Tamil Bayan Points

Category: பெண்கள்

q122

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா?

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா? அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும். மனைவி, தாய், மகள், சகோதரி போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது குற்றமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இரு சக்கர வாகனம் இருந்த்தில்லை. ஆனால் அவர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்த ஒட்டகம் என்ற வாகனத்தில் தமது மனைவியை பின்னால் அமர வைத்து அழைத்துச் சென்றுள்ளதற்கு ஆதாரம் உள்ளது. இது டூ வீலருக்கும் பொருந்தும். أَقْبَلْنَا […]

வீட்டில் தொட்டில் போடலாமா?

வீட்டில் தொட்டில் போட்டு ஆடுகிறார்கள். இப்படி ஆடுவது கூடுமா? ஆட்டம் என்பது ஷைத்தானின் செயல் இல்லையா? தொட்டில் அமைத்து அதில் குழந்தையைப் போட்டு ஆட்டுவது, அல்லது ஊஞ்சல் போன்று ஏற்படுத்தி அதில் பெரியவர்கள் உட்கார்ந்து கொள்வது போன்றவை மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயல்கள் அல்ல! ஈஸா (அலை) அவர்கள் குழந்தைப் பருவத்தில் தொட்டிலில் இருந்த போது பேசியதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான். “மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட் கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை […]

பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் குளிக்கலாமா?

பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் குளிக்கலாமா? பெண்கள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்களுக்குச் சென்று குளிப்பது தவறில்லை. ஆனால் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நீச்சல் குளத்தின் பொறுப்பாளர் உட்பட எந்த அந்நிய ஆணும் அவர்கள் குளிப்பதைப் பார்க்க முடியாதவாறு பாதுகாப்பு இருக்க வேண்டும். பெண்களோடு குளிக்கும் போது தனது அந்தரங்கப் பகுதிகளை மற்ற பெண்களிடம் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து நீச்சல் குளத்தில் குளிப்பது தவறல்ல. பாதுகாப்பான […]

அழகு நிலையங்களில் அழகுபடுத்திக் கொள்ளலாமா?

அழகு நிலையங்களில் அழகுபடுத்திக் கொள்ளலாமா? இன்றைய காலத்தில் பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று அலங்கரித்து வருகிறார்கள். மார்க்க வரம்புகளை மீறாமல் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வது தவறில்லை. தற்காலத்தில் அழகு நிலையங்களுக்குச் செல்கின்ற பெண்கள் அழகிற்காகப் பல் வரிசைகளை விலக்குதல், புருவங்களை மழித்தல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். செயற்கைப் புருவங்களை நாளுக்கு நாள் மாற்றிக் கொள்கிறார்கள். “பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், […]

பெண்கள் ஸலாம் சொல்லலாமா?

பெண்கள் ஸலாம் சொல்லலாமா? பெண்களை இழிவு படுத்தும் வண்ணமும், அவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கும் வண்ணமும்  உண்மைக்குப் புறம்பாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஹதீஸ்கள் என்ற பெயரில் பல்வேறு விதங்களில் இட்டுக் கட்டப்பட்டப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் ” பெண்களுக்கு ஸலாம் சொல்வது கூடாது” என்பதாகும். இன்றைக்கும் கூட பெரும்பாலான ஊர்களில் பெண்கள் ஸலாம் கூறும் பழக்கம் இல்லாமல் இருப்பதை காணமுடிகிறது. இவற்றை ஊக்குவிக்கும் வண்ணம் சில செய்திகள் நபிகளார் பெயரால் இட்டுக்கட்டி சொல்லப்பட்டுள்ளது. […]

ஆர்ப்பாட்டம் மாநாடுகளுக்குப் பெண்கள் வரலாமா?

