுகை மிகவும் அவசியம்!

கொள்கை மட்டும் போதுமா? தொழுகை மிகவும் அவசியம்! இணை வைப்பு எனும் ஷிர்க் இல்லையென்றால் நமக்கு சுவர்க்கம் நிச்சயம் என்ற நம்பிக்கை நம் மக்களிடம் நன்கு ஆழப் பதிந்து விட்டது. 4:116 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا‏ தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு […]

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்- (ஹஜ்)

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்- (ஹஜ்) ஹஜ் என்ற வணக்கத்தின் கடமையைப்  பற்றி  அல்லாஹ் பின்வரும்  வசனத்தில் குறிப்பிடுகின்றான். 3:97   فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏ அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக […]

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்- (ஜகாத்)

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம் (ஜகாத்) இஸ்லாமியக் கடமைகள் ஐந்து. அவற்றில் ஜகாத்தும் ஒரு கடமையாகும். திருக்குர்ஆனில் அல்லாஹ் தொழுகையைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ஜகாத்தையும் சேர்த்தே குறிப்பிடுகின்றான். 2:43 وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِيْنَ‏ தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்! (அல்குர்ஆன்:2:43) இதுபோன்று ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெறுகின்றன. இதன் அடிப்படையில் மக்கள் ஜகாத் வழங்குகின்றார்கள். ஆனால் அதிலும் மக்கள் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள். உதாரணமாக, […]

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்! (ரமலான்)

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்! சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் இஸ்லாம் ஓர் எளிய  மார்க்கமாகும். ஆனால் அது நடைமுறையில் கடினமான மார்க்கமாக ஆக்கப்பட்டு விட்டது. மார்க்கம் மக்களுக்கு இரண்டு துறைகளில் சட்ட திட்டங்களையும் வழிகாட்டல்களையும் அளித்திருக்கின்றது. வணக்கவியல், வாழ்வியல். வணக்கவியல் என்றால் உலூ, தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களைக் குறிக்கும். வாழ்வியல் என்றால் திருமணம், விவாகரத்து, மரணம், பாகப்பிரிவினை, வணிகம், விவசாயம் போன்றவற்றைக் குறிக்கும். வணக்கவியல், வாழ்வியலுக்கு இது ஒரு சுருக்கமான விளக்கமாகும். இவ்விரண்டு துறைகளிலும் […]

ரமளானே வருக! வருக!

ரமளானே வருக! வருக! இந்த உலகத்தில் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் ஏராளமான நல்லமல்களைச் செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டிருக்கின்றான். அவ்வாறு நல்லமல்களை நம்முடைய வாழ்க்கையில் செய்து வந்தால் நாளை மறுமையில் மகத்தான கூலி கிடைக்கும் என்றும் இறைவன் உத்தரவாதம் அளிக்கின்றான். மனிதர்களுக்கு, தங்களுடைய வாழ்க்கையில் காலத்தைக் கணக்கிடுவதற்காக சில மாதங்களை இறைவன் வழங்கியிருக்கின்றான். இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற மாதங்களில் சில மாதங்களை புனித மாதமாகவும், சில மாதங்களில் நாம் செய்கின்ற நல்லமல்களுக்கு மேலதிகமான நன்மைகளை […]

இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவுத்தொழுகை

இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவுத்தொழுகை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் இந்த உலகத்தில் மனிதர்களைப் படைத்து, படைக்கப்பட்ட மனிதர்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக ஏராளமான வழிமுறைகளையும், அமல்களையும் கற்றுத் தருகின்றான். இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்ற அமல்களில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகை. முஸ்லிம்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. கடமையான தொழுகையை தொழாமல் விடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என இஸ்லாம் கூறுகின்றது. […]

பருவ மழையும் பரவும் நோய்களும்

பருவ மழையும் பரவும் நோய்களும் ‘வாராது வந்த மாமணியே!’ என வடகிழக்குப் பருவமழையை நாம் வரவேற்றுக் கொண்டிருக்கிறோம். வானிலை ஆய்வு அறிவித்தபடி அக்டோபர் 17-2019 அன்று முதல் மழை துவங்கி விட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியை நீங்கள் அறிவீர்கள். அல்லாஹ்வின் அருளால் வறட்சியைப் போக்கும் விதமாக, பருவமழைக் காலம் நமக்கு முன்னால் வந்திருக்கின்றது. ஒவ்வொரு பருவமழையின் போதும் ‘சென்ற ஆண்டு பெய்த பருவமழையைக் காட்டிலும்  இந்த ஆண்டு பெய்த மழையளவு சதவிகிதம் குறைவு’ என வானிலை ஆய்வு […]

கோடை வெயிலில் கல்வி தாகம்

கோடை வெயிலில் கல்வி தாகம் கோடை வெயில் தனது வேலையை மிகக் கச்சிதமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஓரிரு மணி நேரங்களுக்கு மேல் வாகனங்களில் பயணிக்க முடியவில்லை. ஒரு தர்பூசணியை உள்ளே அனுப்பினால் தான் நம்முடைய ஆற்றலை ஒருசில மணி நேரத்திற்காவது தக்க வைக்க முடியும். வெயில் அதிகமாவதைப் போன்றே நம் குழந்தைகளின் மீதுள்ள அக்கறையும் அதிகரிக்கிறது. கோடை விடுமுறை வேறு வந்து விட்டது. இனி இரண்டு மாதங்களுக்குக் குழந்தைகள் நம்முடன் தான் இருப்பார்கள். நம்முடன் இருப்பதை விட […]

இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே!

இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே! தீவிரவாதம் என்றால் அது திருப்பி விடப்படுவது இஸ்லாத்தை நோக்கித் தான்! பயங்கரவாதம் என்றால் பார்க்கப்படுவது இஸ்லாம் தான்! சுருங்கக் கூறின் இஸ்லாம் ஒரு கொடிய மார்க்கம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். தொழுகைக்கான பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள். […]

அருள் பொங்கும் மாதமே! வருக!

அருள் பொங்கும் மாதமே! வருக! இறைவனின் மாபெரும் உதவியால் இந்த வருடமும் ரமளான் மாதத்தை முஸ்லிம்களாகிய நாம் அடைந்திருக்கின்றோம். அருள் பொங்கும்மாதம்! பாவங்களைக் கழுவி மனிதர்களை சுத்தப்படுத்துகின்ற மாதம்! அமல்களைஅதிகரிக்கச் செய்கின்ற மாதம்! ‘பொறுமையைப் போதிக்கின்றமாதம்! இறையச்சத்தை ஊட்டுகின்ற மாதம்! வணக்க வழிபாடுகளில்அக்கறை செலுத்தவைக்கின்ற மாதம்! இது போன்ற ஆயிரமாயிரம் குணாதிசயங்களைக்கொண்ட சிறப்பிற்குரிய ரமளானில் நாம் பாதப்படிகளை எடுத்துவைத் திருக்கின்றோம். ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் நம்மிடத்தில்வந்து செல்கின்றது. ஒவ்வொரு வருடமும் ரமளான் நம்மிடத்தில் வரும்போதும் ஒரு […]

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும்

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும் 11:25 وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اِنِّىْ لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ‏ 11:26 اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ‌ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ اَلِيْمٍ 11:27 فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰٮكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰٮكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِيْنَ هُمْ اَرَاذِلُــنَا بَادِىَ الرَّاْىِ‌ۚ وَمَا نَرٰى لَـكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ […]

மாநபி வழியில் மழைத் தொழுகை

மாநபி வழியில் மழைத் தொழுகை நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். பின்வரும் ஹதீஸிலிருந்து மழைத் தொழுகை முறைகளை நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம். حدثنا هارونُ بنُ سعيد الأيلي، حدثنا خالدُ […]

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா? கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன. எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது. நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! […]

அல்குர்ஆனும் அருள்மிகு ரமளானும்

அல்குர்ஆனும் அருள்மிகு ரமளானும் அற்புத அல்குர்ஆன் வழங்கப்பட்ட அருள்மிகு ரமளான் வந்து விட்டது. ஐவேளைத் தொழுகைகளிலும் பள்ளிவாசல் நிரம்பி வழியத் துவங்கி விடும். கடமையான தொழுகைக்கு வருகிறார்களோ இல்லையோ தராவீஹ் என்றழைக்கப்படும் இரவுத் தொழுகைக்கு ஒரு சாரார் வந்து விடுவர். அதில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு நிம்மதி இருக்காது. இன்னொரு சாரார் ஆரம்ப மூன்று நாட்கள் வந்து கலந்து கொண்டு ரமளான் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு சென்று விடுவார்கள். அதன் பிறகு மாதக் கடைசியில் […]

மூடநம்பிக்கைகள் நுழைந்துவிட்ட முஹர்ரம் மாதம்!

முஹர்ரம் மாதம் إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ سورة التوبة வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் […]

ஹிஜ்ரி ஆண்டு உருவான வரலாறு

ஹிஜ்ரி ஆண்டு உருவான வரலாறு ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தைப் பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு. (கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இஸ்லாமியர்கள் ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது? என்பது இஸ்லாமியர்களில் பலருக்கே தெரியாது. இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி […]

பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் ஷவ்வால் பிறை ஒன்றிலும் துல்ஹஜ் பிறை 10 அன்றும் இஸ்லாமியர்களின் பெருநாட்களாக நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். அன்றைய தினம் சிறப்புத் தொழுகையை இரண்டு ரக்அத்கள் நிறைவேற்றுமாறும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். தொழுகை நேரம் சூரியன் உதித்த பின்னர் இத்தொழுகைகள் நிறைவேற்ற வேண்டும். அதிக கால தாமதம் செய்யக் கூடாது. 956- حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ : […]

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை தாக்குதல்

முன்னுரை இன்று இஸ்லாமிய மார்க்கத்தின் மீது சேற்றை வாரியிறைப்பதற்கு எதிரிகள் பயன்படுத்தும் மிக முக்கியமான ஆயுதம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் தற்கொலைத் தாக்குதல்கள் ஆகும். அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் மீது நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு மேற்கத்திய ஊடகங்களின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம் மிகத் தீவிரமடைந்தது. இன்றளவும் இராக், சிரியா, பாலஸ்தீனம், பாகிஸ்தான் என முஸ்லிம் நாடுகளில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்கள் முஸ்லிமல்லாதவர்களிடம் இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. […]

மே மாதம் – அன்னையர் தினமும் அன்னையர்கள் நிலையும்!

முன்னுரை வருடந்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் இதற்கு ஒரு நாள் முன்பின்னாக கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவைச் சார்ந்த ஜார்விஸ் என்ற சமூக சேவகி இறந்த பின்பு (1904) அவர்களது மகள் அனாஜார்விஸ் என்ற பெண்மணி தன் தாய் நினைவாக தமதூரில் உள்ள தேவாலயத்தில் (1908) மே மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தன் அன்னையைப் பாராட்டி நினைவு கூர்ந்து சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். இதுவே அன்னையர் தினக் […]

ஹஜ்ஜில் சலுகைகள்

முன்னுரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த ஹஜ் வணக்கத்தில் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளார்கள்.  ஹஜ் என்பது இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். இந்தக் கடமையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு நிறைவேற்றுகிறார்கள். தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வணக்கங்களின் செயல்முறையை இந்தப் பத்தாண்டுகளில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட நபித்தோழர்களுக்கு, ஹஜ் என்ற வணக்கத்தின் செயல்முறை மட்டும் நிலுவையில் இருந்தது. அதை நிறைவேற்றும் முகமாக நபி (ஸல்) அவர்கள் பயணத்தைத் துவக்கியதும் […]

துல் ஹஜ் – ஊர் மெச்ச ஒட்டகக் குர்பானி

முன்னுரை எந்த ஒரு வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும். பிறருக்காக செய்யப் படும் வணக்கங்கள் நம்முடைய பார்வையில் வணக்கமாகத் தெரிந்தாலும் இறைவனுடைய பார்வையில் அவை வணக்கமாகக் கருதப்படாது. அத்துடன் மட்டுமின்றி மறுமையில் அது தீய செயலாகவும் கருதப்பட்டு, நரகத்திற்குச் செல்ல வழி வகுத்து விடும். எனவே மக்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக எந்தவொரு அமலையும் செய்வது இறைவனிடம் கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். இன்று ஹஜ் மற்றும் குர்பானி போன்ற வணக்கங்கள் பேருக்காகவும் புகழுக்காகவும் செய்யப்பட்டு […]

ஷவ்வால் – என்றும் தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை

முன்னுரை நம்மிடம் வருகை தந்த இனிய ரமளான் நமக்குத் தலை சிறந்த பள்ளிக்கூடமாகத் திகழ்ந்தது. அந்தப் பள்ளிக்கூடம் நம்மைக் குர்ஆனுக்கு மிக அருகில், அண்மையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இரவுத் தொழுகைகளின் மூலம் குர்ஆனுடன் உளப்பூர்வமான உறவையும் ஒன்றுதலையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த இரவுத் தொழுகையை நாம் இஷாவுக்குப் பிறகு தொழுது கொண்டிருக்கிறோம். ஆனால் இதை ஸஹர் நேரத்தில் தொழுவது மிகவும் சிறந்ததாகும். பின்னேரம், ஸஹர் நேரமே சிறந்தது 2010 – وَعَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ عُرْوَةَ […]

ரபீயுல் அவ்வல் மாதத்தின் சிறப்பு பஜனைகள்!

பஜனை மவ்லிதுகள் பகிரப்படும் நேர்ச்சைகள் மார்கழிப் பனி மச்சைத் துளைக்கும்; தைப் பனி தரையைத் துளைக்கும் என்பார்கள். மார்கழி, தை மாதங்களின் பனி மச்சைத் துளைக்கிறதோ இல்லையோ காதைத் துளைத்து விடுகின்றது. காரணம் இம்மாதங்களில் சந்திக்குச் சந்தி, சன்னதிக்குச் சன்னதிகளில் கட்டப்பட்டிருக்கும் கூம்பு வடிவக் குழாய்கள் பல்வேறு கடவுள்களின் பெயரால் கொட்டுகின்ற பஜனைப் பாடல்கள் நம்முடைய செவிப்பறைகளைக் கிழித்து விடுகின்றன. இதய நோயாளிகளை இம்சைப்படுத்தி விடுகின்றன. இவ்வாறு செய்வதற்குக் காரணம், படுத்துக் கிடக்கும் கடவுள்களை இந்தப் பாடல்கள் […]

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர். குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர். இது […]

முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை என்ன? இப்போது முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதைப் பார்ப்போம். இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பவை 1. மீன் சாப்பிடக் கூடாது முஸ்லிம்களின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதம் வந்து விட்டால் பிறை 1 முதல் 10 வரை மீன் மற்றும் கருவாடு சாப்பிடாத திடீர் பிராமணர்களாக மாறி விடுவார்கள். 2. தாம்பத்தியத்திற்குத் தடை முஹர்ரம் பத்து வரை தம்பதிகளைத் தாம்பத்தியத்தில் ஈடுபட விடாமல் […]

Next Page »