Tamil Bayan Points

Category: முஸ்லிம் தீவிரவாதி (?)

u479

44) கருணை நாயனின் காருண்ய மார்க்கம்

44) கருணை நாயனின் காருண்ய மார்க்கம் இஸ்லாம் கூறுகிற அறிவுரைகள் முதல் கட்டளைகள் வரை அனைத்துச் செய்திகளுமே மனித நேயத்தையும் மனித குல நன்மையையுமே அடிப்படையாகக் கொண்டவை. மனிதர்களுக்குத் தீங்களிக்கிற எந்தவொன்றையும் இஸ்லாத்தில் பார்க்க முடியாது. நிகரற்ற அன்புடையோன் இஸ்லாமிய மார்க்கம் எல்லாம் வல்ல இறைவன் வழங்கிய மார்க்கம். அந்த இறைவன் எப்படிப்பட்டவன் என்பதைத் தெரிந்து கொண்டால் அதிலிருந்தே அவன் வழங்கிய மார்க்கத்தையும் தெரிந்து கொள்ள லாம். மனிதர்கள் தாம் செய்யும் எல்லா காரியத்தையும் இறை நாமத்தோடு […]

43) போரில் புதுநெறி

43) போரில் புதுநெறி போரில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளைப் பற்றி குர்ஆன் கூறும் கட்டளைகளைத் தொகுத்துப் பார்த்தால் மனித உணர்வுகள் சாகடிக் கப்படும் போர்க்களத்தில்கூட எப்படிப்பட்ட மனித நேயத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். களத்திற்கு முன் போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர் என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதி யளிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:190,191) உங்களிடம்போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள். வரம்பு மீறாதீர்கள். வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க […]

42) முடிந்தவரை சமாதானம்

42) முடிந்தவரை சமாதானம் போர்கள் என்றாலே வலிகள், அவமானங்கள், உயிரிழப்புகள், பொருட்சேதங்கள், மரண ஓலங்கள். மொத்தத்தில் மனித நேயத்தை மாண்டு போகச் செய்யும் அனைத்து வகைக் காரியங்களின் மொத்தத் தொகுப்பு என்று கூறிவிடலாம். கொடுமை நிறைந்த இக்கொலைக் களத்தில் கூட புது நெறியைப் புகுத்தி மனித நேயத்தை மலரச் செய்திருக்கிறது இஸ்லாம். உண்மையில் போர்களற்ற உலகைத் தான் இஸ்லாம் விரும்புகிறது. இயன்ற வரை போரைத் தவிர்த்திடுங்கள் என்றுதான் அறிவுரைக் கூறுகிறது. தவிர்க்க இயலாத தருணங்களில் மட்டுமே போரை […]

41) ஆயுதங்களே அறியாத அப்பாவிகளா?

41) ஆயுதங்களே அறியாத அப்பாவிகளா? நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதச் செயல்கள் அனைத்தும் மற்றவர்களால் நிகழ்த்தப்பட்டு முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டது என்றால் முஸ்லிம்கள் ஒன்றுமே செய்யாத அப்பாவிகளா? தீவிரவாதத்தை நினைத்துக்கூடப் பார்க்காத புண்ணிய ஆத்மாக்களா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாம் கூறுவது என்னவென்றால், முஸ்லிம்களும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். எல்லா சமூகத்திலும் சிலர் இருப்பதைப் போல இங்கும் சிலர் இருக்கிறார்கள். அந்தச் சிலரை தீவிரவாதிகள் என்று சொல்லுங்கள், தனிமைப்படுத்துங்கள் தண்டனைக் கொடுங்கள். அதை விட்டு விட்டு […]

40) பயங்கரவாதப் பரிவாரமும் பாவப்பட்ட முஸ்லிம்களும்

40) பயங்கரவாதப் பரிவாரமும் பாவப்பட்ட முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை பெற்றுவிட்ட காரணத்தால் அல்லது அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாமல் போனதால் அவர்களை அப்பாவிகள் என்று கூறிவிட முடியுமா என்றொரு கேள்வி எழலாம். நியாயமான கேள்விதான். நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகாத காரணத்தால் ஒருவன் நிரபராதி ஆகிவிட முடியாது. நாம் முஸ்லிம்களை குற்றவாளிகள் இல்லை என்று கூறுவது அந்த அடிப்படையில் மட்டும் உள்ளதல்ல. இவர்கள் குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதோடு உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உண்மைக் குற்றவாளி […]

39) காவலர்களின் கைங்கர்யம்.