ஆர்ப்பாட்டம் மாநாடுகளுக்குப் பெண்கள் வரலாமா? பெண்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிவதைத் தான் இஸ்லாம் கண்டிக்கின்றது. பெண்கள் பயனுள்ள தேவையான விஷயங்களுக்கு வெளியே செல்வதை மார்க்கம் தாராளமாக அனுமதிக்கின்றது. பெண்கள் வெளியே செல்லலாமா என்ற பிரச்சனை நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே ஏற்பட்டது. அப்போது தேவையிருந்தால் பெண்கள் வெளியே செல்லலாம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி நபி (ஸல்) அவர்கüன் […]

பெண்கள் மோதிரம் அணிந்து வெளியே செல்லலாமா?

பெண்கள் மோதிரம் அணிந்து வெளியே செல்லலாமா? கேள்வி : பெண்கள் வெளியே செல்லும் போது மோதிரம், வளையல், கொலுசு போன்ற ஆபரணங்களை அணிந்து செல்லலாமா? ஆண்கள் முன்னால் அலங்காரத்தை வெளிப்படுத்துவதில் இது அடங்குமா? பதில்: பெண்கள் தங்களது அலங்காரங்களை  கணவன் மற்றும் மஹ்ரமான (மணமுடிக்கத்தகாத) உறவினர் தவிர மற்ற ஆண்கள் முன்னிலையில் வெளிப்படுத்தக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ […]

மாதவிடாய் பெண்கள், பயானுக்காக பள்ளியின் ஓரத்தில் இருக்கலாமா?

கேள்வி பதில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? பயான் நடக்கும் போது பள்ளியில் ஓரமாக இருந்து கொள்ளலாமா? கூடாது 1. மாதவிடாய் ஏற்பட்டுள்ள, குளிப்பு கடமையான எவருக்கும் பள்ளிவாசலை நான் அனுமதிக்க மாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி), நூல்கள் : அபூதாவூத் (201), இப்னுமாஜா (637) 2. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் எங்களில் ஒருவரின் மடியில் தலையை வைத்து திருக்குர்ஆனை ஓதுவார்கள். ,எங்களில் […]

காதலிக்கலாமா ?

காதலிக்கலாமா ? காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பித் தான் திரும்ணமே செய்ய வேண்டும். இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. வலிமையான ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.  காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது […]

பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது

பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது? காரணங்களை சரியாகக் கண்டுபிடிப்பதில் காட்டும் திறமையை தீர்வு காண்பதிலும் காட்டவேண்டும். இந்தக் கருத்து கணிப்பிலிருந்து எந்த உண்மை தெரிய வருகிறதோ, அந்த உண்மைக்கு ஏற்ப நாம் நடந்து கொள்ளவேண்டும். அதுதான் பெண்களைப் பாதுகாக்கும். உறவினர்கள் என்றபோதும், குடும்ப நண்பர்கள் என்றபோதும், அண்டை வீட்டார் என்றபோதும், ஆண்களை ஆண்களாகக் கருதி நாம் நடக்கவேண்டும். நம் வீட்டுப் பெண்களை மேற்படி ஆண்கள் தனிமையில் சந்திக்கும் எல்லா வாசல்களையும் அடைக்க வேண்டும். மாமா, சித்தப்பா […]

அன்னிய ஆண்களிடம் பெண்கள் பேசலாமா?

அன்னிய ஆண்களிடம் பெண்கள் பேசலாமா? பெண்கள் அந்நிய ஆண்களிடம் சில ஒழுங்குமுறைகளைக் கடைபிடித்து பேசுவதை மார்க்கம் தடை செய்யவில்லை. இத்தா இருக்கும் பெண்கள் கூட பிற ஆண்களிடம் நேரடியான திருமணப் பேச்சைத் தவிர்த்து ஏனைய நல்ல பேச்சுக்களைப் பேசலாம் என்று குர்ஆன் தெரிவிக்கின்றது. காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக […]

பெண்கள் தலைமுடியை வெட்டலாமா?

