Tamil Bayan Points

Category: நம்பிக்கை தொடர்பானவை

q115

அல்லாஹ் தாயை விட 70 மடங்கு அன்புள்ளவன் என்பதன் விளக்கம் என்ன?

அல்லாஹ் தாயை விட 70 மடங்கு அன்புள்ளவன் என்றால் குர்ஆனில் அளவற்ற அருளாளன் என்பதன் பொருள் என்ன? பதில் : அல்லாஹ் அடியார்களிடம் எவ்வளவு அன்பு செலுத்துகிறான் என்பது தொடர்பாக நபிமொழிகளில் வந்துள்ள செய்திகள் : صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (8/ )123 6469- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو ، عَنْ سَعِيدِ […]

ஐந்து கலிமாக்கள் இஸ்லாத்தில் உண்டா?

ஐந்து கலிமாக்கள் இஸ்லாத்தில் உண்டா? ஐந்து கலிமாக்கள் உள்ளதாகக் கூறுவோர் சில சொற்களை உண்டாக்கி கலிமா தய்யிப், கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீது, கலிமா தவ்ஹீது, கலிமா ரத்துல் குஃப்ர் என்று பெயர் வைத்துள்னர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருப்பதாக நம்புவது பித்அத் எனும் வழிகேடும் பாவமும் ஆகும். ஐந்து கலிமாக்கள் என்று இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளதில் நான்காவது மற்றும் ஐந்தாவது கலிமாக்களில் உள்ள வாக்கியங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதே இல்லை. […]

தொற்று நோய் உண்டா?

இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. حدثنا عبد العزيز بن عبد الله حدثنا إبراهيم بن سعد عن صالح عن ابن شهاب قال أخبرني أبو سلمة بن عبد الرحمن وغيره أن أبا هريرة رضي الله عنه قال إن رسول الله […]

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

இறந்தவர்கள் செவியேற்பார்களா? மரணித்தவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை. அவர்கள் எதையும் செவியுற மாட்டார்கள். அவர்களுக்கு எந்த ஆற்றலும் கிடையாது.  இறைவன் சொல்லிக் காட்டுகிறான்… கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். (அல்குர்ஆன்:46:5.) மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ், தன்னை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களை மறுமை நாள் வரும் வரை அழைத்தாலும் அவர்கள் உங்களது அழைப்பை ஒருபோதும் செவியேற்க மாட்டார்கள். […]

ஸபீலுல் முஃமினீன் – நம்பிக்கையாளர்களின் வழி என்றால் எது?

ஸபீலுல் முஃமினீன் – நம்பிக்கையாளர்களின் வழி என்றால் எது? வஹீ எனும் இறைச்செய்தியையே முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். வஹீ அல்லாத எதுவாயினும் அது பின்பற்றத்தக்கதல்ல என்பதோடு அவைகளைப் பின்பற்றுவது வழிகேடு.! இறைச்செய்தியை மட்டுமே பின்பற்றுதல் எனும் நேர்வழியில் முஸ்லிம்கள் நாமனைவரும் ஒன்றுபடுவோம் என்ற அழைப்பை தமிழ் பேசும் முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து நாம் விடுத்து வருகிறோம். அநேக மக்கள் இந்த சத்தியப் பிரச்சாரத்தில் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். முன்னோர்களைப் பின்பற்றுதல், இமாம்களைப் பின்பற்றுதல், நபித்தோழர்களைப் பின்பற்றுதல் என்பன போன்ற […]

கண்ணேறு – (கண் திருஷ்டி) பாதிப்பை உண்டாக்குமா?

கண்ணேறு – (கண் திருஷ்டி) பாதிப்பை உண்டாக்குமா? ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத, மறுக்கப்பட வேண்டிய செய்திகளில் கண்ணேறு பற்றிய செய்தியும் ஒன்றாகும். (கண்ணேறு, கண்ணூறு, கண்படுதல், கண் திருஷ்டி என்றும் சொல்லப்படும்) புனித அல்குர்ஆனின் கருத்துக்களுக்கு மாற்றமாக இருப்பதினால் சூனியம் பற்றிய செய்திகள் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அமைந்திருப்பதைப் போல் கண் திருஷ்டி பற்றிய செய்திகளும் புனித குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக அமைந்திருப்பதினால் ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக அமைந்திருக்கின்றது. கண் திருஷ்டி பற்றிய செய்திகளை […]

நபிமார்கள்  கப்ரில் தொழுகிறார்களா?

நபிமார்கள்  கப்ரில் தொழுகிறார்களா? நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு நபிமார்கள் நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று தீய கொள்கையுடையோர் வாதிடுகின்றனர். நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் அறிவிக்கப்படும் செய்திகளில் மூஸா நபி தொடர்பான செய்தியைத் தவிர மற்ற அனைத்தும் தவறான அறிவிப்புகளாகும். மூஸா நபி அவர்கள் கப்ரில் தொழுததைப் பார்த்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக […]

ஜின்களுக்கு இறைதூதர் யார்?

ஜின்களுக்கு இறைதூதர் யார்? பதில் நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால், ஜின்களுக்கென்று தனியாக இறைதூதர்கள் வந்தனர். இதற்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உள்ளது. ஜின், மனித சமுதாயமே! “உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?” (என்று இறைவன் கேட்பான்). “எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. “(ஏகஇறைவனை) மறுத்தோராக இருந்தோம்” எனத் […]

கேட்பவர் பதில் தருவாரா?

முன்னுரை பிரார்த்தனையை இறந்தவர்களால் கேட்கவும் பதில்தரவும் முடியாது. இன்று நம் சமுதாயத்தில் பல மக்கள் இறந்து போனவர், மகான் என்று கருதி அவரிடத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். சிலர் அல்லாஹ்விடம் அவர் பரிந்துரை செய்வார். வாங்கித் தருவார் என்று நம்புகின்றனர். இறந்தவர்கள் பற்றி திருக்குர்ஆன் நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அல்குர்ஆன் (27 : 80) உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாகமாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. அல்குர்ஆன் […]

மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்?

மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்? தெரியாது. மறுமை நாளில் இறைவன் எல்லோரிடமும் நேரடியாகப் பேசுவான். அவனுடைய பேச்சை எல்லோரும் அறிந்து கொள்வர். 7443 حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي الْأَعْمَشُ عَنْ خَيْثَمَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلَا […]

நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா? அல்லாஹ்வை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது. எந்த மனிதனோ, அல்லாஹ்வின் தூதர்களோ அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும். அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். திருக்குர்ஆன் 6:103 முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான். எனினும் அவர்கள் […]

மறைவான விஷயங்களை இறைநேசர்களுக்கு அல்லாஹ் இல்ஹாம் மூலம் அறிவித்து கொடுப்பானா?

மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. எனினும் நபிமார்களுக்கு வஹீயின் மூலமாகவும், இறை நேசர்களுக்கு (இல்ஹாம் எனும்) உதிப்பின் மூலமாகவும் பொதுமக்களில் சிலருக்கு சில அடையாளங்கள் மூலமாகவும் மறைவான விஷயங்களை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கின்றான் என்று சிலர் கூறுகின்றார்கள். இது மார்க்க அடிப்படையில் சாத்தியமானது தானா? ! மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்று அல்லாஹ் தெளிவாகத் தனது திருமறையில் அறிவித்து விட்டான். “வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர […]

உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா?

உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா? இஸ்லாத்தின் உயிர் மூச்சான கொள்கை ஏகத்துவக் கொள்கையாகும். இந்த ஏகத்துவக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் எந்தச் செயலுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இறந்தவர்களுக்காக நினைவுச் சின்னம் எழுப்புவது ஏகத்துவக் கொள்கைகயை குழி தோண்டி புதைக்கும் விதமாக தோற்றுவிக்கப்பட்ட பிறமதக் கலாச்சாரமாகும். நாளடைவில் அவற்றுக்கு புனிதத்தன்மை இருப்பதாகக் கருதி அவற்றை வணங்கும் நிலைக்கு மக்கள் சென்றுவிடுவர். இதனால் தான் நபிகள் நாயகம் தமக்கோ தமக்கு முன் வாழ்ந்து மறைந்த நல்லோர்களுக்கோ […]