39) காவலர்களின் கைங்கர்யம் மீடியாக்கள்தான் மிதமிஞ்சிய வார்த்தைகளைக் கொட்டுகிறார்கள் என்றால் பயங்கரவாத வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக மட்டுமே இருப்பது ஏன்? என்ற கேள்வி எழலாம். நம் நாட்டு காவல்துறையும், உளவுத் துறையும் முஸ்லிம் வெறுப்பில் மீடியாக்களோடு சேர்ந்து செல்லும் இரட்டை மாட்டு வண்டிகளாகத் தான் இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு பயங்கரவாதச் செயல் நடைபெற்று விட்டால் காவலர்கள் தமது பராக்கிரமத்தை நிரூபிப்பதற்காக உடனடியாக சில முஸ்லிம்களைக் கைது செய்வார்கள். கைதிகளின் பக்கத்தில் நின்று மீடியாக்களுக்கு போஸ் […]

38) வார்த்தைக் கோளாறு

38) வார்த்தைக் கோளாறு பயங்கரவாதச் செயலில் ஈடுபடுபவர்கள் எல்லா மதத்திலும் இருக்கின்றனர். அவர்களின் தீவிரவாதத்திற்கு அவர்கள் பின்பற்றும் மதம் ஒருபோதும் காரணமாக இருப்பதில்லை. தீவிரவாதச் செயலை ஒரு ஹிந்து செய்தால் அதற்காக இந்து மதத்தைப் பழிக்க முடியாது. அந்த மதம் அதற்குப் பொறுப்பாகாது. அதுபோலத்தானே ஒரு முஸ்லிம் செய்தாலும் கருதவேண்டும். நடுநிலையாளர்கள் ஒத்துக் கொள்ளும் இந்தக் கருத்தை மீடியாக்கள் ஒத்துக் கொள்வதில்லை. குண்டு வெடிப்பு வழக்கில் ஒருவன் கைது செய்யப்பட்டால் அவன் பெயரைக் குறிப்பிட வேண்டும் அல்லது […]

37) விதைக்கப்படும் விஷ முத்திரை

37) விதைக்கப்படும் விஷ முத்திரை முஸ்லிம்களெல்லாம் தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக வரலாறுகள் எப்படியெல்லாம் வளைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.அதுபோல நிகழ்காலச் செய்திகளைத் தாங்கி வரும் ஊடகங்கள், தேசத்தின் தலைமையேற்கும் ஆட்சியாளர்கள், அவர்களை வழிநடத்தும் அதிகாரிகள் எனப் பலரும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துப் பரவலுக்குக் காரணமாக இருக்கின்றனர். அவற்றை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். தீர்ப்பு சொல்லும் தீவிரவாதிகள் ஒரு பயங்கரவாதச் செயல் நடந்த இடத்தில் உடனடியாக புலனாய்வு அமைப்புகள்கூட வந்திருக்க மாட்டார்கள். அதற்குள் மீடியாக்கள் வந்து […]

36) வாளின் துணை கொண்டு வளர்ந்ததா இஸ்லாம்?

36) வாளின் துணை கொண்டு வளர்ந்ததா இஸ்லாம்? இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சிலர் அதை ஒரு கோரமான மதமாக சித்தரிக்க கடும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் இஸ்லாத்தின் வளர்ச்சி இயற்கையாக நிகழ்ந்ததல்ல. உருட்டி மிரட்டி செயற்கையாகச் செய்யப்பட்டது என்று கூறி வருகிறார்கள். அதன் உண்மைத் தன்மையைக் கொஞ்சம் ஆய்வோம். இஸ்லாத்தில் இடமில்லை ஒருவருக்கு நாம் செய்யும் மரியாதை அவர் ஏற்றுக் கொண்ட அடிப்படையில்தான் இருக்க முடியும். அந்த வகையில் ஒருவரைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணையச் […]

35) கஜினி முஹம்மது

35) கஜினி முஹம்மது சுருக்கமாக வரலாற்றைச் சொல்லி ஆழமான முஸ்லிம் வெறுப்பை உண்டா?க்கப் பயன்படுபவர் கஜினி முஹம்மது. சோமநாதபுர ஆலயத்தின் மீது 17 முறை படையெடுத்தார், கொள்ளையடித்தார்,பின்னர் கோவிலை இடித்தார் என இப்படி மிகமிக சுருக்கமாகவே இவரது வரலாறு கூறப்படுகிறது. இந்தக் குறைந்த வரிகளுக்குள்ளாகவே முஸ்லிம்களும் முஸ்லிம் மன்னர்களும் மற்றவர்களை சகித்துக் கொள்ளாத மகா கெட்டவர்கள் என்ற வெறுப்புணர்வு ஊட்டப்பட்டு விடுகிறது. அந்தக் கால சூழல் குறித்த எந்த விளக்கமும் இல்லாமல் மொட்டையாக சொல்வதாலும் அரசியல் நடவடிக்கைக்கு […]

34) மாலிக்காபூர்

34) மாலிக்காபூர் கி.பி.1296 முதல் 1316 வரை டில்லியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் அலாவுதீன் கில்ஜி. இவரது தென்னாட்டுப் படையெடுப்பு நமது பாடப் புத்தகங்களில் பக்கம் பக்கமாக வர்ணிக்கப்படுகிறது. அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக்காபூர் இந்துக்கள் மீதும் இந்துக் கோவில்கள் மீதும் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் கொடுமைகள். வழக்கம்போல்இதிலும் சரித்திர ஆசிரியர்கள் தடவிய மசாலாக்களே அதிகம். குறிப்பாக மாலிக்காபூரால் இடித்துச் சிதைத்து தரைமட்டமாக்கப்பட்டதாகக் கூறப்படும் சீர்காழி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், […]