பெண்கள் தலைமுடியை வெட்டலாமா? பெண்கள் தலைமுடியை வெட்டலாமா என்பது பற்றி முன்னர் எழுதப்பட்டுள்ளது. பார்க்க ஆண்களைப் போலவே பெண்களும் தமது அந்தரங்கமான பகுதிகளில் உள்ள முடிகளை நீக்க வேண்டும். குறிப்பாக வெளியூர் சென்ற கணவன் ஊர் திரும்பும் போது இவ்வாறு செய்வது சிறந்த நடைமுறையாகும். இதைப் பின்வரும் நபிமொழியில் இருந்து அறியலாம் 5246ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ இரவில் (மதீனாவுக்குள்) […]

பெண்கள் ஸியாரத் செய்யலாமா?

பெண்கள் ஸியாரத் செய்யலாமா? மண்ணறைகளுக்கு சென்றுவரும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) அபூஹுரைரா (ரலி) மற்றும் ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) ஆகிய மூவர் வழியாக இந்தக் கருத்தில் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்படும் அறிவிப்பு பலவீனமானதாக உள்ளது. ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்களின் வழியாக வரும் அறிவிப்பு மாத்திரம் சரியானதாக […]

திருமணத்தில் பெண்களுக்கு உரிமை இல்லையே?

திருமணத்தில் பெண்களுக்கு உரிமை இல்லையே? சிறிய வயதுப் பெண்களையும், பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்வதையும் இஸ்லாம் முற்றாகத் தடைசெய்துள்ளது. சிறுவயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் […]

பெண்கள் உயரமான கொண்டை போடலாமா?

பெண்கள் உயரமான கொண்டை போடலாமா? قال الرسول صلى الله عليه وسلم ” صنفان من أهل النار لم أرهما ، قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس، ونساء كاسيات عاريات ، مائلات مميلات ، رؤوسهن كأسنمة البخت المائلة ، لا يدخلن الجنة و لا يجدن ريحها ، وإن ريحها يوجد في مسيرة كذا وكذا “ Hadith […]

நான்கு வயது மகன் முன்னால் தாய் உடை மாற்றலாமா?

நான்கு வயது மகன் முன்னால் தாய் உடை மாற்றலாமா? பெரியவர்கள் தன்னுடைய அந்தரங்கமான பாகங்களை சிறு குழந்தைகளுக்கு முன்பு வெளிப்படுத்தக்கூடாது. பின்வரும் வசனம் இதைத் தடைசெய்கின்றது. பின்வரும் வசனங்களைச் சிந்தித்தால் இதற்கான விடையை அறிந்து கொள்ளலாம். يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ […]

பெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா?

பெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா? பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு நிலவும் நேரத்தில் மட்டும் திருமணம் முடிக்கத் தடைசெய்யப்பட்ட இரத்த பந்த உறவினர் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம். இன்றைய காலத்தில் மக்களுடன் சேர்ந்து பயணம் செய்வதில் பாதுகாப்பு இருப்பதால் பெண்கள் மஹ்ரமான துணையில்லாமல் பயணம் செய்யலாம். ஒரு பெண் மட்டும் தனியாக ஆட்டோவில் செல்வது பாதுகாப்பற்ற நிலையாகும். ஆட்டோ ஓட்டுபவன் அந்தப் பெண்ணை கடத்திக் கொண்டு போக நினைத்தால் சுலபமாகச் செய்துவிட முடியும். மேலும் பெண் […]

இரண்டு ஆண் சாட்சியமும் ஒரு பெண் சாட்சியமும் சமமா?

இரண்டு ஆண் சாட்சியமும் ஒரு பெண் சாட்சியமும் சமமா? இஸ்லாம் இரண்டு பெண்களின் சாட்சியத்தை ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமாக கூறுவது உண்மை தான். يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُبْ بَيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلْ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإِنْ كَانَ الَّذِي […]

பெண்கள் பூ வைக்கலாமா?