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே இறைவா உனது நபியின் பொருட்டாலும், எனக்கு முன் சென்று விட்ட நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் ஃபாதிமா பின்த் அவர்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்குவாயாக என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிரார்த்தனை செய்த ஹதீஸ் தப்ரானியில் உள்ளதாகவும், பெரியார்களின் பொருட்டால் வசீலா தேடலாம் என்ப்தற்கு இது ஆதாரம் என்று சொகிறார்களே அது உண்மையா முஹம்மத் இஹ்ஸாஸ், இலங்கை பதில் நீங்கள் சுட்டிக் காட்டும் ஹதீஸ் இது தான் […]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர்களா? மதீனாவில் நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தன் பெயரைப் பற்றி கூறும் போது, நபியுத்தவ்பா என்பதையும் கூறியதாக ஹுதைஃபா (ரலி) அறிவிக்கும் செய்தி முஸ்லிம், திர்மிதீ போன்ற நூல்களில் உள்ளது. நபியுத்தவ்பா (மன்னிக்கும் நபி) என்று நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பற்றி கூறியுள்ளார்கள். இதைத் தானே மவ்லூதில் ஓதுகின்றார்கள். இது சரியா? ரா. ரிஸ்வான் அஹ்மத், தஞ்சாவூர் தாங்கள் குறிப்பிடும் ஹதீஸ் ஹுதைஃபா […]

நபியின் பரிந்துரை வேண்டுவது தவறா?

நபியின் பரிந்துரையை வேண்டுவது தவறா? அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய பரிந்துரை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தியின் விளக்கம் என்ன? பதில் இறைவா மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எனக்குக் கொடு என்று பிரார்த்தனை செய்யும் முறை பரவலாக முஸ்லிம்களிடம் உள்ளது. மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை பெரும் பாக்கியவான்களுக்குத் தான் கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் நபிமொழிகளை ஆராயும் போது இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானது […]

இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன?

இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன? கலிமா சொன்ன ஒரு முஸ்லிம் இணைவைத்துவிட்டால் அதற்கு பரிகாரம் செய்து மீண்டும் இஸ்லாத்தில் நுழைய முடியுமா? பதில் இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் இணைவைத்து விட்டால் அவர் இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியேறி விடுகின்றார். இவர் மீண்டும் இஸ்லாத்தில் இணையவேண்டுமானால் முதலில் இவர் செய்து கொண்டிருந்த இணைவைப்புக் காரியத்திலிருந்து முழுவதுமாக விடுபடவேண்டும். இந்த பாவத்துக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு லாயிலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு தகுதியானவர் இல்லை) என்று […]

உமர் (ரலி) க்கு மறைவான விஷயம் தெரியுமா

உமர் (ரலி) க்கு மறைவான விஷயம் தெரியுமா? உமர் (ரலி) ஆட்சியின் போது அவர்கள் அனுப்பிய ஒரு படையினரை மலைக்குப் பின்புறமிருந்து எதிரிப்படையினர் தாக்க முயன்ற போது உரை நிக்ழ்த்திக் கொண்டிருந்த உமர் ரலி அவர்கள் மலை ஜாக்கிரதை என்று குரல் கொடுத்ததாகவும் அந்த உரை அந்தப் படையினருக்கு கேட்டதாகவும் சில இமாம்கள் உரை நிகழ்த்துகிறார்கள். இது உண்மையா பதில் நீங்கள் கூறும் செய்தி அபூ நுஐம் உஸ்புஹானீ என்பவர் தொகுத்த தலாயிலுன் நுபுவ்வா எனும் நூலிலும் […]

