Tamil Bayan Points

Category: வஹியில் முரண்பாடா?

u337

35) மூஸா நபி மலக்குள் மவ்துக்கு அடித்தார்களா?

மூஸா நபி மலக்குள் மவ்துக்கு அடித்தார்களா? புனித அல்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளின் வரிசையில் நபி மூஸா (அலை) அவர்கள் வானவருக்கு அடித்ததாக இடம் பெற்றுள்ள செய்தியும் ஒன்றாகும். அதைப் பற்றிய முழு விபரத்தை இங்கு விரிவாக பார்ப்போம். حدثنا يحيى بنُ موسى حدَّثَنا عبدُ الرزّاق أخبرَنا مَعمرٌ عنِ ابنِ طاوسٍ عنِ أبيهِ عن 3407 أبي هريرةَ رضيَ الله عنه قال:أُرسِلَ ملكُ الموتِ إلى موسى عليهما السلام، […]

34) சூனியத்தை நம்பியவன் சுவர்க்கம் புகமாட்டான் என்ற செய்தி பலவீனமானதா?

34) சூனியத்தை நம்பியவன் சுவர்க்கம் புகமாட்டான் என்ற செய்தி பலவீனமானதா? சூனியம் தொடர்பாக இடம் பெரும் செய்திகளில் எதிர் தரப்பினரின் போலி வாதங்களுக்கு பதிலாக அமைந்த தெளிவான ஒரு செய்தி தான் சூனியத்தை உண்மைப் படுத்தியவன் சுவனம் நுழைய மாட்டான் என்ற கருத்துப்பட பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியாகும். குறித்த செய்தி தமது சூனியக் கருத்துக்கு பலத்த அடியாக அமைந்திருக்கின்றது என்பதை புரிந்து கொண்ட சூனியக் கூட்டத்தினர் தற்போது குறித்த செய்தியையும் பலவீனம் என்று தட்டிக் கழித்து தப்பித்து […]

33) நபிகளாருக்கு சூனியம் – ஆறு மாத கால ஹதீஸ் பலவீனமா?

33) நபிகளாருக்கு சூனியம் – ஆறு மாத கால ஹதீஸ் பலவீனமா? நபிகள் நாயத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதாகவும், அதனால் நபியவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டதாகவும் புகாரி உள்ளிட்ட சில நூல்களில் பதிவாகியிருக்கும் செய்திகளை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற வாதத்தின் அடிப்படையில் நாம் மறுக்கிறோம். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதன் சூனியம் செய்தான். அதன் காரணமாக அவர்கள் செய்யாததைச் செய்ததாக அவர்களுக்குப் பிரமை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. தம் மனைவியரிடம் உடலுறவு கொள்ளாமலே உடலுறவு கொண்டதாக […]

32) நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதா? -2

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநோய் வராது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்க மறுத்தவர்கள் அவர்களைப் பைத்தியம் என்று சொன்னார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்கள் அதைத் தான் வேறு வார்த்தையில் சொல்கிறார்கள். ஒரு செய்தி பல சொல்லமைப்புகள் மூலம் சொல்லப்படுவது வழக்கத்தில் உள்ளது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநோய் ஏற்பட்டது என்ற சொல் நேரடியாக அந்தச் செய்தியில் இல்லாவிட்டாலும் அந்தக் […]

31) நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதா?

31) நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதா? அல்குர்ஆனுக்கு முரண்படுகின்ற செய்திகளில் மிக முக்கிய இடத்திலிருப்பது சூனியம் பற்றிய செய்திகளாகும். மற்ற செய்திகளை விட இவற்றை நம்புவதே மிகப் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. சூனியத்தை உண்மையென்று நம்புவது இறைவனுக்கு இணை வைக்கும் செயலாகும் என்று திருமறைக் குர்ஆனும், நபியவர்களும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். அந்த அடிப்படையில் சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்ற கருத்துப்பட புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் பற்றிய விபரங்களை சுருக்கமாக […]

30) இளைஞருக்குப் பாலூட்டுதல் – ஸாலிம் (ரலி) பற்றிய செய்தி

30) இளைஞருக்குப் பாலூட்டுதல் – ஸாலிம் (ரலி) பற்றிய செய்தி அபூஹுதைபா (ரலி) அவர்களின் மனைவியால் வளர்க்கப்பட்ட ஸாலிம் எனும் இளைஞர் அபூஹ_தைபாவின் வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அபூஹுதைபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது ஸாலிமுக்குப் பாலூட்டு! இதனால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிம் […]

29) விவசாயக் கருவிகளினால் இழிவு வருமா?