பெண்கள் பூ வைக்கலாமா? பூ என்பது நறுமணப்பொருளாகவும் அலங்காரமாகவும் உள்ளது. பெண்கள் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெண்கள் இஷாத் தொழுகைக்கு பள்ளிக்கு வரும்போது நறுமணம் பூசிக்கொண்டு வரக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பூ வைத்துக் கொண்டு இரவில் பள்ளிக்கு வரக்கூடாது. பள்ளி அல்லாத மற்ற இடங்களுக்கு பூ வைத்துக்கொண்டு செல்லலாம். பூ அலங்காரமாக இருப்பதால் அந்நிய ஆண்களிடம் இதை வெளிப்படுத்துவது கூடாது. وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا […]

நமது கூட்டங்களில் பெண்கள் திரள்வது ஏன்?

நமது கூட்டங்களில் பெண்கள் திரள்வது ஏன்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் சாதாரண பொதுக்கூட்டங்களுக்கு கூட “மாநாடு” போல மக்கள் குறிப்பாக பெண்கள் திரண்டு வரக் காரணம் என்ன? பொதுவாக மக்கள் திரண்டு வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெண்கள் திரண்டு வரக் காரணங்கள் பல உள்ளன. ஆண்களுக்கு கடவுள் அல்லாஹ், பெண்களுக்கு கடவுள் அவ்லியா எனக் கூறாமல் கூறி பெண்களை இறை வழிபாட்டில் இருந்து தூரமாக்கி வைத்திருந்தனர். பள்ளிவாசலுக்கு வருவதற்குக் கூட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படாத […]

பெண்கள் புருவ முடியை நீக்கலாமா?

பெண்கள் புருவ முடியை நீக்கலாமா? புருவ முடிகளை அகற்றி இறைவன் படைத்த படைப்பில் மாற்றம் செய்வதை மார்க்கம் தடை செய்துள்ளது. இக்காரியத்தை அழகிற்காக செய்தாலும் தவறு தான். பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அமைத்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! என நபிகள் நாயகம் (ஸல்) […]

மனைவி ஹிஜாப் அணிய மறுத்தால்

மனைவி ஹிஜாப் அணிய மறுத்தால் கணவன் மனைவிக்குப் பொறுப்பாளன் என்று இஸ்லாம் கூறுகின்றது. எனவே மனைவியை நல்வழிப்படுத்துவதும் அவள் தவறு செய்தால் அவளைக் கண்டிப்பதும் கணவனின் கடமை. இதைப் பின்வரும் குர்ஆன் வசனம் ஹதீஸ்களிலிருந்து அறியலாம். الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ (34)4 சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் […]

கணவன் பெயரை இனிஷியல் ஆக்கலாமா?

கணவன் பெயரை இனிஷியல் ஆக்கலாமா? பெண்களின் திருமணத்துக்கு முன்னால் அவர்களின் தந்தையர்களின் இன்ஷியலே அவர்களுடைய பெயர்களுக்கு முன்னால் பயன்படுத்தப்படும். திருமணம் ஆன பின் அவர்களுடைய கணவனின் இன்ஷயல் அவர்களின் பெயர்களுக்கு முன்னால் போடப்படும். நவீன காலத்தில் இப்படி ஒரு நடைமுறை மக்களிடையே இருந்து வருகின்றது. திருமணத்துக்குப் பிறகு கணவனின் இன்ஷியலைப் போடுவது கணவன் தந்தையாகி விடுகிறான் என்ற பொருளில் இல்லை. மாறாக அவளுக்கு அவனே முழு பொறுப்பாளியாக இருக்கின்றான் என்ற கருத்தில் இவ்வாறு போடப்படுகின்றது. இந்த செயல்பாட்டில் […]

பெண்ணின் உடலை ஆண்கள் குளிப்பாட்டலாமா?

பெண்ணின் உடலை ஆண்கள் குளிப்பாட்டலாமா? ஒரு பெண் உயிரோடு இருக்கும் போது அவருடைய மறைவிடங்களை மற்ற ஆண்கள் பார்கக் கூடாது என்று சட்டம் உள்ளதைப் போல் அவர் இறந்த பிறகும் இதே சட்டம் கடைபிடிக்கப்பட வேண்டும். பொதுவாக ஆண்களின் வெட்கத்தலங்களைப் பெண்களும் பெண்களின் வெட்கத்தலங்களை ஆண்களும் பார்ப்பதற்குத் தடை உள்ளது. மய்யித்தைக் குளிப்பாட்டும் போது வெட்கத்தலங்களைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் ஆண் மய்யித்தை ஆண்களும் பெண் மய்யித்தை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும். கணவன் மனைவி […]

பாங்கு சொல்லும் போது பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா?

பாங்கு சொல்லும் போது பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா? பாங்கு சொல்லும் போது பெண்கள் தலையில் துணி போட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. சமுதாயத்தில் பரவியுள்ள பித்அத்களில் இதுவும் ஒன்றாகும். பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன்னால் இருக்கும் போது முகம், முன்கை, மற்றும் பாதங்கள் தவிர மற்ற உறுப்புகளை மறைப்பது கடமையாகும். எனவே இந்நேரத்தில் மட்டும் அவர்கள் தலையில் துணியிட்டு மறைத்திருக்க வேண்டும். அது போல் தொழுகையின் போதும் இவ்வாறு மறைத்திருப்பது […]

ஒட்டு முடி நடலாமா?

ஒட்டு முடி நடலாமா? ஒட்டுமுடி வைத்துக் கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்கள் இதைத் தடைசெய்கின்றன. 5205حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ هُوَ ابْنُ مُسْلِمٍ عَنْ صَفِيَّةَ عَنْ عَائِشَةَ أَنَّ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ زَوَّجَتْ ابْنَتَهَا فَتَمَعَّطَ شَعَرُ رَأْسِهَا فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَتْ إِنَّ زَوْجَهَا […]

பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் குர்ஆனைத் தொடலாமா?

பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் குர்ஆனைத் தொடலாமா? தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அல்குர்ஆன் (56 : 79) குளிப்புக் கடமையானவர்கள் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை மாற்றுக் கருத்து உடையவர்கள் எடுத்து வைக்கின்றனர். இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் திருக்குர்ஆனைத் தூய்மையற்ற நிலையில் உள்ள மாதவிடாய் ஏற்பட்டவர்கள் தொடக்கூடாது. ஓதக்கூடாது என்று தான் முடிவு செய்வார்கள். ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது போன்று […]

கருவில் குழந்தை ஊனமாக இருந்தால் கலைக்கலாமா?

கருவில் குழந்தை ஊனமாக இருந்தால் கலைக்கலாமா? வஅலைக்குமுஸ்ஸலாம் கருக்கலைப்புப் பற்றி ஏற்கனவே நமது இணையதளத்தில் விரிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது. அதை காணவும். கரு உருவாகி நூற்று இருபது நாட்கள் ஆகிவிட்டால் அது மனிதன் என்ற அந்தஸ்துக்கு வந்து விடுகிறது. இந்நிலையில் அவ்வுயிரைக் கொன்றால் மனித உயிரைக் கொன்ற குற்றம் ஏற்படும். வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கின்றதா? அல்லது குறையுடையதாக இருக்கின்றதா? என்பதை நான்கு மாதங்களுக்குப் பிறகே ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்க முடியும். குழந்தை ஊனமுற்ற நிலையில் […]

பெண்கள் காது மூக்கு குத்தலாமா ?

பெண்கள் காது மூக்கு குத்தலாமா ? அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுள்ள சட்டங்களில் காது மூக்கு குத்துவதும் ஒன்றாகும். சிலர் கூடும் என்றும் சிலர் கூடாது என்றும் கூறுகின்றனர். காது குத்தலாம் என்பதற்கோ காது குத்தக் கூடாது என்பதற்கோ நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை என்பதே இந்த கருத்து வேறுபாட்டிற்குக் காரணம். ஆனால் இது தொடர்பாக முடிவெடுப்பதற்கு வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளைக் கிழிப்பதும் அல்லாஹ்வின் […]

கணவனை இழந்த பெண்கள் ஆபரணங்களை அணியலாமா?