இணைகற்பித்தவருக்கு துஆ செய்யலாமா

இணைகற்பிப்பவர்களுக்காக துஆ செய்யலாமா? என் உறவுப் பெண்கள் சிலர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியங்களைச் செய்கிறார்கள் நானும் என் மனைவியும் தவ்ஹீத் கொள்கையை இயன்றவரைப் பின்பற்றி வாழ்வதை என் உறவுப் பெண்கள் நன்றாக அறிவார்கள் . அவர்களுக்காக நான் துவா செய்யலாமா? எந்த மாதுரி துவா செய்ய மார்க்கத்தில் அனுமதி உள்ளது? பதில் இணைவைப்பவர்களாகவே மரணித்தவர்களின் மறுமை வெற்றிக்காக பிரார்த்தனை செய்வதை மார்க்கம் தடை செய்துள்ளது. அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்றோ, அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்க […]

ஒருவர் அற்புதம் செய்வது வேறு! அவரிடம் அற்புதம் நிகழ்வது வேறு!

ஒருவர் அற்புதம் செய்வது வேறு! அவரிடம் அற்புதம் நிகழ்வது வேறு! நபிமார்கள் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் எதுவும் அவர்களால் செய்யப்பட்டவை அல்ல. அற்புதங்கள் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாக வழங்கப்படவும் இல்லை. மக்கள் முன்னிலையில் அற்புதம் செய்துகாட்ட அல்லாஹ் நாடும் போது நபிமார்கள் வழியாக நிகழ்த்திக் காட்டினான் என்பது தான் அற்புதங்களைப் புரிந்து கொள்ளும் சரியான முறையாகும். ஒருவர் ஒரு காரியத்தை தாமாகச் செய்வதற்கும், அச்செயல் அவரிடம் வெளிப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் புரிந்து […]

அவ்லியாக்களின் கை அல்லாஹ்வின் கையா?

அவ்லியாக்களின் கை அல்லாஹ்வின் கையா? மகான்கள் அற்புதம் செய்ய வல்லவர்கள் என்றும், நினைத்ததைச் செய்து முடிப்பவர்கள் என்றும் கருதக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் […]

அடக்கத்தலத்தில் மண்ணை அதிமாக்கத் தடை!

அடக்கத்தலத்தில் மண்ணை அதிமாக்கத் தடை! ஒருவரை அடக்கம் செய்யும் போது குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை விட சிறிதளவும் அதிகமாக்கக் கூடாது என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். سنن النسائي (4/ 86) 2027 – أخبرنا هارون بن إسحاق قال حدثنا حفص عن بن جريج عن سليمان بن موسى وأبي الزبير عن جابر قال : نهى رسول الله صلى الله […]

சமாதி கட்டலாகாது என்பது கருத்து வேறுபாடில்லாத சட்டம்

சமாதி கட்டலாகாது என்பது கருத்து வேறுபாடில்லாத சட்டம் இறந்தவர்களின் அடக்கத்தலத்தில் வழிபாட்டுத்தலம் எழுப்புவதும், சமாதிகள் பூசப்பட்டுவதும் ஆரம்பகால முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. ஆரம்பகால முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் இதை ஏகமனதாகக் கண்டித்துள்ளனர். இது பிற்காலத்தில் உருவான தீய செயலாகும். இது குறித்து ஹிஜ்ரி 1200களில் வாழ்ந்த இமாம் ஷவ்கானி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். شرح الصدور بتحريم رفع القبور (ص: 8) فنقول: اعلم أنه قد اتفق الناس، سابقهم ولاحقهم، وأولهم وآخرهم من […]

நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா?

நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா? நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு சில அற்புதங்களைச் செய்து காட்டியதற்கு ஆதாரம் உள்ளது. இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அல்லாஹ்வின் அனுமதியுடன் சில அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. இப்படி யாருக்கு அல்லாஹ் அனுமதி அளித்ததாக ஆதாரம் உள்ளதோ அவர்களைத் தவிர மற்ற யாரும் அற்புதங்கள் செய்ய முடியாது. நபித்தோழர்களோ, மற்ற நல்லடியார்களோ தாம் வாழும் காலத்தில் செய்தததாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அற்புதங்கள் அனைத்தும் கட்டுக் கதைகளாகும். ஏனெனில் ஒருவர் அற்புதம் […]

இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அற்புதங்கள் செய்வது எப்படி?

இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அற்புதங்கள் செய்வது எப்படி? அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் சூனியத்துக்கு ஆற்றல் இல்லை என்று நாம் கூறி வருகிறோம். சூனியக்காரன் எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று நம்புவது அவனை அல்லாஹ்வைப் போல் கருதியதாக ஆகும் என்று நாம் கூறுகிறோம். இந்த வாதத்துக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் சில எதிர்க் கேள்விகளையே இதற்கு பதிலாக முன்வைக்கிறார்கள். அல்லாஹ்வைப் போல் […]

கப்ரை முத்தமிடலாமா?

கப்ரை முத்தமிடலாமா? தவ்ஃபீக் பதில் பெரும்பாலும் இணைவைப்புக் காரியங்கள் இறந்தவர்களின் பெயராலே அரங்கேற்றப்படுவதால் இவ்விஷயத்தில் இஸ்லாம் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது. கப்றுக்கு மேல் கட்டிடம் எழுப்பக்கூடாது. கப்றை பூசக்கூடாது. கப்றை உயரமாக்குவது கூடாது. புனிதம் கருதி கப்றுக்கு அருகில் அமரக்கூடாது. கப்றை நோக்கித் தொழக்கூடாது என்றெல்லாம் இஸ்லாம் தடை விதித்துள்ளது. இஸ்லாம் கூறும் இந்த விதிமுறைகளை அனைவரும் சரியாக்க் கடைபிடித்தால் எந்தக் கப்றும் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. சில நாட்களிலேயே கப்று இருந்த இடம் தெரியாமல் போய்விடும். […]

தர்காக்களில் ஜியாரத் செய்யலாமா

தர்காக்களில் ஜியாரத் செய்யலாமா மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர். حدثنا أبو بكر بن أبي شيبة وزهير بن حرب قالا حدثنا محمد بن عبيد عن يزيد بن كيسان عن أبي حازم عن أبي هريرة قال زار النبي صلى الله عليه وسلم قبر أمه فبكى وأبكى من حوله فقال استأذنت ربي في أن […]

தர்காக்களில் அற்புதம் நடக்கவில்லையா?

தர்காக்களில் அற்புதம் நடக்கவில்லையா? கராமத் எனும் கட்டுக்கதையை நம்பக்கூடியவர்கள் ஏற்கத்தக்க எந்த ஆதாரத்தையும் காட்டாமல் தர்காக்களில் எத்தனையோ பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றன என்ற பொய்யான தத்துவத்தைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றனர். எந்த மகானாக இருந்தாலும் உயிருடன் இருக்கும் போது கூட எந்த அற்புதத்தையும் செய்ய முடியாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடாக இருக்க மரணித்த பின் அவர்கள் அற்புதம் நிகழ்த்தினார்கள் என்று எப்படி முடிவு செய்தனர்? மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, […]

கப்ரின் மேல் எழுதக் கூடாது

கப்ரின் மேல் எழுதக் கூடாது سنن النسائي (4/ 86) 2027 – أخبرنا هارون بن إسحاق قال حدثنا حفص عن بن جريج عن سليمان بن موسى وأبي الزبير عن جابر قال : نهى رسول الله صلى الله عليه و سلم أن يبني على القبر أو يزاد عليه أو يجصص زاد سليمان بن موسى أو يكتب عليه – […]

கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல்

கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல் ஒருவரை அடக்கம் செய்த பின் அந்த இடத்துக்குப் போய் ஸியாரத் செய்து துஆ செய்ய வேண்டும் என்று விரும்புவது முஸ்லிம்களின் இயல்பாக உள்ளது. அடக்கம் செய்து சில நாட்கள் இவ்வாறு விரும்புவார்கள். காலாகாலத்துக்கும் அவ்வாறு விரும்ப மாட்டார்கள். இதற்காகக் கப்ரைக் கட்டுவதோ, எழுதுவதோ கூடாது. மாறாக அந்த இடத்தில் ஒரு பாராங்கல்லைப் போட்டு வைத்து அடையாளம் காண அனுமதி உள்ளது. حدثنا عبد الوهاب بن نجدة ثنا سعيد […]