29) விவசாயக் கருவிகளினால் இழிவு வருமா? விவசாயம் என்பது மனித வாழ்வின் உயிர் நாடியாகும். விவசாயம் இல்லாவிட்டால் ஒரு நாடோ, நாட்டின் குடிமக்களோ உயிர்வாழவும் முடியாது. ஆகவே தான் அல்குர்ஆனும், நபி (ஸல்) அவர்களும் விவசாயத்தை மிகவும் புகழ்ந்து சொல்கின்றார்கள். நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா? நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். நாம் கடன் பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம் என்று (கூறி) அப்போது […]

28) மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்பு நடந்ததா?

28) மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்பு நடந்ததா? அப்துல்லாஹ் பின் அபீ நமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், “இவர்களில் அவர் யார்?” என்று கேட்டார். அவர்களில் […]

27) மாடு உழவு செய்வதற்காக மட்டும் தான் படைக்கப்பட்டதா?

27) மாடு உழவு செய்வதற்காக மட்டும் தான் படைக்கப்பட்டதா? குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளின் இன்னுமோர் பிரதான செய்தியாக இருப்பது மாடு பேசிய செய்தி பற்றிய ஹதீஸாகும். இது பற்றி இங்கு விபரமாகப் பார்ப்போம்.  (صحيح البخاري) حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الَّلِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي سَلَمَةَ، – 3471 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الَّلُ عَنْهُ، قَالَ: صَلَّى رَسُولُ الَّلِ صَلَّى اللهُ […]

26) நபியவர்கள் அன்னியப் பெண்ணுடன் தனித்திருந்தார்களா?

26) நபியவர்கள் அன்னியப் பெண்ணுடன் தனித்திருந்தார்களா? குர்ஆனுக்கு மாற்றமான கருத்தைத் தருகின்றது என்று நாம் கூறும் செய்திகளில் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியும் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய ஒழுக்க வாழ்வை கேள்விக்குற்படுத்தும் விதமாக, நபியவர்கள் அன்னியப் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்தார்கள் என்றும் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு தலையில் பெண் பார்த்து விட்டார்கள் என்றும் குறித்த செய்தியில் இடம் பெற்றுள்ளது. ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும், அன்னியப் பெண்களுக்கு மத்தியில் எவ்வாறு நடந்து கொள்ள […]

25) சுலைமான் நபிக்கு மறைவான அறிவு உண்டா?

25) சுலைமான் நபிக்கு மறைவான அறிவு உண்டா? சுலைமான் நபி தொடர்பில் புகாரியின் இடம் பெறும் கீழுள்ள செய்தியும் திருமறைக் குர்ஆனின் கருத்துக்கு நேர்மாற்றமாக அமைந்திருக்கின்றது. மட்டுமன்றி இஸ்லாத்தின் அடிப்படை செய்திகள் ஒன்றான மறைவானவை பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு என்பதை தகர்த்து நபி சுலைமானுக்கும் மறைவான அறிவு உண்டு என்ற விபரீதமான கருத்தைத் தரும் வகையில் அமைந்திருக்கின்றது. இது பற்றிய விபரமாக ஆராய்வோம். 93 /7 (صحيح البخاري ) حَدَّثَنِ مَْمُودٌ، حَدَّثَنَا […]

24) காணாமல் போன இரண்டு வசனங்கள்

24) காணாமல் போன இரண்டு வசனங்கள். உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்டியாக இறைவனால் தனது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது தான் திருமறைக் குர்ஆன் ஆகும். திருமறைக் குர்ஆன் பாதுகாக்கப்பட்ட இறைவேதம் என்பதுடன், அல்குர்ஆனை எதிர்க்கும் அனைவருக்கும் சவால் விடுக்கும் புனித வேதமுமாகும். இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி. (அல்குர்ஆன்:02:02.) திருமறைக் குர்ஆனில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று இறைவன் மிகத் தெளிவாக நமக்குத் தெரிவிக்கின்றான். உலகில் […]

23) உலகம் படைக்கப்பட்ட நாட்கள் 06 அல்லது 07 ?

23) உலகம் படைக்கப்பட்ட நாட்கள் 06 அல்லது 07 ? உலகம் எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது என்ற கேள்விக்கு 06 நாட்கள் என்று இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் மிகத் தெளிவாக பதில் தந்துள்ளான். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும்,சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே […]

22) வேண்டுமென்று கொலை செய்தவருக்கு மன்னிப்புண்டா?

22) வேண்டுமென்று கொலை செய்தவருக்கு மன்னிப்புண்டா? கொலையைப் பெரும் பாவம் என்றும், நிரந்தர நரகத்திற்குரிய செயல் என்றும் அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் நமக்குக் கற்றுத் தருகின்றன. இருப்பினும், நூறு கொலைகளைச் செய்த ஒருவனுக்கு இறைவன் மன்னிப்பளித்ததாக புகாரியில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. குறித்த செய்தி திருமறைக் குர்ஆனின் வசனங்களுக்கு நேரடியாக மோதக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றது. எனவே இது பற்றிய முழுமையான விபரங்களை இங்கு ஆராய்வோம். நூறு கொலை செய்தவனுக்கு மன்னிப்பளித்தமை பற்றிய செய்தி இதுதான். […]

21) பல்லி பற்றிய ஹதீஸின் நிலை?

21) பல்லி பற்றிய ஹதீஸின் நிலை? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள், “அது இப்ராஹீம் (அலை – அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது” என்றும் சொன்னார்கள். அறிவிப்பவர்: உம்மு ஷூரைக் (ரலி) நூல்: புகாரி – 3359 இந்த ஹதீஸ் தொடர்பாக நாம் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பி வருகின்றோம். அவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம். அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? […]

20) குரங்கு விபச்சாரம் செய்ததா?

20) குரங்கு விபச்சாரம் செய்ததா? குரங்கு ஒன்று விபச்சாரத்தில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டதாகவும் மற்ற குரங்குகள் எல்லாம் சேர்ந்து விபரச்சாரம் செய்த குறித்த குரங்குக்கு கல்லெறிந்து தண்டித்ததாகவும் ஒரு செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுக்கப்பட வேண்டிய பட்டியலில் இந்த செய்தியும் அடக்கம். அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண்குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன். […]

19) அபூலஹபின் விரலை நரகம் தீண்டாதா?

19) அபூலஹபின் விரலை நரகம் தீண்டாதா? இஸ்லாத்தின் தீவிர எதிர்ப்பாளர்களில் ஒருவனாகவும், நபியவர்களின் பிரச்சாரத்தை நேரடியாக எதிர்த்து குறை சொல்லித் திரிந்தவனுமான நபியவர்களின் பெரிய தந்தை அபூலஹபுடைய விரலை நரகம் தீண்டாது என்ற கருத்திலமைந்த ஒரு செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் இங்கு விரிவாக ஆராய்வோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை அவர்களின் பெரிய தந்தை அபூலஹபிடம் கூறுவதற்காக அவனது அடிமைப் பெண் ஓடி வரும் போது […]

18) நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றார்களா?

18) நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றார்களா? நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் வஹீ – இறைச் செய்தியை அருள ஆரம்பித்து பின் சிறிது நாட்கள் வஹீ வராமல் இருந்த காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்கள் என்ற கருத்தில் அமைந்த ஒரு செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீண்டதொரு செய்தியின் இறுதிப் பகுதியாகவே தற்கொலை பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது தான் அந்தச் செய்தி (ஹதீஸின் சுருக்கம்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: […]

17) அஜ்வா பேரிச்சம் பழம் பற்றிய செய்தியின் உண்மை நிலை?

17) அஜ்வா பேரிச்சம் பழம் பற்றிய செய்தியின் உண்மை நிலை? சூனியத்திற்குத் தாக்கம் உண்டு என்றும், அதனால் நினைத்த நேரத்தில் நினைத்தவாறு, தான் நினைத்தவர்களுக்கெல்லாம் தாக்கத்தை உண்டாக்கலாம் என்றும் பிரச்சாரம் செய்வோர் தமது கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக எடுத்து வைக்கும் ஆதாரங்களில் கீழே நாம் விளக்கவுள்ள அஜ்வா பற்றிய செய்தியும் ஒன்றாகும். யார் தினமும் காலையில் 07 அஜ்வா வகை பேரீச்சம் பழங்களை உண்டு வருகின்றாரோ அவருக்கு எந்த விஷமோ, சூனியமோ தாக்காது என்பதே குறித்த செய்தியின் […]

16) நபியின் சளியை நபித்தோழர்கள் மேனியில் பூசிக் கொண்டார்களா?