கணவனை இழந்த பெண்கள் ஆபரணங்களை அணியலாமா? கணவனை இழந்த பெண்கள் காலமெல்லாம் வெள்ளை ஆடையுடனும் ஆபரணங்கள் அணியாமலும் காலத்தைக் கழிக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை இஸ்லாத்தில் இல்லை. ஆயினும் நான்கு மாதமும் பத்து நாட்களும் மட்டும் அவர்கள் அலங்காரத்தைத் தவிர்க்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளை இடுகிறது. அந்தக் கெடு முடிந்த பின் அவர்கள் மற்ற பெண்களைப் போல் நடந்து கொள்ளலாம். கணவனை இழந்த பெண்கள் தமது இத்தா காலம் முடியும் வரை அலங்காரம் செய்து […]

பெண்கள் பேண்ட் அணியலாமா?

பெண்கள் பேண்ட் அணியலாமா? ஆண்கள் பெண்களைப் போலவும் பெண்கள் ஆண்களைப் போலவும் நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள். 5885 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புஹாரி 5885 இது ஆடையை மட்டும் குறிப்பதல்ல. எல்லா வகையிலும் […]

காது மூக்கு குத்தலாமா?

காது மூக்கு குத்தலாமா? காது மூக்கு குத்தக்கூடாது என்று தெளிவாக எந்த ஒரு தடையும் வரவில்லை. மாறாக அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக்கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளை கிழிப்பதும் அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது. “அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). […]

பெண்களுக்கு ஜும்மா கடமையா?

பெண்களுக்கு ஜும்மா கடமையா? திருக்குர்ஆனில் ஜும்ஆ தொழுகை பொதுவான கடமை என்று கூறப்பட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பெண்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு வழங்கி உள்ளார்கள். ‘அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப்(ரலி) நூல்: அபூதாவூத் 901 திருக்குர்ஆனில் ஒரு விஷயம் கடமை என்று கூறப்பட்டு, அதற்கு விளக்கமாக […]

பெண்களுக்கு கத்னா உண்டா?

ஷாபி இமாம் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கத்னா கடமை என்கின்றனர். அபூஹனீஃபா இமாம், மாலிக் இமாம் ஆகியோர் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது சுன்னத் என்று கூறுவதாக நவவி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலானவர்கள் பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்று கூறினாலும் அது சம்மந்தமாக வரும் ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளத்தக்கதாக இல்லை. பெண்களின் பிறப்புறுப்பில் உணர்வுகளின் முடிச்சு என்று கூறப்படும் பகுதியை வெட்டி எடுப்பதை பெண்களின் கத்னா என்கின்றனர். உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் […]

கொலுசு அணியலாமா ?

கொலுசு அணியலாமா ? பெண்கள் சில ஒழுங்கு முறைகளைக் கடைபிடித்து கொலுசு அணியலாம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் கொலுசு அணிந்துள்ளனர். 3039 حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ فَأَنَا وَاللَّهِ رَأَيْتُ النِّسَاءَ يَشْتَدِدْنَ قَدْ بَدَتْ خَلَاخِلُهُنَّ وَأَسْوُقُهُنَّ رَافِعَاتٍ ثِيَابَهُنَّ رواه البخاري பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள் […]

அந்நியப் பெண்களுடன் பேசலாமா ?

அந்நியப் பெண்களுடன் பேசலாமா ? ஒரு ஆண் அந்நியப் பெண்களிடம் எந்தவிதமான பேச்சுக்களையும் பேசக்கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் தவறான நோக்கமின்றி தேவை ஏற்படும் போது அந்நியப் பெண்களிடம் பேசியுள்ளார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பெண்களிடம் ஆண்கள் அறவே பேசக் கூடாது என்று மார்க்கத்தில் தடுப்பதாக இருந்தால் இத்தா இருக்கும் பெண்கள் விஷயத்தில் அல்லாஹ் தடுத்திருப்பான். ஏனெனில் இத்தா காலத்தில் அந்தப் பெண்கள் திருமணம் செய்வதற்கு தடுக்கப்பட்டுள்ளனர். […]

பெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் குறைத்தல் கூடுமா?

பெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் குறைத்தல் கூடுமா? நீங்கள் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வது பற்றி கேட்டாலும் குறைத்துக் கொள்வதைப் பற்றியும் மொட்டை அடித்துக் கொள்வது பற்றியும் சேர்த்தே விளக்குவது நல்லதெனக் கருதுகிறோம். பொதுவாகப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கோ, முழுமையாக மழித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஹஜ், உம்ராவை முடித்த பின் இஹ்ராமில் இருந்து விடுபடுவதன் அடையாளமாக தலையை மழித்துக் கொள்ள வேண்டும்; முடியாவிட்டால் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று […]

பெண்கள் உலகக் கல்வி கற்கலாமா?

பெண்கள் உலகக் கல்வி கற்கலாமா? இஸ்லாமிய மார்க்கம், கல்வியின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பேசவில்லை. பொதுவாகவே பேசுகிறது. திருக்குர்ஆனில் கூறப்படும் கட்டளைகள் உபதேசங்கள் பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை. கல்வியாளர்களுக்கு ஏராளமான சிறப்புகள் இருப்பதாக குர்ஆன் கூறுகிறது. يَرْفَعْ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ(11)58 உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் […]

பெண்கள் முகத்தை மறைக்க ஆதாரம் இருக்கிறதே?

பெண்கள் முகத்தை மறைக்க ஆதாரம் இருக்கிறதே? நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் (33 : 59) மேற்கண்ட வசனத்தில் முக்காடுகள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில் ஜலாபீப் என்ற பன்மைச் சொல் இடம் பெற்றுள்ளது. ஜில்பாப் என்பது இதன் ஒருமையாகும். […]

ஆண்கள் பெண்களிடம் கை குலுக்கலாமா?

ஆண்கள் பெண்களிடம் கை குலுக்கலாமா? நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் சில பெண்கள் முஸாபஹா செய்ய – கை குலுக்க முயன்ற போது அதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மறுத்து விட்டனர். இது நஸயியில் பதிவாகி உள்ளது. أخبرنا محمد بن بشار قال حدثنا عبد الرحمن قال حدثنا سفيان عن محمد بن المنكدر عن أميمة بنت رقيقة أنها قالت أتيت النبي صلى الله عليه وسلم […]

அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா? என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்களுடைய முகத்தையும் இரு முன் கைகளையும் கரண்டைக்குக் கீழ் உள்ள கால் பகுதிகளையும் தவிர மற்ற பாகங்களை மறைக்க வேண்டும். இம்முறை ஹிஜாப் பர்தா என்று இஸ்லாமிய வழக்கில் சொல்லப்படுகின்றது. பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை […]

மாதவிடாய் நின்றபின் குளிக்காமல் கணவனுடன் சேரலாமா?

மாதவிடாய் நின்றபின் குளிக்காமல் கணவனுடன் சேரலாமா? மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்த பிறகே அவர்களுடன் கணவன்மார்கள் உடலுறவு கொள்ள வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது. وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ (222) 2 மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. […]

பெண்கள் வீடு வீடாக சென்று தாஃவா செய்யலாமா?

பெண்கள் வீடு வீடாக சென்று தாஃவா செய்யலாமா? பிரச்சாரம் செய்யும் வழிமுறைகள் காலத்துக்கு காலம் மாறுபடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் துண்டுப்பிரசுரம் போட்டு பிரச்சாரம் செய்தார்களா? சுவரொட்டி தொலைக்காட்சி இன்னும் பல ஊடகங்கள் வழியாக பிரச்சாரம் செய்தார்களா? என்று கேல்வி கேட்க்க் கூடாது. பொதுவாக பிரச்சாரம் செய்யும் பொறுப்பு நமக்கு சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை நாம் விரும்பும் வழிகளைப் பயன்படுத்தி செய்து கொள்ளலாம். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலத்தில் பெண்கள் ஐந்து நேரத் […]

ஆண்கள் மருதானி இடலாமா?