கப்ருகள் மீது கட்டடம் எழுப்பக் கூடாது

கப்ருகள் மீது கட்டடம் எழுப்பக் கூடாது ஒருவரை அடக்கம் செய்த இடத்தை சிமெண்ட் போன்ற பொருட்களால் கட்டக் கூடாது என்றால் அவரை அடக்கம் செய்த இடத்தைச் சுற்றி சுவர் எழுப்பி தர்கா எனும் கட்டடம் கட்டுவது கூடவே கூடாது என்பது உறுதியாகிறது. இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான வார்த்தைகளாலும் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். 427 – حدثنا محمد بن المثنى، قال: حدثنا يحيى، عن هشام، قال: أخبرني أبي، […]

கட்டப்பட்ட சமாதிகளை இடிக்க வேண்டும்

கட்டப்பட்ட சமாதிகளை இடிக்க வேண்டும் மேலும் நமது முன்னோர்கள் அவ்வாறு கட்டிச் சென்றிருப்பார்களானால் நமக்குச் சக்தியும், அதிகாரமும் இருந்தால் அவற்றை இடித்துத் தள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். حدثنا يحيى بن يحيى وأبو بكر بن أبى شيبة وزهير بن حرب قال يحيى أخبرنا وقال الآخران حدثنا وكيع عن سفيان عن حبيب بن أبى ثابت عن أبى وائل عن أبى الهياج الأسدى […]

குகைவாசிகள் மீது கட்டப்பட்ட தர்கா ஆதாரமாகுமா?

குகைவாசிகள் மீது கட்டப்பட்ட தர்கா ஆதாரமாகுமா? தெளிவான வார்த்தைகளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்கா கட்டுவதைத் தடுத்த பின்பும் பொருத்தமில்லாத வாதங்களை வைத்து தர்கா கட்டலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். குகைவாசிகள் பற்றிய பின்வரும் வசனத்தை தர்கா கட்டலாம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், யுகமுடிவு நேரம் சந்தேகம் இல்லாதது என்பதையும் அறிந்து கொள்வதற்காக (குகைவாசிகளைப் பற்றி) அவர்களுக்கு இவ்வாறே வெளிப்படுத்தினோம். அப்போது அவர்கள் தமக்கிடையே முரண்பட்டனர். “அவர்கள் மீது ஒரு […]

சமாதியில் சாயக் கூடாது என்பது தர்காவுக்கு ஆதாரமாகுமா?

சமாதியில் சாயக் கூடாது என்பது தர்காவுக்கு ஆதாரமாகுமா? சமாதிகளைக் கட்டக் கூடாது; உயர்த்தக் கூடாது; பூசக்கூடாது என்று தெளிவான தடை இருந்தும் எப்படியாவது சமாதி கட்டுவதற்கு ஆதாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சித்து பின்வரும் ஹதீஸைக் கண்டு பிடித்துள்ளார்கள். حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنَا بَكْرُ بْنُ سَوَادَةَ عَنْ زِيَادِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ أَنَّ ابْنَ حَزْمٍ إِمَّا عَمْرٌو وَإِمَّا عُمَارَةُ قَالَ رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ […]

நபிமார்களும், அவ்லியாக்களும் அல்லாஹ்வின் சின்னங்களா?

நபிமார்களும், அவ்லியாக்களும் அல்லாஹ்வின் சின்னங்களா? நபிமார்கள், நல்லடியார்கள், மகான்கள் என்போர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களாவர். அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை முஸ்லிம்கள் கண்ணியப்படுத்துவது இறையச்சத்தின் வெளிப்பாடாகும் என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். எனவே அவர்களுக்கு நாம் தர்கா கட்டலாம் என்றும் ஆதாரம் காட்டுகின்றனர். அல்லாஹ்வின் சின்னங்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அல்லாஹ்வின் சின்னம் எது? என்பதையும் அதை எவ்வாறு கண்ணியப்படுத்தப்பட வேண்டும்? என்பதையும் அல்லாஹ்வும், அவனது தூதரும்தான் கற்றுத்தர வேண்டும். ஸஃபா, மர்வா ஆகிய […]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ர் உயரமாக இல்லையா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ர் உயரமாக இல்லையா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரும், சில நபித்தோழர்களின் கப்ருகளும் உயரமாக இருந்ததாகக் கூறப்படும் அறிவிப்புகளையும் தர்கா கட்டுவதற்கு ஆதாரமாக சிலர் எடுத்து வைக்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை பற்றிய அறிவு இல்லாதவர்கள் தான் இதுபோன்ற வாதங்களை எடுத்து வைக்க முடியும். இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். […]

நபிகள் நாயகத்தின் அடக்கத்தலம் பள்ளிவாசலில் சேருமா?