16) நபியின் சளியை நபித்தோழர்கள் முகத்திலும் மேனியிலும் பூசிக் கொண்டார்களா?  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்த ஹதீஸாக இருந்தாலும் அது திருக்குர்ஆனுக்கும் இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளுக்கும் மாற்றமாக இருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்ற நிலையை அடையாது. குறிப்பிட்ட நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் அல்லது அதைச் சொல்பவர் நம்பகமானவர் என்பது மட்டும் ஒரு ஹதீஸை ஆதாரப்பூவமானதாக ஆக்கிடாது. ஹூதைபியா உடன்படிக்கையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் எதிரிகளுக்கும் நடந்த உரையாடலும் […]

15) சிந்தனைக்கு முக்கியத்துவமா?

15) சிந்தனைக்கு முக்கியத்துவமா? அல்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்கள் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அவை நபியவர்கள் சொன்னவை கிடையாது என்று தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்யும் போது, நமது பிரச்சாரத்தை ஆதாரத்தை முன்வைத்துப் பேச, எழுத திராணியற்றவர்கள் நம்மீது பொய்யான விமர்சனங்களை அள்ளி வீசுவதின் மூலம் இந்த சத்தியக் கொள்கைக்கு அசத்தியச் சாயம் பூசிவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் அல்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறும்போது நம்மை எதிர்க்கும் […]

14) மனோ இச்சைப்படி மறுக்கிறோமா?

14) மனோ இச்சைப்படி மறுக்கிறோமா? ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மனோஇச்சைக்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் மறுக்கிறார்கள் என்றொரு குற்றச்சாட்டையும் நம்மை எதிர்ப்பவர்கள் முன்வைக்கின்றார்கள். அவர்களின் இந்தச் குற்றச்சாட்டு தொடர்பாகவும் நாம் இங்கு விளக்கியாக வேண்டும். ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதினாலேயே பலவிதமான பிரச்சினைகளையும் சந்தித்து வரும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மனோஇச்சைக்காக ஹதீஸ்களை மறுக்கின்றார்கள் என்ற இவர்களின் விமர்சனம் எந்த அடிப்படையும் அற்றது என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். அல்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை நாம் ஏற்றுக் […]

13) நபி வழியா? புது வழியா?

13) நபி வழியா? புது வழியா? அல்குர்ஆனுக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் பேச மாட்டார்கள் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு அமைவாக அல்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நாம் பிரச்சாரம் செய்து வருகின்றோம். அல்குர்ஆனும், அல்குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸ்களும் மாத்திரமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்று இன்று நாம் செய்து வரும் பிரச்சாரம் திருமறைக் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் மூலம் பெறப்பட்டதே என்பதை பல இடங்களில் விரிவாக […]

12) “அஹ்லுல் குர்ஆன்”களின் வழியா?

12) “அஹ்லுல் குர்ஆன்”களின் வழியா? அல்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறும் போது நம்மை எதிர்ப்பவர்கள் நம் மீது சுமத்தும் இன்னொரு குற்றச்சாட்டு “இவர்கள் ஹதீஸ்களை மறுத்த அஹ்லுல் குர்ஆன் என்ற வழிகெட்ட பிரிவினரின் கருத்துக்களைத் தான் முன் வைக்கின்றார்கள்” என்பதாகும். இவர்களின் இந்த விமர்சனத்திற்குரிய பதிலையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் தெளிவான மார்க்கம். உலகின் நவீனப் பிரச்சினைகள் அனைத்திற்கும் இந்த மார்க்கத்தில் தீர்வு உண்டு. விஞ்ஞானத்திற்கு […]

11) குர்ஆன், சுன்னா வழியா? அல்லது முஃதஸிலாக்களின் வழியா?

11) குர்ஆன், சுன்னா வழியா? அல்லது முஃதஸிலாக்களின் வழியா? ஒரு செய்தி குர்ஆனுக்கு முரண்பட்டால் அதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பினும் அது ஆதாரத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாத செய்தி என்ற எமது நிலை வழிகெட்ட பிரிவினர்களுள் ஒரு பிரிவான முஃதஸிலாக்கள் கடைப்பிடித்த வழிமுறை என்று நமக்கு மாற்றுக் கருத்திலிருப்பவர்கள் பிரச்சாரம் செய்வதை பார்த்து வருகிறோம். முஃதஸிலாக்கள் கடைப்பிடித்ததால் இதை நாம் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, இந்த வழிமுறைக்கு குர்ஆனிலும் நபிமொழியிலும் தக்க ஆதாரம் இருப்பதால்தான் கடைப்பிடிக்கிறோம் என்பதை தெளிவாக […]

10) வழிகேட்டை காப்பாற்ற ஹதீஸை பலவீனப் படுத்தும் வழிகேடர்கள்

10) வழிகேட்டை காப்பாற்ற ஹதீஸை பலவீனப் படுத்தும் வழிகேடர்கள் சூனியத்தை உண்மை என்று நம்பி அதற்கு ஆற்றல் இருப்பதாக வாதிடும் வழிகேடர்கள் தமது கருத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆதாரபூர்வமான செய்திகளை பலவீனம் என்று தட்டிச் செல்வதற்கு முயற்சி செய்கின்றார்கள். அந்த வகையில் நபியவர்களின் செய்திகளை எப்படி அனுக வேண்டும் என்பதை மிகத் தெளிவாக உணர்த்தும் கீழ்க் கண்ட செய்தியையும் பலவீனம் என்று சொல்லி தட்டிக் கழித்துவிட முயல்கிறார்கள். குறித்த செய்தியின் உண்மை நிலையை தெளிவாக நாம் அறிந்து […]

09) புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள்

9) புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள் அறிஞர் அல்பானியின் ஆய்வுப் பார்வை ஹதீஸ்களை அறிவிப்பாளர் தரம் பார்த்து பலம், பலவீனம் என்று பிரித்துத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பத்திலேயே வந்துவிட்டது. அந்தக் காலகட்டத்தில் புகாரி, முஸ்லிமில் பலவீனமான ஹதீஸ்கள் எதுவும் அறவே இடம்பெறாது என்று உலகெங்கிலும் உள்ள மார்க்க அறிஞர்கள் நம்பியது போன்று நாமும் நம்பியிருந்தோம். ஆனால் எதையும் குருட்டுத்தனமாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற குர்ஆனின் போதனைக்கு ஏற்ப, ஆய்வு […]

08) புகாரி, முஸ்லிம் போன்ற பெரும் அறிஞர்களுக்குத் தெரியாததா?

8) புகாரி, முஸ்லிம் போன்ற பெரும் அறிஞர்களுக்குத் தெரியாததா இவர்களுக்கு தெரிந்து விட்டது? அல்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது. அவை நபி (ஸல்) அவர்கள் சொன்னவை கிடையாது. என்று தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்து வருகின்றது. நமது பிரச்சாரத்தை உரிய வாதங்களை வைத்து ஆதாரத்துடன் மறுக்க திராணியற்றவர்களின் அர்த்தமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும். இமாம் புகாரி அவர்களின் ஸஹ்ஹீல் புகாரி, இமாம் முஸ்லிம் அவர்களின் ஸஹீஹ் முஸ்லிம், இமாம் திர்மிதி, இமாம் நஸயீ, […]

07) “ஷாத்” வகை ஹதீஸ்கள் பற்றிய தெளிவு

7) “ஷாத்” வகை ஹதீஸ்கள் பற்றிய தெளிவு பலவீனமான ஹதீஸ்களின் வகைகளில் ஒன்றாக கருதப்படும் “ஷாத்” வகை தொடர்பில் நாம் மிகவும் தெளிவாக இங்கு அறிந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். அல்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது அவை மறுக்கப்பட வேண்டியவை என்று நாம் கூறும் போது, நம்மைப் பார்த்து வழிகேடர்கள் முஃதஸிலாக்கள் என்றெல்லாம் விமர்சனம் செய்பவர்கள் ஹதீஸ் கலையில் “ஷாத்” என்று கூறி ஹதீஸ்களை மறுப்பதை மாத்திரம் ஏற்றுக் கொள்கின்றார்கள். புனித குர்ஆனுக்கு மாற்றமாக அல்லாஹ்வின் […]

06) குர்ஆனுக்கு முரணாக ஹதீஸை அறிவிப்பவர் பொய்யரா?

6) குர்ஆனுக்கு முரணாக ஹதீஸை அறிவிப்பவர் பொய்யரா? குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்ந்தவை என்று நாம் கூறுகின்றோம். நம்மைப் போல் பல அறிஞர்களும் இவ்வாறு கூறுகின்றனர். குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை வைத்துப் பார்த்தாலும் ஹதீஸ் கலையில் கூறப்பட்ட இவ்விதி சரியானது என்பதைச் சந்தேகமற அறியலாம். பொதுவாக ஹதீஸ் கலையில் பலவீனமான செய்திகள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த வகைகளில் மிக மோசமான தரத்தில் அமைந்தவை இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகும். குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் இந்த வகையுடனே […]

05) ஹதீஸ் கலையில் இல்லாத புது விதியை தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம் செய்கிறதா?

5) ஹதீஸ் கலையில் இல்லாத புது விதியை தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம் செய்கிறதா? அல்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்கள் தொடர்பான நமது நிலைபாட்டை நாம் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கின்ற போது, அதற்கு மாற்றுக் கருத்துக் கொண்டுள்ள உலமாக்கள் நமது வாதங்களுக்குரிய ஆதாரபூர்வமான பதில்களைத் தருவதை விடுத்து, அர்த்தமற்ற விமர்சனங்களையே முன்வைத்து வருகின்றார்கள். இவர்களின் விமர்சனங்களில் மிக முக்கியமானதொரு விமர்சனம் தான் முரண்படும் செய்திகள் பற்றிய ஹதீஸ் கலை விதி தொடர்பான விமர்சனமாகும். தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூறுவது போல் […]

04) ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கிறோமா?

4) ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கிறோமா? திருக்குர்ஆனும் நபிவழியுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள். இதை தக்க வாதங்களோடும் தெளிவான சான்றுகளோடும் எண்பதுகளிலிருந்து தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்து வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப் பிரச்சாரத்தால் அதிக அளவில் மக்கள் ஈர்க்கப்பட்டார்கள். விளைவு ஊருக்கு நாலைந்து பேர் என்ற நிலை மாறி சத்தியக் கொள்கையில் கூட்டம் கூட்டமாக மக்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். 17:81 وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُ‌ؕ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا‏ “சத்தியம் வந்தது […]

03) ஹதீஸ் கலை விதி பற்றிய ஓர் பார்வை

3) ஹதீஸ் கலை விதி பற்றிய ஓர் பார்வை ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட முறை திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று நாம் கூறுவது நமது மனோ இச்சையின் அடிப்படையில் அல்ல. மாறாக திருக்குர்ஆனிலிருந்தும் நம்பகமான ஹதீஸ்கள் என்று உறுதி செய்யப்பட்ட ஹதீஸ்களில் இருந்தும் இந்த விதியை நாம் அறிந்து கொள்ளலாம். நபித்தோழர்களும் தமது வாழ்வில் இந்த விதியைக் கடைப்பிடித்துள்ளார்கள். ஹதீஸ் கலை அறிஞர்களும் இந்த விதியை வகுத்துள்ளனர். நல்லறிஞர்களும் இந்த விதியின் அடிப்படையில் சில ஹதீஸ்களை […]

02) வஹியில் முரண்பாடா?

2) வஹியில் முரண்பாடா? உலக மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் வழங்கப்பட்ட புனிதமிக்க இஸ்லாம் மார்க்கத்தின் இறுதித் தூதராக இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வியல் வழிகாட்டியாகவும், அதற்குரிய விளக்கமாக தமது வாழ்நாளையும் அமைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களினால் வழங்கப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரமாகத் திகழ்வது வஹீ – இறைச் செய்திகளாகும். இறைச் செய்திகள் திருக்குர்ஆன் என்று ஒரு முறையிலும், அதற்கு விளக்கமாக நபியவர்கள் கூறிய செய்திகள் […]

01) முன்னுரை

1) முன்னுரை உலக மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் வழங்கப்பட்ட புனித இஸ்லாம் மார்க்கம் இன்று உலகின் பல பாகங்களிலும் வியாபித்து வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். இதற்குக் காரணம் இஸ்லாத்தின் வேதமாகிய திருமறைக் குர்ஆனும், அதன் விளக்கவுரையாக வாழ்ந்து காட்டிய நபி (ஸல்) அவர்களின் கருத்துக்களும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் தாக்கமாகும். எந்தவொரு முரண்பாடும் அற்ற வேதத்தைத் தந்த இறைவன் அதனை விளக்குவதற்காக தேர்ந்தெடுத்த நபி (ஸல்) அவர்களையும் முரண்பாடுகள் அற்ற தூய செய்தியைக் […]