ஆண்கள் மருதானி இடலாமா? ஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களிலும் மருதாணி பூசிய ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் பெண்களுக்கு ஒப்ப நடந்ததால் அவரை நாடுகடத்துமாறு நபியவர்கள் உத்தரவிட்டதாகவும் இந்தச் செய்தி கூறுகின்றது. இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள அபூஹாஷிம் மற்றும் அபூ யசார் ஆகிய இரண்டு அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையும் அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை. […]

வெளியில் செல்லும் பெண்கள் நறுமணம் இடலாமா?

வெளியில் செல்லும் பெண்கள் நறுமணம் இடலாமா? நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன. தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு. ஆட்களை தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு. முதல் வகையான நறுமணம் அருகில் நெருங்கி வருவோருக்கும் மட்டுமே உணர முடியும். இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும். பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் […]

பெண்கள் கண் தானம் செய்யலாமா ?

பெண்கள் கண் தானம் செய்யலாமா ? கண்தெரியாதவருக்கு நமது கண்ணைப் பொருத்தி பார்வை வர ஏற்பாடு செய்யும் நவீன வசதிகள் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பான நேரடி ஆதாரங்கள் திருக்குர்ஆன், நபிமொழி தொகுப்புகளில் பார்க்க முடியாது. எனவே இது போன்ற விஷயங்களில் இவ்வாறு செய்யக்கூடாது என்று மறைமுகமான ஆதாரங்கள் ஏதும் உண்டா? என்பதை கவனித்து தடை இருப்பது தெரியவந்தால் கூடாது என்று கூற வேண்டும். இல்லையென்றால் அனுமதிக்க வேண்டும். கண்தானம் தொடர்பாக திருக்குர்ஆனிலோ அல்லது நபிமொழியிலோ […]

பெண்களில் சிலருக்கு வளரும் மீசையை நீக்கலாமா?

பெண்களில் சிலருக்கு வளரும் மீசையை நீக்கலாமா? பெண்களின் இயற்கை வடிவத்திற்கு மாற்றமாக வளரும் முடிகளை அகற்றுவது எந்தவகையில் குற்றமாகாது. ஆண்களைப் போன்று ஒப்பனை செய்பவர்களைத்தான் நபிகளார் சபித்தார்கள். எனவே ஆண்களைப் போன்று இயற்கைக்கு மாற்றமாக வரும் முடிகளை பெண்கள் அகற்றுவது சரியானதே! இதை ஒரு நோயாகவே கருதிக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

பெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாதா?

பெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாதா? இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை, மற்றும் கழுத்து, நீண்ட ஒட்டகங்களின் (இரு […]

மாதவிடாய் ஏற்பட்டால் இஃதிகாபைத் தொடரலாமா?

மாதவிடாய் ஏற்பட்டால் இஃதிகாபைத் தொடரலாமா? பெண்கள் இஃதிகாப் இருக்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது. கன்னிப் பெண்களுக்கும் இதே சட்டம் தான். மாதவிடாய் ஏற்பட்டால் இஃதிகாபைத் தொடர முடியாது. ஏனெனில் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் பள்ளிவாசலுக்குச் செல்வதற்குத் தடை உள்ளது. இதைக் கீழ்க்காணும் வசனத்திலிருந்து அறியலாம். குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர.

பெண்கள் ஆண்களிடம் முஸாபஹா செய்யலாமா?

பெண்கள் ஆண்களிடம் முஸாபஹா செய்யலாமா? பெண்கள், அந்நிய ஆண்களைத் தொடுவதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. இதை மார்க்த்தின் பெயரால், முஸாபஹா என்று கூறி ஹஜ்ஜுக்குச் சென்று வந்த ஹாஜிகள் செய்வது தான் கொடுமை! நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (திருக்குர்ஆனின் 60:10 முதல் 12 வரையிலான) இந்த வசனங்களின் கட்டளைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறை நம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை […]

Next Page »