Tamil Bayan Points

Category: பிராணிகள்

q131

நாய் மற்றும் பூனை விற்கலாமா?

நாய் பூனைகளை விற்க கூடாது நபி அவர்கள் அதற்கு தடை  விதித்து உள்ளார்கள்  அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் நாய் மற்றும் பூனை விற்ற காசைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கண்டித்தார்கள்” என விடையளித்தார்கள். ( நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 3194 ) நாய் மற்றும் பூனை விற்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

செத்த பிராணிகள் குறித்த சட்டம்

செத்த பிராணிகள் குறித்த சட்டம் விலக்கப்பட்ட உணவுகளில் தாமாகச் செத்தவை இவ்வசனத்தில் முதலில் கூறப்படுகின்றன. தாமாகச் செத்தவைகளை உண்ணக்கூடாது என்றால் அடித்தோ, கழுத்தை நெறித்தோ, வேறு வழிகளிலோ கொல்லப்பட்டவைகளை உண்ணலாம் என்ற முடிவே மேலோட்டமாக இவ்வசனத்தைப் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கின்றது. தாமாகச் செத்தவை என்பதன் நேரடிப் பொருள் அதுதான் என்றாலும் திருக்குர்ஆனுடைய வழக்கில் முறையாக அறுக்கப்படாமல் செத்தவை, சாகடிக்கப்பட்டவை அனைத்தும் தாமாகச் செத்தவை என்பதில் அடங்கும். கழுத்து நெறிக்கப்பட்டுச் செத்ததும் அடிப்பட்டுச் செத்ததும், கீழே விழுந்து […]

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்?

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்? கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளைச் சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடுகிறீர்கள் என்று என் பக்கத்து வீட்டு அன்பர் கேட்கிறார். பதில் : நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை. இஸ்லாமிய நம்பிக்கையின் […]

நாய் வளர்க்கலாமா?

நாய் வளர்க்கலாமா? வேட்டையாடுவதற்கும், பாதுகாப்புக்காகவும் மட்டும் நாய்களை வளர்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. இது போன்ற தேவைகளின்றி செல்லப் பிராணியாக நாய்களை வளர்க்கக் கூடாது. இதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. 2322حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَمْسَكَ كَلْبًا فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ […]

வேட்டையாடுதல் குறித்த சட்டங்கள்

வேட்டையாடுதல் குறித்த சட்டங்கள் அவர்கள் உம்மிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவைகளைப் பற்றிக் கேட்கின்றனர். தூய்மையானவைகளும் அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி உங்களால் பயிற்றுவிக்கப்பட்ட வேட்டைப் பிராணிகள் வேட்டையாடியதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்று கூறுவீராக! (வேட்டையாடும்) பிராணிகள் வேட்டையாடியதில் (எதையும் உண்ணாமல்) உங்களுக்காகக் கொண்டு வந்தால் அவற்றை உண்ணுங்கள்! அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன். (அல்குர்ஆன்:5:4.) இதுபற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர். صحيح […]

கினி பன்றிகள் வளர்க்கலாமா?

கினி பன்றிகள் வளர்க்கலாமா? கேள்வி : கினி பன்றிகள் தோற்றத்தில் முயல் போன்றும், எலி போன்றும் உள்ளது. இந்தப் பிராணியை செல்லப் பிராணியாக வளர்ப்பது கூடுமா? பதில் : இந்தப் பிராணி பன்றியைப் போன்று பெரிய தலை தடித்த கழுத்து வட்டமான பின்பகுதி ஆகியவற்றைப் பெற்றுள்ளதால் இதில் பன்றியின் சாயல் தென்படும். மேலும் இது எழுப்பும் சப்தம் பன்றியின் சப்தத்தைப் போன்று அமைந்துள்ளது. முயலுடைய சாயலும் இந்தப் பிராணியில் தெரியும். ஆனால் உண்மையில் இது பன்றி இனத்தைச் […]

வீட்டில் பூனை வளர்க்கலாமா.?

வீட்டில் பூனை வளர்க்கலாமா.? இஸ்லாத்தில் பூனை வளர்ப்பதற்கு அனுமதியுள்ளது. மனிதர்களைச் சார்ந்து வாழும் செல்லப் பிராணி யாக இதை வளர்க்கலாம். அப்படி வளர்த்தால் அவற்றைக் கொடுமைப்படுத்தாமல் இருக்க வேண்டும். பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன. 2365حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عُذِّبَتْ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ […]

பல்லியைச் சாப்பிடலாமா?

பல்லியைச் சாப்பிடலாமா? நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு “தீங்கிழைக்கக்கூடிய பிராணி’ (ஃபுவைசிக்) எனப் பெயரிட்டார்கள் அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல் ; முஸ்லிம் (4507) மனிதர்களுக்கு கேடு விளைவிப்பதால் பல்லியைக் கொல்வதற்கு மார்க்கம் அதிகம் ஆர்வமூட்டுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படுகின்றன. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும், மூன்றாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான […]

எலிக்கறி சாப்பிடலாமா?

எலிக்கறி சாப்பிடலாமா? எலிக்கறி சாப்பிடலாமா? கூடாதா? என்பது தொடர்பாக தற்போது கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது எலிக்கு வேட்டையாடும் நகங்களோ, கோரைப் பற்களோ கிடையாது எனவே அதனைச் சாப்பிடுவதால் குற்றமில்லை என்பதே எலிக்கறி சாப்பிடலாம் என்பவர்கள் முன்வைக்கும் ஆதாரமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குளில் கோரைப் பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் வேட்டையாடும் நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (3914) ஒன்றை […]

எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா?

எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா? {وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ (27) لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28) ثُمَّ لْيَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ (29)} [الحج: 27 – 29] “மக்களுக்கு ஹஜ்ஜைப் […]

பாம்பு, முதலை, ஆமை சாப்பிடலாமா?

கீறிக் கிழிக்கும் விலங்குகளை உண்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி? சுறா, திமிங்கிலம் போன்றவை ஹலாலா? கடலில் உள்ள அனைத்தும் ஹலால் என்றால் பாம்பு, முதலை, ஆமை போன்றவை எப்படி? விளக்கவும். பதில் விலங்கினங்களைப் பொறுத்த வரை பன்றி பற்றி குர்ஆனில் (2:173, 5:3, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது. வீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரி 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, […]

பன்றி இனத்தைச் சேர்ந்த டால்பின் ஹலாலா?

டால்பின் பன்றி இனத்தைச் சேர்ந்தது. எனவே அது ஹலாலா?  பதில் ஹலால் தான் டால்பின் என்பது பன்றி வகையைச் சேர்ந்தது அல்ல. அதுவும் மீன் வகையைச் சேர்ந்தது தான். குர்ஆனில் தடை செய்யப்பட்டுள்ளது பன்றி என்ற விலங்கின் இறைச்சி தானே தவிர பார்ப்பதற்கு பன்றியின் தோற்றத்தில் உள்ளது எல்லாம் ஹராம் என்று கூறப்படவில்லை. கடல் வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை செய்யப்பட்டது இருந்திருந்தால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் கூறவேண்டும். வேறு எவருக்கும் ஹராமாக்கும் […]

யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா?

யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா? கூடாது யானை உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணியா என்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. யானையின் இறைச்சியை உண்ணக்கூடாது என்று அதிகமானோர் கூறுகின்றனர். யானையின் இறைச்சியை உண்ணக்கூடாது என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாக கூறுகிறார்கள். கோரைப் பற்கள் உள்ள பிராணிகளை உண்ணக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். صحيح البخاري (7/ 96) 5530 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا […]