Tamil Bayan Points

Category: இஸ்லாமியப் பொருளாதாரம்

u442

23) வியாபாரம் – 6

23) வியாபாரம் – 6 பிறரது பொருளைச் சேதப்படுத்துவதன் இழப்பீடு பிறரது பொருளை ஒருவர் சேதப்படுத்தி விட்டால் அந்தப் பொருளின் மதிப்புக்கு ஏற்க இழப்பீடு வழங்க வேண்டும். صحيح البخاري 5225  حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ، فَأَرْسَلَتْ إِحْدَى أُمَّهَاتِ المُؤْمِنِينَ بِصَحْفَةٍ فِيهَا طَعَامٌ، فَضَرَبَتِ الَّتِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ […]

22) வியாபாரம் – 5

22) வியாபாரம் – 5 உண்டியல் மூலம் பணம் அனுப்புவது கூடுமா? ஒருவர் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்குப் பணம் அனுப்பினால் அந்தப் பணத்துக்கு அரசாங்கம் வரி வாங்குகிறது. இந்த வரியைச் செலுத்தாமல் இருப்பதற்காக அரசுக்குத் தெரியாத வகையில் மறைமுகமாக பணத்தை அனுப்புவதற்கு உண்டியல் முறை என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதும் இதையே தொழிலாகச் செய்வதும் மார்க்கத்தில் கூடுமா? நாம் சம்பாதிக்கும் பணத்தை நாம் விரும்பும் வகையில் பயன்படுத்த இஸ்லாம் அனுமதிக்கிறது. இஸ்லாமியச் சட்டப்படி அமைந்த அரசாங்கத்தில் உண்டியல் […]

21) வியாபாரம் – 4

21) வியாபாரம் – 4 பூஜிக்கப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை விற்கலாமா முஸ்லிமல்லாதவர்கள் குறிப்பாக இந்து மதத்தவர்கள் விவசாயம் செய்தாலும், கட்டடம் கட்டினாலும், ஒரு கடை திறந்தாலும் பூஜை செய்யாமல் துவக்க மாட்டார்கள். அல்லாஹ் அல்லாதவர்களுக்கு படையல் செய்யப்பட்டதை நாம் சாப்பிடக் கூடாது என்பதால் இதைச் சாப்பிடலாமா? விற்கலாமா என்ற சந்தேகம் எழலாம். பூஜை செய்து விட்டு அவர்கள் விவசாயம் செய்வதால் அவர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் அரிசி, கோதுமை, இன்னபிற விளை பொருட்களை நாம் உண்ணலாமா? அவர்கள் […]

20) வியாபாரம் – 3

20) வியாபாரம் – 3 தண்ணீர் வியாபாரம் صحيح مسلم 34 (1565) وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، أَخْبَرَنَا وَكِيعٌ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، جَمِيعًا عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ فَضْلِ الْمَاءِ»   நபிகள் நாயகம் (ஸல்) […]

19) வியாபாரம் – 2

19) வியாபாரம் – 2 பதுக்கல் கூடாது பதுக்கல் கூடாது என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் பதுக்கல் என்பதன் பொருளை அதிகமான மக்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. கையிருப்பில் பொருட்களை வைத்துக் கொண்டு நுகர்வோர் கேட்கும்போது இல்லை எனக் கூறுவதும் இதன் மூலம் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பின்னர் அதிக விலைக்கு விற்பதும்தான் பதுக்கல் எனப்படும். வியாபாரிகள் அதிகமான பொருட்களை வாங்கி இருப்பு வைப்பது பதுக்கல் ஆகாது. எவ்வளவு வேண்டுமானாலும் வியாபாரத்துக்காக ஒருவர் கையிருப்பில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் […]

18) வியாபாரம் -1

18) வியாபாரம் வியாபாரத்தில் ஏமாற்றுதல் இல்லை யாரையும் எந்த விதத்திலும் ஏமாற்றக் கூடாது என்பது வியாபாரத்துக்கு இஸ்லாம் கூறும் முக்கியமான விதியாகும். வாங்குபவராக இருந்தாலும் விற்பவராக இருந்தாலும் நாணயத்தையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் மற்ற சந்தர்ப்பங்களில் யாரையும் ஏமாற்றத் துணியாதவர்கள்கூட வியாபாரத்தில் மக்களை ஏமாற்றுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது போல் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். அளவு நிறுவையில் குறைவு செய்தல், ஒரு பொருளைக் காட்டி இன்னொரு பொருளை விற்றல், போலியான பொருள்களை விற்றல், ஒரு பொருளில் இல்லாத […]