33) ஔரங்கஜேப்

33) ஔரங்கஜேப் வரலாற்றுப் பாடங்களில் மிக மிக மோசமாகச் சித்தரிக்கப்படும் ஒரு மன்னன். இந்துக் கோவில்களை இடித்து தகர்ப்பதில் இவருக்கு நிகராக இன்னொருவர் இல்லை என்று வர்ணிக்கப்படுபவர். மொகலாய மன்னர் ஷாஜஹானின் மகனும் 1659ஆம் ஆண்டிலிருந்து 1688ஆம் ஆண்டு வரை டில்லியைத் தலைமையகமாகக் கொண்டு ஆட்சி புரிந்த சக்கரவர்த்தியுமான ஔரங்கஜேப். ஒருமுறை ஔரங்கஜேப் தனது படை பரிவாரங்களுடன், தனக்குக் கீழுள்ள சமஸ்தான சிற்றரசர்களுடன் வங்காளத்தை நோக்கி பயணம் மேற்கொண்டார். வழியில் காசியின் கங்கை நதியில் நீராடி விசுவநாதப் […]

32) சரித்திரத்தின் பெயரால் சதி வலை

32) சரித்திரத்தின் பெயரால் சதி வலை விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கை மறைத்து அவர்கள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தியவர்கள், வரலாற்றைக் கொஞ்சம் திரித்தும் அதே வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு உழைத்த பலநூறு முஸ்லிம்கள் இருக்க சரித்திரத்தின் பெயரால் சதி செய்ய நினைப்பவர்கள் குறிப்பிட்ட சில மன்னர்களை மட்டும் கூடுதலாகப் பேசுகிறார்கள். ஏன்? மன்னர்களின் சரித்திரத்தை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்ற கடமை உணர்ச்சியா? அப்படியானால் அவர்களின் வரலாற்றை உள்ளபடியே உரைக்க […]

31) இந்துத்துவ வெறியும் இழித்துச் சொல்லும் பழியும்

31) இந்துத்துவ வெறியும் இழித்துச் சொல்லும் பழியும் சுதந்திரத் தாகத்தின் சுடரொளியாய் பிரகாசிக்கும் மாப்ளா போராட்டத்தை இழிவுபடுத்தும் வேலையில் சில இந்துத்துவ வெறியர்கள் ஈடுபட்டுள்ளனர். மாப்ளாக்கள் நடத்தியது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. அது ஒரு இனக்கலவரம். இந்துக்களை முஸ்லிம்கள் வெட்டிச் சாய்த்த மதக் கலவரம் என எழுதி வைத்துள்ளனர். இளங்கலை வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு சுதந்திரப் போரின் வரலாற்றுக்கு வழிகாட்டும் நூல் (History Of Freedom Struggle in India ) இதில் மாப்பிள்ளாக் கிளர்ச்சி […]

30) கூட்ஸ் வண்டி கோரச் சாவு

30) கூட்ஸ் வண்டி கோரச் சாவு மாப்ளாக்கள் மீண்டும் ஒரு கலவரத்தைக் கனவில் கூட கண்டு விடக் கூடாது என்பதற்காகக் கடும்நடவடிக்கைகளை மேற்கொண்டது கம்பெனி அரசு. கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு சிறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 1400 குடும்பங்கள் நாடு கடத்தப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்தத் தீவை மேம்படுத்த, சாலை போட, மரங்களை வெட்ட, பயிர் செய்ய என பல்வேறு வகைகளில் அவர்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தனர். அவர்கள் அனைவரும் நாடு விடுதலை அடைந்த […]

29) மாப்பிள்ளா முஸ்லிம்களும் மகத்தான தியாகங்களும்

29) மாப்பிள்ளா முஸ்லிம்களும் மகத்தான தியாகங்களும் விடுதலை வரலாற்றில் வீரத்தின் விளைநிலமாய் ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தவர்கள் கேரளத்து மாப்பிள்ளா முஸ்லிம்கள். மாப்பிள்ளா என்ற பெயரின் பின்னணி குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வெளியூரிலிருந்து வந்து மலையாளப் பெண்களை மணந்து கொண்டதால் (நம்மூரில் அழைக்கப்படுவதைப் போல) மாப்பிள்ளை என்றழைக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். அவர்களின் வாழ்விடம் நீர் சூழ்ந்த பகுதி. வணிகமும் ஆரம்பத்தில் கடல் மீதே இருந்திருக்கிறது. அவர்களில் பலரும் அரபு நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக வந்திருந்தனர்; ஆகையால் […]

28) பணப் பை

28) பணப் பை உதாரணத்திற்கு சில: 1887ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பத்ருத்தீன் தயாப்ஜி தலைமை தாங்கினார். தலைமையுரையாற்றிய தயாப்ஜி, கட்சிப் பணிகளுக்காக பொருளுதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தார். உடனே தமிழகத்தைச் சேர்ந்த முஹம்மது அப்துல்லா பாதுஷா இரு நூறு ரூபாய் வழங்கினார்(விடுதலைப் போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி பக் 431-439). இருநூறு என்ற உடன் இது என்ன ஒரு […]

27) ஏ.டி.கே.ஷெர்வானி

27) ஏ.டி.கே.ஷெர்வானி உத்திரபிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம் பிலோனா கிராமத்தின் மிகப்பெரிய ஜமீன் குடும்பம். விடுதலையின் வேட்கையை மிகுந்த வீரியத்தோடு வெளிப்படுத்திய ஷெர்வானி குடும்பம். குடும்பத்தின் மூத்தவர் தஸ்ஸதக் அகமத் கான் ஷெர்வானி (ஏ.டி.கே.ஷெர்வானி) லண்டனில் நேருவுடன் பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 1914 ஆம் ஆண்டு நாடு திரும்பியதிலிருந்து காங்கிரசே தன் கதியென்று மாறிப் போனவர். ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் காட்டிய ஈடுபாட்டிற்காக ஆங்கில அரசிடமிருந்து சிறைத் தண்டனையைப் பரிசாகப் பெற்றார். ஏ.டி.கே.வின் அடுத்த […]

26) தாவூத் பாஷா

26) தாவூத் பாஷா தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் தாருல் இஸ்லாம் எனும் மாத இதழைத் துவக்கி அதன் ஆசிரியராக இருந்தவர். குத்பா உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதால் முஸ்லிம்களிடம் கலகக்காரராக அறியப்பட்டவர். தஞ்சை மணியாற்றங்கரையில் உள்ள குக்கிராமத்தில் பிறந்த பா.தாவூத் பாஷா அவர்கள். இஸ்லாமிய மார்க்க விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டிய தாவூத் பாஷா அரசியலிலும் அதே அளவிற்கு ஈடுபாடு கொண்டவர். இவர் சென்னை நகர காங்கிரஸ் கட்சியின் […]

25) பீர் முஹம்மது பாவலர்

25) பீர் முஹம்மது பாவலர் விடுதலை நெருப்புக்கு தம் கவிதை வரிகளால் கனல் வார்த்தவர் கம்பம் பீர் முஹம்மது பாவலர். காந்தியின் கதர் இயக்கத்திற்காக தன் காலம் முழுவதையும் அர்ப்பணித்தவர். திருச்சி கல்லூரியில் இண்டர் மீடியட் வரை படித்த பாவலர், ஆங்கில அரசின் காவல் துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கையிலெடுத்து குற்ற வாளிகளைக் கண்டுபிடித்து குறுகிய காலத்தில் திறமையான அதிகாரி என்று பெயரெடுத்தார். இந்த நிலையில் […]

24) ஜமால் இப்ராஹீம் சாஹிப்

24) ஜமால் இப்ராஹீம் சாஹிப் தமிழக முஸ்லிம்களின் அரசியலில், முக்கியத்துவத்தோடும் வலம் வந்தவர் திருச்சி ஜமால் முஹம்மது சாஹிப். விடுதலை வரலாற்றில் வள்ளலாகவும் கல்வி நிறுவனங்களின் தந்தையாகவும் கருதப்பட்டவர். இவரது சகோதரர் ஜமால் இப்ராஹீம் சாஹிப். இவரும் ஆங்கில அரசில் கௌரவ மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தார். காங்கிரசின் அறிவிப்பை ஏற்று 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். (தி.நி.ப, பேராசிரியர் அப்துஸ் ஸமது பக். 84-85)

23) பட்டம், பதவியைத் துறந்தவர்கள்

23) பட்டம், பதவியைத் துறந்தவர்கள். 12.8.1920 அன்று காங்கிரஸ் தலைவர்கள் முஹம்மதலி, ஷவ்கத் அலி, காந்தி ஆகியோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பொதுக் கூட்டம் திருவல்லிக்கேனி கடற் கரையில் நடைபெற்றது. மறுநாள் 13-8-1920 அன்று திருவல்லிக்கேனி ஜும்ஆ மசூதியில் பெரும் திரளாக கூடியிருந்த முஸ்லிம்கள் மத்தியில் காந்தி உரை நிகழ்த்தினார். பட்டம் உள்ளவர்கள் பட்டத்தைக் கைவிட வேண்டும்; கௌரவ மாஜிஸ்திரேட்டுகள் தமது பதவி யிலிருந்து விலக வேண்டும்; வழக்கறிஞர்கள் தம் தொழிலை நிறுத்தி விட வேண்டும்; பள்ளிப் […]

22) அப்துல் சத்தார் சாஹிப்

22) அப்துல் சத்தார் சாஹிப் சுதந்திரம் நமது பிறப்புரிமை பூரண சுயராஜ்ஜியமே லட்சியம் என்று முழங்கிய கலகக்காரர் திண்டுக்கல் அப்துல் சத்தார் சாஹிப். 1941 ஆம் ஆண்டு தொடங்கிய தனி நபர் சத்தியாக்கிரகத்தை நடத்தி 500 ரூபாய் அபராதமும் ஒராண்டு கால சிறைத் தண்டனையும் அனுபவித்தவர். விடுதலை பெற்று வெளியில் வந்த சில நாட்களிலே, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைதாகி தஞ்சை, வேலூர், கண்ணனூர் என பல ஊர் சிறைகளைப் பார்த்து வந்தார். 1915 […]

21) காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில்

21) காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் நெல்லை மாவட்டம் பேட்டையைச் சேர்ந்தவர். ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் பிறந்தார். எனவே அந்நாளின் நாயகர்களான இருவரில் இரண்டாமவரான இஸ்மாயீல் நபியின் பெயரைச் சேர்த்து முஹம்மது இஸ்மாயீல் என்று பெயரிடப்பட்டார். சிறு வயதிலே சகோதரர்களோடு சேர்ந்து பால்ய முஸ்லிம் சங்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்தினார். 1936 ஆம் ஆண்டுவரை தீவிர காங்கிரஸ்காரராக இருந்தவர். அதன் பிறகு அதிலிருந்து விலகி முஸ்லிம் லீகில் இணைந்து போராடினார். 20 ஆண்டு காலம் சட்டமன்றம் […]

20) முஹம்மது அப்துர் ரஹ்மான்

20) முஹம்மது அப்துர் ரஹ்மான் கேரள மாநிலம் கொடுங்களூருக்கு அருகில் உள்ள அழிக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர். அல் அமீன் என்ற பெயரில் வாரம் மும்முறை வெளியான மலையாளப் பத்திரிக்கையின் ஆசிரியர். கேரள காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர். நகராட்சி மற்றும் சட்டமன்றங்களில் பலவருடங்கள் உறுப்பினராக இருந்தவர் முஹம்மது அப்துர் ரஹ்மான். ஒத்துழையாமை இயக்கம் நடை பெற்றுக் கொண்டிருந்தபோது காந்தியின் அழைப்பை ஏற்று தனது கல்லூரிப் படிப்பை பாதியிலே நிறுத்தினார். தேசியப் போராட்டத்தில் […]

19) டாக்டர் ஜாகிர் ஹுஸைன்

19) டாக்டர் ஜாகிர் ஹுஸைன் ஆப்கானிஸ்தானத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஹைதராபத்தில் பிறந்து உ.பி. மாநிலம் குயாம் கஞ்சில் வளர்ந்தவர். 1963 ஆம் ஆண்டு இந்தியாவின் பாரத ரத்னாவாகி 1967ல் இந்திய ஜனாதிபதியாக உயர்ந்தவர் டாக்டர் ஜாகிர் ஹுஸைன். அலிகர் முஹம்மதின் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியில் பி.ஏ. முடித்துவிட்டு எம்.ஏ.படித்துக் கொண்டிருந்தார். 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 12ல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காந்தி ஆங்கில அரசின் பள்ளி கல்லூரிகளைப் புறக்கணிக்க வேண்டும், அதே நேரம் கல்வி […]

18) ரஃபி அஹமது கித்வாய்

18) ரஃபி அஹமது கித்வாய் உத்திரப் பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தின் மாசாலியைச் சேர்ந்தவர் ரஃபி அஹமது கித்வாய். சிறு வயதிலே தாயை இழந்தார். பணி நிமித்தமாக தாய் மாமன் விலாயத் அலியிடம் ஒப்படைத்துவிட்டு தந்தையும் அவரைப் பிரிந்தார். தேசப்பற்று மிக்க மாமனின் வளர்ப்பால் சிறுபருவத்திலே தேசியவாதியாக உருவெடுத்தார். மௌலானா முஹம்மதலி நடத்தி வந்த காம்ரேட் ஆங்கிலப் பத்திரிக் கையில் பம்பூக் என்ற பெயரில் கட்டுரைகள் எழுதி தேசியக் கனல் வெடிக்கக் காரணமாக இருந்தார். அலிகர் முஹம்மதன் […]

17) காங்கிரசும் முஸ்லிம்களும்

17) காங்கிரசும் முஸ்லிம்களும் சுதந்திரப் போரின் பிற்பகுதியில் நாடு தழுவிய அளவில் மக்களின் ஆதரவு பெற்ற இயக்கமாக காங்கிரஸ் மாறியிருந்தது. காந்தியின் அகிம்ஸா தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு வகையான போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. ஆயுத முனையில் அடக்குமுறை செய்யும் ஆங்கிலேயர்களை அகற்றுவதற்கு இது சரியான வழிமுறை அல்ல என்றாலும் நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டதும் மக்கள் ஆதரவை அதிகம் பெற்றதுமான ஒரே இயக்கமாக அன்றைக்கு அது மட்டுமே இருந்தது. இறுதிக் கட்டப் போர் முடிந்து இனிமேல் இந்தியா […]

16) மரணத்திற்குப் பின்

16) மரணத்திற்குப் பின் மரணித்த செய்தியைக் கூட மக்களுக்குத் தெரியாமல் மறைத்தது ஆங்கில அரசு. அந்தச் செய்தி எந்தப் பத்திரிக்கையிலும் வெளிவராதவாறு பார்த்துக் கொண்டது. எதேச்சையாகத் தெரிந்து கொண்டு வந்த மக்களையும் கூட சவ ஊர்வலத்தில் கலந்து கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தியது. இறுதி கட்டத்தில் அவரோடு இருந்த மூவரைத் தவிர வேறு யாரும் அடக்கஸ்தலத்திற்குள் நுழையக் கூடாது என தடை விதிக்கப்பட்டனர். அடக்கப்பட்ட உடல் கூட சீக்கிரம் அழிந்து போக வேண்டும் என்பதற்காக சவக்குழிக்குள் சுண்ணாம்புக் […]

15) குற்றவாளிக் கூண்டில்

15) குற்றவாளிக் கூண்டில் 1858 ஜனவரி 27. அன்று டெல்லி செங்கோட்டையில் பகதூர் ஷாவின் மீதான விசாரணை ஆரம்பமானது. எந்த மரபுகளும் பேணப்படாத ஒரு விசாரணை. ஆங்கிலேயர்களின் நீதிமன்ற நடைமுறைகளோ, சர்வதேசச் சட்டங்களோ, மன்னர்களாக இருந்த வர்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளோ, குறைந்த பட்ச மனித மாண்புகளோ எதையும் கணக்கில் கொள்ளாத ஒரு விசாரணை. விசாரணையின் முடிவில், ஆயுள் முழுவதும் இவர் அகதியாகவே வாழவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டு மனைவி மக்களோடு ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். ((இ.சு.பெ.இ.ப) பக். […]

14) சிலிர்க்க வைத்த சிறைக் கூடம்

14) சிலிர்க்க வைத்த சிறைக் கூடம் சிறையிலடைக்கப்பட்ட பகதூர் ஷாவை, கையில் பெரிய பாத்திரத்துடன் பார்க்க வந்தான் ஹட்ஸன். நீண்ட நாட்களாகப் பாக்கியிருந்த கம்பெனியின் பரிசு என்று மூடிய பாத்திரத்தை பகதூரின் முன்னால் திறந்து காட்டினான். பகதூரின் ஒரு மகன், ஒரு பேரன் ஆகிய இருவரின் தலைகளும் அதற்குள்ளே!. ஒருகணம் நினைத்தாலே சிலிர்த்து விடுகிறது நம் உடல். அதைப் பார்த்ததும் மன்னர் கதறி அழுவார் என எதிர்பார்த்தான் ஹட்ஸன். அவனது எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. அவன் கேட்டான் […]

13) சுற்றி வளைக்கப்பட்டார் சூத்திரதாரி

13) சுற்றி வளைக்கப்பட்டார் சூத்திரதாரி நகரை நிர்மூலமாக்கும் கொடுமை களுக்கிடையில் சுதந்திரப் போரின் சூத்திரதாரியைச் சுற்றி வளைக்கும் வேலைகள் ஆரம்பமாயின. அதற் கான பொறுப்பு கொடியவன், ஆங்கிலக் கம்பெனியின் குதிரைப் படைத் தலைவன் ஹட்ஸனிடம் ஒப்படைக்கப்பட்டது. நூறு குதிரைப் படை வீரர்களோடு புறப்பட்டான் ஹட்ஸன். ஹீமாயூனின் சமாதியில் தஞ்சம் அடைந்திருந்த மன்னர் பகதூர் ஷாவையும் அவரது பிள்ளைகளையும் கைது செய்தான். அழைத்து வருவதற்குள் அவனுக்கு ஆத்திரம் பொங்கியது. இளவரசர்கள் மூவரையும் வண்டியிலிருந்து இறக்கினான். அனைவருக்கும் முன் பாகவே […]

12) அழிக்கப்பட்ட அடையாளங்கள்

12) அழிக்கப்பட்ட அடையாளங்கள் நகரில் வாழ்ந்த மனிதர்களை மட்டுமல்ல. அவர்களின் கல்வி, கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம், வரலாற்றுச் சின்னம் என்று அவர்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் அழித்தார்கள். தில்லி. திரும்பிய பக்கமெல்லாம் எண்ணூறாண்டு கால இஸ்லாமி யர்களின் சரித்திரத்தை எடுத்துச் சொல்லும் சுவடுகள் நிறைந்த பூமி. கட்டிடங்கள் முதல் கலைப் பொருட்கள் வரை அனைத்திலும் அது பிரதிபலிக்கும். எந்தவொன்றும் மிச்சமிருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு தகர்த்தார்கள் மஸ்ஜிதே அக்பராபாதி, மஸ்ஜிதே கஷ்மீரி கத்ரா ஆகிய […]

11) தூக்கிச் சுமந்த துயரங்கள்

11) தூக்கிச் சுமந்த துயரங்கள் நான்கு மாதத்திற்குப் பின் பல நவீன ஆயுதங்களோடு பறங்கியர்கள், மீண்டும் படைக் களத்திற்கு வந்தார்கள். நடந்து முடிந்த நிகழ்வுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு வந்தார்கள். திட்டமிட்ட ஏற்பாடு, கச்சிதமான அணி வகுப்பு, மரத்தின் கிளைகளுக்கிடையில் தன் இரையை மட்டுமே குறி வைக்கும் வேடனைப் போல முஸ்லிம்கள் மீது மட்டுமே கண் வைத்தார்கள். புரட்சியை ஆய்வு செய்த இராணுவக் குழுத் தலைவர் மேஜர் எஃப்.ஜே. ஹரியட், அரசுக்கு வழங்கிய […]

10) ரோஹில்கண்ட்

10) ரோஹில்கண்ட் மீரத்தில் துவங்கிய புரட்சி இருபது நாட்களாகியும் ரோஹில் கண்டில் எந்தச் சலசலப்பும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது. கான் பகதூர் கான் சிப்பாய்களைச் சந்தித்து புரட்சிக்குத் தூபமிட்டார், தூண்டி விட்டார், பற்றிக் கொண்டது போர். மே31ல் யுத்தம் துவங்கியது. ஆங்கிலேய அதிகாரிகள் ஊரைக் காலி செய்துவிட்டு நைனிடாலுக்கு ஓடும் அளவுக்குப் போராளிகள் தமது வீரத்தை வெளிப்படுத்தினர். ரோஹில்கண்டில் பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு டில்லி அரசரின் பச்சைக் கொடி பறக்க விடப்பட்டது. மன்னரின் பிரதிநிதியாக கான் பகதூர் […]

09) அலகாபாத்

09) அலகாபாத் அலகாபாத்தில்புரட்சியை வார்த்தெடுத்து வழி நடத்தியவர் மௌலவி லியாகத் அலி அவர்கள். இவரை அடக்க ஜெனரல் நீல் தலைமையில் ஒரு காட்டுப்படை வந்தது. இவரது தலைக்கும் ஆங்கில அரசு 5,000 ரூபாய் விலை நிர்ணயித்தது. பிறகு அதே ஆண்டு ஜூலை 24ல் மும்பையில் வைத்து கம்பெனிப் படை அவரைக் கைது செய்தது. ஆங்கிலேயருக்கு எதிராக ஆள்திரட்டிப் போராடிய குற்றத்திற்காக ஆயுள் முழுவதும் நாடு கடத்தி தீர்ப்பளித்தது ஆங்கில அரசு. (விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (வி.போ.மு) வி.என். […]

08) பாட்னா

08) பாட்னா. வங்காள இராணுவப் பிரிவின் முக்கியத் தளமான தானாப்பூருக்கு அருகில் உள்ள ஊர். பாட்னா புரட்சியை ஒடுக்க நினைத்த டிவிஷன் கமிஷனர் வில்லியம் டைலர், முக்கிய புள்ளியைப் பிடித்து விட்டால் புரட்சிக்கு மூடு விழா நடத்தி விடலாம் என எண்ணினார். அதற்காக, பாட்னா போரை வழி நடத்திய போராளி மௌலவி. அலீ கரீமை உடனடியாகக் கைது செய்து சிறையிலடையுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர் எங்கிருந்து இயக்குகிறார் என்பதே தெரியவில்லை! பிறகெப்படி கைது செய்வது? அப்படியானால் […]

07) பரவிய தீயைப் பாதுகாத்தவர்கள்

07) பரவிய தீயைப் பாதுகாத்தவர்கள் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், பிரஞ்சு, டச்சு என இன்னபிற ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் ஏராளமான போர்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் 1857-ல் நடைபெற்ற புரட்சிப் போருக்குத் தான் இந்தியப் போர் என்ற தேசியச் சாயல் முதன் முதலாகக் கிடைத்திருக்கிறது. அதுவரை நடைபெற்ற எல்லா போர்களும் பகுதிவாரியான பெயர்களிலே அழைக்கப்பட்டன. ஏனெனில் மற்ற போர்கள் அனைத்தும் வெற்றி தோல்வி என எதுவாயினும் துவங்கிய இடத்திலேயே முடிந்து விடும் ஓரிடத்தில் துவங்கி ஊரெல்லாம் பரவி தேசத்தின் […]

06) போராட்ட நாயகர் பகதூர் ஷா

06) போராட்ட நாயகர் பகதூர் ஷா. மொகலாயப் பேரரசின் கடைசிச் சக்கரவர்த்தி பகதூர் ஷா என்றழைக்கப்படும் முஹம்மது சிராஜீத்தீன் பகதூர் ஷா ஜஃபர். இவரது உதவியும் ஒத்துழைப்பும்தான் வீரர்களைப் போராட்ட களத்தை நோக்கி உந்தித் தள்ளியது. புரட்சியைக் கையிலெடுத்த வங்கத்துப் படையணியில் இந்துக்களும் முஸ்லிம்களுமாக 1,39,807 இந்தியச் சிப்பாய்கள் இருந்தனர். அவர்கள் அனைவருமே பகதூர் ஷாவே தங்களுக்கு தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். (1857 எழுச்சி இர்ஃபான் ஹபீப் பக் 3, தமிழில் […]

5) முதல் இந்திய சுதந்திரப் போர்

5) முதல் இந்திய சுதந்திரப் போர் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் எது? முடிவு எட்டப்படாத முக்கியக் கேள்வி. பன்னெடுங்காலமாகவே பல்வேறு வகையான தாக்குதலுக்கு உள்ளான பூமி நமது பாரதம். இதில் எப்போது நடந்ததை முதல் போர் என்பது? யாரோடு நடந்ததைச் சொல்வது? யார் செய்த போரை அந்த இடத்தில் வைப்பது? புதுக்கோட்டை மன்னர் செய்ததையா? புதுடெல்லி மஹாராஜா செய்ததையா? ஒரே வகையான எதிரிகளோடுகூட பத்து மன்னர்கள் போரிட்டிருக்கிறார்கள். அதுவும் பத்து வகையாக, பத்து இடத்திலே, பத்து […]

04) முந்தி நிற்கும் தொந்தி

04) முந்தி நிற்கும் தொந்தி சாந்திமாய்ராய்அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்கு என்றொரு நூல் எழுதியுள்ளார். அந்த நூலூக்கு அணிந்துரை வழங்கியுள்ள பி.சி.ஜோசி, சில இந்து வரலாற்று ஆய்வாளர்கள் ஏகாதிபத்தியத்திற்கெதிரான முஸ்லிம்களின் தியாகங்களைத் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகின்றனர். அவர்களால் மறைக்கப்பட்டதை வெளிக் கொணர்வதே இந்நூலின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். (விடுதலைப் போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்கு. சந்திமாய் ராய் இந்திய விடுதலைப் போரும், தமிழக முஸ்லிம்களும் (இ.வி.த.மு) முனைவர் நா. முகம்மது செரீபு தமிழ்மணி […]

03) எழுத்தில் ஓர் யுத்தம்

03) எழுத்தில் ஓர் யுத்தம் 1920களின் பிற்பகுதி. கல்கத்தா யுனிவர்சிட்டியின் சமஸ்கிருதத் துறைத் தலைவராக இருந்தார் டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி. இவர் எழுதிய இந்திய சரித்திரம் அன்றைய உயர்நிலைப் பள்ளிகளின் பாடநூல். ராஜஸ்தான், ஒரிசா (தற்போதைய ஒடிசா), மத்தியப் பிரதேசம், உத்திர பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலப் பள்ளிகளில் தினம் தினம் மாணவர்கள் படிக்கும் பாட நூல். அந்த நூலில் திப்பு சுல்தானின் ஆட்சி காலத்தில் மூவாயிரம் பிராமணர்கள் தீயில் குதித்து தம் உயிரை மாய்த்துக் கொண்டதாக […]

02) மாயக் கண்ணாடி

02) மாயக் கண்ணாடி வரலாறு என்பது காலத்தின் கண்ணாடி என்பர். ஒருவகையில் அது ஒரு மாயக் கண்ணாடி. நேற்றைய என் முகத்தை இன்றைக்கு அது காட்டும். உலகில் எந்தக் கண்ணாடியும் இருப்பதை மாற்றி இல்லாததைக் காட்டுவதில்லை. முன்னால் இருப்பது அழகாய் இருந்தால் அழகைக் காட்டும், அழுக்காய் இருந்தால் அதைத்தான் காட்டும். காலக் கண்ணாடி இதிலும் கொஞ்சம் வித்தியாசமானது. ஏனெனில் இது முழுக்க முழுக்க மனிதனின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாயக் கண்ணாடி. எனவே அதில் தெரிய வேண்டிய காட்சிகளை […]

01) முன்னுரை

01) முன்னுரை முஸ்லிம் தீவிரவாதி (?) வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் ஊரான் ஊரான் தோட்டத்திலே, ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா, காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி, காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்! ஆண்டாண்டு காலமாக அடித்துக் கொண்டும், பிடித்துக் கொண்டும் நம்; ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தவர்கள் நமது முன்னோர்கள். “ஆங்கிலேயன் வந்தான் ஆசனத்தைக் கொடுத்து விட்டு அகன்று போ என்றான்”, “விளைந்திட்ட காய்களுக்கும், விற்கின்ற கனிகளுக்கும் வரி கொடு என்றான்”, “இங்குள்ள வளங்களையெல்லாம் வாரிச் சுருட்டி, இங்கிலாந்து நாட்டிற்கு […]