நபிகள் நாயகத்தின் அடக்கத்தலம் பள்ளிவாசலில் சேருமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் தற்போது பள்ளிவாசலுக்குள் அமைந்திருப்பதையும், அடக்கத்தலத்தின் மேல் குப்பா எனும் குவிமாடம் அமைக்கப்பட்டு உள்ளதையும் தர்காக்கள் கட்டலாம் என்பதற்கு ஆதாரமாகச் சிலர் காட்டுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமாதியைக் கட்டவும், அதன் மேல் கட்டடம் கட்டவும் தடை செய்திருப்பதற்கு தெளிவான சான்றுகள் இருக்கும் போது, அப்படி கட்டினால் இடிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அதற்கு […]

ரவ்ளா ஷரீப் வேறு! அடக்கத்தலம் வேறு!

ரவ்ளா ஷரீப் வேறு! அடக்கத்தலம் வேறு! ரவ்ளா என்ற வார்த்தைக்கு பூங்கா என்று பொருளாகும். ஆனால் மார்க்க அறிவு இல்லாத சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ரவ்ளா ஷரீப் என்று குறிப்பிட்டு வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும்போது தம்முடைய கப்ரை – அடக்கத்தலத்தை ரவ்ளா என்று குறிப்பிட வேண்டும் என்று எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை – அடக்கத்தலத்தை ரவ்ளா என்று குறிப்பிடுவதே நபியவர்களின் […]

தர்காக்கள் சமுதாயத்தில் நுழைந்தது எப்படி?

தர்காக்கள் சமுதாயத்தில் நுழைந்தது எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தினர் நபிமார்களையும், நல்லவர்களையும் மதிக்கிறோம் என்று கூறிக் கொண்டு அவர்களின் அடக்கத்தலங்களில் தர்காக்கள் கட்டியது தான் அவர்கள் இணைகற்பித்த்தற்குக் காரணம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக எச்சரித்ததைப் பார்த்தோம். தனது அடக்கத்தலத்தில் தர்கா கட்டக் கூடாது என்று அவர்கள் எச்சரித்ததையும் பார்த்தோம். தர்காக்கள் கட்டப்பட்டு இருந்தால் அதை இடிக்க வேண்டும் என்று கடுமையான நிலைபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) […]

ஆன்மாக்களின் உலகம்

ஆன்மாக்களின் உலகம் மனிதன் மரணித்து விட்டால் அவனது செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன. மரணித்தவனால் சிந்திக்கவும், செயல்படவும் முடியாது என்பதைக் கண்கூடாக நாம் காண்பதால் இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் தான் இறந்தவரை நாம் அடக்கம் செய்கிறோம். அவரது சொத்துக்களை வாரிசுகள் பிரித்துக் கொள்கிறார்கள். அவரது மனைவியை மற்றவர்கள் மணந்து கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் எல்லா முஸ்லிம்களும், முஸ்லிமல்லாத மக்களும் சரியான கருத்திலேயே இருக்கிறார்கள். மனிதன் மரணித்த பின்னர் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான் என்றும், உயிர்ப்பிக்கப்படும் வரை […]

உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்!

உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்! கைப்பற்றப்பட்ட மனிதனின் உயிர்களைத் தனது கட்டுப்பாட்டில் இறைவன் வைத்திருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. திருக்குர்ஆன் 39:42 தூக்கத்தின் போதும், மரணிக்கும் போதும் உயிர்களைக் கைப்பற்றிக் கொள்ளும் இறைவன் தூக்கத்தில் கைப்பற்றப்பட்ட […]

நீண்ட உறக்கத்தில் நல்லடியார்கள்

நீண்ட உறக்கத்தில் நல்லடியார்கள் மனிதன் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட உடன் என்ன நடக்கிறது என்பதை நபிகள் நாய்கம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கியுள்ளனர். இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருத்த நிறமும், நீலநிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) “இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?” என்று கேட்பார்கள். “அவர் அல்லாஹ்வின் தூதரும் அவனது அடியாருமாவார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது […]

மரணத்துடன் முடிவுக்கு வரும் செயல்பாடுகள்!

மரணத்துடன் முடிவுக்கு வரும் செயல்பாடுகள்! மனிதன் மரணித்து விட்டால் மூன்று விஷயங்கள் தவிர அவனது எல்லா செயல்பாடுகளும் முடிவுக்கு வரும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பினவருமாறு விளக்கியுள்ளனர். மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம் 3358 நிலைத்திருக்கும் வகையிலான […]

இறந்த பின்னர் உயிருடன் இருக்கிறார்களா?

இறந்த பின்னர் உயிருடன் இருக்கிறார்களா? நன்மக்கள் மரணித்தாலும் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற தவறான கொள்கையுடையோர் பின்வரும் வசனங்களைத் தமது தீய கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள். திருக்குர்ஆன் 2:154 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) […]

இறந்தவர்களிடம் நபிகள் பேசியது இறந்தவர்களுக்கு ஆற்றல் உண்டு என்பதற்கு ஆதாரமாகுமா?

இறந்தவர்களிடம் நபிகள் பேசியது இறந்தவர்களுக்கு ஆற்றல் உண்டு என்பதற்கு ஆதாரமாகுமா? பத்ருப் போரில் கொல்லப்பட்ட இணைவைப்பாளர்களில் 24 தலைவர்கள் கிணற்றில் போடப்பட்டார்கள். கிணற்றில் போடப்பட்ட அவர்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசினார்கள் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பது தெரிகின்றதே என்றும் சமாதி வழிபாடு செய்வோர் வாதிடுகின்றனர். அவர்களின் வாதம் சரியா என்பதை விபரமாகப் பார்ப்போம். பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் […]

செருப்போசையைக் கேட்கும் என்பது ஆதாரமாகுமா?

செருப்போசையைக் கேட்கும் என்பது ஆதாரமாகுமா? மரணித்தவனின் உடலை அடக்கம் செய்து விட்டு, மக்கள் திரும்பும்போது அவர்களின் செருப்போசையை மரணித்தவர் செவியுறுவார் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. அதை ஆதாரமாகக் கொண்டு மரணித்தவர்கள் அனைத்தையும் செவியுறுவார்கள் என்று சமாதிவழிபாடு செய்வோர் வாதிடுகின்றனர். இது குறித்து விபரமாகப் பார்ப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு […]

நபிக்கு பின் யாருக்கும் வஹி வருமா?

நபிக்கு பின் யாருக்கும் வஹி வருமா? வராது. صحيح البخاري (4/ 174) 3469 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّهُ قَدْ كَانَ فِيمَا مَضَى قَبْلَكُمْ مِنَ الأُمَمِ مُحَدَّثُونَ، وَإِنَّهُ إِنْ كَانَ فِي أُمَّتِي هَذِهِ […]

வானவர்களை நாம் பார்க்க முடியுமா?

சில அறிஞர்கள் பயான் செய்யும் நிகழ்ச்சிகளில் வானவர்கள் வந்து கலந்து கொள்வதாகக் கூறி ஒரு வீடியோவையும் பரப்பி வருகின்றனர். இது உண்மையா? வானவர்களை நாம் காண முடியுமா? வானவர்கள் பல்வேறு சபைகளுக்கு ஆஜராவதாக ஹதீஸ்கள் உள்ளன. அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதால் மறைவான விஷயம் என்ற அடிப்படையில் நாம் நம்புகிறோம். ஆனால் அந்த சபையில் நாம் இருந்தாலும் வானவர்களை நாம் காண முடிவதில்லை. صحيح البخاري (1/ 103) 477 – حَدَّثَنَا مُسَدَّدٌ، […]