17) லஞ்சம்

17) லஞ்சம் லஞ்சத்துக்குத் தடை இஸ்லாத்தில் லஞ்சம் வாங்குவது அறவே தடுக்கப்பட்டுள்ளது. யாரிடம் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு முறையாக ஊதியம் அளிக்கப்படுகிறது. அவர்கள் எந்தப் பணியைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டார்களோ அந்தப் பணியைச் செய்து கொடுக்க மக்களிடம் பெறப்படும் கையூட்டுதான் லஞ்சம் எனப்படும் குடும்ப அட்டை, பாஸ்போர்ட் போன்ற அத்தியாவசியங்களுக்குக்கூட லஞ்சம் வாங்குகிறார்கள். தொழில்களுக்கும் கட்டடங்கள் கட்டவும் அனுமதி அளிக்க லஞ்சம் வாங்குவது சர்வசாதாரணமாகி விட்டது. முஸ்லிம்கள் இது போன்ற பொறுப்புகளில் இருந்தால் அவர்கள் ஒருபோதும் லஞ்சம் வாங்கக் […]

16) தவிர்க்க வேண்டியவை-3

16) தவிர்க்க வேண்டியவை-3 திருட்டுப் பொருளை அன்பளிப்பாகப் பெறலாமா? திருட்டுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை உண்ணலாமா என்று சிலர் நினைக்கலாம். வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும். திருட்டுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. வட்டியின் மூலம் ஒருவன் சம்பாதித்தால் அவனுடைய சம்பாத்தியம் ஹராமாக இருந்தாலும் அது அவனுடைய பொருளாகும். இந்தியச் சட்டப்படியும், உலக நாடுகள் அனைத்தின் சட்டப்படியும், இஸ்லாமியச் சட்டப்படியும் இதுதான் சட்டமாகும். வட்டி கொடுத்த ஒருவன் வட்டி வாங்கியவனுக்கு எதிராக […]

15) தவிர்க்க வேண்டியவை-2

15) தவிர்க்க வேண்டியவை-2 அர்த்தமற்ற சந்தேகங்கள் சந்தேகத்துக்கும், மனக்குழப்பத்துக்கும் நுணுக்கமான வேறுபாடு உள்ளது. மனக்குழப்பத்தைச் சந்தேகம் என்று எண்ணினால் ஹலாலானவையும் ஹராம் எனத் தோற்றமளித்து விடும். சந்தேகமானதை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்பதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமில்லாத காரியங்களில் சந்தேகம் கொள்வது மனநோயின் அறிகுறியாகும். صحيح البخاري 2056 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ […]

14) தவிர்க்க வேண்டியவை

14) தவிர்க்க வேண்டியவை இறைவன் தடுத்ததை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் பொருளாதாரத்தைத் திரட்டுவதற்கு சில கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்திருக்கிறது. அனுமதிக்கப்பட்ட வகையில் பொருளீட்டுவதை ஹலால் என்றும், அனுமதிக்கப்படாத வகையில் பொருளீட்டுவதை ஹராம் என்றும் இஸ்லாம் வகைப்படுத்தியுள்ளது. பொருளாதாரத்தைத் திரட்டுவது தனி மனிதனின் உரிமை; அதில் மதங்கள் தலையிட்டு கட்டுப்பாடுகள் விதிப்பது தேவையற்றது என்று முஸ்லிம்களில் சிலர் நினைக்கின்றனர். இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிப்பதால் பொருளாதாரத்தைத் திரட்டும் பல வாய்ப்புகளை மனிதன் இழந்து விடுகிறான் என்றும் அவர்கள் கருதுகின்றனர். பொருளீட்டுவதில் […]

13) வட்டி குறித்து இஸ்லாம் -2

13) வட்டி குறித்து இஸ்லாம் -2 இன்சூரன்ஸ் இன்ஷ்யூரன்ஸ் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத நவீன பிரச்சனையாகும். சமீப காலத்தில்தான் இது வழக்கத்துக்கு வந்துள்ளது. ஆயினும் இது குறித்து முடிவு எடுக்கத் தேவையான அடிப்படைகள் இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இஸ்லாம் தடுத்துள்ள வட்டி, மோசடி, ஏமாற்றுதல் போன்றவை இருந்தால் அது எந்த நவீன பிரச்சனையாக இருந்தாலும் அது தடுக்கப்பட்டதாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அனுமதிக்கப்பட்டதாகும். பொத்தாம் பொதுவாக இன்ஷ்யூரன்ஸ் கூடாது என்று சிலர் மார்க்கத் […]

12) வட்டி குறித்து இஸ்லாம்

12) வட்டி குறித்து இஸ்லாம் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை. வட்டியில் இருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும். வட்டியைக் குறித்து இஸ்லாம் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. வட்டி வாங்குவோர் அல்லாஹ்வுடன் போர் செய்பவர்கள் என்றும் மேலும் வட்டி வாங்குவோருக்கு நிரந்தர நரகம் எனவும் அல்லாஹ் எச்சரிக்கிறான். 2:278  يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏ […]

11) கடன் தள்ளுபடி பற்றிய சட்டம்

11) கடனைத் தள்ளுபடி செய்தல் ஒருவர் நம்மிடம் கடன் வாங்கி விட்டு மரணித்து விட்டால் கடனுக்குத் தக்கவாறு அவர் செய்த நன்மைகள் நமக்கு கிடைத்து விடும். ஆனால் நாமாக முன்வந்து கடனைத் தள்ளுபடி செய்து விட்டால் அதை விட அதிக நன்மையை அல்லாஹ் நமக்கு வழங்குகிறான். صحيح البخاري 3480 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ […]

10) கடன் விஷயத்தில் கண்டிப்பு

10) கடன் விஷயத்தில் கண்டிப்பு கடன்  கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. صحيح البخاري 2295 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِجَنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ: «هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟»، قَالُوا: لاَ، فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ […]

09) குறைந்த செல்வத்தில் கிடைக்கும் பரக்கத்

09) குறைந்த செல்வத்திலும் பரக்கத் உண்டு பரக்கத் எனும் மறைமுக அருளை நம்புதல் இன்னொரு உண்மையைப் புரிந்து கொண்டால் பேராசையில் இருந்து விடுபடலாம். பொதுவாக செல்வத்தின் அளவைப் பொருத்தே தேவைகள் நிறைவேறும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நேரங்களில் இது பொய்யாகிப் போய் விடுவதை நாம் பார்க்கிறோம். சிலருக்கு அதிகமான செல்வம் கிடைத்தும் தேவைகள் நிறைவேறாமல் போவதையும் வேறு சிலருக்கு குறைந்த அளவு செல்வத்திலும் அதிகமான தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றி விடுவதையும் நாம் காண்கிறோம். இது பரக்கத் எனும் […]

08) பேராசையை வெல்ல

08) பேராசையை வெல்ல இருப்பதைக் கொண்டு திருப்தி அடைதல் மற்றவர்களை விட நமக்குச் செல்வம் குறைவாகக் கொடுக்கப்பட்டதைக் கண்டால் அல்லது அவ்வாறு கருதினால் அதன் காரணமாக நம்முடைய நிம்மதி பறிபோய் விடுகிறது. மன உளைச்சலுக்கு நாம் ஆளாகிறோம். இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது. இறைவன் நமக்கு எதைக் கொடுத்திருக்கிறானோ அதில் திருப்தி அடைய வேண்டும் என்பதுதான் அந்த வழி. நம்மைப் படைத்த இறைவன் நமது தேவைகளையும் நமது நிலைகளையும் நம்மை விட […]

07) செல்வத்தை விட மானம் பெரிது

07) செல்வத்தை விட மானம் பெரிது பொருளாதாரத் தேடலில் சுயமரியாதையைப் பேணுதல் பொருளாதாரத்தைத் தேடுவதற்காக எந்த நெறிமுறைகளையும் பேணாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் மானம் மரியாதையை விட பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகும். பொருளாதாரத்தை விட மானம் மரியாதையே முதன்மையான செல்வம் என்று இஸ்லாம் போதிக்கிறது. சுயமரியாதையை விட்டால்தான் பணம் கிடைக்கும் என்றால் பணத்தை அலட்சியம் செய்து விட்டு சுயமரியாதைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுரை கூறுகிறது. صحيح البخاري قَالَ: مَاذَا يَأْمُرُكُمْ؟ […]

06) பொருளாதாரம் மட்டும்தான் செல்வமா?

06) பொருளாதாரம் மட்டும்தான் செல்வமா? பொருளாதாரத்தைத் திரட்டுவதில் எந்த நெறிமுறையையும் பேணவேண்டியதில்லை என்று அதிகமான மக்கள் நம்புகிறார்கள். இதற்குக் காரணம் கெட்டவர்களுக்கு அல்லாஹ் எல்லா இன்பங்களையும் வழங்கியுள்ளதாகவும் நல்லவர்களுக்கு ஒரு இன்பத்தையும் வழங்கவில்லை என்றும் நம்புவதுதான். இறைவன் அளித்துள்ள நற்பேறுகள் கோடாணு கோடிகள் உள்ளன. ஆனால் பொருளாதாரம் மட்டுமே பாக்கியம் என்று கருதுவதால்தான் இந்தத் தடுமாற்றம் ஏற்படுகிறது. ஒருவனுக்குப் பல்லாயிரம் கோடி பண வசதி இருந்தாலும் அவனுடைய வாழ்க்கையைக் கவனித்தால் நூறு சதவிகிதம் நிறைவாக இருக்காது. எத்தனையோ […]

05) வறுமையிலும் செம்மையாக வாழ

5) வறுமையிலும் செம்மையாக வாழ வறுமையும் சோதனைதான் வசதிகளும் சோதனைதான் ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். அதுபோல் ஒருவருக்கு வறுமையை அல்லாஹ் வழங்கினால் அதன் மூலம் அல்லாஹ் அவரைச் சோதித்துப் பார்க்கிறான் என்று நம்புவது மனமாற்றத்துக்கான முதல் பயிற்சியாகும். பொருளாதாரத்தைத் திரட்டும்போதும் அதை அனுபவிக்கும்போதும் மனிதன் எல்லை மீறுவதற்குக் காரணம் பொருளாதாரமும், வறுமையும் நம்மைச் சோதித்துப் பார்ப்பதற்காக இறைவன் வைக்கும் பரீட்சையாகும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான். […]

04) பொருளாதாரத்தால் விளையும் கேடுகள்

4) பொருளாதாரத்தால் விளையும் கேடுகள் பொருளாதாரத்தின் மூலம் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும் மறுமை வாழ்க்கையிலும் நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கமும் உள்ளது. பொருளாதாரத்தினால் நன்மைகள் பல விளைவது போல் ஏராளமான தீமைகளும் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இதைப் பற்றியும் மனிதர்களை இஸ்லாம் தக்க முறையில் எச்சரிக்கத் தவறவில்லை. مسند أحمد بن حنبل 17506 – حدثنا عبد الله حدثني أبي ثنا أبو العلاء الحسن بن سوار […]

03) பொருளாதாரத்தால் விளையும் நன்மைகள்

பொருளாதாரத்தால் விளையும் நன்மைகள் இஸ்லாத்தின் ஏராளமான கடமைகள் பொருளாதாரம் இருந்தால்தான் நிறைவேற்ற முடியும் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஜகாத் இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாகும். பொருளாதாரம் இருந்தால்தான் இந்தக் கடமையைச் செய்ய முடியும். செல்வத்தைச் தேடவோ, சேர்த்து வைக்கவோ கூடாது என்றால் இந்தக் கடமையை நிறைவேற்ற முடியாது. இஸ்லாத்தின் மற்றொரு கடமை ஹஜ். இந்தக் கடமையைச் செய்ய மக்காவில் உள்ளவர்களுக்குப் பெரிய அளவில் பொருளாதாரம் தேவைப்படாது என்றாலும் மற்றவர்கள் ஹஜ் செய்வதாக இருந்தால் பொருள் வசதி அவசியம். முஸ்லிம்கள் […]

02) முரண்பட்ட இரு பார்வைகள்

2) முரண்பட்ட இரு பார்வைகள் பொருளாதாரத்தைக் குறித்து இரண்டு வகையான பார்வைகள் உலக மக்களிடம் உள்ளன. சொத்துக்களைத் திரட்டுவதிலும், வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்வதிலும் ஒருவர் ஈடுபட்டால் அவர் ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியாது; கடவுளின் அன்பையும் அருளையும் பெற வேண்டுமென்றால் இவ்வுலகின் வசதி வாய்ப்புக்களைத் துறந்து விட வேண்டும்; இறைவனுக்காக வாழ வேண்டும். அதுதான் உயர்ந்த நிலையென்பது ஒரு பார்வை. பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக உழைக்காமல் பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தும் போலி ஆன்மிகவாதிகளின் பார்வை […]

01) முன்னுரை

1) முன்னுரை அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்லாம் கூறும் பொருளியல் எனும் தலைப்பில் ரமலான் மாதம்  தொடர் உரை நிகழ்த்தினேன். அந்த உரை சஹர் நேரத்தில் தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்தத் தொடரை நூல் வடிவில் அளித்தால் தேடி எடுக்க எளிதாக இருக்கும் என்று பல சகோதரர்கள் அடிக்கடி ஆர்வமூட்டி வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த உரையை எழுத்து வடிவில் மாற்றி இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம் என்ற தலைப்பில் தந்துள்ளேன். மேலும் அந்த உரையில் சொல்லாமல் […]